வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கோயிலில் அர்ச்சகராக இருக்கும் சிம்பு, அம்மாஞ்சி அம்பி. பருப்பு சாதம் சாப்பிடும் அம்பி, ஒரு கட்டத்தில் ரௌடிகளைக் கொத்து பரோட்டா போடும் சூழல் வருகிறது. 'என்னமோமேட் டருப்பா' என யோசிக்கும்போதே, ஜெயிலில் இருந்து ரிலீஸான பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே விரிகிறது இன்னொரு சிம்புவுக்கான வீர ஃப்ளாஷ்பேக். பங்காளிச் சண்டையில்ஃப்ளாஷ் பேக் முடிவில் சிம்பு உயிரை விடுகிறார். அதிரடி சிம்புவுக்கும் இந்த அம்மாஞ்சி சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்பதை ரத்தம், சத்தம், ஆபாசம் தெறிக்கச் சொல்லும் ஆட்டம்! ஐயர் சிம்பு யார் என்பதில் சஸ்பென்ஸ் வளர்த்துக்கொண்டே சென்று, படாரென்று உண்மையை உடைக்கும் இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். மகா மெகா மைனஸ்... நெளியவைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: ரெமோ ஒரு இளைஞன், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவைக்கும் அதே கதைதான். நாயகனின் பெண் வேடமும் காதலுக்கு உதவுகிறது என்பது ‘ரெமோ’ காட்டும் வித்தியாசம். நாயகன் சிவா (சிவகார்த்திகேயன்), பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருக்கும் வெட்டி ஆபீஸர். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) தனியார் மருத்துவமனையில் டாக்டர். சிவாவுக்கு கீர்த்தியைப் பார்த்ததும் (வழக்கம்போல) காதல் பற்றிக்கொள்கிறது. ஆனால், அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது தெரிந்ததும் நொந்துபோகிறார். நடிப்புக்கான தேர்வுக்காக சிவா பெண் வேடமிட வேண்டியிருக்கிறது. நர்ஸாக வேடமிட்டிருக்கையில் தற்செயலாகச் சந்திக்கும் கீர்த்தியுடன் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பைப் பயன…
-
- 0 replies
- 347 views
-
-
@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவி…
-
- 0 replies
- 689 views
-
-
இனமான தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15895:mani-died-political-leaders,-actors,-actresses-tribute-150-pics&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 959 views
-
-
சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜராஜனின் போர்வாள் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கான ட்யூன்களை மக்கள் முன்னிலையிலேயே மெட்டமைக்கப் போகிறார் இசைஞானி. ‘யோகி' படத்தில் அமீருடன் நடிகராக அறிமுகமானார் சினேகன். அடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய ‘உயர்திரு 420' என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்துள்ளது.ஆர்.எஸ்.அமுதேஷ்வர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இராஜராஜ சோழனின் போர்வாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இளையர…
-
- 0 replies
- 719 views
-
-
ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் "உயிர்வரை இனித்தாய்" முழுநீளத் திரைப்படம் தயாராகிவருகிறது. அதன் முதற் கட்டமாக திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட கட்சி வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் காதல், காமடி கலந்த புத்தம் புதுப்படைப்பாக வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் டென்மார்க்கைச்சேர்ந்த மூத்தகலைஞர் கே.எஸ்.துரை அவர்களின் இயக்கத்தில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபல்யமான ஈழத்து கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலரின் நடிப்பிலும், அவதாரம் குழுமத்தின் டேசுபன் அவர்களின் பிரதான ஒளிபதிவிலும் சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் ஆகியோரின் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவிலும், வசந்த் செல்லத்துரை அவர்களின் இசை மற்றும் ப…
-
- 0 replies
- 520 views
-
-
தப்பு தண்டா திரை விமர்சனம் சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. கதைக்களம் படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் எக்ஸ் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ. ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்…
-
- 0 replies
- 872 views
-
-
காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…
-
- 0 replies
- 793 views
-
-
பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2 படத்தின் காப்புரிமைTWITTER கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூப…
-
- 0 replies
- 445 views
-
-
டிராஃபிக் ராமசாமி- விமர்சனம் அநீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப…
-
- 0 replies
- 497 views
-
-
பட மூலாதாரம்,24 AM STUDIOS கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2016-ல் அறிவிக்கப்பட்ட ’அயலான்’ படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்ல…
-
- 0 replies
- 520 views
-
-
http://youtu.be/LymOJFxOjy8 http://youtu.be/mp-XqCrCi6I
-
- 0 replies
- 716 views
-
-
மூன்றே படங்கள். மூலை முடுக்கெல்லாம் அவர் பெயர் சொன்னால் அப்படியொரு மரியாதை. இரண்டு வருடமாக எடுத்துக் கொண்டிருந்தாலும் நான் கடவுள் படத்துக்கு மவுசு ஏறுகிறதே தவிர, பழமை தூசு படியவேயில்லை. ருத்ரனாக நீண்ட தலைமுடி தாடியில் ஆர்யா. கறுப்பு கலவையாக பூஜா அம்சவல்லி எனும் அழுத்தமான கேரக்டரில். இசைக்கு இளையராஜா. இமை மூடி ரசித்தால் இமையோரம் நீர் கசியும் இசைத் தாலாட்டு. ஒவ்வொரு அடிக்கும், இதயம் அதிர்ச்சியில் உறையும் ஸ்டன்ட் சிவாவின் சண்டைப் பயிற்சி. காசியையும், தேனியையும் அதன் யதார்த்தம் குலையாமல் காட்டும் ஆர்தர் வில்சனின் கேமரா. பிரமிட் சாய்மீராவின் தயாரிப்பில்…
-
- 0 replies
- 687 views
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் 88 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று 2016-02-28 11:14:37 88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று இரவு, அமெரிக்காவின் ஹொலிவூட் நகரில் நடைபெறவுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெளியான ஹொலிவூட் திரைப்படங்கள் இவ்விருதுக்கு கருத்திற்கொள்ளப்படும். அக்கடமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் (AMPAS) எனும் அமைப்பினால் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனால் அக்கடமி அவார்ட்ஸ் (அக்கடமி விருதுகள்) என இவ் விருதுகள் குறிப்பிடப்படுகின்றன. மொத்தமாக 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த வெளிநாட்டு…
-
- 0 replies
- 668 views
-
-
-
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது. சிவாஜி படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார். ஹாலிவுட் படங்களான மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் படங்களில் பணியாற…
-
- 0 replies
- 1.1k views
-
-
மோதி விளையாடு’ படத்தில் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி. சரண் இயக்கும் படம் ‘மோதி விளையாடு’. வினய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரிஹரன், லெஸ்லி இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் கிரீஸ், துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்காக, வைரமுத்து எழுதிய, ‘மோதி விளையாடு’ என்று தொடங்கும் பாடல் காட்சியில் ஹரிஹரன், லெஸ்லியுடன் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். இப்பாடலை ஹரிஹரன், லெஸ்லியுடன் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=451
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: தேவி பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் ‘தேவி’. நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபுதேவாவை அதிரவைக்கும் அந்த மாற்றங்களின் பின்னணியும், விளைவுகளும்தான் படம். பேய்ப் படங்களுக்கென்…
-
- 0 replies
- 336 views
-
-
மத்திய அரசின் 60 வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 மற்றும் பரதேசி ஆகிய படங்கள் தேசிய விருதுகளைப் பெற்று தமிழ்ப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளன. முஸ்லீம்பெருமக்களால் படுபயங்கரமாக எதிர்க்கப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபத்திற்கு சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது ஆகிய இரண்டு தேசிய விருதுகளும், சிறந்த மாநில மொழிப்படமாக வழக்கு எண் 18/9 என்ற திரைப்படமும், சிறந்த ஆடை அமைப்பிற்காக பரதேசி படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கின்றது. மேலும் சிறப்பான ஒப்பனை செய்த ராஜா-வுக்கு சிறந்த ஒப்பனை கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அள…
-
- 0 replies
- 459 views
-
-
தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்? நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்? கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம். விஜய் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களை…
-
- 0 replies
- 470 views
-
-
கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் நந்தா ஒரு முதல்தர நடிகர். கோவை மாவட்டத்தில் உள்ள செண்டரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பச்சைத் தமிழர். புன்னகைப்பூவே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன நந்தா, மௌனம் பேசியதே, கோடம்பாக்கம், உற்சாகம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு, வேலூர் மாவட்டம், வந்தான் வென்றான், திருப்பங்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எத்தனை படங்களில் நடித்தாலும் ஈழத்துயரத்தை நேரடியகப்பேசிய ஆணிவேர்’ என்ற படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமை கொள்பவர் நந்தார். அந்தப்படத்தில் நடிப்பதற்காக கிளிநொச்சி சென்று வந்த ஒரே தமிழநாயகன் அவர்தான்! அந்தப் படத்தில் நடித்தது பற்றி கேட்டபோது “ ரொம்பவும் மனம் கஷ்டமாக இருந்தது, அந்தப்படம் வன்னி மற்றும் கிளிநொச்சியில் தான் படமாக்கப்ப…
-
- 0 replies
- 420 views
-
-
சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…
-
- 0 replies
- 347 views
-
-
சென்னை: நடிகர்கள் சூர்யா, வடிவேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது. சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. வடிவேலுவின் மதுரை வீட்டிலும்.. வடிவேலுன் மதுரை வீட்டிலும் இந்தச் சோதனைகள் நடந்…
-
- 0 replies
- 738 views
-
-
லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-