ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142980 topics in this forum
-
காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிப்பு – அம்பாறை மீனவர்கள் கவலை In அம்பாறை August 3, 2019 10:27 am GMT 0 Comments 1033 by : vithushan கடந்த இரு தினங்களாக நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுதனால் மீன்பிடி குறைவடைந்துள்ளது. மேலும் இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாயவலை மீனவர்கள் சில இடங்களில் மீன்…
-
- 0 replies
- 533 views
-
-
வவுனியாவிலும் 5ஜி கோபுரமா? – மக்கள் அச்சம்! In இலங்கை August 3, 2019 8:06 am GMT 0 Comments 1305 by : Dhackshala வவுனியா திருவாற்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம், 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால், அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுமென வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக மக்கள் தெரிவி…
-
- 0 replies
- 400 views
-
-
சுற்றுலாப் பயணத் தடையை தளர்த்தியது சிங்கப்பூர் அரசு In இலங்கை August 3, 2019 7:45 am GMT 0 Comments 1323 by : vithushan ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரித்து விடுத்திருந்த சுற்றுலாப் பயணத் தடையை சிங்கப்பூர் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்பதனால் இலங்கை மீதான பயணத்தடை நீக்கியுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது அங்கு அவசரகால சட்டம் அமுலில் இருப்பதனால் வழிபட்டு ஸ்தலங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் முப்படையினர் குவிக்கப்…
-
- 0 replies
- 336 views
-
-
கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கமா? இருண்ட யுகமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர் In இலங்கை August 3, 2019 8:18 am GMT 0 Comments 1293 by : vithushan மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கத்திடம் நாட்டை கொடுப்பதா அல்லது இருண்ட யுகத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ளுவதா என மக்கள் தீர்மானிப்பார்கள் என பிரதமர் ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சிறிதை நிறைவேற்றுவதில்லை. என்றாலும்…
-
- 0 replies
- 271 views
-
-
மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா In இலங்கை August 3, 2019 8:51 am GMT 0 Comments 1258 by : vithushan மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மத்திய-மாகாண-ஆளுநர்-இராஜ/
-
- 0 replies
- 616 views
-
-
இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படாது – மஹிந்த In இலங்கை August 3, 2019 8:35 am GMT 0 Comments 1279 by : vithushan மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை அடுத்த வாரம் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் சந்திப்பு நடக்கவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் ஒர…
-
- 0 replies
- 276 views
-
-
தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட கணிசமானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வேண்டும் – சி.வி. தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களின் வாரம் ஒரு கேள்வியில், இந்த வாரம் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தேசியக் கட்ச…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் – சாந்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அறைக்கூவல் விடுத்துள்ளார். முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல…
-
- 0 replies
- 257 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களை சமமாக நடத்திய ஏ.ஆர்.எம். மன்சூர் பிறந்த கல்முனை மண்ணில், பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டுமென ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கிழக்கு அரசியலின் மூன்று படிகளில் 1977ற்கு முன்னரான கட்டத்தில் தமிழ் தேசியத்துடன் இணைந்து, தமிழ் விடுதலை கூட்டணி சார்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் நிலைமை காணப்பட்டது.1977இன் பின…
-
- 0 replies
- 559 views
-
-
2 வருடங்களில் தாம் 10 வருடங்களுக்குறிய வேலைத்திட்டனை செய்து முடித்துள்ளோம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற காணிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த அரசு பல வேலைத்திட்டங்களை செய்துள்ளதாக கூறினார்கள்.தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறினார்கள்.நேரில் பார்த்தீர்களா என கேட்டால் பதில் இல்லை.கடந்த அரசில் அபிவிருத்தி பணிகள் தொலைக்காட்சியிலேயே இடம்பெற்றது என அவர் கூறினார். https://www.madawalaenews.com/2019/08/2-10.html
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு எனவும், இந்நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் சிங்கள பௌத்த கலாசாரத்தை அனுசரித்தே வாழ வேண்டும் எனவும் சர்வதேச முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி செய்க் மொஹம்மட் பின் அப்துல் கரீம் அல் இஸா தெரிவித்துள்ளார். சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற சமாதானம் மற்றும் சகவாழ்வு என்பவற்றுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கலாநிதி கரீம் அல் இஸா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கடந்த 01 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக…
-
- 0 replies
- 357 views
-
-
விமான நிலையத்தின் வழிநடத்தல் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அழிவடையும் என அந்த சங்கத்தின் சுதந்திர சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221401/ஸ்ரீலங்கன்-விமான-சேவை-நிறுவனம்-ஆபத்தில் Govt. reduces airline costs at BIA Sri Lankan authorities have initiated measures to reduce costs of airline operations and also reduce airfares to the country for a period of six months from August 1. In addition, SriLankan Airlines has been asked to reduce th…
-
- 3 replies
- 783 views
-
-
13 வருடங்களிற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த படுகொலை உட்பட முக்கிய படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாமை சர்வதேச நீதித்துறையின் உதவி இலங்கைக்கு அவசியமாகவுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி பாரிசை தளமாக கொண்ட அக்சன் பார்ம் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யூன் 13 2019 இல் இலங்கையின் சட்டமா அ…
-
- 1 reply
- 556 views
-
-
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்…
-
- 1 reply
- 881 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் …
-
- 1 reply
- 386 views
-
-
வளரிளம் பருவ வயதை அடைந்துள்ள மாணவர்களில் ஏற்படும் எண்ணங்கள், நடத்தைகள், மனப்பாங்கு உள்ளிட்ட மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஆண், பெண் சமூகம் பற்றிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அவர்களுக்கு பாலியல் நடத்தைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியைப் போதிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்' என்ற நூலை வெளியிடும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. ஆரோக்கியமான இளைய தலைமுறையினரே நாட்டின் பெறுமதி வாய்ந்த வளம் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவையும், திறமையையும் முழுமையாகப் பெறுவதற்கும், சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள க…
-
- 0 replies
- 392 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்) இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 449 views
-
-
(நா.தனுஜா) முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் பெண்களின் உரிமைகளுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பளித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், அப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் உலமாக்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுமே இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதை இழுத்தடிப்புச் செய்து தடைகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது பேரினவாதிகளால் பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக இஸ்லாமிய மதத்திற்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதையும் அதேபோன்று எவ்வித திருத்தங்களையும் மேற்க…
-
- 1 reply
- 490 views
-
-
சட்டவிரோத மணல்அகழ்விற்கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்பா? மக்கள் சந்தேகம் August 2, 2019 கிளிநொச்சி ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல்அகழ்விற்;கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கனகரான் ஆற்றுப்;பகுதியிலும் ஊரியான் குளத்தின் கீழான வயல்நிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களிற்கும் மேலாக சட்டவிரோதமணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவராகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்று வரும் மணல் அகழ்வை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள்…
-
- 2 replies
- 579 views
- 1 follower
-
-
August 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முல்லைத்தீவு உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில், தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய சீனு என்ற இ. லிந்துசியா என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற…
-
- 1 reply
- 531 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) வைத்தியர் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் கோரிக்கையை ஆராய்ந்தே தேசிய பொலிஸ் ஆணைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் திகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி…
-
- 0 replies
- 682 views
-
-
1 Min Read August 2, 2019 போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு செலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்காக வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் ஆலய பின் வீதியில் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இ…
-
- 0 replies
- 279 views
-
-
அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை In இலங்கை August 2, 2019 5:59 am GMT 0 Comments 1491 by : Yuganthini சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நீதிபதிகள் விக்கும் களு ஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 50 இலட்ச…
-
- 1 reply
- 428 views
-
-
புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு In இலங்கை August 2, 2019 8:40 am GMT 0 Comments 1180 by : Yuganthini சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ்க்கும் (Sarat Dash) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம…
-
- 1 reply
- 313 views
-
-
வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! In இலங்கை August 2, 2019 9:34 am GMT 0 Comments 1044 by : Litharsan வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்…
-
- 0 replies
- 470 views
-