Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில். ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி காவற்துறையினர், கால நிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர். http://globaltamilnews.com/

  2. சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களை திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். http://globaltamilnews.com/

  3. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலை! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் முன்னிலையாகியுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே அவரிடம் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர்…

  4. இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோ தியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய அன்ரனி யோகேஸ்வரன் அனுஸாந்தன், 18 வயதுடைய அனுஸாந்தன் பவித்திரா ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளினை தாண்டிக்குளம…

  5. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு- வீதிச் சோதனைகளும் தீவிரம்!! பதிவேற்றிய காலம்: Oct 9, 2018 யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறி்ப்பான கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம், ஆனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை அடுத்து சந்தேகநபர்களைத் தேடும் வேட்டையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர் என்று அறியமுடிகிறது. தென்மராட்சிப் பகுதியில் நேற்று அதிகாலை வீடொன்றுக்குள் வாள்களுடன் நுழைந்த குழு, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் பெறுமத…

  6. இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு விழா October 8, 2018 யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது. பாராட்டு விழாக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். சாவகச்சேரி சிவன் கோவிலில் இருந்து விழா மண்டபம் வரை நாதஸ்வர வித்துவான் கே.எம்.பஞ்சாபிகேசனின் பேரர்களான வி.சித்…

  7. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான முடிவுகள் வெளியாகின! இலங்கையில் இந்த ஆண்டுக்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குரிய மேற்படி பரிட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதன்படி தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் https://www.ibctamil.com/srilanka/80/107128…

  8. பலாலி – தமி­ழ­கம் இடை­யே­யான விமான சேவையை ஆரம்பிப்பதில் காணப்பட்ட தொழில் நுட்பப் பிரச்­சி­னைக்குத் தீர்வு பலாலி விமான தளத்­துக்­கும், தமி­ழ­கத்­தின் சென்னை, மதுரை, திருச்சி விமான தளங்­க­ளுக்­கும் இடை­யி­லான தூரம் மிகக் குறை­வாக உள்­ளது. இத­னால் விமானங்­கள் தமது வான் பாதை­யி­லி­ருந்து பதி­யத் தொடங்­கும்­போது எந்த விமான நிலை­யக் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருக்கவேண்­டும் என்­பது தொடர்பான தொழில்­நுட்பப் பிரச்­சினை எழுந்­தது. இது தொடர்­பில் கொழும்­பில் இரு நாட்டு அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் சந்­திப்பு நடை­பெற்­றது. இலங்கை வான் எல்­லைக்­குள்­ளேயே விமாங்­கள் பதி­யத் தொடங்­கும். அதே­வேளை பலாலி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­பாக இலங்கை வான் பரப்­புக்­குள்…

  9. விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது…. October 8, 2018 ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக …

  10. தங்க நகைகளில் 143 பொதிகளை, யாழ் நீதிவான் நீதிமன்று விடுவித்து உத்தரவு… October 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை கட்டளையிட்டது. வழக்கில் சந்தேகநபர்களான 6 வங்கி உத்தியோகத்தர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களான தங்க நகைகள் பொதிகள் அவசியமில்லை என்று மன்று முடிவுக்கு வருகின்றது. அதனால் முறைப்பாட்டாளரான வங்கியால் முன்வைக்கப்பட்டுள்ள 143 தங்க நகைப் …

  11. ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்ட மா அதிபர் திணைக்களம் முயற்சிக்கிறதா? நீதவான் கேள்வி… October 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்ட மா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா? என கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனுதாரரின் வயதைக் கருத்திற்கொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் குறித்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளில் இன்று (12) திங்கட்கிழமை இடம்பெற்ற முக்கிய சாட்சியப் பதிவின் போது, 5ஆவது பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்பிற்குள் உள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து வடமராட்சி கிழக்குப் பகுதியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்த 8 நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட…

  13. ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் முதல் பிற மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் 2009இற்குப் பி…

  14. யாழ்.தெல்லிப்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த காவல்துறை பிரிவுக்குள் மாத்திரம் 15 வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மல்லாகத்தை அண்மித்த பகுதியில் காங்கேசன்துறை பிரதான வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்த இருவரை வீதியில் வாள்களுடன் நின்ற இருவர் வழிமறித்து வாளினை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் அலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு உள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேவேளை குறித்த காவ…

  15. யாழ்.கொக்குவில் பகுதிகளில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடத்த சில தினங்களாக அப்பகுதிகளில் காவல்துறை விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைளிலும் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டு குழு அட்டகாசத்தை புரிந்திருந்தன. நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கியதுடன் வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதத்தை ஏற்படுத்தினார்கள், பின்னர் தம்பி லேன் பகுதியில் உள்ள கடை ஒன்றி…

  16. விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரின் இறுதிக்கிரியைகள் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்று உயிரிழந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதிப் போரின் பின்னர் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சுயதொழில் ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த முன்னாள் போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளதுடன்,…

  17. சுமந்திரன் கொலை சதி வழக்கு: முன்னாள் போராளிகளிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்! October 4, 2018 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் இன்று (4) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த காராளசிங்கம் குலேந்திரன், ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார் மற்றும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியயோர் 2017ஆம் ஆண் பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர். ஐவருக்கும் எதிராக போதைப்…

    • 3 replies
    • 477 views
  18. "இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROBERT NICKELSBERG தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இ…

    • 40 replies
    • 5.8k views
  19. மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளமையால், சபையின் நிர்வாகத்தை ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் 10ஆம் திகதி வட மேல் மாகாணத்தினதும் எதிர்வரும் 25ஆம் திகதி வட மாகாணத்தினதும் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தென் மாகாண சபை மற்றும் மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 10 திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் நிறைடையவுள்ளதுடன், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் மாகாண சபை எல்லை நிர்ணய மீளாய்வுக் கு…

  20. அறிவித்தலைத் தொடர்ந்து வடமராட்சியிலிருந்து வெளியேறும் வெளிமாவட்ட மீனவர்கள்! வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். யாழ். மாவட்ட எல்லைப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை வெளியேறுமாறு பிரதேச செலரால் விடுக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறிவருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு அவர்கள் வெளியேறுவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக வெளிமாவட்ட மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரையில் வடமராட்சி கிழக்கில் அரச நிலங்களில் வாடிகள் அமைத்து தங்கியிருந்து கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டனர். இதனிடையே கிளிநொ…

  21. இலங்கையில் சீரற்ற காலநிலை: 7பேர் உயிரிழப்பு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளதாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த மழையான காலநிலையினால் தியவன்னா ஓயா பெருக்கெடுத்துள்ளமையால் அப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 60 இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நில்வளா, களு, கிங் கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டங்கள் கீழிறங்கி வருவதாக…

  22. நாமல் குமாரவும் நாலக டி சில்வாவும் வெளிநாடு செல்ல தடை… October 8, 2018 ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக த சில்வாவும் வெ ளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். நாலக்க டி சில்வாவும் நாமல் குமாரவும் நீதிமன்றில் முன்னிலையாகினர்… பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா, ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமனறில் முன்னிலையாகியுள்ளனர். நாலக டி …

  23. வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் பொறுப்பை சஜித்திடம் ஒப்படையுங்கள்… October 8, 2018 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர் சஜித்தை, “செயற்றிறன் மிக்க அமைச்சர்” எனப் புகழ்ந்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சஜித் போன்ற இளந்தலைவர்கள், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு கை கொடுக்க வேண்டும் எனவும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட “நாவலர் கோட்டம்” எனும் மாதிரிக்…

  24. ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? – மைத்திரி-ராஜபக்ஷ தரப்பினர் ரகசிய சந்திப்பு! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பத்தரமுல்ல இல்லத்தில் இடம்பெற்றதாகவும், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதில் பங்கேற்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தச்சந்திப்பின் போது இடைக்கால பரந்த கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் மஹிந…

  25. விடுதலைப் புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம். Report us Mohan 2 hours ago முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “சூழுலை நாம் பாதுகாப்பின் சூழல் நம்மை பாதுகாக்கும்" "மர நிழல் தரும் குளிர்ச்சி மனதிற்கு இதமானது.” போன்ற வாசகங்களை பெரிய கருங்கற்களில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் வனவள பாகுகாப்பு பிரிவினாரால் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தேக்குமரங்களை நட்டு செயற்கை காடுகளை உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில் இறுதியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.