Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிப்பு - விஜய், ஸ்ரேயா இயக்கம் - பரதன் (அறிமுகம்) இசை - ஏ.ஆர். ரஹ்மான் (கதை ) எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் கதை. ( நடிப்பு) விஜய், ஸ்ரேயா, நமிதா மற்றும் பலர். (சிறுதுளிகள் ) * அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார். * தரணியின் உதவியாளரும் 'கில்லி' வசனகர்த்தாவுமான பரதனுக்கு இது முதல்படம். * முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ரேயா, நமிதா ஜோடி சேர்நதுள்ளனர். * ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். * நமிதாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். * 'சொர்க்கம்' படத்தில் இடம…

  2. ஒரே 'சூப்பர் ஸ்டார்' தான்-விஜய் தமிழ் திரையுலகின் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக் காரர் ரஜினிகாந்த் மட்டுமே, அது வேறு எவருக்கும் பொருந்தாது என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக சத்தம் போடாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி உதவிகள் வழங்கும் விழா விஜய் தலைமையில் கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கன மழையிலும் இந்த விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்து அசந்து போனார் விஜய். நிகழ்ச்சியில் பேசிய விஜய், நான் சினிமாவுக்கு வரும் முன் என் தந்தை எனக்கு நடிப…

    • 3 replies
    • 2k views
  3. நடிப்பு - சூர்யா, அசின் இயக்கம் - ஹரி இசை - யுவன்ஷங்கர்ராஜா (கதை) ஆயிரம் அரிவாளால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை, ஆறு அறிவால் சாதிக்க முடியும் என்பதே படத்தின் மையக்கரு. (நடிகர்) சூர்யா, அசின், வடிவேலு, நாசர், சரண்ராஜ், கலாபவன்மணி, சார்லி, அம்பிகா மற்றும் பலர். (சிறுதுளிகள்) * 'பேரழகன்' படத்திற்கு பிறகு சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். * 'கஜினி' படத்தைத் தொடர்ந்து சூர்யா ஜோடியாக நடிக்கும் அசின், ஐயர் வீட்டு பெண், மார்டன் கேள் என இருவித…

  4. சொந்த கதையை வைத்து இன்னும் எத்தனை படம் எடுக்கப் போகிறார் சிம்பு? மன்மதன், வல்லவனை தொடர்ந்து சிம்புவின் முழுக் கட்டுபாட்டில் உருவாக இருக்கும் படம் 'கெட்டவன்.' படம் தொடங்கி 20 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ஹீரோயின் லேகா வாஷிங்டன்னை படத்திலிருந்து நீக்கினார். கூடவே படத்தின் கதையும் தயாரிப்பாளரும் மாறப் போகிறார்களாம். 'கெட்டவன்' படத்தை சிம்புவின் உதவியாளர் நந்து இயக்குவதாக இருந்தது. தன்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று நந்துவை நீக்கி விடடு கதை, திரைக்கதை, வசனத்துடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் சிம்பு. படத்தின் கதை, சிம்பு - நயன்தாரா காதலை பின்னணியாகக் கொண்டது. இதனை வேறு மொழியில் சிம்புவே ஒப்புக் கொண்டுள்ளார். படத்துக்காக …

  5. ஒரு தாயின் மடிபோல, இலங்கை தமிழர்களுக்கு கலப்படமற்ற நேசம் காட்டி அடைக்கலம் கொடுத்த நாடு நார்வே. இங்கு குற்றம் குறைகள் எதுவுமின்றி சுத்தமாக இருந்த இலங்கை தமிழ்ர்களிடையே கடந்த மூன்று மாதத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு குரூர சம்பவம், நார்வே அரசாங்கத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. யாரோ இருவருக்கிடையே எழுந்த மனச்சிதைவு ஒரு கொலையில் போய் முடிந்தது. இந்த சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்றும் அக்கறையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. 'மீண்டும்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை N.T பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. நார்வே தபால்துறையில் அதிகாரியாக இருக்கும் துரூபன் சிலரது கூட்டுமுயற்சியில் உருவாகும் இப்படத்திற்கு துரூபனே ஒளிப்பதிவு செய்கிறார். கதை, வசனம் எழ…

  6. 'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…

  7. ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டது - 26.10.2007 By JBR ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டதாக அதி்ல் நடிக்கயிருந்த நடிகர் ஷாருக்கான் தெரிவி்த்தார். 'ஜீன்ஸ்' படம் முடிந்ததும் ஷங்கர் எழுத்தாளர் சுஜாதா துணையுடன் உருவாக்கிய கதை 'ரோபோ.' இந்தியாவில் ரோபோக்களின் ஆதிக்கம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை பின்னணியாகக் கொண்ட சயின்ஸ்பிக்ஷன் இது. 'ரோபோ'வில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் பட்ஜெட் மற்றும் கதையில் ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக அப்போது 'ரோபோ' கைவிடப்பட்டது. 'சிவாஜி'க்குப் பிறகு 'ரோபோ'வின் ஒருவரி கதையை ஷங்கர் ஷாருக்கானிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்துவிட, தானே தயாரிப்பதாக கூறினார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக முடிவானது. ஷங்கர் திரைக்கதை அமை…

    • 0 replies
    • 1.1k views
  8. 'வசூல் ராஜாக்களுக்கு' கமல் எச்சரிக்கை எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன…

    • 0 replies
    • 1.2k views
  9. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தான் காதலித்து வந்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் ஏராளமான ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்.டி.ஆருக்கு பிறகு ரசிகர்களால் தெய்வமாக போற்றப்படுபவர் சிரஞ்சீவி. இந்த காதல் திருமணத்திற்கு அவர் எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது பற்றி ஸ்ரீஜா பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசியதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். நானும் சிரிஷ§ம் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். இதையறிந்ததும் எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு செல்ல விடாமல் ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு…

    • 10 replies
    • 4.6k views
  10. நடிகர் ஜீவாவுக்கு திருமணம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரும் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, கற்றது தமிழ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் பிரபல பட அதிபர் ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜீவா, அமெரிக்காவில் படித்த தன் உறவுப்பெண் சுப்ரியாவை மணக்கிறார். ஜீவாவின், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சமீபத்தில் தில்லியில் நடந்தது. இவர்களது திருமணம் தில்லியில் 2007 நவம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள நண்பர்கள் வசதிக்காக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் டிசம்பர் 1ஆம் தேதி, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அப்பாவின் நிழலில் வளராமல், குறுகிய காலத்தில் தன…

    • 0 replies
    • 1.4k views
  11. சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது பள்ளிப்படிப்பு பெரும்பாலும் இலங்கையில்தான் இருந்தது. இலங்கையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிங்கள தொடர்களை தயாரித்து வருகிறேன். விரைவில் சிங்கள படம் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இதுதான் ராதிகாவின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள். சிங்கள திரைப்பட விழாவை ராதிகா துவக்கி வைத்ததும், அங்கு அவர் பேசிய பேச்சுகளும் தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் செய்கிற துரோகம்! -இப்படி குமுற ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாடு அன்னையர் முன்னணி …

  12. 'தீ'.. கனடாவில் ஓடிய விஜயகாந்த்! கனடாவில் மனைவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த், தீ விபத்து ஏற்பட்டதாக புரளி கிளம்பியதால் மனைவியுடன், ஹோட்டலிலிருந்து வெளியேறி நடு ரோட்டில் 3 மணி நேரம் பரிதவித்தார். Click here for more images விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் 'அரசாங்கம்'. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க, மாதேஷ் இயக்குகிறார். படப்பிடிப்பு கனடாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் கனடாவில் முகாமிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இரவு விஜயகாந்த்தும், வில்லன்களும் மோதும் பயங்கர சண்டைக் காட்சியை படமாக்கினர். இந்க சண்டைக் காட்சியில் விஜயகாந்த் தவிர, நாயகி நவ்னீத் கெளர், மனோஜ் கே. ஜெயன், ஷெரீன் பிண்ட…

  13. தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களிடமும் கதை சொல்லி, கடைசியில் சிம்புவிடம் சம்மதம் வாங்கியிருந்தார் கேமிராமேன் சரவணன். படத்தின் பெயரையும் சிம்புவுக்கு ஏற்றமாதிரியே சிலம்பாட்டம் என்று வைத்திருந்தார். காளையை முடித்துவிட்டு கெட்டவனை தொடருவார் சிம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிலம்பாட்டத்தின் அறிவிப்பு சின்ன குழப்பத்தை கொடுத்திருக்கிறது. உண்மையில் கெட்டவன் படத்தை முடித்துவிட்டுதான் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க போவதாக இருந்தாராம் சிம்பு. ஆனால், கெட்டவன் ஏற்படுத்திய செலவு முதல் ஷெட்யூலிலேயே தயாரிப்பாளரின் கண்ணை கட்டியதால் முழு பட்ஜெட்டையும் சொல்லுங்க, பிறகு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். இப்படியெல்லாம் சொன்னால் சிம்புவுக்கு என்ன வரும்? ஆங்.. கோபம் வரும்! அப்பட…

  14. இனிய யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். அத்தி பூத்தால் போல் அவ்வப்போது வந்து அசத்தத் தான் இப்ப நேரம் கிடைக்குது. உங்களோடு கதைத்து கன நாட்கள் ஆகிவிட்டது. எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் கண்களுக்கு நிழற்பட விருந்து அளிக்கின்றேன் பார்த்து மகிழுங்கள். நாளை சினிசவுத்.கொம் பாருங்கள் மீண்டும் திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும். இதோ "காதல் கடிதம்" திரைப் படத்தின் நிழற்படங்கள் உங்களுக்காக.... திரைக்கு வரும் வரை காத்திருங்கள். காதல் கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இன்பங்கள் பல கோடி. http://www.indiaglitz.com/channels/tamil/m...llery/8685.html

  15. அட எல்லாருக்கும் வணக்கம் நாமளே தான் என்ன இந்த பகுதியில என்று பார்கிறது விளங்குது சரி விசயதிற்கு வாரேன் .........ஜம்மு பேபி மொண்டசூரிக்கு டிரேயினில தான் போறது வீட்டில இருந்து போக 1 மணித்தியாலம் எடுக்கும் அப்ப ஒவ்வொரு நாளும் ஏதாச்சு புத்தகமும் காதுகுள்ள ஜபோர்டையும் போட்டா பிரயோசனமா இருக்கும் என்று இருந்திட்டு செய்வேன் கூட பிரண்ட்ஸ் வந்திட்டா வழமை போல டிரேயினில சைட் அடிக்க தொடங்கிடுவோம் அது வேற கதை சரி விசயதிற்கு வாரேன்!!இன்றைக்கு டிரெயினில வாசித்த புத்தகம் "உலக திரைபட மேதை அகிரா குரோசாவா " என்ற புத்தகம் பல சுவாரசிய சம்பவங்கள் அதில் இருந்தது மிகவும் இன்ரசா இருந்தது வாசிக்க .........சோ அதில் இருந்து முக்கிய விடயங்களை இன்று தருகிறேன் நாளை பயணத்தின் பின் மிச்சத்தை எழுதுகி…

    • 5 replies
    • 2.8k views
  16. 'மச்சம்ய்யா.....' இளம் நடிகர்கள் பொறாமையில் பொசுங்குகிறார்கள். இருக்காத பின்னே? ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ஸ்ரேயா, வடிவேலுடன் டூயட் பாடுகிறார் என்றால், பொறாமையில் யாருக்குதான் அடிவயிறு பொசுங்காது? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுக்கு மூன்று வேடங்கள். வேடத்துக்கு ஒரு நாயகி என்று மூன்று நாயகிகள். இது போதாது என்று நான்காவதாக இம்போர்ட் செய்திருப்பவர்தான் ஸ்ரேயா. படத்தில் வடிவேலு தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என கனவு காண்கிறார். அந்த கனவின் கன்னியாக ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணுடன் வடிவேலு டூயட் பாடுகிறார். இந்தக் காட்சிக்காக ஸ்ரேயாவை அணுகியிருக்கிறார். டாப் ஹீரோகக்ளுடன் நடிக்கும் நான் ஒத்த பாடலுக்கா? என மொத…

    • 1 reply
    • 1.2k views
  17. http://video.google.com/videoplay?docid=81...08422&hl=en இத்திரைபடத்தை பற்றிய டிசே தமிழனின் விமர்சன பதிவு கீழே இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவ…

  18. நவீன ஓவியங்களைப் போலவே ஓவியர்களின் வாழ்க்கையும் புதிரும் வசீகரமும் நிரம்பியது. நீண்ட பாரம்பரியமும் மரபும் கொண்ட ஓவிய உலகில் பல நூற்றாண்டுகளாகவே ஓவியர்கள் தனித்துவமானவர்களாகவும் தங்களுக்கென தனியானதொரு அகவுலகையும் உணர்ச்சி நிலைகளையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். டாவின்சி ஓவியராக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக அவரது நோட்புக்ஸை வாசிக்கும் போது அறிய முடிகிறது. அது போல கவிஞர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், தத்துவ சார்பு கொண்டவர்களாகவும் பல முன்னணி ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. புகழ்பெற்ற ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கையில் அனைவரது வாழ்விலும் மிகுந்த வறுமையும் சொல்ல முடியாத அவமானமும் தன…

    • 0 replies
    • 982 views
  19. விஷால், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தேவராஜ், ஊர்வசி, ரேகா, அஜய்குமார், பொன்னம்பலம், ஆர்த்தி நடித்துள்ளனர். வைத்தியின் ஒளிப்பதிவில் மணிசர்மாவின் இசையில் ஜி. பூபதிபாண்டியன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீலஷ்மி புரொடக்‌‌ஷன்ஸ். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இளைஞனை இந்த சமூகம் எப்படி சீண்டி முரடனாக்குகிறது என்பதையும் காதலுக்காக ஒருவன் எத்தனை உயரத்தையும் எட்டித் தொடுவான் எப்படித் தொட முடிகிறது என்பதையும் விளக்க ஓர் ஆக்‌‌ஷன் படம் எடுத்தால் எப்படி இருக்கும்? 'மலைக்கோட்டை' போல இருக்கும். ஆனால் இந்த மாதிரி கதை கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே... என்றால் சொன்ன விதத்திலும் சொன்ன வேகத்திலும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் ஜி. பூபதிபாண்டியன். ஓர் அடிதடி வழக்கில்…

  20. சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சந்தனக்காடு என்ற மக்கள் டிவியின் தொடருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மக்கள் டிவியில் வருகிற 26ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தொடர் ஒளிபரப்பானால் எனது இரு மகள்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும், அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கூறிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, இத்தொடரின் இயக்குநர் கெளதமன் எனக்குத் தெரியாமலேயே எனது கணவர் குறித்ததுக் கூறிய தகவல்களை டேப் செய்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், முத்து…

  21. டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்க…

  22. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.3k views
  23. Started by kurukaalapoovan,

    இது படமாக கடந்தவருடம் வெளியிடப்பட்ட விபரணம். இதன் முக்கிய பங்கை வகித்த அல் கோர் இற்கு இந்தக் கிழமை நோபல் பரிசும் ஜநாவின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய குழுவோடு இணைத்து வழங்கப்பட்டிருந்தது. http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth இதில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒவ்வொரு நிமிடமும் பலனுள்ள தகவல்களை சாதாரணமானவர்களிற்கு உறைக்கக் கூடி முறையில் அதே நேரம் சுவாரசியமாகவும் வழங்கப்படுகிறது. அல் கோர் உலகம் வெப்பமாதலை நிராகரிக்கும் தரப்பினரின் இன்றை பிரச்சார யுக்திகளை புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நிராகரித்துக் கொண்டிருந்து சிக்கெரெட் கொம்பனிகளின் முயற்சிகளோடு ஒப்பிட்டுள்ளார். அடுத்து நாம் உலகம் வெப்பமாதல் சடுதியாக நிகழாது மெதுவாக நிகழ்வதா…

  24. சினிமாவை மக்களுக்கான ஊடகமா மாத்தணும்: சீமான் நேர்காணல்: மினர்வா & நந்தன் மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது. அனல் கக்கும் மேடைப் பேச்சினால் பெரியாரிய கொள்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கீற்றுவின் நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். கேள்விகளை முடிக்குமுன்னே பதில்கள் அவரிடமிருந்து சீறி வந்தன. சாதி, மதம், மொழி குறித்துப் பேசும்போதெல்லாம் அவரது குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்தது. இனி பேட்டியிலிருந்து... …

    • 0 replies
    • 1.1k views
  25. முன்னணி ஹீரோக்கள் கூட ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஜீவாவை. காரணம் அவர் தேர்தெடுக்கும் கதைகள். ராம் படத்தில் தொடங்கி ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம் என்று அவர் கைவைக்கிற கதைகள் எல்லாமே, தொட்டால் சுடுகிற ரகம். தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் கற்றது தமிழ் இருவேறு அபிப்ராயங்களை கொண்டிருக்கிறது என்றாலும் ஜீவாவை பொறுத்தவரை வா..வா.. என்கிறார்கள் ரசிகர்கள். சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை சற்று காரமாகவே விமர்சிக்கிறது கற்றது தமிழ். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு சென்னையில் வீடு கிடைப்பதில்லை என்ற விஷயத்தை வெறும் வசனமாக உச்சரிக்காமல் வாழ்ந்தது போல் உச்சரிக்கிறார் ஜீவா. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் இவர். எப்படி வாய்த்தது இந்த ஏழைகளின் அனுபவம்? ஜீவாவை கேட்டோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.