ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோழிபண்ணை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவரின் முயற்சியால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதர நலன் கருதி சைன் என்ற பெயரில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த 5 பேருக்கு முதற்கட்டமாக வேலைவாயப்பைப் பெற்றுக் கொடுத்து ஆறாயிரம் கோழிகளையும், கால்நடைகளையும் வளர்பதை இலக்காக கொண்டு இந்தப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மறைகுரு எல்.அருள்தாஸ் மற்றும் கோழிப்பண்ணையின் பணிப்பாளர் அ.தேவகுமார் இருவரும் …
-
- 0 replies
- 520 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது. இதன்போது பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் இருந்து சபை நிகழ்வுகளை அவதானித்துவந்த மாணவர்கள் அங்கிருந்து அகற்ற நடவடிக்ககை எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஈ,டி.ஐ. நிறுவ…
-
- 0 replies
- 525 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றில் இடம்பெற்றது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் வெற்றிபெற்றது. வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. …
-
- 0 replies
- 319 views
-
-
தற்பொழுது நிலவும் வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இக் காலநிலையின் காரணமாக குடிநீர்ப் பிரச்சனையும் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. விஷேடமாக களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு குடிநீர் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 பௌசர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குடிநீர் …
-
- 0 replies
- 318 views
-
-
April 5, 2019 தனியார் மற்றும் அரச போக்குவரத்து தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமிருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று(5) காலை அம்பாறை மாவட்டம் கல்முனை பொது பேருந்து தரிப்பிட நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தனியார் மற்றும் அரச போக்குவரத்து துறையினரிடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது தனியார் தரப்பினரின் தாக்குதலினால் அரச போக்குவரத்து நேரகணிப்பு முகாமையாளர் சாமித்தம்பி புஸ்பராஜா (வயது-49) உதவி முகாமையாளரான கார்த்திக் நே…
-
- 0 replies
- 320 views
-
-
April 5, 2019 பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டனர். அதன் பின்னர் நடிகர் ரயன் வேன் ரோயனிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவற்துறைப் போதைப் பொருள் ஒழிப…
-
- 0 replies
- 316 views
-
-
April 5, 2019 வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர் காரில் வந்துள்ளார். அதன் போது காரை பின் தொடர்ந்து சென்ற குழுவினர், குறித்த நபர் காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது, அவர…
-
- 0 replies
- 298 views
-
-
18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்… April 5, 2019 சட்ட விரோதமான முறையில் இலங்கை வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் (04.04.19) கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் கூறியுள்ளனர். பருத்தித்துறைக்கு வடமேல் திசையில் 16 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைதாகியுள்ளதுடன், இதன்போது இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/117662/
-
- 0 replies
- 414 views
-
-
பெற்றோல் குண்டுடன் இருவர் கைது April 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெற்றோல் குண்டுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வரணி இயற்றாலை பகுதியில் இரு இளைஞர்கள் பெற்றோல் குண்டுடன் நிற்பதாகவும் அவர்கள் பெற்றோல் குண்டு தாக்குலை மேற்கொள்ள காத்திருப்பதாகவும் கொடிகாம காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து இரண்டு பெற்றோல் குண்டுகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய காவல்துறையினர் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகளையும் மன்றில் பாரப்படுத்தினார்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக…
-
- 0 replies
- 593 views
-
-
சிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான் சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்த…
-
- 0 replies
- 285 views
-
-
வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முட…
-
- 0 replies
- 228 views
-
-
வாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளும…
-
- 0 replies
- 250 views
-
-
சுரேன் ராகவன் தலைமையில் ஆரம்பமாகும் வட.மாகாண பௌத்த மாநாடு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வட.மாகாண பௌத்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர், வவுனியா மாவட்ட தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த பௌத்த மாநாடு, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழான புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இ…
-
- 46 replies
- 3.9k views
- 1 follower
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நொதர்ன் பவருக்கு உத்தரவு April 4, 2019 சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரான, பேராசிரியர் ரவீந்திர காரிவசம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த நொதர்ன் பவர் தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக, நிலக்கீழ் நீரில்…
-
- 1 reply
- 582 views
- 1 follower
-
-
April 4, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக பாதுகாப்புப் படையினர், மற்றும் காவல்துறையினருக்கும் அதிகாரங்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிய புத்திஜீவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 463 views
-
-
April 4, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமுமின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது நாளை இடம்பெறவுள்ள வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன நாளை காலை தனித்தனியாக கலந்துரைய…
-
- 0 replies
- 296 views
-
-
அலரி மாளிகை சோதனைச் சாவடியில் அதிரடிப் படை உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டு தற்கொலை April 4, 2019 அலரி மாளிகை சோதனைச் சாவடியில் அதிரடிப் படை உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டு தற்கொலை அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/117593/
-
- 0 replies
- 470 views
-
-
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணமோசடி செய்த ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் கைது April 3, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் இடைப்பட்ட சந்தியில் உள்ள வீடொன்றில் வழிகாட்டல் ந…
-
- 1 reply
- 523 views
-
-
தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப நிலைமாற்று நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் April 4, 2019 தேசிய ஒற்றுமை முழுமையாக கட்டியெழுப்ப வேண்டுமானால் நிலைமாற்று நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொஹான் பெரோ தெரிவித்துள்ளார். ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகளும் உருவாக்கிகொடுப்பதும் அவசியமாகும் என்பதனால் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முன்னெடுக்க தேசிய சமாதான பேரவை தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய சமாதான பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களுக்கான போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வில் கலந்து கொண…
-
- 0 replies
- 339 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 3 replies
- 812 views
- 1 follower
-
-
சிங்களத்தில் எழுதிய வாக்குமூலத்தில் மிரட்டி கையொப்பம் வாங்கியதாக உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு April 4, 2019 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்புத்துறை மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீதி ஒன்று தனியார் சிலரது கோரிக்கையின் அடிப்படையில் யாழ் மாநகரசபையினால் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவ் விவகாரத்தோடு தொடர்புபட்டு காணி உரிமையாளர் மற்றும் கிராமச் சங்க உறுப்பினர்களை வாக்குமூலம் பெறுவதற்கு என அழைத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் சிங்களத்தில் எழுதிய வாக்குமூலத்தில் தம்மை மிரட்டி கையொப்பம் வாங்கியதாகவும் நேற்றைய தினம் (03) இரவுக்குள் குறித்த வீதியை மூடாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தியதாகவும்…
-
- 0 replies
- 633 views
-
-
வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு April 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் பகுதி மக்களின் விவசாய காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள பாதுகாப்பு திணைக்களம் தொடர்ச்சியாக விளைவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஜெயபுர மக்கள் 1983ஆம் ஆண்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்ட போது அவர்களுடைய வாழ்வாதர செயற்பாடுகளுக்காக அரச காணிகள் வயல் நிலங்களாக வழங்கப்பட்டது. சில காலங்கள் காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைகளை மேற்கொண்ட போதும் யுத்தம் காரணமாக 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள…
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம் 3 ஏப்ரல் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசி…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “ஏனைய சிங்கப்பூர் நிறுவனங்களால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை விட இந்த முதலீடு மிகப்பெரியது. முதலாவது சிங்கப்பூர் நிறுவனம் அமைக்கவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டத…
-
- 0 replies
- 315 views
-
-
பின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர். இதனால், நாடாளுமன்றச் சுற்றுவட்ட வீதி சிறிலங்கா காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சிறிலங்கா அதிபரின் வாகன அணியின் பாதை மாற்றப்பட்டது. நாடாளுமன்ற முன்வாயில் வழியாக செல்ல முடியாததால், பின்வாயில் வழியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குச் சென்றார். http://www.puthinappalakai.net/2019/04/04/news/37195
-
- 0 replies
- 312 views
-