Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த…

  2. சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா முன்மொழியப்பட்டுள்ள ‘சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்புடையது. இதனால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது…

    • 1 reply
    • 760 views
  3. நாட்டை சீர்குலைக்கின்றார் ஞானசார தேரர்: அப்துல்லா மஹ்ரூப் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாட்டை சீர்குழைக்கும் விதமாக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கந்தலாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அப்துல்லா மஹ்ரூப் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்காவிட்டால் பாரிய இனக்கலவரம் நாட்டில் ஏற்பட்டிருக்கும். மேலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமே சிந்தித்து செயலாற்ற வேண்டும். அந்…

  4. சர்வதேச ரீதியில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள். அவர்களை நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகும். எனவே, இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து நின்றே எதிர்கொள்ளும். கடந்த இரு தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளர்களையே ஐக்கிய…

    • 1 reply
    • 357 views
  5. முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு வழங்காமல், கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது,கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களின் பொருளாதாரத்தையும் கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, விளக்கமளிக்கும் கூட்டம் சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்: - இந்நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொரு…

    • 0 replies
    • 316 views
  6. நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/

    • 9 replies
    • 1.5k views
  7. ஆயுத பலம் இல்லாவிட்டால் தீர்வு கைவிடப்படுமா?: சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது – சம்பந்தன் ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையி…

    • 1 reply
    • 690 views
  8. வைத்தியர் ஷாபியை தடுத்துவைக்க முடியாது – குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, வைத்தியர் ஷாபி, தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குருணாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய …

  9. பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:53 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் வி…

    • 8 replies
    • 1.5k views
  10. ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஏற்றுமதி! ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உழைப்பின் மூலமாக கடந்த ஆண்டு இந்தத் தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டதாகவும், அதனாலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஐரோப்பிய-நாடுகளுக்கு-காய/ காய் கறிகளுடன்... கறி வேப்பிலையும் வருமா?

    • 2 replies
    • 840 views
  11. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயார்? பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த அமைச்சரவை பத்திரத்தை வரையும் பணிகள் நடைபெறுவதாகவும் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்குள் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு ம…

    • 1 reply
    • 356 views
  12. விகாரைகளை இலக்கு வைத்து இரண்டாம் கட்ட தாக்குதல்! – சாய்ந்தமருதில் நிர்மூலமாக்கப்பட்டது திட்டம்!! இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் முதலில் இணைந்த சிரியாவிலுள்ள கண்டியைச் சேர்ந்த இருவரின் ஆலோசனைக்கமைய இலங்கையில் சஹ்ரான் தலைமையில் இந்த இரண்டு கட்ட தற்கொலை தாக்குதல்களை ந…

  13. ஸ்மார்ட் கம்பங்களின் ஊடாக 5G அலைக்கற்றை வழங்கப்போவதில்லை ; யாழ். மாநகர சபை முதல்வர் யாழ். மாநகர சபைக்குட்பட்ட மற்றும் ஏனைய இடங்களில் பொருத்தப்படும் Smart lamp pole கம்பங்களில் 5G அலைக்கற்றை இந்த கம்பங்களினூடாக வழங்கப்பட போவதில்லை என யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இன்று யாழ். மாநகர சபையில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்த போதே அவர் தெரிவித்தார். இந்த Smart கம்பங்கள் தொடர்பில் சிலர் மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்கள் ஏற்படுத்தி மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருவதாகவும், 5G அலைக்கற்றை Smart கம்பங்கள் ஊடாக வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். போரால் உடைந்துபோன மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் வகையில் யாழ். மாநகரத்தை எழில்…

  14. நாச்சிக்குடாவில் இரண்டாயிரம் கிலோ மீனை பிடித்தமை தொடர்பில் மூவர் கைது இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதியில் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியவகை மீனை பிடித்தமைக்காக முழங்காவில் பொரிஸார் மூவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து குறித்த மீன்பிடி சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/59389

  15. கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு டயஸ்போராவின் திட்டமிட்ட சதி! June 29, 2019 சஜித் பிரேமதாசா வேட்பாளராகக் களமிறங்குவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினாலும் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மகிந்த ர…

  16. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும், சேறு பூசும் இனவாதிகள்…. June 29, 2019 கல்முனை ஆதார வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தேசிய காவற்துறையினர் ஆணைக்குழுவினை நாடி தீர்வை பெறவுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் பெயர் சூட்டப்பட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர் …

  17. பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணைய தளம் பொலிஸாருக்கு எதிரான பொதுமக்கன் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன் முகவரி www.npc.gov.lk என்பதாகும். இதன் மூலம் பொது மக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இணையத்தள அறிமுக நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (28) கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பி.எச்.மனத்துங்க, செயலாளர் சமன் திசாநாயக்க முதலானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தமது பிரச்சினை…

    • 0 replies
    • 232 views
  18. HOME வைத்தியர் சாபி குறித்த முறைப்பாடு: ரத்ன தேரருக்கு அறிக்கை வழங்க தீர்மானம் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சியாப்தீன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார். வைத்தியர் சாபி தொடர்பில் கடுமையான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று முன்தினம்…

    • 0 replies
    • 426 views
  19. குமார வெல்கம பதவியிலிருந்து நீக்கம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதனாலேயே இவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவுக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைவராக வரக் கூடாது என்ற கருத்தை இவர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட …

    • 0 replies
    • 426 views
  20. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை… June 29, 2019 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார். தெரிவுக் குழுவில் பாராளுமன்ற …

    • 4 replies
    • 1.2k views
  21. முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தின் மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளனர். வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக இந்த உண்ணாவிரத போராட்டம்.நடைபெற்று வருகின்றது. முன்னதாக வள்ளிபுனம் காளிகோவிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக வந்து தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஏனைய பழைய மாணவர்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். …

    • 1 reply
    • 678 views
  22. மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது.கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அவரசரகால சட்டம் பயங்கரவாத தாக்குதலைவிட பயங்கரமானதாகும்.அதனால் இச் சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பாவிக்கவேண்டும். மாறாக தொழிற்சங்களை அடக்க பாவிக்கக்கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அத்துடன் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மணர தண்டனை வழங்குவதற்கு நாங்…

    • 1 reply
    • 557 views
  23. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினால் இலங்கையில் சாதாரண சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியை மையப்படுத்திய குறித்த குழு சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புப்பட்டு பயிற்சி பெற்றிருந்தமையினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் தற்கொலை தாக்குதல்களோ குண்டு வெடிப்புகளோ மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் புலனாய்வு துறைகள் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளன. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும் பா…

    • 0 replies
    • 479 views
  24. வெளியானது மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் பெயர் பட்டியல் போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர் தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் உட்பட 4 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதன்படி குறித்த 20 பேரின் பெயர்கள் பின்வருமாறு, எம்.கே. பியதிலக்க எம் …

  25. நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. 6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த குறித்த கஞ்சா பொதிகள் வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்பட…

    • 1 reply
    • 568 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.