வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …
-
- 0 replies
- 371 views
-
-
பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார் பழம்பெரும் நடிகையான கே.ஆர்.இந்திரா இன்று சென்னையில் காலமானார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். ‘ஹலோ Mr.ஜமீ…
-
- 0 replies
- 371 views
-
-
"துருவ நட்சத்திரத்தில்" சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா? கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா. துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். …
-
- 0 replies
- 370 views
-
-
திரை விமர்சனம்: குற்றமே தண்டனை விதார்த்துக்கு கண்ணில் பிரச்சினை. அவரது பார்வை வீச்சின் சுற்றளவு மிகவும் குறைவு. குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் (Tunnel Vision) அவரால் பார்க்க முடியும். பக்கவாட்டுக் காட்சிகள் தெரியாது. படிப்படியாக அந்தப் பார்வைத் திறனும் மறைந்துவிடும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதற்கு அவரது வருமானத்துக்கு மீறிய பெரும் தொகை தேவைப்படுகிறது. விதார்த் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டுக்கு ரஹ்மானும் மற்றொரு இளைஞரும் அவ்வப் போது வந்து போகின்றனர். திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு என்ன…
-
- 0 replies
- 370 views
-
-
பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் பட…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு நடிகர் விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்…
-
- 0 replies
- 369 views
-
-
Chennai: 2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய 'Demons in Paradise' ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது. 'எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை' என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள். இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வ…
-
- 0 replies
- 369 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடமும் ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளும் இந்த திரைப்படவிழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் இவற்றில் சர்வதேச விருதுபெற்ற உள்நாட்டு வெளிநாட்டுத் திரைப்படங்களும் அடங்குகின்றன. யாழ் சர்வதேச த…
-
- 1 reply
- 369 views
-
-
பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் 50 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் க…
-
- 4 replies
- 369 views
- 2 followers
-
-
தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! 2016-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் கமல், அஜித் நடித்த படங்களைத் தவிர எல்லா முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின. மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின், செல்வராகவன் படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள், இயக்குநர்களில் நம்பிக்கையை தகர்த்தவர்கள் குறித்து பார்க்கலாம். பாலா 'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் …
-
- 0 replies
- 368 views
-
-
விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ என்ற ஹாலிவுட் படத்திற்காக மரணத்தை பரிசளிக்கக்கூடிய காட்சியில் விமானத்திலிருந்து தொங்கியபடி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாம் குரூஸ். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி பறப்பதற்கு தயாராகும் காட்சிகளும், அது பற்றி சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அளித்த பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் மிக சிரமத்திற்கு இடையில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை வந்துள்ள மிஷன் இம்பாசிபிள் படங்களின் 4 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் வரும் ஜூலை 31 அன்று வெளிவரும் இதன் 5-ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. - See …
-
- 0 replies
- 368 views
-
-
இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்! இந்த வாரம், பலத்த போட்டிக்கு இடையே, 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஸ்ட்ரைக் நிறைவடைந்த பிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட திரைப்படங்களும், பெரியளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 'இருட்டு அறையில் முர…
-
- 0 replies
- 368 views
-
-
Power star சிறினிவாசனின் செவ்வி http://youtu.be/gdjS0xZAoYo =============================================================== http://www.youtube.com/watch?v=gGNP_JuZaY8
-
- 0 replies
- 368 views
-
-
ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் உறைந்துள்ள முடிவு – ஆர். அபிலாஷ் June 12, 2021 - ஆர்.அபிலாஷ் · சினிமா கட்டுரை ablish three things to your reader or audience: (1) who is your main character? (2) What is the dramatic premise — that is, what’s your story about? and (3) what is the dramatic situation — the circumstances surrounding your story?”- Syd Field (“The Foundations of Screenwriting”, p. 90) சிட் பீல்டைப் பொறுத்தமட்டில் ஒரு திரைக்கதையை சரியாகத் துவங்க முதலில் நாம் அதன் முடிவை, கதையின் உள்ளார்ந்த மோதல்கள் உருவாக்கும் சிக்கலுக்கு நாம் வந்தடைகிற தீர்வை (resolution) நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு நல்ல திரைக்கதை துவங்குகிற இடத்தி…
-
- 0 replies
- 368 views
-
-
நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …
-
- 0 replies
- 367 views
-
-
மும்பை போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷாருகான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.டோணி கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி 4-வது இடத்தில் தான் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் ஆமீர் கான் 5-வது இடத்திலும், அக்ஷய் குமார் 6வது இடத்திலும், விராட் கோலிலி 7-வது இடத்திலு…
-
- 0 replies
- 367 views
-
-
கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து? Posted by: Shankar Updated: Tuesday, January 8, 2013, 10:17 [iST] சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமி…
-
- 0 replies
- 366 views
-
-
சினிமா விமர்சனம்: இரும்புத் திரை திரைப்படம் இரும்புத் திரை நடிகர்கள் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், டெல்லி கணேஷ் இசை யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் பி.எஸ். மித்ரன் ஆதார் தகவல்கள், ஃபேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குத் தகவல்கள் திருடப்படுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெள…
-
- 0 replies
- 366 views
-
-
திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) …
-
- 0 replies
- 366 views
-
-
ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…
-
- 0 replies
- 366 views
-
-
பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டது.கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் இதுபோல் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாக 1 கோடியே 15 லட்சம் வரி ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியலில், இந்தியாவில் இருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும…
-
- 0 replies
- 366 views
-
-
தனுஷால் காயமடைந்த நயன் ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம். இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார். அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்பட…
-
- 0 replies
- 366 views
-
-
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. …
-
- 0 replies
- 365 views
-
-
அரியவகை கேன்சர், 1 வருட போராட்டம், தொடர் கீமோ, வாழ ஓர் வாய்ப்பு: மீண்டும் நடிக்க வந்த இர்ஃபான் கான்! ‘என் உடல் சில நாட்கள் நன்றாகவும், சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’ - இர்ஃபான் கான் By Gajalakshmi Mahalingam 18th Mar 2020 எதிர்பாராதது எதிர்பார்க்காத நேரத்தில் நிகழும் போதே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நடிப்புத் துறையில் கோலோச்சும் நடிகர், பணம், பெயர், புகழுக்குப் பஞ்சமில்லை வாழ்வில் இன்னும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இர்ஃபான் கானுக்கு 20…
-
- 0 replies
- 364 views
-