Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதம் January 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இவற்றுள் பல வீதிகள் மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளன. இவ்வாறு சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக காணப்படும் …

  2. மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன January 2, 2019 மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன் கிழமை 122 ஆவது நாளாக அகழ்வு பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மனித எலும்பு…

  3. “ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் இறுதி அரசியலமைப்பிலும் அவ்வாறே இடம்பெறும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ‘அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும் என்றும் தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த…

  4. யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில் அவர் வைத்தியரை நாடவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற…

  5. விடுதலைப்புலிகளுக்கு பயந்தவர்களே வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்: இராணுவ தளபதி நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனரென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தங்களில் சிக்கும்போது, உடனடியாக அம்மக்களுக்கு வேண்டிய உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர். ஆனால், தங்களது இத்தகைய செயற்பாடுகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொண…

  6. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உதவி! தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளி/முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் க.ரஜனிகாந்தன், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் செல்வராசா கஜானன், செயலாளர் சண்முகம் சங்கீதன், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://athava…

  7. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக இன்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் இன்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர் இதன்போது பெருமளவான காவல்துறையின…

    • 2 replies
    • 695 views
  8. A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயிரியல் விஞ்ஞான பிரிவு முதலாம் இடம் - கலனி ராஜபக்ஷ - கம்பஹா ரத்னவலி மகளிர் பாடசாலை இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மூன்றாம் இடம் - ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி பௌத…

    • 3 replies
    • 985 views
  9. தமிழை விழுங்கியது சீன மொழி சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டு, அதிகாரபூர்வ மொழிகள், சமூக மேம்பாட்டு, இந்து கலாசார அமைச்சரான மனோ கணேசன் தனது கீச்சகப் பக்கத்தில், இது தொடர்பான பதிவுகளை இட்டுள்ளார். “சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் தளங்களில், உள்ளூர் மொழி சட்டங்கள் மீறப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். தேவைப்பட்டால், சீனத் தூதரகம் உள்ளிட்ட எல்லாத் தரப்புகளுடனும், பேசும் திட்டம் உள்ளது. சிறிலங்காவின் உள்ளூர் சட்டங்களுக்கு சீனர்கள் மதிப்பளிக்க வேண்டும்.…

  10. December 29, 2018 “ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், …

  11. வடக்கின் ஆத்மாவை தொட்ட தெற்கின் குரேயே ஆளுநராக வேண்டும் எனத் தெரிவித்து இன்று 01 கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை ஏற்றிய ரயில் சென்ற நேரத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாண தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது மீண்டும் றெஜினோல்ட் …

  12. வெள்ளத்தால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தெற்கில் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருள்களுடன் வடக்கு நோக்கிய தொடருந்து கிளிநொச்சி தொடரந்து நிலையத்தை இன்று வந்தடைந்தது. கிளிநொச்சி தொடருந்து நிலையத்தை வந்தடைந்த உலருணவுப் பொருள்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது. https://newuthayan.com/story/16/நிவாரணப்-பொருள்களுடன்-கிளிநொச்சியை-வந்தடைந்து-தொடருந்து.html

  13. (நா.தனஜா) எம்முடைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற வருடமாக இவ்வருடம் அமையவுள்ளது. இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுடன், நாட்டை சீரமைக்கும் பொறுப்பும் எமக்குள்ளது. கட்சியென்ற வகையில் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட அதிகளவில் உழைக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையினை எம்மிடமிருந்து இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை வழங்குவதற்கான இயலுமை எம்மிடம் உள்ளது என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 ஆம் ஆண்டுக்கான கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஸ்த…

  14. (நா.தனுஜா) தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும். சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஞானசாரருக்கு அனு…

  15. January 1, 2019 இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை முதலிய விடயங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாது என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெறுள்ளது. இதன் போது இந்த விடயம் தொடர்பில் உரையாடப்பட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  16. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. எனினும், தற்போது அவர் கனடாவில் தங்கியிருப்பதை தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் உறுதிசெய்துள்ளனர். வடமாகாணசபையின் முன்னாள் நியமன உறுப்பினர் அயூப் அஸ்மின், மாகாணசபைக்குள் சர்ச்சைக்குரிய உறுப்பினராக பதவி வகித்தார். அவர் அங்கம் வகித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரும் அவரை நீக்க முயன்றபோதும், அவர் தமிழரசுக்கட்சியின் தலைவர்களின் அபிமானத்தை பெற்றிருந்ததால் பதவியில் தொடர முடிந்தது. இந்தநிலையில், மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், தற்போது அவர் கனடாவில் தங்கியிருக்கிறார். …

    • 0 replies
    • 906 views
  17. -வை எல் எஸ் ஹமீட்- அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார். பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார். தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தி…

    • 11 replies
    • 1.5k views
  18. வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. வட.மாகாண சுகாதார தொண்டர்கள், வட.மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம், கிளிநாச்சி புகையிரத நிலையம் வரை சென்றது. கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு ஜனாதிபதி வருகை தரக்கூடும் எனக்கருதி குறித்த…

  19. வடக்கு- கிழக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன் உயர்த்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாரம்பரிய கல்வித்திறனை நோக்கி மீண்டும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள வடக்கு- கிழக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும் என, வட. மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முக்கியமாக சித்திபெற்ற கிராமப்புற மாணவ மாணவியர்களை நாங்கள் விசேடமாக வாழ்த்துகின்றோம். காரணம் பல பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பக் கஷ்டங்கள் மத்தியில் வைராக்கியத்துடன் அவர்கள் படித்து முன்னேறியுள்ளார்கள். நகர்ப்புற வசதிகள் அவர்களு…

  20. புதிய வருடத்திலாவது சர்வதேசம் எம் மீது கரிசனை கொள்ளட்டும் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் புதிய வருடத்திலாவது சர்வதேச சமூகம் தம் மீது கரிசனை கொண்டு தமது உறவுகளை மீட்பதற்கு துணை நிற்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பல நாட்களாக நாம் எமது பிள்ளைகளை காண வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் அனைவருமே எம்மை கைவிட்டு விட்டனர். எனவே நாம் தொடர்ச்சியாக சர்வதேசத்தினையே தற்போது எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவே புதிய ஆண்டிலாவது சர்வதேசம் எம்மீ…

  21. சுதந்திரக்கட்சியின் தலைமையலுவலகத்திற்குள் நுழைவதற்கு சந்திரிகாவிற்கு தடை? ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் அவரது ஆதரவளார்களையும் அனுமதிக்கவேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திற்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு எதிராக சந்திரிகா குமாரதுங்க குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் கூட்டணியை ஏற்படுத்தும் சிறிசேனவின் முடிவு குறித்து சுதந்திரக்கட்சிக்குள்அதிரு…

  22. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 2000 ஆம் ரூபா பெறுமதியான 200 உலர்உணவுப் பொதிகளே இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேச செயலக காணி அதிகாரி இ.ரஜீவனின் ஏற்பாட்டில் 5 ஆம் அணி ஊடக மாணவர்கள் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் பங…

  23. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை - குமார வெல்கம (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமர்று சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பாதுகாப்பு ஒருங்கினைப்பு எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தான் ஒருபோதும் எதிர்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பிரதான எதிர்கட்சி தலைவர் பதவியை குமார வெல்கமவிற்கு வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் சபாநாயகருக்கு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவ…

  24. யாழ் நீதிமன்றத்தில் உறுதியுரை January 1, 2019 யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் உட்பட உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் வெள்ளத்தம்பி முகமெட் சியான் ஆகியோர் பங்கேற்றனர். தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன…

  25. புத்தாண்டை வரவேற்கும் தலைவர்கள்…. January 1, 2019 வெற்றி தோல்விகளையும், குறைகளையும், மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணம்…. கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன்மூலம் புத்தம்புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச்செல்லக்கூடிய, வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியே இன்று மலர்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்து வந்த வருடத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணமாகும் எனத் தெரிவித்துள்ள அவர் கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் வளமான எதிர்காலத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.