Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால் இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர். 2008-09 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார். இதன்போதே, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா…

    • 0 replies
    • 240 views
  2. வடமாகாணத்தின் மன்னாரில் அரங்கேறும் அடாவடி - பொதுமகனது காணியில் கழிவுகளை எரியூட்டும் இலங்கை இராணுவம் விரைவாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தல் நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு #Srilanka #Military #Mannar #Land தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்…

    • 0 replies
    • 277 views
  3. புலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு March 22, 2019 விடுதலைப்புலிகளால் தங்கம் புதைத்து வைத்ததாக நம்பப்படும் அறை ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அகழ்வு நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முதன்மை வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் தங்க நகைகள் புதைத்து வைத்ததாக தகவல்கள் கிடைத்ததனையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் முல்லைத்தீவு காவல்துறையினர் ,சிறப்பு அதிரடிப்படையினர…

  4. இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர் March 22, 2019 எப்போதும் பெரும்பான்மைக் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலகுவாக ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் குல பேதம், மத பேதம், இன பேதம் என்று பிரித்து மக்களின் எண்ணங்களில் நுழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால் பெரும்பான்மையினரின் எண்ணத்தினை நிறைவேற்ற வேண்டும் என பலர் எண்ணினாலும், சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பான்மையினரின் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்…

  5. காத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை மேற்கொண்ட வீடு முற்றுகை – 6 பேர் கைது March 22, 2019 மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்த, வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி 10 ஆம் குறிச்சியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் நான்கு பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை …

  6. கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்றுமுதல் கண் சத்திர சிகிச்சை March 22, 2019 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22)காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மீள் குடியேற்றத்தின் பின்னர் வன்னிப் பெருநிலப் பரப்பில் அதிகளவினான மக்கள் கண்புரை நோய்க்கான சிகிச்சையினைப் பெற வசதியின்றி இருந்ததைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விசேட கண் சத்திர சிகிச்சை முகாம்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்து நடாத்திப் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பார்வையை வழங்கி வந்தன. இதற்கான விசேட கண் சத…

  7. கோயிலை பௌத்த மதகுரு கோரவில்லை: மாவட்ட செயலகத்தின் கருத்திற்கு மக்கள் விசனம் வவுனியா – பேயாடி கூழாங்குளத்தில் பௌத்த விகாரைக்கான காணி கோரல் தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபரால் அனுப்பப்பட்ட கடிதம் தவறானதென தெரிவித்து, அரசாங்க அதிபர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகபூசணி அம்மன் ஆலய காணியை பெளத்த மதகுரு கோரிய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (வியாழக்கிழமை) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரச அதிபர், சர்வமத குருமார்கள், பிரதேச செயலாளர், பேயாடி கூழாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினர், அந்தணர் ஒன்றியம் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்ப…

  8. கொத்தணிக் குண்டுகள் தடுப்பு சாசனத்தினை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்க அமைச்சரவை அங்கீகாரம் March 21, 2019 கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையானது மனிதாபிமான ஆயுதக் களைவுகள் மேற்கொள்வதனை வரவேற்க முன்னிற்கும் அரசு என்னும் அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் இடம்பெற்ற அம…

  9. சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன…

  10. ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு ! சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். சிங்கப்பூர் நாட்டின் நாடு கடத்தல் சட்டத்திற்கமைவாக யாரேனும் ஒரு நபரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு கோருவதற்கு அடிப்படையாக அமையும் ஆவணங்கள் எவையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என அப்பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அத்தகைய கூற்றொன்றினை வெளியிட்டிருப்பது அண்மையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் …

  11. வகுப்பறையில் இருந்த குளவி கூடுகளால் நிலத்திலிருந்து பரீட்சை எழுதிய மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் இரண்டு பெரிய குளவி கூடுகள் காரணமாக பரீட்சை எழுத முடியாத நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனால் பரீட்சைக்காக தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளை விட்டு வெளியேறி நிலத்தில் இருந்து பரீட்சை எழுதிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் குளவி மற்றும் குரங்குகளின் தொல்லைகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பில் பாடசாலை சமூகம் …

  12. ஜெனீவா விவகாரம் இலவச சந்தைபொருளாக்கப்பட்டுள்ளது - டக்ளஸ் (ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) ஜெனீவா விவகாரமானது இந்த நாட்டு தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொ…

  13. யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். …

    • 0 replies
    • 973 views
  14. ஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்க…

    • 0 replies
    • 848 views
  15. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி இதனை வலியுறுத்தினார். ”எமது பார்வையில் 30/1 தீர்மானம், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்து தரப்புகளினதும் ஒருங்கிணைந்த முயற்சியாக அதனை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்…

    • 0 replies
    • 209 views
  16. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- இந்தியா சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர், ‘நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது. ஒன்றுபட்ட சிறிலங்காவில் சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும்…

    • 0 replies
    • 503 views
  17. இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் 21 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோப்புப்படம் பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழ…

  18. (நா.தனுஜா) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விரு தரப்புச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். …

  19. (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரது நோக்கங்கள் நிறைவேறவுள்ளன. இலங்கைக்கு…

  20. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய 40-1 என்ற பிரேரணை இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று மாலை ஜெனிவா நேரப்படி 3 மணியளவில் இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் மனித உரிமை பேரவையில் பிசன்னமாகியிருந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில் பிரேரணையை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர். …

  21. March 21, 2019 காங்கேசன்துறை ‘தலசெவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வலி.வடக்கு காங்கேசன்துறை “தலசெவன இராணுவ விடுதியை” மையமாகக் கொண்டு அவ் விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டிற்காக எடுத்துள்ள சுவீகரிப்பு ந…

  22. March 21, 2019 வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். 252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக ஜே/226 பகுதி நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க நாளை 22ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. …

  23. இலங்கை தொடர்பான பிரேரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று (21) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியா – ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன. இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே,…

  24. வடிவேல் லோகநாதன் – ரத்னசாமி பரமாநந்தன் கடத்தலில் புதிய திருப்பம்…. March 21, 2019 கடத்தல் தொடர்பில் கடற்படைக்குத் தலைமை வகித்தவர்கள் அறிந்திருந்தனர்… 2009 ஆம் ஆண்டு கொழும்பில் வௌ்ளைவானில் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில், அந்தக் காலப்பகுதியில் கடற்படைக்குத் தலைமை வகித்தவர்கள் அறிந்திருந்ததாக, நீதிமன்றத்திற்கு இன்று (21ஆம் திகதி) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அந்தக் காலப்பகுதியில் கடற்படையின் தளபதியாக செயற்பட்ட ஜயந்த பெ…

  25. கடற்படை தளம் அமைப்பதற்காக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க ஏற்பாடுகள் March 21, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படை தளம் அமைப்பதற்காகவும் , சுற்றுலா அதிகார சபையின் தேவைகளுக்குமாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் 232 ஏக்கர் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காகவும், சுற்றுலா அதிகார சபைக்காகவும் சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. என எமக்கு தகவல் கிடைத்துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.