Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நயன்தாரா ரகசிய திருமணமா? தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘அறம்’ விரைவில் திரைக்கு வருகிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘வேலைக்காரன்’ ‘கொலையுதிர் காலம்’, ‘கோகோ’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. தெலுங்கு, மலையாள பட உலகிலும் இதுபற்றி…

  2. ஆரவ்வுடன் நடிக்க மறுத்த ஓவியா ‘பிக் பொஸ்’ நிகழ்ச்­சியின் டைட்டில் வின்­ன­ரான ஆரவ் ஏற்­க­னவே ‘ஓ காதல் கண்­மணி’, ‘சைத்தான்’ உட்­பட சில படங்­களில் சிறிய கேரக்­டர்­களில் துணை நடி­க­ராக முகம் காட்­டி­யவர். தற்­போது பிக்பாஸ் டைட்­டிலை வென்ற பிறகு கதா­நா­ய­க­னாக நடிக்க முயற்சி செய்து வரு­கிறார். சிம்­புவை வைத்து ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன், கௌதம் கார்த்­திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்­கினார். ஏறக்­கு­றைய 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக அந்தப் படம் முடங்­கியே கிடக்­கி­றது. இந்­நி­லையில் ஆரவ்வை ஹீரோ­வாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்­சியில் இருக்­கிறார் சர­வணன். ஏற்­கெ­னவே ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன் அதன் …

  3. “இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்!’’ - பிரகாஷ்ராஜ் பன்ச் “ ‘மோடியை, ஓர் அரசியல் கட்சியின் தலைவராக நான் பார்க்கவில்லை. அவரை ஓட்டு போட்டு வெற்றி பெறவைத்தவர்களுக்கும் அவர்தான் பிரதமர்; அவருக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். அப்படி நடுநிலையோடு இருக்கவேண்டியவர், ஒரு கொலையைக் கொண்டாடுபவர்களைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்க்கையில் எனக்கு பயம் வருகிறது. ‘என் பிரதமரே அமைதியாக இருக்கிறாரே!’ என்ற பயம். என் பயத்தைப் போக்கவேண்டியதுதானே அவருடைய வேலை. இப்பேர்பட்ட படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன், கொண்டாடுபவர்களைக் கண்டிக்கவேண்டியதுதானே ஒரு பிரதமரின் கடமை?' இந்தக் கேள்வியைக் கேட்டத…

  4. ‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம் `மெர்சல்' படத்தின் முதற்காட்சியில் இளையதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வது போலவே, இந்தப் படத்தின் முதற்காட்சியில் நம் சின்னதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி, மருத்துவர்களின் நிலை என இரு படங்களுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் வேறு. இப்படி `மெர்சலு'க்கே ஜோடிக்கட்டாக நிற்பது யார் தெரியுமா? ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, கெட்ட பய சார் இந்தக் கார்த்தி. மேற்சொன்ன ஓப்பனிங் காட்சியை அப்ரூட்டாக கட் செய்தால், அடுத்து அல்ட்ரா மாடலாக ஸ்பைக் கலையாமல் கல்லூரிக்கு பைக்கில் வந்து இற…

  5. வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan ‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி... என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில் பசுமையாக உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். கமல்ஹாசன்மீது இயல்பிலேயே அன்புள்ளவர். கமலின் அம்மாவான ராஜலட்சுமியின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்து இருப்பவர். அந்த ‘ராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ மூலம் 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்', 'வல்லவன்' உள்பட பல படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் நடிகராகவும் பல…

  6. இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் கொண்டாடுவர்: '2.0' குறித்து ரஜினி '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக…

  7. ''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா. ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும்…

  8. மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைG VENKET RAM சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்…

  9. “பிக் பாஸ் வீட்ல எல்லாரையும் நம்பி ஏமாந்துட்டேன்..!’’ - சக்தி #VikatanExclusive “பிக் பாஸ் ஆரம்பிக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கு வாய்ப்பு வந்துச்சு. இந்த குறுகிய காலத்துல யார்கிட்டயும் எதையும் டிஸ்கஸ் பண்ண முடியல. மொதல்ல தயக்கமா இருந்தாலும் அந்த நேரத்துல மீடியா வெளிச்சம் வேணும்னு தோணுச்சு. நான் இதுக்கு முன்னாடி ஹிந்தி, இங்கிலிஷ் பிக் பாஸ் பார்த்ததில்லை. என்னோட மனைவிதான் எனக்கு மிகப்பெரிய பக்க பலம். அப்பாகிட்ட நான் பிக் பாஸ்க்கு போறேன்னு சொன்னேன். அவர் உன் இஷ்டம்னு சொல்லிட்டாரு. எல்லாத்தயும் என் இஷ்டத்துக்கு பண்ண விடுற அன்பான அப்பா" என்று குடும்பத்தைப் பற்றி பேசும் போது நெகிழ்கிறார் சக்தி. இந்த பிக் பாஸ் சினிமா குடும்பத்தோட ஒரு மீட்...! …

  10. ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார் Pic Courtesy : Twitter தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்க…

    • 5 replies
    • 1.2k views
  11. மொட்டை ராஜேந்திரனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்து பிரபலமானவர் சண்டை பயிற்சியாளர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. இதனால் முழு நேர நகைச்சுவையாளனாக மாறினார் ராஜேந்திரன். இதைத் தொடர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கும் வடிவேலு, விவேக், கவுண்டமணி, சந்தானம் போல் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள…

  12. “நான் இறந்துட்டேனானு என்கிட்டயே விசாரிக்கிறாங்ப்பு!’’ - ‘திண்டுக்கல்’ லியோனி பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையாவும் திண்டுக்கல் லியோனியும்தான். குறிப்பாக லியோனியின் பேச்சுக்கள் கல் நெஞ்சுக்காரர்களையும் கலகலவென சிரிக்கவைக்கும் தன்மையுடையனவை. இப்போது பட்டிமன்றத்தை தாண்டியும் தி.மு.க பிரசார கூட்ட மேடையை அதகளப்படுத்திக்கொண்டு இருக்கிறார். பேரன், பேத்தியை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தவர் நம்மைப் பார்த்ததும அதே கலகல சிரிப்புடன் வரவேற்றார். அவரிடம் சினிமா, பட்டிமன்றம், இன்றைய அரசியல் சூழல்... குறித்து பேசியதில் இருந்து... “இளமைப்பருவத்தில் லியோனி எப்படி இருந்தார்? தி.மு.கவின் மேல் எப்படி ஈர்ப்பு வந்தது?” "த…

  13. உலகில் ஒரு ஹார்வி வெய்ன்ஸ்டீன் மட்டும் இல்லை: பிரியங்கா சோப்ரா வேதனை பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்ற ஏராளமான மக்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி, சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65) கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த…

  14. இப்படி ஒரு அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்குவாதிகளுக்கு வந்திருக்கக் கூடாது. எதை எதை எல்லாமோ ஆதரித்துப் பேசவேண்டிய நிலைக்கு இந்த பிஜேபி பாவிகள் அவர்களை தள்ளிவிட்டுவிட்டார்கள். நேற்றுவரை முதுகு சொறிவதற்கும், காது குடைவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த தங்கள் புரட்சி பேனாக்களை இன்று பல பேர் வாடிவாசலில் துள்ளிக் குதித்து அடங்க மறுத்து ஓடிவரும் மெர்சல் அப்பா விஜயைப் போல பிஜேபிக்கு எதிராக புரட்சிக் காவியம் தீட்ட எடுத்திருக்கின்றார்கள். எடுத்ததோடு மட்டுமல்லாமல் பல நாள் அடக்கி வைத்திருந்த பிஜேபிக்கு எதிரான தங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சரி எழுத்தாளர்கள் கொஞ்சநாள் எழுதாமல் இருப்பதும், பிறகு திடீரென பைத்தியம் பிடித்தது போல நினைத்தை எல்ல…

    • 4 replies
    • 1.5k views
  15. விக்ரமின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா! ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதில் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகி…

    • 0 replies
    • 370 views
  16. இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…

    • 0 replies
    • 1.4k views
  17. ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்? கடும் பசிகொண்ட கிழவனைப் போல, காலம் பலவற்றை உண்டு செரித்துவிடுகிறது. அவற்றில் அது அதிகமும் தின்றது கலைகளைத்தான். சினிமா துணி பேனர் வரையும் கலை அவற்றில் ஒன்று. சரியாக 17 வருடங்களுக்கு முன்புவரை திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் துணி பேனர்களில், அடர் வண்ண ஓவியங்களாகச் சிரித்தனர் நம் அபிமான நட்சத்திரங்கள். இந்தத் துணி பேனர்கள் காணாமல்போனதன் பின்னணியில், டிஜிட்டல் பிரிண்டிங் எனும் கள்வன் ஒளிந்திருக்கிறான். லாகவமாக நறுக்கப்பட்ட மர ஃபிளைவுட்களில் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வரையப்படும் கட்-அவுட்களில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் சூப்பர் ஸ்டார்களின் தயவில் …

  18. "இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித் Chennai: "என்னா இளையதளபதி எப்பிடி இருக்கீங்க?" எனக் கேட்டால், சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுக்கிறார் அந்த சுட்டி. "இப்ப என்னக் கண்டுபிடிங்க பார்ப்போம்" என ஸ்க்ரீனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஸ்டுடியோவுக்குள்ளேயே ஓடியாடி திரிவது என அந்த வயதுக்குரிய அத்தனை துறுதுறுப்பும் குறும்புமாக றெக்கை இல்லாமலேயே பறக்கிறார். `மெர்சல்' படத்தில் சிறு வயது விஜயாக "ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு" என க்யூட் பெர்ஃபாமென்ஸ் காட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தால் "நானெல்லாம் ஒன் டேக் ஆர்டிஸ்ட், வேணும்மா கேள்வி கேளுங்க பார்ப்போம்" என ரெடியாகிறார். "யாரு தம்பி நீங்க?" "என்ன…

  19. பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை 2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் யாவுமே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியே வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம் விஜய்யாக இல்லாவிட்டாலும், கதைக்களம், பணப்பிரச்சினை என பல காரணங்கள் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய விஜய் படங்கள் என்ன? ஏன் என்று பார்க்கலாம் காவலன் (2011) : 'சுறா' படத்தின் பெரும் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில் விஜய்யுடன் பேசி பணத்தை திரும்ப அளிக்க ஒப்புதல் அளித்தவுடனே 'காவலன்' வெளியானது…

  20. திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) …

  21. கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்! விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தலைப்பு, பெண்களிடையே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது. 'தமிழ்நாட்டுப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?' என்பதுதான் நாளைய நிகழ்ச்சியின் விவாதம். ''அழகு என்பதை எதைவைத்துத் தீர்மானிக்கிறார்கள்? அழகான ஆடை, அணிகலன்கள் அணிந்தவர்கள் மட்டுமா அழகு? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பருவத்தில் அழகுதான். பல் தோன்றாத வயதில் எச்சில் வடியச் சிரிக்கும் குழந்தையும் அழகுதான். பல் எல்லாம் விழுந்து பொக்கை வாயாகச் சிரிக்கும் கிழவியும் அழகுதான். ஒவ…

  22. இனிமேல் பாட மாட்டேன் : பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் …

  23. ஓய்வெடுக்க இது நேரமல்ல! - நடிகை சமந்தா பேட்டி “சென்னை பல்லாவரம் பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குன்றாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார். மத்தாப்புச் சிரிப்பை எப்போதும் அணிந்திருக்கும் இந்தத் தலைத் தீபாவளி நாயகியிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறீர்கள், எப்படி இருந்தது அனுபவம்? விஜய் சாருடன் நடிப்…

  24. “கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!” சனா - படங்கள்: கே.ராஜசேகரன் தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா. ``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’ ``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும், கேமராவையும் ர…

  25. பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை! விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் “சிங்கம் போல நடந்து வாரன் செல்லப் பேரண்டி…“ என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. அவர் தற்போது உடல் நலக்குறைவால் தனக்கு உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுள்ளார். சில நடிகர்கள் தாமாகவே அவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். சிவசிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என சிலர் நிதியுதவி செய்துள்ளனர். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது அவருக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரித்து வழங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.