Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ரிசாட் In இலங்கை August 2, 2019 2:50 am GMT 0 Comments 1434 by : Benitlas நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற ஒர…

  2. எம்மை கேட்காமல் வேட்பாளரை அறிவிப்பது தவறு: மஹிந்த அமரவீர In இலங்கை August 2, 2019 2:46 am GMT 0 Comments 1326 by : Yuganthini எமது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை எதனையும் நடத்தாமல், ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்க நினைப்பது தவறென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்…

  3. கண்டி மாவட்டத்தில் கால்பதிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி! In இலங்கை August 2, 2019 2:39 am GMT 0 Comments 1262 by : Benitlas ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை கண்டி மாவட்டத்தில் மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் பிரதேச வாரியாக கட்சி அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(சனிக்கிழமை) நாவலப்பிட்டிய, புஸல்லாவை, பன்விலை, தெல்தோட்டை ஆகிய பகுதிகளில் உப அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ‘ஜனநாயக மக்கள் முன…

  4. வரலாற்று சிறப்புமிக்க தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்! In ஆன்மீகம் August 2, 2019 9:09 am GMT 0 Comments 1086 by : Benitlas 121 வருடங்கள் பழமை வாய்ந்த மன்னார் – தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்டின் புஸ்பராஜ் தலைமையில் கொடியேற்றம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவநாள் வழிபாடுகளைத் தொடர்ந்து 10ஆம் திகதி லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி…

  5. மட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசி…

  6. நாமல் சின்ன பையன் - மாவை சேனாதிராஜா August 2, 2019 தோ்தல் வந்தவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் பொய்களை கூறிவரும் நாமல் ராஜபக்ஸவுக்கு தமிழா்களின் வரலாறு தொியாது. அவா் ஒரு சிறு பையன் என பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். யாழில் நேற்று நடைபெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லைபோல் இருக்கின்றது. அவர் ஒரு சின்னப் பையன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது நாடு பிளவுபடப் ப…

  7. யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்! [Thursday 2019-08-01 07:00] கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும். இன்று முதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டி…

  8. வவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு. வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைக்கபட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒருங்கினைப்பு குழுவால் விளக்கம் கோரப்பட்டது. குறித்த சோதனை சாவடியை விரைவாக அகற்றுவது தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக ப…

  9. மரண தண்டனை வழங்குவதை எதிர்ப்பவர்கள் சிறந்ததோர் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தையே எதிர்ப்பவர்களாவர் - ஜனாதிபதி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் அனைவரும் சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரானவர்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (01) முற்பகல் பண்டாரவளை நகர மண்டப கேட்போர்கூடத்தில்…

  10. அபிவிருத்திகுழு கூட்டத்தில் முரண்பட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவனை வழங்கச்செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது வனவளத்திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடைவிதித்துவருவதாகவும் அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்கமுடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்ததுடன் தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார். …

  11. வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இங்கிருந்துதான் தர்ஸினி என்ற வீராங்கனையும் தெரிவானார். அவர் இப்போது உலக…

  12. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார் என தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது. கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் மலையக மக்களுக்கு உதவக் கூடியவராக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு வடக்கிற்கு வருகை தரும் அரசியல்வாதிகள் வரலாறு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக இலங…

  13. பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் சிறிலங்கா அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண காணொளி புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் சிறிலங்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த சிறிலங்கா அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அத…

    • 0 replies
    • 528 views
  14. அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை. அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்தனர். கடந்த காலங்களில் மாகாண மற்றும் மத்திய அரசால் வழங்கப்பட்ட நியமனங்களை பெற்ற பலரும் வெளிமாவட…

    • 0 replies
    • 574 views
  15. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன. இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அபகரிப்பு நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று நேரில் சென்று பார்வையிட்டார். குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சரணாலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களுடைய அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான கோட்டைக்கேணி, குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், அம்பட்டன் வாய்க்கால், பணம்போட்ட கேணி, வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்கள் பார்வையிடப்பட்டன. அதேபோல் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்க…

    • 0 replies
    • 389 views
  16. சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி In இலங்கை August 1, 2019 10:27 am GMT 0 Comments 1121 by : Benitlas தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முன்கொண…

  17. இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியானது போலியான ஆவணம் உண்மையான ஆவணம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை உண்மையான ஆவணத்தை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை அதற்கான தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையகம் கேட்கும்போது அவர்களிடம் அதனை கையளிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் தற்போது இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை இதன் காரணமாக முன்னைய கடவுச்சீட்டை …

  18. யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை July 29, 2019 யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும். இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன…

  19. சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே. குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ். சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் என நம்பப்படும் நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்…

    • 0 replies
    • 274 views
  20. சிவில் சமூகம் வியூகம் வகுக்க வேண்டும்! [Thursday 2019-08-01 07:00] ஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டு, சகல தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சாா்பில் எமது நிலைப்பாட்டை தீா்மானமாக எடுத்து, அதனை சா்வதேச சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு இணங்கும் தரப்புக்களையே ஆதாிக்க வேண்டும் என ஈ.பி.ஆா்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 'இலங்கையில் ஜனாதிபதி த…

    • 1 reply
    • 499 views
  21. மஹிந்த அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் கூறுவது வேடிக்கையானது – மாவை In இலங்கை August 1, 2019 11:00 am GMT 0 Comments 1057 by : vithushan வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறுவது வேடிக்கையானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விலகியது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரி…

    • 1 reply
    • 451 views
  22. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் In இலங்கை August 1, 2019 10:00 am GMT 0 Comments 1175 by : Benitlas வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இணைத்தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சி.சிவமோகன், அரசாங்க அதிபர் எம்.கனீபா ஆகியோரின் பங்குபற்றலில் இந்த கூட்டம் இடம்பெற்றது. நீண்ட இடைவெளியின் பின்னர் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதேவ…

  23. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு குறித்து ஐ.தே.க. முக்கிய தகவல்! In இலங்கை August 1, 2019 9:42 am GMT 0 Comments 1210 by : Dhackshala ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹெஷான் ஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் 5ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு …

  24. அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் - யாழ்.மாவட்ட செயலர் அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை. அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன்…

  25. வவுனியாவில் வறட்சியால் 607 குடும்பங்கள் பாதிப்பு வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 607குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி பாதிப்படைந்துள்ளதாக கிராம அலுவலகரினால் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கையிடப்பட்டு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு புள்ளிவிபரத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வவனியா வெங்கலச் செட்டிகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.