Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை 22 Feb, 2026 | 03:37 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்…

  2. மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் 22 Feb, 2026 | 04:28 PM மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெ…

  3. நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் வ…

  4. 36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? written by admin February 22, 2026 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னிய…

  5. யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை! யாழ். குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமார் உதயசிறி எச்சரித்துள்ளார். யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும்,யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் எவையும் இல்லையெனவும், நீர் விநியோகிக்கும் வானகம் ஒன்றே தற்காலிக தீயணைப்பு பணியில் …

  6. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் adminFebruary 22, 2026 நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்க…

  7. ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி, இராணுவமே காரணம்..! எம்.கே.சிவாஜிலிங்கம் கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசாந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலரது படுகொலைகள் போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக அப்போது ஜனாத…

  8. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு adminFebruary 22, 2026 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2026/229553/

  9. யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு adminFebruary 22, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்றைய தினத்துடன் நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு மொத்தம் 12 அமர்வுகளாக நான்கு நாட்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி அமர்வுடன் இனிதே நிறைவுற்றது. இம்முறை சாதனை அளவாகப் பெருமளவிலான மாணவர்கள் தங்களது கல்வித் தகமைகளை உறுத…

  10. வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி 22 Feb, 2026 | 02:45 PM (நா.தனுஜா) முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞான…

  11. டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் 22 Feb, 2026 | 12:51 PM (நா.தனுஜா) இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்த்லை விரைந்து நடாத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் …

  12. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" - சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 10:02 AM அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்…

  13. இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி! Feb 22, 2026 - 12:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் நாளான நேற்று (21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, 1S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, வ…

  14. எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை! 21 Feb, 2026 | 04:36 PM இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்ட…

  15. யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்! Feb 22, 2026 - 11:47 AM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரா…

  16. மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை Feb 22, 2026 - 10:51 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதா…

  17. புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது! Feb 21, 2026 - 08:51 PM புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை…

  18. மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு Feb 21, 2026 - 12:52 PM 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெட…

  19. மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.! Vhg பிப்ரவரி 21, 2026 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20.02.2026) உயிரிழந்துள்ளார் . மட்டக்களப்பு வைத்தியசாலையில் திறமையான ஒரு மருத்துவர் அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக மரு…

  20. "மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 21 Feb, 2026 | 04:19 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த…

    • 2 replies
    • 197 views
  21. யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 21 February 2026 ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் எங்கே ? அரசே பதில் சொல் , ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் , நீதி எங்கே ? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியுமே அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.…

  22. காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ? adminFebruary 20, 2026 ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரைய…

  23. பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம். adminFebruary 21, 2026 மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்…

  24. அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம் Published By: Priyatharshan 21 Feb, 2026 | 11:22 AM ( வீ.பிரியதர்சன் ) அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பயணம், ஒரு கப்பலை தாயகத்துக்கு கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை மேற்கொள்ளும் அதிக நீளமான கடல் பயணம் என்பதுடன், பனாமா கால்வாயை முதன்முறையாக கடக்கும் இலங்கை கடற்படை கப்பல் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்கிறது. இலங்கை கடற்படையில் சேவையில் இணைந்த பின்னர், “DECISIVE” என்ற கப்பல்,…

  25. கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம் 20 Feb, 2026 | 03:53 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உட்பட ஏனையவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கெஹல்பத்தரே பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.