வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழு…
-
- 0 replies
- 778 views
-
-
காதலை கடைசி வரை சொல்லாமலே ரசிகர்களின் மனதை கனப்படுத்தும் நடிப்பை வெளிபடுத்தி வெற்றி பெற்றவர் நடிகர் முரளி. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களி்ல் நடத்துள்ளார். அதில் பல படங்கள் வெள்ளி விழாப் படங்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் முரளி. இதனால் சினிமாவில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது. இந்நிலையில் தற்போது மறு அவதாரம் என்ற படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார் முரளி. ஹீரோயினாக விலாசினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டத்யா எனும் புதுமுகம் அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய கே.பாலேந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசம்தான் படத்தின் மையக் கரு. சைடில் ரொமான்ஸ், சண்டை போன்ற மசாலா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை........... வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7017.html
-
- 3 replies
- 2.6k views
-
-
ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய…
-
- 39 replies
- 9.3k views
-
-
வைர சுரங்கத்துக்காக ஒரு கூட்டம் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் வில்லன். வில்லனிடமிருந்து தனது அப்பாவையும், அப்பாவி ஜனங்களையும் காப்பாற்றும் ஹீரோ. காப்பாற்றும் வேலைகளுக்கு நடுவில் வில்லனின் அழகான தங்கையுடன் காதல். முடிவில் எல்லோரும் எதிர்பார்த்த சுபம்! பழைய பிளாக் அண்டு ஒயிட் ஜெய்சங்கரின் கெளபாய் ஸ்டைல் கதைதான் குருவி. விஜயின் அப்பா மணிவண்ணன் தனது மூன்று மனைவிகளையும், ஒரு டஜன் பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டு தலைமறைவாகிறார். கடன் தொல்லைக்குப் பயந்து ஓடிப்போனார் என்று நினைத்திருக்க, மலேசியாவில் தான் சந்தித்த தாதா கோச்சாதான் (சுமன்) தனது அப்பாவை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற விவரம் விஜய்க்கு தெரிய வருகிறது. அப்பாவை காப்பாற்ற வைரச் சுரங்கம் இருக்கும் ஆந்திரா கட…
-
- 27 replies
- 7.5k views
-
-
சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது. அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' …
-
- 0 replies
- 860 views
-
-
ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…
-
- 0 replies
- 821 views
-
-
முன்னணி வார இதழ் ஒன்றில் வந்திருக்கிறது அந்த கட்டுரை. தன்னை மனித நேய காவலராக காட்டிக் கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டி அது. இரண்டு மகன்களாம் இவருக்கு. தந்தையை இழந்த அவர்களை பாடுபட்டு வளர்த்தது இந்த தாய்தான். பார்த்திபன், பாபு என்ற இருமகன்களில் பாபு எங்கே போனார் என்பதே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியாமலிருக்கிற சூழ்நிலையில், மூத்த மகனான பார்த்திபன் தனது அம்மாவை வீட்டிலிருந்து அனுப்பி பல வருடங்கள் ஆகிவிட்டதாம். தான் இன்னார் என்றே சொல்லாமல் எங்கெங்கோ தங்கியிருந்த இந்த தாய், ஒரு கட்டத்தில் அநாதை ஆசிரமத்தில் கூட இருந்திருக்கிறார். “எத்தனையோ பஸ் பிடிச்சு அவனை பார்க்க அவனோட ஆபிசுக்கு போவேன். சார் பிசியா இருக்காரு என்ற…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு காலத்தில் கவுண்டமணி இருந்தாரே.. அதே அளவு பிஸியாக இருக்கிறார் வைகை புயல் வடிவேலு. தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி. இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு. அவர் அளித்துள்ள புகாரில், `பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை. …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது 'தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப' நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்…
-
- 6 replies
- 1.9k views
-
-
பட்டு மேனியை பஞ்சராக்கவிருந்த தீ விபத்திலிருந்து உயிர் தப்பினார் நமீதா. சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு பங்களா ஒன்றில் குடியிருந்து வருகிறார் நமீதா. பெற்றோர்கள் குஜராத்தில் வசிப்பதால் நமீதாவின் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டும் உள்ளனர். நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, 'இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள 'ஏர் கண்டிஷன்' மிஷினை 'ஆன்' செய்தார். சீ…
-
- 13 replies
- 2.5k views
-
-
ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்... ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்... ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்.... அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்! இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது. கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை: ராசுவும் (சந்தானம்), மொக்கைய…
-
- 5 replies
- 2.5k views
-
-
முதல் கல்யாணத்தின் தோல்வியால் நான் உடைந்து போய் விடவில்லை. கண்டிப்பாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா. சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே அறிமுகமானவர் சொர்ணமால்யா. அதன் பிறகு பெரும் பாப்புலர் ஆன சொர்ணமால்யா மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் சினிமாவுக்கும் வந்தார். டிவியில் இருந்தவரை அமைதியான பிரபலமாக அறியப்பட்ட சொர்ணமால்யா சினிமாவுக்கு வந்த பிறகுதான் பல மாற்றங்களில் சிக்கினார். 2002ல் கல்யாணம் செய்த சொர்ணமால்யா, அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன் பின்னர் முழு நேர நடிகையாக மாறினார். ஆனால் அவருக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவரது திரை வாழ்க்கை அமைதியான கடல் போல காணப்பட்டது. இடைய…
-
- 10 replies
- 3.9k views
-
-
'குருவி'யை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள 'குருவி' படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது லண்டன் கருணாஸின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதற்கு முன்பாக தனது கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி உதயநிதி கேட்டுக்கொண்டதால் லண்டன் கருணாஸூக்கு தந்த கால்ஷீட்டை உதயநிதிக்கு கொடுத்தார் விஜய். இப்போது 'குருவி' படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு காத்திருப்பதால் லண்டன் கருணாசுக்கு கால்ஷீட்டுக்களை ஒதுக்கியுள்ளார் விஜய். பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.'போக்கிரி', 'குருவி' படங்களில் நயன்தாராவுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனதால் இம்முறை நயன்தாராவுக்கு தனக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சரோஜா படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்குகிற படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய படம் போலவே நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுத்து வருகிறார் வெங்கட். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சரோஜா படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜின் பிடிவாதம் யூனிட்டையே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அது சண்டைக்காட்சியாம். அடிவாங்க வேண்டிய பிரகாஷ்ராஜ், அதன் பின் அதே வேகத்தோடு கீழே விழுவது போல் காட்சி. டைரக்டர் காட்சியை விளக்கியதும் டென்ஷன் ஆகிவிட்டாராம் பிரகாஷ்ராஜ். நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் தெரியுமா? யாரோ ஒரு புதுமுகம் அடிக்க, நான் கீழே விழ வேண்டுமா? …
-
- 0 replies
- 833 views
-
-
ஆட்டோகிராப் 2ம் பாகத்தை எடுக்கவிருக்கும் சேரன், அதில் கோபிகா நடித்த கேரக்டரில் நடிக்க உதயதாராவை அணுகியுள்ளாராம். ஆட்டோகிராப் மூலம் ஹீரோவா அவதாரம் எடுத்தவர் சேரன். அதில் அவரது நடிப்பு மட்டுமன்றி கதையும், கோபிகா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் சேரன். இதில் ஸ்னேகா, மல்லிகா ஆகியோர் கேரக்டர்களில் அவர்களே நடிக்கவுள்ளனர். ஆனால் கோபிகாதான், 2ம் பாகத்தில்நடிக்க முடியாது என்று கூறி விட்டார். கல்யாணமாகப் போவதை காரணம் காட்டி நடிக்க மறுத்து விட்டாராம் கோபிகா. பலமுறை சேரன் கோரியும் கூட கோபிகா தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம். இதையடுத்து தற்போது உதயதாராவை அணுகியுள்ளாராம் சேரன். கோ…
-
- 0 replies
- 806 views
-
-
விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாக…
-
- 0 replies
- 669 views
-
-
தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ விழாவில் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவுக்கு வந்த சான், இந்திய உணவுகளை புறக்கணித்ததாகவும், தண்ணீர் கூட குடிக்கவில்லை, கூடவே கொண்டு வந்திருந்தார். நடிகர்களுடன் பேசவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஜாக்கி சான். இதுதொடர்பாக தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார் ஜாக்கி. அதில் ஜாக்கி சான் கூறியிருப்பதாவது: என்னால் மறக்க…
-
- 0 replies
- 658 views
-
-
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா. சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம். இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…
-
- 0 replies
- 3.2k views
-
-
இந்த ஆண்டு கோடைகாலம் திரிஷாவின் காலமாக மாறியுள்ளது. காரணம், இந்த கோடை விடுமுறையில் திரிஷா நடித்துள்ள 3 படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸாகின்றன. விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள குருவி, ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அபியும் நானும், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புஜ்ஜிகாடு ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தரணியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள குருவி அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1ம் தேதி உலகெங்கும் குருவி ரிலீஸாகிறது. அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்துள்ளார் திரிஷா. இதில் திரிஷா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம். எனவே இப்படத்தையும் அதிகம் எதிர…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் சினிமாவில் இந்து கடவுள்களை கொச்சைபடுத்தி வருவதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது குறித்து பகிரங்கமாகவே பலமுறை எச்சரித்திருக்கிறார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். இந்நிலையில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறது புதிய திரைப்படத்திற்கான அழைப்பிதழ் ஒன்று. வணக்கம்மா என்ற படத்தின் அழைப்பிதழில், இராமனும், அனுமனும் சிறுநீர் கழிப்பது போன்ற படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற புதனன்று நடைபெறவிருக்கும் படத்துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் இதே படத்தை பிரமாண்ட போஸ்டராகவும் ஒட்டப் போகிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் அன்புத் தென்னரசன், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியார் த…
-
- 41 replies
- 8.7k views
-
-
முதல்வரிசை ரசிகர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை ஒரு நடிகரை ரசிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. முன்பு எம்.ஜி.ஆரை அப்படி ரசித்தார்கள். பிறகு ரஜினி. இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் இளைய தளபதியாக வலம் வரும் விஜய்! சமீபத்தில் தெற்கு ஆஸ்ட்ரேலியப் பிரதமர் மைக் ரான் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது சென்னையில் நடந்த தென்னிந்தியத் தொழில் வர்த்தகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இருநாடுகளுக்கு இடையே தொழில், வர்த்தக உறவுகள் செழிக்க வேண்டும் என்றால் பண்பாட்டுப் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றவர், சென்னையை வெகுவா…
-
- 3 replies
- 2k views
-
-
பிரபல்யமான "கொக்கு சைவக் கொக்கு" பாட்டைப் பாடிய பாட்டியார்.. தேனி குஞ்சரம்மா அவர்கள் மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 75. -அவருக்கு எமது கண்ணீரஞ்சலிகள். ------------------ நாட்டுப்புறப் பாடகி தேனி குஞ்சரம்மா மரணம் ென்னை: பிரபல நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானவர் குஞ்சரம்மா. அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்தும், பாடியும் இருக்கிறார். வெண்கலக் குரலில் இவர் பாடியுள்ள பல பாடல்கள் பிரபலமானவை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சரம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அன…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ்சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கன்னத்தை பிடித்து "கண்ணே.." என்று கொஞ்சலாம் விக்ரமை! வேறொன்றுமில்லை. தனது கண்களை தானம் செய்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்ல, தனது ரசிகர்கள் சுமார் 1300 பேரையும் தன்னை போலவே கண்தானம் செய்ய வைத்திருக்கிறார். இதற்கான முறையான பத்திரத்தை ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் அவர். இல்லாத ஒருவருக்கு கண் கிடைத்தால் அவர் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவார்? அங்கேயே, அதே மேடையிலேயே அந்த அனுபவத்தை பெற்ற இருவரை பேச வைத்து பார்ப்பவர்களின் கண்களை குளமாக்க செய்தார் விக்ரம். இப்படி ஒரு எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது? காசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி. கண்பார்வையற்ற விக்ரமை கையை பிடித…
-
- 0 replies
- 854 views
-