ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று!! பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறவுள்ளது. தீர்மான வரைவுகள், கேள்விகள், குறைநிரப்பு பாதீடு என்பன இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறும் அமர்வு சம்பிரதாயபூர்வ அமர்வாகவே நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இன்றைய அமர்விலேயே, தீர்மான வரைவுகள், வாய்மூல வினாக்கள் என்பன எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் குறைநிரப்பு பாதீடும் இன்றைய அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையில், விவாதங்கள்,…
-
- 0 replies
- 340 views
-
-
கடலட்டை பிடிப்போரை- 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணிப்பு!! பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பருத்தித்துறை நீதிமன்றப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டை தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து வாடி அமைத்து தங்கியிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் வாடி அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடலட்டை பிடிப்போரை வெளியேறுமாறு…
-
- 0 replies
- 236 views
-
-
இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு October 4, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர்களிற்குச் சொந்தமான 4 நாட்டுப்படகுகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர். குறித்த இரண்டு நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது படகின்…
-
- 0 replies
- 185 views
-
-
யாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம் October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ். காவல் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 காவல்துறையினருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய…
-
- 0 replies
- 153 views
-
-
சுற்றுலாத்துறை பற்றிய முழுமையான அறிவும் புரிந்துணர்வும் எம்மிடையே இன்னும் உருவாகவில்லை : October 4, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேசசபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரைப்பூங்கா சுற்றுலா மையத்தை நேற்று புதன் கிழமை (3) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்த …
-
- 0 replies
- 277 views
-
-
பண்டத்தரிப்பு சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு… October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ளது. குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 14 ஆம் திகதியளவில் அனுராதபுரம் சிறைச்சாலையில் எட்டு அரசியல் கைதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம…
-
- 0 replies
- 225 views
-
-
மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், ‘மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும், போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க முடியும்’ எனவும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு கேள்வி…
-
- 0 replies
- 355 views
-
-
கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதேவளை மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வெற்றிடத்திற்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்விட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் தெரியவருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக…
-
- 1 reply
- 678 views
-
-
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் : October 2, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி எல் வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் சும…
-
- 2 replies
- 779 views
-
-
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் October 3, 2018 முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் காணியில் வேலையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் ஒன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற சம்பவத்தில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதான அரியராசா ஜெகன் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/98173/
-
- 0 replies
- 663 views
-
-
‘சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் தன்னை உண்மையிலேயே கொல்ல வந்தார்களென சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக முன்னர் கூறப்பட்டதெனத் தெரிவித்த அவர், ஆனால் இன்றைக்கு சமாதானமும் நல்லெண்ணமும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகின்ற நிலையில் இனியும் அந்தச் சட்டம் தேவையற்றதெனவும் ஆகவே,…
-
- 1 reply
- 342 views
-
-
இலங்கையர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் இலங்கையர்களில் நான்கு பேருக்கு ஒருவர், உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் படி, 25 தொடக்கம், 28 வீதம் வரையான இலங்கையர்கள், உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மருந்தியல் திணைக்களத்தின் மூத்த பேராசிரியரும், தேசிய மருந்துகள், ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவருமான, பேராசிரியர் அசித டி சில்வா இந்த தகவலை வெளியிட்டார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “16 தொடக்கம் 18 வீதம் வரையான இலங்கையர்கள் நீரிழிவு நோயி…
-
- 1 reply
- 254 views
-
-
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 1.3k views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஒரு குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் போதும் மேலும் பல குற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவசியமான நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையினால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காவல்துறை மா அதிபர் கோமாளித்தனமாகச் செயற்படுகிறார். உயர் காவல்துறை அதிகாரிக…
-
- 0 replies
- 373 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது வழக்குகள் முடிவடைந்தால் புனர்வாழ்வு; பின் விடுதலை 55 பேரின் விடுதலை ஜனாதிபதியின் கையில் ஜனாதிபதிக்குக் கூட்டமைப்பு அழுத்தம் வழங்கும் அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வெவ்வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, அது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். இதன் மூலமாக, அரசியல்…
-
- 1 reply
- 409 views
-
-
அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காளி கோயில் திருவிழாவுக்குச் செல்வதாலா சந்திப்புக்குச் செல்லவில்லை. அரசியல் கைதிகள் விவகாரம் காளிகோயில் திருவிழா போன்றது அல்லை. அனைத்துத் தரப்பினரும் இணைந்…
-
- 0 replies
- 353 views
-
-
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. துசாராபீரிஸ் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் மிகநெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என கடந்த செப்டெம்பர் 28 அன்று நாமல்பெரேரா வெளிப்படுத்திய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன எனப் காவற்துறைத் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. “பிரபாகரன்” என்ற திரைப்படத்தை 2008 இல் இயக்கிய பீரிஸ் இராணுவத்தினருடன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவுகளைப் பேணினார். இந்த உண்மையை அவரே பலதடவைகள் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இந்தத் திரைப்படம் ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் தரப்புகளின் உயர் அதிகாரிகளால் கொழும்பிலுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வைத்துப் பார்வைய…
-
- 0 replies
- 371 views
-
-
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் 9ம் திகதி காலை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கின் இரண்டாவது தவணை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அடுத்த விசாரணை டிசம்பர் மாத…
-
- 0 replies
- 291 views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால மீதான கொலை சதி முயற்சி குறித்து ஜனபரிபதிக்கே பல விடயங்கள் தெரிந்திருக்கும் எனவும் குறிப்பி;ட்டுள்ளார் குறித்த சந்திப்பில் காவல்துறைமா அதிபர் விவகாரம்,ஜனாதிபதி கொலை சதி குறித்து அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் …
-
- 0 replies
- 176 views
-
-
“மைத்திரியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும் – ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்க அனுமதியோம்” October 3, 2018 இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தனக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களை…
-
- 1 reply
- 519 views
-
-
பொல்கொல்ல பேருந்து குண்டு வெடிப்பு – 4 முன்னாள் புலிகளுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கி.தவசீலன்Oct 03, 2018 | 2:38 by in செய்திகள் பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புச் சதியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 346 views
-
-
விக்னேஸ்வரனுக்கு தீர்வையற்ற வாகனம் – அமைச்சரவையால் நிராகரிப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென அறியமுடிகிறது. ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், அதை ஏற்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்திருந்தார். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகை போன்றே, வடமாகாண முதலமைச்சருக்கும் வாகன சலுகை வழங்கப்…
-
- 0 replies
- 372 views
-
-
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(1) 77 ஆவது தடவையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது. -தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து. http://globaltamilnews.com/
-
- 4 replies
- 927 views
-
-
தலவாக்கலையில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததனால் 300 குடும்பங்கள் இடப்பெயர்வு October 3, 2018 தலவாக்கலை காவல்துறைப் பிரிவுகுட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கன மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக மலைப்பகுதியின் அடிவாரத்தில் வசித்த சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், பாடசாலை ஒன்றிலும்…
-
- 0 replies
- 488 views
-
-
ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை… October 3, 2018 வடக்கில் செயற்படும் ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவற்துறையினர் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளை…
-
- 0 replies
- 266 views
-