Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:20 PM நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், …

  2. உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர் சார்பில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிப்பு! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையாக 74 ரூபா முதல் 160 ரூபா என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்புக்கு தனித்தனியாக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகை மன்னாரில் ஆகும். அங்கு அந்த தொகை 74 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ள. அ…

  3. வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு! வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426579

  4. இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை! எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426589

  5. திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்! கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் ப…

  6. கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார் இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது மேலும் இலங்கையி…

  7. காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு March 27, 2025 10:57 am காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு…

  8. தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு! நிர்வாகத்துக்கும் குடைசல் சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை கீழிறக்கி, கறுப்புக்கொடியை ஏற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியங்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கேள்வி கேட்டு விளக்கக்கடிதம் ஒன்றும் ஆணைக்குழுவால் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆயினும் அதனை பல்கலைக…

  9. 26 Mar, 2025 | 04:00 AM யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள் இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெ…

      • Haha
    • 2 replies
    • 217 views
  10. 6 Mar, 2025 | 03:16 PM பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்ப…

      • Like
    • 2 replies
    • 217 views
  11. 26 Mar, 2025 | 04:36 PM இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26) நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால…

  12. 26 Mar, 2025 | 04:56 PM கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி படகுகளில் முதலை மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதிகளில் முதலைகள் உலாவி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எ…

      • Haha
    • 3 replies
    • 292 views
  13. 26 Mar, 2025 | 05:29 PM இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார். அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதப…

  14. பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் 69 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (25) பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என்பதுடன் அவர் கிரலோகம பிரதேசத்தில் உள்ள துறவி மடத்தில் வசித்து வந்தார். பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் பெயரில் முச்சக்கரவண்டி ஒன்றும் சாரதியும் இருந்ததாகவும், இந்த சாரதி தற்போது குறித்த பகுதியில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி ச…

    • 1 reply
    • 255 views
  15. இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடர்பான அப்டேட்! இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஞாயிற்றுக்கிழமை (23) கம்பளை, அம்புலுவாவாவிற்கு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, சீனத் தூதர் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜயரத்னவை சந்தித்தார். சீனத் தூதருடன் கலந்துரையாடிய எம்.பி. ஜெயரத்ன, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக இப்போது யதார்த்தமாகி…

  16. இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில் இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டெல்லியின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்தார். இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல. எனவே இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும். இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவில்லை என…

  17. மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த! மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அதற்காக தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் கூறினார். அரசியலில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்துள்ளதாக அரசாங்கம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறினார். இருப்பினும், பொது சேவைகளில் ஊழல் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார். https://athavannews.com/…

  18. யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம் யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் okபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெற…

  19. மார்ச் 22, 2025 அன்று, கொம்பனித்தீவு பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காக 22 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞன் அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு,காசாவில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக யாரோ ஒருவர் இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.இஸ்ரேல் ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு என இரண்டிற்காகவும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.தங்கள் சொந்தக் கருத்துக்கள் குறித்து தங்கள் கோபத்தை…

    • 0 replies
    • 195 views
  20. Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில…

  21. Published By: VISHNU 25 MAR, 2025 | 06:26 PM இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த நட்பு என்றும் தொடரும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களி…

  22. 25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்ட…

  23. 25 Mar, 2025 | 12:36 PM போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் ஸ்ர…

  24. 25 Mar, 2025 | 01:46 PM யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

      • Haha
    • 10 replies
    • 476 views
  25. 25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.