Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஸ்ரீதேவியை சந்தித்தது எனக்கு மலரும் நினைவுகள்: கமல்ஹாசன் அ-அ+ விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவியை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி சந்தித்தபோது எடுத்த படம். கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘மூன்று முடிச்சு’. அதன்பிறகு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என்…

    • 17 replies
    • 1.4k views
  2. நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…

  3. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி… ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார். “சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெ…

  4. "வடிவேலுவுக்குப் பதில் விஜய். ஆனால், நிறைய மாத்தினோம்!" இயக்குநர் எழில் #19YearsOfThulladhaManamumThullum விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்த்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். * விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. …

  5. அலசல்: கலைந்த கனவு ‘அறம்’ படத்தில் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் கலெக்டர் நயன்தாராவை ‘நடிப்புடா’ என்று கொண்டாடினார்கள் நம் ரசிகர்கள். அதே நயன்தாராவை ‘டோரா’விலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் ‘அழகுடா’ என்று ஆராதித்தார்கள். அழகையும் நடிப்பையும் ஒரே கதாபாத்திரத்தில் வெளிப்படுத்த முடியும் என்று ‘திருட்டுப் பயலே -2’ படத்தில் காட்டிய அமலா பால் இன்னும் ரன் அவுட் ஆகாமல் ரசிகர்களின் ஆதரவில் தொடர்கிறார். இந்த சீனியர் கதாநாயகிகளுக்கு நடுவில் நின்று ‘கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் நடனம்’ என்று கமர்ஷியல் கதாநாயகியாகத் தொடரும் கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கவே செய்கிறது. …

  6. ஹைதராபாத்தில் நடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம். நடிகை தமன்னா மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை…

  7. மன்னர் வகையறா திரை விமர்சனம் மன்னர் வகையறா திரை விமர்சனம் வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம். பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக…

  8. ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…

  9. பொன்மணி என்ற ஈழத் திரைப்படத்தை தந்த தர்மசேன பத்திராஜ காலமானார்! பொன்மணி ஈழத் திரைப்படத்தை தந்த சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ ( 28 மார்ச் 1943 – சனவரி 27, 2018) தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார். பொன்மணி என்ற ஈழத் தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் ஆக்கியுள்ளார். கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றின…

  10. சினிமா விமர்சனம்: நிமிர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER நடிகர்கள் உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு இசை ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத்…

  11. திரைப்பட விமர்சனம்: பத்மாவத் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவத்' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவா…

  12. 'யூ டர்ன்'னில் கலக்க வரும் சமந்தா..! கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு, பெரும்பாலான நடிகைகள் நடிப்புக்கு பை சொல்வது வழக்கம். ஆனால் சமந்தாவோ, அதில் சற்று வித்தியாசமானவர். திருமணத்துக்குப் பிறகும், பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' என விறுவிறுப்பாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' என்னும் படத்திலும், மூன்று மொழிகளில் வெளியாகும் 'நடிகையர் திலகம்' என்று அழைக்கப்ப…

  13. பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். http…

    • 1 reply
    • 741 views
  14. ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் இதோ! - முழு விவரம் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Photo: Twitter/TheAcademy கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்', கில்லெர்மோ டெல் டோரோவின் 'ஷேப் ஆஃப் வாட்டர்', டென்னிஸின் 'பிளேட் ரன்னர் 2049' ஆகிய படங்கள் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஷேப் ஆஃப் வாட்டர்' திரைப்படம் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லா லா லாண்டு (2016), டைட்டானிக் (1997), ஆல் அபவுட் ஈவ் (1950) 14 முறை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. `Mudbound’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் படத்துக்காக முதல் ம…

  15. ஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMARK RALSTON ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் பற்றிய ஒன்பது தகவல்கள் இங்கே 1. அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த…

  16. “நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive காதல், நகைச்சுவை படங்கள் எனத் தனக்கென்று ரசிகர்களைத் தக்கவைத்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள 'நிமிர்' படத்தின் அனுபவங்கள் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம். ‘நிமிர்’ படம் எப்படி நடந்தது? “ப்ரியதர்ஷன் சார் எனக்கு நல்லா பழக்கம். 'இப்படை வெல்லும்' ஷூட்டிங்கில் இருந்தப்போ ஒரு நாள் போன் செய்தார்.' 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தை ரீமேக் செய்யலாம்னு இருக்கேன் நீ நடிக்கணும்’னு சொன்னார். நீங்க டைரக்ட் செய்றீங்கன்னா எந்தப் படமா இருந்தாலும் நடிக்கிறேன் என்றேன். மூணு…

  17. உயரம் பற்றி கிண்டல்: தனியார் சேனலை முற்றுகையிட்ட சூர்யா ரசிகர்கள் தொலைக்காட்சியை முற்றுகையிட்ட ரசிகர்கள் - படம் சிறப்பு ஏற்பாடு நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள் இருவர், அவரது உயரத்தை குறித்து பேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவ…

  18. ‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல் ‘மாஸ்டர் ஆஃப் நன்’ தொடரில் அசிஸ். ‘மாஸ்டர் ஆஃப் நன்’ (Master of None) என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த அசிஸ் அன்சாரி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார். கோல்டன் குளோப் விருதை முதன்முதலாகப் பெற்றிருக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆசியர் அசிஸ் அன்சாரி என்று உலகப் பத்திரிகைகள் புகழ்கின்றன. அவரது பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை சவுகத் அன்சாரியின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதல் குழு மாணவர்களில் ஒருவர். இப்போது அ…

  19. கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1 Chennai: 'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இருவர…

  20. திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…

  21. வரிசை கட்டும் விவசாய படங்கள்... ’நெசமாத் தான் சொல்றியா’ மொமெண்ட்! நம்ம தமிழ் சினிமாவுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு போல... கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக ரிலீஸ் ஆகி நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாக தயாராகி வருகின்றன. பொங்கலன்று வெளியான விளம்பரங்களே அதற்கு சாட்சி. வெள்ளை யானை தனுஷ் இயக்கும் நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த சுப்ரமணிய சிவா 'பேக் டூ ஃபார்மாக' இயக்கும் படம் வெள்ளை யானை. சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. சமீபத்தில் கூட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை தனுஷிடம் எடுத்துச் சென்று தனுஷ் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வைத்தவர். எனவே விவசாய…

  22. Started by நவீனன்,

    ’பாகமதி’ பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம், ஜனவரி 26ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது. பாகமதி டிரைலருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 இலட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 இலட்சம் பேர் லைக் செய்துள்ளன…

  23. ஸ்கெட்ச் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கதைக்களம் வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத…

  24. சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக ச…

  25. தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம். கதைக்களம் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.