Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. …

    • 51 replies
    • 3.8k views
  2. அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்த இடைநிறுத்தம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மேற்கூறிய காலகட்டத்தில் சரக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/79087

    • 2 replies
    • 350 views
  3. (எம்.மனோசித்ரா) நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து வகையான வீசாக்களுக்குமான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் படி இம் மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் கட்டுப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்வர்களுக்கான வீசாக்களை நீடிப்பது தொடர்பாக குடிவரவு மற்றும் குட…

    • 0 replies
    • 311 views
  4. நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கொண்டு சிலர் அரசியல் செய்ய முற்படுவது கவலைக்குரிய விடயமாகும். வைரஸ் பரவலின் பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளாமையின் காரணமாகவே இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை பின்பற்றி உயிரிழந்த கொரோனா வைரஸ் நோயாளி அடக்கம் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இஸ்லாமிய நபர் மத கோட்பாடுகளை மீறி தகனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்த சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்…

    • 1 reply
    • 358 views
  5. ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது by : Jeyachandran Vithushan 19 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது …

    • 0 replies
    • 445 views
  6. வடக்கில் தனிமைப்படுத்தலில் உள்ள 346 பேரும் சில நாட்களில் விடுவிக்கப்படுவர்- வைத்தியர் கேதீஸ்வரன் by : Litharsan கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் அவர்கள் வரும் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் கூறுகையில், “உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ். மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் ப…

    • 0 replies
    • 306 views
  7. உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் பரவல் குறித்து கட்டங்கள் பிரித்துள்ளமைக்கு அமைய இலங்கை (iii) a கட்டத்திலிருந்து (iii) b கட்டத்திற்கு அல்லது (iv ) கட்டத்திற்குள் செல்வதற்கான அவதான நிலைக்கு செல்லாமலிருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளவற்றில் பல நடவடிக்கைகளை இலங்கையும் முன்னெடுத்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றியை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அதற்கமைய இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடைய…

  8. யாழ்ப்பாணம், கொழும்பு தவிர்ந்த சில இடங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு! நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது இன்று நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்ப…

  9. வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதேவேளை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் வரை 143 கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தை…

    • 0 replies
    • 314 views
  10. இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 2000 பேரில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். …

    • 2 replies
    • 753 views
  11. கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதிநிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார். இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும். தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந…

  12. (இரா.செல்வராஜா) ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதனைப் பெறுவதற்கு வசதியாகப் போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு இராணுவம் தீர்மானித்…

    • 0 replies
    • 275 views
  13. கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இந்த தொற்றிலிருந்து தப்பவில்லை. ஏற்கனவே வெளிநாடுகளில் இரு இலங்கையர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்ற…

    • 0 replies
    • 602 views
  14. கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்! நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உயிரிழந்த நோயாளியின் விபரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் நீண்டகாலமாக …

    • 1 reply
    • 444 views
  15. றம்ஸி குத்தூஸ் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இஜ்திமாகளில் பங்குபற்றி, நாடு திரும்பியிருக்கும் முஸ்லிம்களில் சிலர் இன்னமும் மறைந்திருக்கலாம், அவர்களை அல்லாஹ்வுக்காக வெளியே வந்து, அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கும் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்குமாறும், ஜம்மியதுல் உலமா சபையின் உபசெயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்கள் மூலமாகக் கொரோனா வைரஸ் பரப்பப்படுவதாக வெளிவரும் வதந்திகள் தொடர்பில், தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, மௌலவி தாஸிம், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இஜ்திமாகளில் இலங்கை சார்பிலும் பலர் கலந்து…

    • 0 replies
    • 553 views
  16. நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை! by : Benitlas நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பெருமளவிலானோர் வீட்டிலேயே தங்கியிருப்பதால் நீர்ப்பாவனை அதிகரித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து வழங்குவதற்கு நீர்விநியோகச் சபை கவனம் செலுத்துகின்றது. அத்துடன், திடீர் நீர்விநியோகத் தடை, நீர் கட்டணப் பட்டியல் தொடர்பான தகவல்கள் உ…

    • 1 reply
    • 377 views
  17. தென்மராட்சி சரசாலை கிராம மக்களின் முன்மாதிரி தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு நேற்று இடம்பெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதிமூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்தனர். மேலும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.இத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள், அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவ…

    • 3 replies
    • 889 views
  18. இலங்கையின் கொரோனா ஒழிப்பு முயற்சிகளுக்கு உதவத் தயார்: மஹிந்தவிடம் உறுதியளித்தார் மொஹமட் பின் சயீத் by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நெருக்கடி காணப்படும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபுதாபியின் மகுடத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆயுதப்படைகளின் துணை தளபதி ஷேக் மொஹமட் பின் சயீத்துடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது சகோதரத்துவ உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர உறவு பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்து போராடுவது மற்றும் தொற்றுநோய் மேல…

    • 0 replies
    • 356 views
  19. மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு! by : Litharsan கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தினை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தினைக்கொண்டு இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டபோத…

    • 0 replies
    • 339 views
  20. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக்கிரியைகள் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு நகர சபைக்கு உரிய பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதானிகள், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் முன்னிலையில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய இரண்டு உறவினர்கள் மாத்திரம் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியும். எனினும், அச்சந்தர்ப்பத்தில் உறவினர்கள் யாரும் அங்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நளளரவல-நடபறற-இரணடவத-நபரன-இறதககர…

  21. நாளை இறுதி நாள் – பொலிஸாரின் எச்சரிக்கை…! மீறினால் கைது கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அவ்வாறு பதிவு செய்வதற்கான கால எல்லை ஏப்ரல் 1 ஆம் திகதி நண்பகல் வரை மட்டுமே என்றும் அவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மார்ச் 16 முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர்களால் பெ…

  22. தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி தனிமைப்படாமல் தலைமறைவகையுள்ளோரை தேடி சிறப்பு நடவடிக்கை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட நடவடிக்கைகளில் இதுவரை நான்கு மாவட்டங்களில் உள்ள 5 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்தின் அரியாலை, களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டி நகரின் ஒரு பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் குறித்த பகுதிகளில் அதிக சாத்தியம் காணப்பட்டதால…

    • 0 replies
    • 289 views
  23. இன்று முதல் 14 நாட்களுக்கு சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சஙகபபர-ததரகததகக-படட/175-247661

    • 0 replies
    • 308 views
  24. களுபோவில வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளரமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த வாட்டினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு கடையில் இருந்த ஊழியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் 20 ஆம் இலக்க வாட்டினை சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மருத்துவமனையில…

    • 0 replies
    • 241 views
  25. அண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் சர்வதேச தூதுவர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தண்டனைக் குற்றவாளி சார்ஜன்ட் சுனில் இரத்நாயகவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் அளிக்கப்பட்டுள்ள மன்னிப்பும் விடுவிப்பும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுடன் எவ்விதத்…

    • 1 reply
    • 330 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.