ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே, வாக்களிப்பு வீதம் குறைவதற்கு காரணம்… February 27, 2019 அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனமே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தேர்தல்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் எனவும் தாங்கள் எதுவும் பேசக்கூடாது என மக்க…
-
- 0 replies
- 340 views
-
-
மாந்தை கிழக்கு அம்பாள்புரத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி…. February 27, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாள்புரம் பகுதியில் வசித்துவரும் 35 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான நல்லையா சதீஸ்குமார் என்ற குடும்பஸ்தர் வவுனிக்குளம் அலைகரை பகுதியில் சென்ற வேளை கட்டுத்துவக்கு வெடித்ததில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2019/114620/
-
- 0 replies
- 492 views
-
-
தொழில்நுட்ப பீட மாணவர்கள், யாழ் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைய தடை…. February 27, 2019 யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதையைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிநுட்ப பீடத்தின் அனைத்து மாணவர்களும் வளாகத்தினுள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர். இதனையடுத்து விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை திட்டியதுடன், சம்பவத்தை ஒளிப…
-
- 0 replies
- 461 views
-
-
பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படையின் 12 மிராஜ்-2000 போர் விமானங்கள், பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களின் மீது குண்டுகளை வீசியிருந்தன. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமது இந்த தாக்குதல…
-
- 1 reply
- 222 views
-
-
2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முழுவதும் நாடாளுமன்றத்தில் மௌனம் காத்த உறுப்பினர்களில் 12 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மற்றொருவர் ஐதேகவின் உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஆவார். …
-
- 1 reply
- 372 views
-
-
வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:44Comments - 0Views - 17 வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்பட…
-
- 1 reply
- 645 views
-
-
2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி! சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் மனைவி பொது வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு 2 எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி நேசராஜா (வயது 38) என்பவர் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சவூதி அரேபியாவில் சம்பவித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக உயிரிழந்த நபரின் மனைவி ஹேமமாலினி (வயது 42) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். விபத்து சம்பவித்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டபோதிலும் தனது கணவரின் உடலை…
-
- 0 replies
- 300 views
-
-
அரசினால் தவறவிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம் – மங்கள கவலை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம், இலங்கை அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விடயம் தொடர்பாக, மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னாள் அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள், இலங்கை அரசுக்கு ஒத்துவராமையினால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனது. அவர் அப்போது வந்திருந்தால், அது நிச்சயமாக ஒரு வரலாற்ற…
-
- 0 replies
- 226 views
-
-
1 Min Read February 26, 2019 A யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் , கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். …
-
- 3 replies
- 518 views
-
-
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்காக, இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தார். எனினும், பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தமது கருத்தை அமைச்சரவைக்கு அனுப்ப…
-
- 0 replies
- 186 views
-
-
ஒபாமாவின் வருகையை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிலங்கா – மங்கள சமரவீர தகவல் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒத்துவராததால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனதாகவும், அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் அப்போது சிறிலங்காவுக்கு வருவதற்கு ஒர…
-
- 0 replies
- 603 views
-
-
தரித்து விடப்பட்டிருந்த டிப்பருடன், சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்து, யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பருடன் மோதியது. விபத்தில் உயிரிழந்தவர் சாரதி உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 357 views
-
-
சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர். சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வருடம் கேள்விகள் கோரப்பட்ட போது எவரும் விண்ணப்பங்கள் பெறாத நிலையில், மீள்கேள்வி அறிவித்தல் கோரப்பட்டும் எவரும் விண்ணப்பிக்கவில்லை. பின்னர் பொது அறிவித்தல் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டும் ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் இறைச்சிக் கடைகளை குத்தகைக்கு விடுவது தொடர்பான சிறப்பு அமர்வு சபா மண்டபத்தில் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.. உறுப்பினர்களின் ஏகோப…
-
- 0 replies
- 386 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதனை நாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில்…
-
- 0 replies
- 196 views
-
-
(நா.தனுஜா) இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இத்தாலியில் வசிக்கும் தேசப்பற்றாளர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் இலங்கை நாட்டுப்பற்றாளர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளனர். ஜெனீவா நகரிலுள்ள மனித உரிமைகள் பேரவை அலுவலக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்திற்கு முரணாக தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராகவும், நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பு மற்றும் சுயாதீன நாட்டிற்குள் அனைத்துவித சர்வதேச தலையீடுகளுக்கு எதிராகவும் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 189 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்த திரட்டும் போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் ஒன்றியம், பிரஜா அபிலாச வலையமைப்பு ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 271 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். மேற்படி ஆசிரியர் சங்கத்தின் வடக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச் செ…
-
- 0 replies
- 247 views
-
-
February 26, 2019 சாவகச்சேரி தொகுதியின் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு ஜே/298 கிராம அலுவலர் பிரிவில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது பொதுமக்கள் குறித்த காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் தமது குடிமனைகளில் இருந்து 100மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருப்பதாகவும், காற்றாலை உற்பத்திக்காக பயன…
-
- 0 replies
- 206 views
-
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று திங்கட்கிழமை தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து மன்னார் நீதவான் ரீ.சரவணராஜவின் மெய்ப்பாதுகாவலருடன் உரையாடியுள்ளனர். இதன் போது குறித்த இருவரும் நீதவா…
-
- 0 replies
- 149 views
-
-
ஆரையம்பதி கிளைக் கிராமமான மாவிலங்குதுறை கிராமத்தில் இரவு நேரங்களில் மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கபாலி என்று அழைக்கப்படுகின்ற ஒரு பெயருடைய நபர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இறங்கி மக்களின் சொத்து உடமைகளை கூரைகளால் இறங்கி மக்களின் சொத்துக்களை களவாடி செல்கின்றான். இவனுக்கு பொலிசாரும் உடந்தையாக இருக்கின்றார்கள் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஆரையம்பது பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு க் கூட்டத்தில் இது தொடர்பாக மக்கள் இணைத்தலைவரான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர். ஞா.ஸ்ரீநேஷன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கபாலியின் பிரச்சனை பெரிது இரு சமூகத்தினராலும் பெரிதும் பேசப்பட்டடு அனைவ…
-
- 1 reply
- 782 views
-
-
இணையம் எங்கும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழக பகிடிவதை வீடியோ மற்றும் கட்டுரைகளிற்குக் கீழே நீங்களெல்லாம் டைப் செய்த "முஸ்லிம் மஜ்லிஸ் தேங்கா திருவுகின்றதா" "பலாக்கா பறிக்கின்றதா" "பொட்டைகளா" போன்ற கேள்விகளின் மறுவருடிவம்தான் எனது தலைப்பு. மிக கீழ்த்தரமான முறையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகடிவதையை வன்மையாக கண்டிப்போம்.இதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் உரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.. பகிடிவதை உபகலாச்சாரம் போன்ற விடயங்களைப் பேசுவதற்கு முதல் ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பினை ஏதோ ஒரு வகையில் தயவு செய்து புரிந்து கொள்ள முனையுங்கள்.பகிடிவ…
-
- 2 replies
- 582 views
-
-
கொக்கேன் பயன்படுத்துபவர்கள் எவரும் கட்சியில் இல்லை- பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியில் கொக்கேன் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? எனக் கண்டறிவதற்கு குழு அமைத்ததே, ரஞ்ஜன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதற்கு சமனாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். ஆனால், பொதுஜன பெரமுனவில் கொக்கேன் பயன்படுத்தும் எவரும் இல்லையென்பதை தெளிவாகவே கூறிக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பி்ரட்டுள்ளார். http://www.dailyceylon.com/178258
-
- 2 replies
- 336 views
-
-
புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். புலம்பெயர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் தாயகம் திரும்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கருணா மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.yaalaruvi.com/புலம்பெயர்-அமைப்புகளுடன/
-
- 1 reply
- 420 views
-
-
பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை பூர்வீகமாக கொண்ட கரீமா மரிகார் ஹரோ நகர மேயராக செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த மேயர், உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஹரோ நகரத்தில் வாழும் தமிழ் மக்கள் அவரை பதவி விலகுமாறு கூறி வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையின் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க, சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணாடோ…
-
- 0 replies
- 287 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெ…
-
- 1 reply
- 413 views
-