ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கூட்டமைப்பிலிருந்து சிலரை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்: எஸ்.பி. திஸாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ செல்லமாட்டோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தற்போது நாங…
-
- 2 replies
- 1.2k views
-
-
தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலமை வகிக்கவேண் டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை முன்வைத்துள்ளார். இருப்பினும், கூட்டமைப்பு அந்தக் கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளதுடன், தமது கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ச…
-
- 1 reply
- 759 views
-
-
November 8, 2018 “புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (07.11.18) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
மஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்?: தவராசா அரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஐபக்ஷவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் எவை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஐனநாயக முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமா…
-
- 1 reply
- 451 views
-
-
ஜனாதிபதியை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஐ.தே.க. திட்டவட்டம்! அரசியலமைப்பின் 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 14 ஆம் நாடாளுமன்றம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் நாடாளு…
-
- 1 reply
- 591 views
-
-
மத்திய வங்கி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவும் நிராகரிப்பு Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, பி.ப. 08:42 Comments - 0 மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு தண்டனை வழங்கியிருந்தது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 1.1k views
-
-
தார்மீகத் தலையீட்டுக்கு அறைகூவல் விடுக்கும் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட நாட்டின் சகல துறைகளிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வரவேண்டும் என்று இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இன்று மாலை கொழும்பு புதிய நகரமண்டபத்தில் மாதுளுவாவே சோபித தேரோ நினைவுப்பேருரையை நிகழ்த்திய பேராசிரியர் அத்தகைய தலையீட்டினால் மாத்திரமே நாட்டை இன்றைய சகதிக்குள் இருந்து மீட்டெடுக்கமுடியும் என்றும் குறிப்பிட்டார். " சகல குழுக்களினதும் ' தா…
-
- 0 replies
- 570 views
-
-
மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு சிறிலங்காவில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில், நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். சுசில் பிரேம ஜெயந்த – பொது நிர்வாக, உள்நாட்டு விவகாரங்கள், மற்றும் நீதி அமைச்சர் பந்துல குணவர்த்தன – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் இராஜாங்க அமைச்சர்கள் எஸ்.எம்.சந்திரசேன – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் வ…
-
- 5 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது. கடந்த இருபத்துநான்கு மணிநேர மழையில் பின்னர் கிளிநொச்சிக் குளங்களின் நீர் மட்டத்தின் அளவு இரணைமடுக்குளம் 26 அடி 6 அங்குலமாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம்…
-
- 0 replies
- 397 views
-
-
November 8, 2018 வடக்கில் தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஒரு குடும்பத்தினர் காணமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. பல வருடங்கள் பயன்பாடின்றி காணப்பட்ட குறித்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலும் அறிய வருகையில். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல…
-
- 0 replies
- 357 views
-
-
வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, தாம் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.வி.விக்னேஷ்வரன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட…
-
- 0 replies
- 354 views
-
-
November 8, 2018 மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா பொது நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சில வாரங்களிற்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். பொதுவேட்பாளரிற…
-
- 0 replies
- 1.7k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண காவற்துறைப் பிரிவு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தலைமையில் யாழ்ப்பாணம் காவற்துறை நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் புகையிரத கடவைபாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகின்றன இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து,நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் 5 சட்டவிரோத ரயில்வே கடவைகளை அகற்றுமாறு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர பொலிஸாருக்கு உத…
-
- 0 replies
- 1.1k views
-
-
November 8, 2018 யாழ். பருத்தித்துறை பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய குற்றசாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். பாடசாலைக்கு நேற்றைய தினம் புதன்கிழமை காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் ஊரவர்கள் சில வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது ம…
-
- 0 replies
- 271 views
-
-
அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட் பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி கடந்த திங்கட்கிழமை எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எமிலி தோர்ன்பெரி, சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா, ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த மார்க் பீல்ட…
-
- 0 replies
- 394 views
-
-
அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்? அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர். ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவும், அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், நேற்று முன்தினம் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நேற்று இவர்கள் இருவரும், இணைந்து வாராந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதன்போதே, இராஜாங்க அமைச்சராக இருக்கும் கெஹலிய ரம்புக்வெல, எப்படி அமைச்சர…
-
- 0 replies
- 392 views
-
-
புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர மைத்திரிபால சிரிசேன – மஹிந்த ராஜபக்ஷ ஆகியாரினால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் அழுத்தங்களையும் விமர்னங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எ…
-
- 0 replies
- 282 views
-
-
மஹிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது – ரணில் திடமான நம்பிக்கை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாயின் அதனை நாடாளுமன்றத்தால் மாத்திரமே செய்ய முடியும். அதுவே 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிபிடப…
-
- 1 reply
- 469 views
-
-
முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக C.I.D யில் முறைபாடு Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 11:48 Comments - 0 முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சுமத்தியே இந்த முறைபாடு இன்று செய்யப்படவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்…
-
- 0 replies
- 279 views
-
-
மைத்திரி, கோத்தா கொலைச் சதி நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை கொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, ட்ரோன் கமரா உள்ளிட்ட அதி விஷேட வசதிகளைக் கொண்ட வாகனம் ஒன்றினைப் பெற்று அதனை இரகசியமாக பயன்படுத்தியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநா…
-
- 0 replies
- 364 views
-
-
பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசாங்கம் மந்திர ஆலோசனை ! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை நீடிக்குமிடத்து பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்துவருவதாகவும் தற்போதைய பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சிகள் வெற்றிபெறாவிடின் அதனை அடுத்த தெரிவாக ஜனாதிபதி கொண்டுள்ளதாகவும் அரசாங்க மட்டத்தில் தெரியவருகின்றது. மேலும் ஜனாதிபதிக்கு எந்தவொரு விடயம் குறித்து உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்த…
-
- 0 replies
- 320 views
-
-
மைத்திரியின் தீர்மானம் நாட்டின் நன்மை கருதியது என்கிறார், பிரபு நசெபி! இலங்கை பிரதமரை மாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானதல்லவென பிரித்தானிய பிரபு பாரொன் நசெபி தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டின் நன்மை கருதியே அவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனின் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை வழக்கத்திற்கு மாறான செயலென குறிப்பிட்ட பிரபு நசெபி, ஆனால் அது அரசியலமைப்பிற்கு முரணானது அல்லவென குறிப்பிட்டார். வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் பிரித்தானியாவிலும் இடம்ப…
-
- 3 replies
- 537 views
-
-
சபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு! சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினரால் நேற்று(புதன்கிழமை) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்ற கொண்டமைக்கான காரணத்தை விளக்குமாறு முறைப்பாட்டில் உள்ளடக்கியுள்ளதாகவும் பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, சபாநாயகர், அரசியலமைப்பு, சம்பிரதாயம், ஒழுக்கம் என்பவற்றுக்கு எதிராகவும் பெரும்பான்மையான மக்களின் அபிலாஷைக்கு எதிராகவும் செயற்படுவதா…
-
- 0 replies
- 368 views
-
-
புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி! புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வாகனப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினரால் கொழும்பு – காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு இந்த வானகப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனப்பேரணி நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரை பயணிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. http://athavannews.com/புதிய-அரசாங்கத்திற்கு-எ-2/
-
- 0 replies
- 556 views
-
-
பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மூன்றரை வருடங்கள் வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணாத்துப்பூச்சிகள் என மேடையில் குறிப்பிட்டுள்ளார். மாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து அரச தரப…
-
- 0 replies
- 1.9k views
-