வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் ஆனா படத்தை டைரக்டர் கம் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை.விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது கூட அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை. அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்.அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால் ஆனால் அவர் படங்களில் அதிகப்படிய…
-
- 2 replies
- 901 views
-
-
மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…
-
- 1 reply
- 1.4k views
-
-
துடிக்க மறந்த இதயத்தின் ஒரு சில நினைவுகள். இதயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி! 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது. முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…
-
- 1 reply
- 982 views
-
-
கவிஞர் கொடுக்கல் வாங்கலில் கறாரானவர்.கொடுக்கல் வாங்கல் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.அன்பைக் கொடுத்து அந்த அன்பை இரண்டு மடங்காக வாங்கிவிடுவார்’’ என்று கமல் சொன்னார். கமல் குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவை, அவரது மகன் கபிலன் திருமண விழாவில். கமல் சொன்னது உண்மைதான்.கவிஞர் அத்தனை அன்பைக் கொடுத்திருந்த தால்தான் காலையிலேயே கலைஞர் அரங்கம் அன்பு உள்ளங்களால் நிறைந்திருந்தது. அரங்கில் முதலில் வந்த பிரபலம் ரஜினி.வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.மகள் திருமணத்தை திருப்தியாக முடித்த நிம்மதி தெரிந்தது. அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் வரிசையாய் வரத் துவங்கினர்.உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கவிஞரின் நண்பர்கள். இங்கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’&இளையமகள் சௌந்தர்யா& அஸ்வின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கும் ரஜினியை இப்படித்தான் வாழ்த் திக்கொண்டிருந்தார்கள், வந்திருந்த வி.ஐ.பி.க்கள். இடம் சென்னை ராணி மெய்யம்மை ஹால்.கல்யாண வீட்டில் இருந்து அட்சதை தூவலாக சில வரிகள் : காலை 5.30மணிக்கு மண்டபத்திற்கு வந்த மணமக்கள் ஊஞ்சல் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மணமகன் அஸ்வினின் பஞ்ச கச்சத்தைச் சரி செய்துவிட் டபடி, ‘சூப்பர்’ என்பதுபோல கையைக் காட்டி சிரித்தார் ரஜினி. சடங்கு நடந்து கொண்டிருந்தபோதே பரபரப்புடன் ‘தனுஷ் வந்தாச்சா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார், பாசமுள்ள மாமனாராக ரஜினி. சௌந்தர்யாவை ரஜினி மடியில் உட்கார வைத்து நடந்த சடங்கில் புர…
-
- 0 replies
- 925 views
-
-
மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அத…
-
- 0 replies
- 7.2k views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 936 views
-
-
கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நாயகனாக நடிக்கும் கேசனோவா படத்திலிரு்து திடீரென விலகியுள்ளார் நடிகை ஷ்ரியா.மோகன்லால் நடிக்கும் புதிய படம் கேசனோவா. இதில் சமீரா ரெட்டி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்திற்கு ஸ்ரேயா புக் செய்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஷ்ரியா. ஏன் இந்த திடீர் விலகல் என தெரியாமல் கேசனோவா குழுவினர் குழம்புகின்றனர். சர்வதேச இயக்குநர் தீபா மேத்தா புதிதாக இயக்கப் போகும் படம் மிட்நைட் சில்ட்ரன்ஸ். சல்மான் ருஷ்டியின் நாவலைத்தான் படமாக்குகிறார் தீபா. இப்படத்தில் கவர்ச்சிகரமான பெண் வேடத்திற்கு ஷ்ரியாவை சல்மான் ருஷ்டி பரிந்துரைத்துள்ளார். இதை தீபாவும் ஏற்றுள்ளார். ஏற்கனவே குக்கிங் வித் ஸ்டெல்லா படத்திலும் தீபா மேத்தா இயக…
-
- 1 reply
- 736 views
-
-
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர். இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி [^]. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் [^] சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர். அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இ…
-
- 0 replies
- 713 views
-
-
கண்டேன் என்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிட்டார் நிம்மி என்ற புதிய நடிகை.அந்த நடிகை மீது பட அதிபர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கண்டேன்.’ இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நிம்மி என்பவர் நடித்து வந்தார்.ஹைதராபாத் விமான நிலையத்தில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், …
-
- 0 replies
- 856 views
-
-
நேரத்தில் எந்த சேனலை அழுத்தினாலும் ஏதோ ஒரு ஜீன்ஸ் யுவதி அல்லது யுவன் ‘தொலைதூரத்தில் வெளிச்சம் நீ’ என்று ஏதோ ஒரு பாட்டின் சரணத்தை பதற்றத்துடன் மேல் ஸ்தாயியில் இழுத்துக் கொண்டிருக்க.. எதிரே அரை இன்ச் மேக்-அப்புடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் இசையுலக பிரபலம். இந்த நடுவர்கள் (பெரும்பாலும் பெண்கள்-தோற்கும் பையன்களின் எரிச்சலைக் குறைக்கவோ!) சுகமாக பாட்டை கேட்டபடி சிவப்பு, மஞ்சள், பச்சை பட்டன்களை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். உங்களுக்குத் தெரியாதது, இதற்கு இவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது! தினமும் இந்த ஜட்ஜ் பிரபலங்கள் எவ்வளவு கல்லா கட்டுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட சிலரிடம் விசாரித்தோம். இதோ வட்டங்களில் அவர்களின் ஒரு நாள் - அதாவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமா ராம்குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் …
-
- 0 replies
- 992 views
-
-
அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்! மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள். அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா. பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை…
-
- 0 replies
- 983 views
-
-
சேனாதிபதியின் சீக்ரெட் பிளான் சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்தக் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயாரிப்பாளரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1008/25/1100825038_1.htm
-
- 0 replies
- 820 views
-
-
ஷங்கரின் தடாலடி முடிவு - சரிகிறதா சினிமா சாம்ராஜ்யம்? ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது. இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம். காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலாஜி சக்திவேல், வசந்தபால…
-
- 0 replies
- 797 views
-
-
இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர்குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்குஅண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் கலந்துகொண்டு முதல் சிடி வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவி…
-
- 1 reply
- 643 views
-
-
பெங்களூருவின் ‘ஆனந்தா நகரில்'யாரைக் கேட்டாலும்,வாணி கணபதியின் அழகான வீட்டை அடையாளம் காட்டி விடுகிறார்கள்.வீடு முழுவதும் அற்புதமான அலங்காரப் பொருட்கள்.நடனக் கலைஞர்,ஆடை வடிவமைப்பாளர், இண்டீரியர் டெகரேட்டர் என வாணிக்குப் பல முகங்கள் இருந்தாலும் கமலின் முன்னாள் மனைவி என்பது தமிழர்கள் மறக்காத விஷயம். கமலுடன் விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். இனிமையாகப் பேசுகிறார். ‘‘20 வருடங்களுக்கு முன்பு கமலைப் பிரிந்து பெங்களூர் வந்தபோது ஒரு செக்கில் கையெழுத்திட மட்டுமே தெரிந்திருந்தது.வேறு ஒன்றையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்து, புகுந்த வீட்டிலும் சாருஹாசன் அண்ணா, மன்னி, ஹாசினி அக்கா, தங்கைகள் என அனைவரின் அன்புப் பிடியில…
-
- 3 replies
- 4.8k views
-
-
எந்திரன் ஆடியோ ரிலிஸ் பலர் கண்டு களித்தாலும், ஹிந்தி ஆடியோ ரிலீசை பலர் கவனிக்கவில்லை.. உண்மையில் அதுதான் சூப்பராக இருந்ததது,,, ரஜினியின் பேச்சு வெளிப்படையாகவும் , சம்பிரதாயம் அற்றும் இருந்தது... நேமையாக பேசினார். என்னதான் பேசினார்? " ரகுமான் புனித்ததன்மை நிறைந்தவர்,,, ஆன்மிக கடல்,,நன்றாக இசை அமைத்துள்ளார்.. எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்து கொண்டதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி... நான் மிகைபடுத்தவில்லை,, உண்மையிலேயே நன்றி.. சமிபத்தில் என் சகோதரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்,, நான் இருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஒரு ராஜஸ்தானி வந்தார்.. அவர்க்கு அறுபது வயது இருக்கும்.. என்ன எப்படி இருக்கீங்க என ஜாலியாக விசாரித்தார்.. என்ன முடியை காணோம் என கிண்டலடித்தார…
-
- 0 replies
- 790 views
-
-
டென்ஷனில் இருக்கிறது திரையுலகம்.இன்னும் யார் யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப் போகிறதோ என்று பயந்து கிடக்கிறது. காரணம்,ஹைதராபாத்தில் பிடிபட்ட போதை ஆசாமிகள்.தெலுங்கில் பிரபல நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட,அவர்களுடன் நைஜீரிய ஆசாமி ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது லேப்டாப்பில் பல நடிகர், நடிகைகளின், வி.ஐ.பி. மகன்களின் தொலைபேசி எண்கள். த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள் கடுமையாக இதை மறுத்திருக்கிறார்கள். ‘‘சமீப காலமாகவே திரையுலகில் ராத்திரி பார்ட்டிகளும் ரகசிய விருந்துகளும் அதிகமாகிவிட்டன. இந்த போதை பயங்கரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம்’’ என்கிறார் திரையுலக…
-
- 0 replies
- 915 views
-
-
அசின் மற்றும் விவேக் ஓபராய் படங்களுக்கு செருப்பு மாலை! புதன், 25 ஆகஸ்ட் 2010 19:49 அண்மையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. தமிழ் மக்களை இலங்கை அரசு நடத்தும் விதம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்ததனால் இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் அவ்விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வறு தரப்புக்களில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் ம…
-
- 1 reply
- 743 views
-
-
சல்மான்கானோடு இலங்கை சென்ற அசினுக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து கோலிவுட் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் பாலிவுட். ‘தென்னிந்திய நடிகைகளோடு இனி நடிக்கமாட்டோம்’ என்று சல்மான்கானை வைத்து மற்ற ஹீரோக்களிடம் ஒரு சஸ்பென்ஸ் பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதன் முதல் கட்டமாக பிரியதர்ஷன்தன் இந்திப்படத்தில் சல்மான்கானையும், பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது தெரிந்து சல்மான் -‘‘பிரியாவை நீக்கிவிட்டு வேறு யாரையாவது போடுங்கள்.அதுவும் பாலிவுட் ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டு விட்டாராம். இது பற்றி பிரியாமணியிடம் பேசினோம். கோடம்பாக்கத்தின் மேல் அப்படியென்ன கோபம், உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே? ‘‘நல்ல ர…
-
- 2 replies
- 1.3k views
-
-
இது சினிமாக்காரர்களின் வாரம்' என்று சொல்லும் அளவுக்கு செப்டம்பர் முதல்வாரம் அமையவிருக்கிறது. 3ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக் கல்யாணம்.மகள் சவுந்தர்யாவுக்கு 3நாள் கல்யாணம் நடத்தி அழகு பார்க்கிறார்.5ஆம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து வீட்டுக் கல்யாணம்.மகன் கபிலனுக்கும் டாக்டர் ரம்யாவுக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடக்கிறது. 4ஆம் தேதி குஷ்புவின் தயாரிப்பான 'நகரம்' படத்தின் ஆடியோ லாஞ்ச். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். 1ஆம் தேதி 'குவார்ட்டர் கட்டிங்' பட ஆடியோவை சூர்யா வெளியிடுகிறார். (எப்பூடி!) * 'நெல்லு' படத்துக்கு நம்ம ஊரு சென்சார் தடைபோட்டிருக்கு. கீழ வெண்மணியில் நிகழ்ந்த தீகொளுத்தி நிகழ்வை அப்படியே கதை நினைவுபடுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏனோ எனக்கு இந்த அரசியலை கொஞ்ச நேரம் மறந்து சந்தோசமாக இருக்கும் நேரம் உற்சாகபானமும் கமலின் படங்களும் தான். கமலை எப்போ பிடிக்கக்தொடங்கியது.பள்ளிகூடம் கட் பண்ணி நடந்து போய் வின்ஸர் தியேட்டரில் 'சொல்லத்தான் நினைக்கின்றேன்" படம் பார்க்கின்றோம்."யூ டோன்ட் நோவ்" இதுதான் கொஞ்ச நாட்களாக எங்களை ஆட்டி படைக்கின்றது.அதன் பின் எந்த ஒரு கமல் படமும் மிஸ் பண்ணியதில்லை இன்றுவரை.அதுவும் மூன்று முடிச்சு,அபூரவ ராகங்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை.
-
- 16 replies
- 2k views
-