ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார். இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கு அமைவாக எமது அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை எமது மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/54687
-
- 0 replies
- 569 views
-
-
– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்…
-
- 0 replies
- 607 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்க…
-
- 0 replies
- 574 views
-
-
தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயல…
-
- 0 replies
- 577 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி ‘ பழைய இரும்புகள் , உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்’ என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடந்த நான்கு நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோர்களும் , வாகனங்களில் வந்து அவற்றை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து , ‘கம்பளம்…
-
- 0 replies
- 687 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மாநகரில் அமைந்துள்ள காவல்துறையினர் விவரங்களை சேகரித்து வருவதாக அவற்றின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பள்ளிவாசல்களுக்கு வருகை தந்த காவல்துறையினர் பள்ளிவாசலுக்கு வருகை தருவோர் தொடர்பான விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்களின் விபரங்களை நேற்றைய தினம் புதன்கிழமை காவல்துறை விசேட அதிரடி படையினர் சேகரித்து சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ்ப்பாணம் முஸ்லிம் தலைவர்கள…
-
- 0 replies
- 905 views
-
-
April 25, 2019 பணிநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேசிய இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு ஒரு சில வாரங்களின் முன்னர் இலங்கைக்குப் பணம் அனுப்பினார் – அனிற்ர மதுர்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஜிகாதிவாதியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள நிலைமை நிலையற்று இருப்பது ஏலவே தெரிகிறது. இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இத்தாக்குதலுக்கு ஓரளவு அறியப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான “தேசிய தௌவீத் ஜமாத்” இனைக் குற்றஞ்சாட்டியதோடு “இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச வலையமைப்பு இருக்கிறது. இல…
-
- 0 replies
- 547 views
-
-
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருந்த விசா வழங்கும் விசேட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான விசா வழங்கும் விசேட திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்த…
-
- 0 replies
- 350 views
-
-
April 25, 2019 மட்டக்குளி மோதர பகுதியில் இன்று மே ற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கையின் போது 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் விசேட மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2019/119405/
-
- 0 replies
- 469 views
-
-
April 25, 2019 பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அவசரகாலச் சட்டம் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் ப…
-
- 0 replies
- 366 views
-
-
சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க- அஸ்கிரிய பீடம் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இன்று நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க பிரதான காரணம் இந்த அரசாங்கம் புலனாய்வுத் துறை …
-
- 1 reply
- 493 views
-
-
காலங்களில் பாராளுமன்றத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள். இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்தவர் கருதப்படுகிறார். இன்று மதியம் 12 மணிக்கு முன்வரை 359 பொதுமக்கள் மரணித்திருக்கிறார்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள். காயப்பட்டவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இந்த வேதனைய…
-
- 0 replies
- 676 views
-
-
என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது ; கிழக்கு ஆளுநர் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் நானும் பங்…
-
- 3 replies
- 993 views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு ; தீவிரசோதனையால் பதற்றம் கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் இதனால் ஸ்தம்பித்தமடைந்துள்ளதுடன், குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை பதுளை வைத்தியசாலை மற்றும் பதுளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலும் சோதனை நடவடிக்கைகள்…
-
- 1 reply
- 650 views
-
-
சமூக வலைத்தளங்களூடாக வதந்தி; சந்தேகமிருந்தால் அழைக்கவும் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, பி.ப. 12:04 Comments - 0 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது சந்தேகநபர்கள் எவரும் இருப்பின், கீழ்க்கண்ட தொலைபேசி இ…
-
- 0 replies
- 467 views
-
-
இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு" LAKRUWAN WANNIARACHCHI தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதே…
-
- 0 replies
- 601 views
-
-
பர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா? nethnews.lk இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய இந்த நபர் புத்த சமயத்தை சேர்ந்தவர் என்று அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும். "முஸ்லிம் பெண்ணை போன்று உடை உடுத்தியுள்ள புத்த சமயத்தை சேர்ந்த ஒருவரை இலங்கை கா…
-
- 0 replies
- 729 views
-
-
14 வெளிநாட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை க்குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிரதான மூன்று ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 34 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், சீன நாட்டவர்கள் இருவர், இந்திய நாட்டவர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், டென்மார்க் நாட்டவர்கள் மூவ…
-
- 0 replies
- 433 views
-
-
ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுவிப்பு! முப்படைகளின் பிரதானியான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொது பாதுகாப்பு பிரிவு ஒழுங்குமுறை சட்டம் 12 இன் கீழ் 22.04.2019 ஆம் திகதி 2120//4 மற்றும் 2120/5 வர்த்தமானியில்முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு சந்தேக நபர்கள் கைது செய்வது, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் ஒழுங்குமுறை 20 (1) இன் கீழ் ஆயுத படையினருக்கு எந்த நபர்களையும் வேண்டிய நேரத்தில் அவசர நீதி கட்டுப்பாட்டின் கீழ் வாகனத்தை பரிசீலனை செய்யவும், கைது செய்து தடுத்து வைப்பதற்கான அதிகாரமும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒழுங்குமுறை 20 (2) இன் கீழ் பாதுகாப்பு படையினர் மூலம் தடுத்து …
-
- 0 replies
- 357 views
-
-
பூகொடவில் சிறிய வெடிப்பு சம்பவம் – பாதிப்புகள் இல்லை April 25, 2019 பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணியில் இருந்த குப்பையிலிருந்து இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தால் எதுவித பாதிப்புகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/119305/
-
- 0 replies
- 377 views
-
-
வவுனியாவில் சுற்றிவளைப்பு தேடுதல் April 25, 2019 #vavuniya#eastersunday#muslims வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் காவல்துறையினரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே அதிகளவான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட…
-
- 0 replies
- 362 views
-
-
ஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019 நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் மீள் அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/119289/
-
- 0 replies
- 318 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சர்வ மத குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடவுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு…
-
- 0 replies
- 337 views
-
-
யாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது! யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டவர்களில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் மற்றும் தமிழ் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். யாழ். பொலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக, நல்லூர் பின் வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் சந்தேகிக்கப்படும் வகையில் நடமாடுபவர்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகிக்கப்படும் வகையில் அங்கு நீண்டநேரமாக நடமாடியவர்களை விசாரணை செய்துள்ளனர். இதன்போது, குறித்த 3 பேரு…
-
- 0 replies
- 592 views
-
-
குண்டு வைத்தது யார் ..?குண்டு வைத்தது யார் ..?
-
- 5 replies
- 1.1k views
-