Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம் தனக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய்... காசியில் ஒரு பாடாவதி மேன்ஷன் நடத்தும் ஜீவா... ஒரு பொருளைத்தேடி அடியாள்களோடு காசிக்கு வரும் ஓர் அரசியல்வாதி... போலிச் சாமியார் யோகி பாபு... இவர்களுக்கும் சென்னையில் இருக்கும் சீட்டிங் சாம்பியன் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கதையைத் தன் டிரேட்மார்க் காமெடி- க்ளாமர் காக்டெய்ல் கலந்து கலகலப்பாக்கி தந்திருக்கிறார் சுந்தர்.சி. அதே டெய்லர் அதே வாடகை என்பதுபோல ’கலகலப்பு1’-ன் டெம்ப்ளேட்டை எடுத்துவைத்துக் கதை பண்ணி இருக்கிறார். முதல் பாகத்தில் வந்த கேரக்டர் பெயர் முதற்கொண்டு அதே அதே! விமல்-மிர்ச்சி…

  2. தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டி…

  3. படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’ கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை மழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும…

  4. 'சொடக்கு' பாட்டு போடாததால்... பஸ் கண்ணாடியை உடைத்த, சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.விருதுநகர் மொட்டமலையில் இரு…

  5. திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…

  6. ஸ்ரேயாவுக்கு டும் டும் டும் 2001ஆம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குத் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007இல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் மூலம், தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதை அடுத்து, அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது. பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும்,…

  7. ஏ. ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்…

  8. “ ‘மா’ குறும்படம் நயன்தாரா மேடத்துக்குப் பிடிச்சிருந்தது... அதனால என் கதைல நடிக்கிறாங்க!” ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குறும்படம் 'லஷ்மி'. இயக்குநர் சர்ஜூன் எடுத்து இருந்த இந்தக் குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையைப் பேசியிருந்த இந்தப் படத்தை பற்றிப் பலரும் விவாதித்தனர். எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகம்தான். இதற்கிடையில் சர்ஜூன் தனது அடுத்த குறும்படமான 'மா' படத்தைச் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக' நிறுவனம் தயாரித்திர…

  9. அழகோ... அழகு... பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கொஞ்சம் குண்டாக இருந்த இவர், உடல் எடையை தீவிர பயிற்சி செய்து குறைத்துள்ளார். இந்த படத்தை பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரி…

  10. ''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். ''இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்'' என்று அக்‌ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகை…

  11. படை வீரன் திரை விமர்சனம் படை வீரன் திரை விமர்சனம் இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார். படை வீரனாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம். கதைக்களம் அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியில்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால் மனிதர்கள் மனமோ வறண்டு கிடக்கிறது. அம்மக்களுக்கிடையில் ஒரு எளிமையான குடும்பத்தில் இருக்கிறார் நம்ம ஹீரோ விஜய். கிராமத்து இளைஞர் அதிலும் ஊரில் முக்கிய ஆள் என்றால் சொல்லவா வேண்டும். தன் நண்ப…

  12. பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன் மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது. இ…

  13. நல்ல படம் மக்களே... ஆனா, கபாலியை கலாய்ச்சது ஏன்? - 'மதுரவீரன்' விமர்சனம் Chennai: சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் மண்வாசனை சினிமாக்களுக்கு மத்தியில், 'இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப்போறீங்க?' என எழுந்திருக்கும் சமாதானக் குரல்தான், 'மதுரவீரன்'. சுத்துப்பட்டு கிராமங்கள் முழுவதும் மதிக்கும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளே வேண்டாம் எனவும், உழைப்பவனே முதலாளி எனவும் கருத்துரை பரப்பும் கருப்புச் சட்டை போட்ட கம்யூனிஸ்ட்காரர். சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்கமுடியும் என நம்புகிறார். அவரின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை ம…

  14. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் எமசிங்கபுரம் இது தான் கதைக்கு அடித்தளம். ஊரின் இளவரசராக விஜய் சேதுபதி. மன்மதன் போல ஒரு தனி பிரதேசத்தில் ராஜாங்கம் செய்து வரும் இவரது குடும்பத்தில் ஒரு விசயம் நடந்து போக, எடுத்த சபதத்தை முடிக்க சென்னை நகரத்திற்கு தன் நண்ப…

  15. அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்…

  16. நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…

  17. "வடிவேலுவுக்குப் பதில் விஜய். ஆனால், நிறைய மாத்தினோம்!" இயக்குநர் எழில் #19YearsOfThulladhaManamumThullum விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்த்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். * விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. …

  18. அலசல்: கலைந்த கனவு ‘அறம்’ படத்தில் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் கலெக்டர் நயன்தாராவை ‘நடிப்புடா’ என்று கொண்டாடினார்கள் நம் ரசிகர்கள். அதே நயன்தாராவை ‘டோரா’விலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் ‘அழகுடா’ என்று ஆராதித்தார்கள். அழகையும் நடிப்பையும் ஒரே கதாபாத்திரத்தில் வெளிப்படுத்த முடியும் என்று ‘திருட்டுப் பயலே -2’ படத்தில் காட்டிய அமலா பால் இன்னும் ரன் அவுட் ஆகாமல் ரசிகர்களின் ஆதரவில் தொடர்கிறார். இந்த சீனியர் கதாநாயகிகளுக்கு நடுவில் நின்று ‘கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் நடனம்’ என்று கமர்ஷியல் கதாநாயகியாகத் தொடரும் கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கவே செய்கிறது. …

  19. ஹைதராபாத்தில் நடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம். நடிகை தமன்னா மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை…

  20. ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…

  21. பொன்மணி என்ற ஈழத் திரைப்படத்தை தந்த தர்மசேன பத்திராஜ காலமானார்! பொன்மணி ஈழத் திரைப்படத்தை தந்த சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ ( 28 மார்ச் 1943 – சனவரி 27, 2018) தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார். பொன்மணி என்ற ஈழத் தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் ஆக்கியுள்ளார். கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றின…

  22. ஸ்ரீதேவியை சந்தித்தது எனக்கு மலரும் நினைவுகள்: கமல்ஹாசன் அ-அ+ விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவியை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி சந்தித்தபோது எடுத்த படம். கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘மூன்று முடிச்சு’. அதன்பிறகு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என்…

    • 17 replies
    • 1.4k views
  23. மன்னர் வகையறா திரை விமர்சனம் மன்னர் வகையறா திரை விமர்சனம் வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம். பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக…

  24. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி… ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார். “சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெ…

  25. சினிமா விமர்சனம்: நிமிர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER நடிகர்கள் உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு இசை ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.