Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அருமையான நாள்: நயன்தாராவுடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! கடவுளின் அருளால் அருமையான கிறிஸ்துமஸ் தினம் அமைந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இரு…

  2. அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind 2017... நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு நல்ல வருடமாக இருந்திருக்கும். அதேபோல், கலைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் புதுமுக நடிகர்களுக்கும் சிறந்த வருடமாக இருந்திருக்கும். அதேசமயம், சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அரசியல் பிரவேசத்தால் மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர். ஆனால், இந்த வருடம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாகி உள்ளது. அந்த ஹீரோக்களின் பட்டியல் இதோ... அஜித் குமார் : 'தல' அஜித் - சிவா கூட்டணியில் மிகுந்…

  3. சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நயன்தாரா தனது திரையுலக பயணத்தில் 14 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசே…

  4. ப்ச்... எத்தனை ஹீரோவை காப்பாற்றியிருப்பார் சந்தானம்!? - சக்க போடு போடு ராஜா விமர்சனம் வருடத்திற்கு ஒரு படம் என்ற இன்ஸ்டால்மென்டில், ஹீரோ சந்தானத்தின் இந்த வருட ரிலீஸ் `சக்க போடு போடு ராஜா'. காதலில் ஜெயிக்க ஹீரோ போடும் திட்டங்களை, காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்கிறது படம். சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனோடு சேர்த்ததும், ஓப்பனிங் பாடல் போட்டு அறிமுகமாகிறார். “என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு, என்னை அசிங்கப்படுத்தீட்டானேடா... அவனப் புடிங்கடா" என உறுமுகிறார் தாதா சம்பத். அதனால், குடும்பத்தையும், நண்பர்களையும் தலைமறைவாக்கிவிட்டு, தானும் தலைமறைவாகிறார் சந்தானம். பதுங்கிக்கொள்ள சென்ற இடத்தி…

  5. விடைபெறும் 2017: தனித்து நின்ற படங்கள் தமிழில் 2017-ல் 200-க்கு மேற்பட்ட நேரடிப் படங்கள் வெளியாகிவிட்டன. ஆண்டின் கடைசி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் தலா இரண்டு படங்களாவது வெளியாக இருக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டிலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காகவாவது ‘நல்ல படம்’ என்று வகைப்படுத்தத் தகுதியான படங்கள் மொத்தமாக வெளியான படங்களின் 10 சதவீதம் அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் புதிய திறமைகளின் வருகையாலும் பழையவர்கள் சிலரின் விடாமுயற்சியாலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்பட வேண்டிய படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியுள்ளன. ஆண்டு நிறைவை எட்டப்போகும் தருணத்தில் அவற்றை நினைவுகூரும் தொகுப்பு இது: …

  6. மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் Posted on November 26, 2017 by Yamuna Rajendran தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் தற்கொலை செய்து கொண்டு அல்லது கொல்லப்பட்டு மரணமுற்றார். இன்று நினைக்க என்றும் அது துக்க நாளாகவே இருக்கிறது. மர்லின் மன்றோ உலகின் தேவதை என்றால் சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவின் தேவதை. குழந்தையின் பேதைமையும் இளம்பெண்ணின் வளர்பருவக் குறுகுறுப்பையும் கள்ளமின்மையையும் இவர்களது புன்னகையிலும் உடல்மொழியிலும் பார்க்க முடியும். இவர்களத…

  7. வேலைக்காரன் திரை விமர்சனம் வேலைக்காரன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை திருப்திப்படுத்தும். அப்படி தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் 10வது படமான வேலைக்காரனிலும் ஹிட் அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. நம் கண்முன்னே ஒரு சமுதாயம் கெட்டு போவதை பா…

  8. தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கோரி மனு தாக்கல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி, நம்ம வீட்டு கல்யாணம், கொபி வித் டிடி போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்…

  9. இலங்கை தமிழ் சமூகத்தில் வாழும் திருநங்கைகள் தொடர்பாக கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் இயக்கிய (கனடிய) தமிழ் சினிமா 'ரூபா' வில் Lead role லில் நடித்து இருக்கும் திருநங்கையின் உரை

  10. ‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல் ‘வேலைக்காரன்’ படத்தில் பகத் ஃபாசில், சிவகார்த்திகேயன், நயன்தாரா “‘ரெமோ’ படத்தில் நடித்தபோது, எங்களை மீறி அந்தப் படம் அவகாசம் எடுத்துக்கொண்டது. அப்படத்துக்காக பத்து கிலோ எடை குறைத்து, மீசையை எடுத்தேன். அந்த நேரத்தில் வேறு எந்தவொரு படத்திலும் நடித்திருக்க முடியாது. அடுத்த ஆண்டில் கண்டிப்பாக இரண்டு படங்கள் வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதைத் தாண்டி என் படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பது முக்கியமாக இருக்கிறது” என்ற பாக்ஸ் ஆபீஸ் அக்கறையுடன் பேசத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். ‘வேலைக்காரன்’ படத்தின் கத…

  11. பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும். அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம். கதைக்களம் கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியர். இவரின் மனைவி ஊர்வச…

  12. இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்‌ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…

  13. தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம் எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...! அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்…

  14. தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். https://www.vikatan.com/news/cinema/110334-che…

  15. டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம் உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி. ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை…

  16. சினிமா விமர்சனம்: சத்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகி பாபு,நிழல்கள் ரவி இசை சிமோன் கே. கிங் …

  17. சினிமா விமர்சனம்: கொடிவீரன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKODI VEERAN சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம். நடிகர்கள் சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், வ…

  18. பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். 79 வயதான சசிகபூர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர் ஆவார். 1961-ம் ஆண்டு ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமான சசிகபூர் தொடர்ந்து 116 ஹிந்திப் படங்களில் நடித்ததுள்ளார். 2011-ம் ஆண்டு இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் 2015-ல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றிருந்தார். கபூர் குடும்பத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 3-வது நடிகர் சசிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது. மைய நீரோட்ட திரைப்படங்களில் பிரபலமானாலும் …

  19. இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான் உண்மையான ஈழத்து சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வெறியுடன் பயணிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளியே மதிசுதா. இவரது முன்னைய குறும்படங்கள் பலரால் பேசப்பட்டவை. பல்வேறு விருதுகளையும் பெற்றவை. சினிமா முயற்சிகள் மட்டுமல்ல போர்க்காலத்தில் தன்னால் முடிந்த மருத்துவப் பணிகளையும் மக்களுக்காக செய்தவர். இவரின் அண்ணாவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்தும் சிறைக் கொட்டடியில் இருக்கும் சாந்தன் ஆவார். அண்ணாவை மீட்க போராடும் தம்பியாக மட்டுமல்லாமல் தொட…

  20. எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha -கண்ணபிரான் இரவிசங்கர் சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது! *சிலருக்குக் கிளுகிளுப்பு *சிலருக்கு ஒவ்வாமை *சிலருக்கு அழகுணர்ச்சி *சிலருக்கு நடிப்புத் திறமாடல் *சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை! சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்! அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பைய…

  21. கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1 Chennai: 'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இருவர…

  22. அண்ணாதுரை திரைவிமர்சனம் அண்ணாதுரை திரைவிமர்சனம் இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா... கதைக்களம் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக…

  23. கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது? திருட்டுப்பயலே - 2 விமர்சனம். போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2' அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டி…

  24. சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1 ’நமக்கு மன ரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று…

  25. யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.