வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மெட்ராஸ் கஃபே -- யமுனா ராஜேந்திரன் மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை. நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குற…
-
- 0 replies
- 752 views
-
-
டொப் 10 திரைப்படங்களின் ’பாகுபலி 2’ முதலிடம் தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களது திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை. இருந்தாலும், திரைப்படத்தை ஓட வைக்கவும் அந்தந்த திரைப்பட நாயகர்களின் திருப்திக்காகவும், சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம். அப்படித்தான் பல திரைப்படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன. சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், சில திரைப்படங்களின் வசூல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும், எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்றத் திரைப…
-
- 0 replies
- 487 views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமா ராம்குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் …
-
- 0 replies
- 988 views
-
-
சரக்கேஸ்வரரை' வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே! பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம். முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ். அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத்! பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் ப…
-
- 0 replies
- 674 views
-
-
ஆஸ்கர் 2018: மனிதர் உணர வேண்டிய காதல் (சிறந்த தழுவல் திரைக்கதை) ச மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. ஆதியிலே காதல் இர…
-
- 0 replies
- 814 views
-
-
டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ? PrakashDec 07, 2022 09:23AM இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த த…
-
- 0 replies
- 176 views
-
-
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குத்தாட்ட ப்ரியர். இவர் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையே, கவர்ச்சி குத்தாட்டம் கியாரண்டி! பரத்தை வைத்து இவர் இயக்கும் 'கில்லாடி' படத்திலும் இடம் பெறுகிறது. இவரது பேவரிட் அயிட்டம் தனியாக கவர்ச்சி நடிகை யாரையும் பயன்படுத்தாமல் கதாநாயகி நிலாவையே இதில் ஆட்டம் போட வைத்துள்ளார். இளையராஜா முதன் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் 'மச்சானை பார்த்திங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே...' கிறக்கமான இந்த பாடலை கில்லாடிக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். பாடல் வரிகள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ப்ரெஷ்ஷாக இருப்பதால் வரிகளை அப்படியே வைத்து இசையை மட்டும் வித்தயாசப்படுக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில…
-
- 0 replies
- 1.7k views
-
-
பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …
-
- 0 replies
- 671 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலு கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று (செப். 12) நடிகர் வடிவேலு தன் 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய வடிவேலு இன்று தன் 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யமானது. வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவ…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
விஜய் சேதுபதியின் அடுத்த படமாகிய காதலும் கடந்து போகும் படத்தின் Trailer பார்க்க இங்கே கிளிக் செய்யவும். Trailer
-
- 0 replies
- 354 views
-
-
தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும், “துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன. விஜய் – முருகதாஸ் – தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை, இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை இந்தியில், “ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ப…
-
- 0 replies
- 871 views
-
-
ஹிந்தியில் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ABCD மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .. இதன் முதல் கட்டமாக promo வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது..
-
- 0 replies
- 822 views
-
-
சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவி…
-
- 0 replies
- 470 views
-
-
சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பி…
-
- 0 replies
- 433 views
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 1987 டிசம்பர் 2... ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல். டிசம்பர் 5... …
-
- 0 replies
- 1.5k views
-
-
முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…
-
- 0 replies
- 592 views
-
-
நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…
-
- 0 replies
- 893 views
-
-
கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் வருகிறார். இந்தியத் திரையுலகின் முன்னணி ஸ்டார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தசாவதாரம். கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார். உலகிலேயே 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக ஜாக்கி சானை, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சந்தித்து தேதியை இறுதி செய்து விட்டு வந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 10ம…
-
- 0 replies
- 903 views
-
-
யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…
-
- 0 replies
- 3.2k views
-
-
இயக்குனர் வெங்கட்பிரபு படத்தில் இருந்து வெளியேறியதால் இருவருக்கும் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா. ‘மயக்கம் என்ன?’ ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க முடிவானது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ரிச்சா கூறியதாவது: பிரியாணி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டேன். அதில் 3 ஹீரோயின்கள் நடிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவராகத்தான் நான் நடிக்க கேட்டிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். அதில் என்னுடைய வேடமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு பிடிக்கவில்…
-
- 0 replies
- 468 views
-
-
நார்வே தமிழ் திரைப்பட விழா கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினருக்கு இது முக்கியமான திரைப்பட விழா. தமிழ் இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தமுறை சற்று விசேஷம். ஐரோப்பாவிலுள்ள லண்டன், ஆஸ்லோ, பெர்லின் ஆகிய நகரங்களில் இந்த விழா நடக்கிறது. முன்பு ஒரே நகரத்தில்தான் இந்த விழா நடந்து வந்தது. ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட பதினைந்து படங்கள் தேர்வாகியுள்ளன. அவை... நடுவுல கொஞ்சம் பக்…
-
- 0 replies
- 512 views
-
-
வெனிஸ் திரைப்பட விழா: பிலிப்பைன்ஸ் திரைப்படத்திற்கு தங்க சிங்க விருது பிலிப்பைன்ஸில் நடைபெறும் பழிவாங்கும் கதை ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் உயரியதொரு விருதை வென்றிருக்கிறது. கறுப்பு வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸை சேர்ந்த இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் அநியாயமாக சிறைப்படுத்தப்படும் ஆசிரியை பற்றி விவரிக்கிறது. விடுதலையான பின்னர் சிறைக்குள் தள்ள காரணமான அவருடைய முன்தைய காதலனுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய திட்டமிட்டு அந்த ஆசிரியை செயல்படுவது தான் இந்த திரைக்கதையின் சாராம்சம். பிலிப்பைன்ஸ் மக்கள் சந்தித்து வருகின்ற போராட்டங்களின் சாட்சியம் தான் இந்த திரைப்படம் என்று டையஸ் கூறுகி…
-
- 0 replies
- 405 views
-
-
ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ ! மின்னம்பலம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது 'இனம்' திரைப்படம். சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓடிடியில் வெளியாக உள்ளது 'இனம்' தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவை மூன்றும் கடந்த மார்ச் முதல் இன்றுவரை அபாய கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சினிமா தொழில் இயல்புநிலைக்கு வரும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான். இனம், மொழி, சாதி கட்டமைப்புகளில் ஊறிப்ப…
-
- 0 replies
- 526 views
-
-
நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:36 IST) நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு மருத்துவர்கல் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கமலஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்பு தொடர்பான …
-
- 0 replies
- 662 views
-
-
இலங்கை அகதியின் காதல் கதை! -ராமேஸ்வரத்தில் ஒரு ஜோடி புறா! Monday, 07 May 2007 இலங்கை அகதிகளின் கண்ணீர் கதையை எந்த படமும் தீர்க்கமாக சொன்னதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறார் செல்வம். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், ஜீவா-பாவனா நடிக்க ராமேஸ்வரம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளில் ஒரு அகதியாக ஜீவா நடிக்கிறார். யதார்த்தமும், புதுமையும் கலந்த பாத்திரமாக இவரை உருவாக்கியிருக்கிறார் செல்வம். இந்த படத்தை பார்க்கும் உலக தமிழர்கள் ஜீவாவை தங்கள் வீட்டு பிள்ளையாகவே கருதுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் செல்வம். ஜீவாவின் கா…
-
- 0 replies
- 1.2k views
-