Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உறுதி நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்படுமென்ற வாக்குறுதியை, ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு வழங்கியுள்ளனர் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சட்டச்சிக்கல்கள், வழக்குகளில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்ததாக, சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்க் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் தாமத்தை ஏற்றுக்க…

  2. எஸ்.பியின், உரை குறித்த நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும்… வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற எவரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு உண்டெனத் தெரிவித்த, அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் உரை குறித்த நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்த…

  3. ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் மீது தாக்குதல் முயற்சி…. கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்க முற்பட்டார் என கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த முருகையா தமிழ்செல்வன் எனும் சுயாதீன ஊடகவியலாளர் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து உள்ளார். பின்னர் வீட்டில் இருந்தவர்களையும் ஊடகவியலாளரையும் அச்சுறுத்தி ச…

  4. சட்டசிக்கல்களை தீர்த்தபின் மாகாண சபை தேர்தல்களை நடத்த பிரதமர் பணிப்பு சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்த பின் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண…

  5. யாழ்ப்பாணப் பல்கலையில்- பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு!! யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்­தின் ஏற்­பாட்­டில் இரு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை நடாத்­தப்­ப­டும் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக பன்­னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்­வ­ரும் 27ஆம் மற்­றும் 28ஆம் திக­தி­க­ளில் மருத்­துவ பீடத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. ‘பாது­காப்­பான எதிர்­கா­லத்தை நோக்கி’ என்ற தொனிப்­பொ­ரு­ளில் இந்த வரு­டத்­துக்­கான மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. நிகழ்­வில் ஆஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, ஜப்­பான், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளைச் சேர்ந்த 7 வல்­லு­நர்­கள் கலந்­து­கொள்ள உள்­ள­னர். சமூக விஞ்­ஞா­னம், முக­ாமைத்­து­வம், உல்­லா­சத்­துறை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­கள் தொடர்­பில் அ…

  6. தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகரைசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இவ்விடயம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ‘செப்டம்பர் 26ம் நாள் 1987ம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சா ரீதியான தனது போராட்டத்தில் தனது 23ம் வயதில் இன்னுயிரை நீ…

  7. அரசியல் கைதிகள் – இராணுவத்தின் பொது மன்னிப்பு விடையம்: ஐ.நாவிற்கு தெரியப்படுத்தினோம் என்கின்றார் சுமந்திரன்! அரசியல் கைதிகளையும், போர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதை ஏற்க முடியாது என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான் நிலைபாட்டை ஐ.நா பொதுச் செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், “போர் குற்றம் இழைத்த இராணுவத்தினர், அதாவது சிலர் செய்த பாரிய சர்வதே…

  8. எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வியாழேந்திரன் ‘எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே எமது உரிமை சார்ந்த செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வில் …

  9. மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகர…

  10. கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை வைக்க முயற்சி! தடுத்து நிறுத்த மாணவர்கள் கோரிக்கை – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- அறிவியல் நகரில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை மற்றும் அரச மரம் நடும் முயற்சி நாளை அதிகாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வளாகத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் அரச மரம் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறித்த புத்தர் சிலையை அகற்றி அனைத்து மத தலங்களுக்காக ஒதுக்கபட்ட பகுதியில் வைப்பதாக வளாக நிர்வாகத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த ந…

  11. இலங்கை: போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSENA VIDANAGAMA Image captionகோப்புப்படம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவே…

  12. சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர். இப் பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவரும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்…

  13. மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர் இராஜாங்கஅமைச்சர் ஹஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு எதிராகமட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர்உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார். இந்தப்போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கெவிலியாமடுவில்ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். மட்டக்களப்புபுல்லுமலையில் இராஜாங்க அமைச்சர் ஹஸ்புல்லாவினால் குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனால்புல்லுமலை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில்விசேட …

  14. திலீபனையும், அவர் நினைவையும், தடைசெய்யுமாறு, நீதிமன்றில் காவற்துறை விண்ணப்பம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபனை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிவான் மன்றில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விண்ணப்பம் செய்துள்ளனர். அத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலியை மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீ…

  15. இயற்கைப் பூங்கா அமைக்க எம்மிடம் அனுமதி கோரவில்லை ; நீர்பாசனத் திணைக்களம் கிளிநொச்சி இயற்கைப் பூங்காவை அமைப்பதற்கு நீர்பாசனத் திணைகளத்திடம் அனுமதி கோரவோ வழங்கவோ இல்லை என குறித்த நீர்பாசனத் திணைகளத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி குளத்திற்கு முன்பக்கமாக மருதநகர் பகுதியில் (நீர்பாசனத் திணைகளத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் ) வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட ரூபா 3287299.00 ரூபா செலவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் கரைச்சி பிரதேச சபையின் மேற்ப்பார்வையில் அமைக்கப்பட்ட இயற்கைப் பூங்காவிற்கு நீர்பாசனத் திணைகளத்திடம் அனுமதிக்கோரிப் பெறப்படவில்லை என கிளிநொச்சி நீர்ப்பாசனப் பணிப்பாளரினால் தெ…

  16. தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும் – வியாழேந்திரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வதற்கு அருகதையற்றவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தி…

  17. கொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பல்வேறு நம்பகமான வழிகளின் ஊடாக சரிபார்த்துக் கொண்டதில், இந்த தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன். எனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாக கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்வதாக இணங்கிய போதிலும், அதற…

  18. முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது. இதன்போதே, உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன் மற்றும் தவராசா - அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும் அமலன் ஆகியோர் கடும் எதிர்பை …

  19. நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண…

    • 8 replies
    • 1.3k views
  20. ஜனாதிபதி கொலை சதி குறித்த உரையாடல்! வெளியாகும் பல அதிர்ச்சித் தகவல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் கடந்த நாட்களில் நாட்டில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன. இந்நிலையில், நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் குறித்த உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த உரையாடல் பின்வருமாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர்: எனக்கு மேலதிக வேலைகள் அதிகம், 14 நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். நான் இறுகிப் போயுள்ளேன். நாமல் குமார: நான் பயந்து போனேன். சேர் போனையும் ஓப் செய்துவிட்டிருந்தீர்…

  21. அரசியல் கைதிகளுக்காக- வவுனியாவில் திரண்டுள்ள மக்கள்!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் தற்போது மாபெரும் கனவீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகிறது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. https://newuthayan.com/story/11/அரசியல்-கைதிகளுக்காக-வவுனியாவில்-திரண்டுள்ள-மக்கள்.html

  22. எனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது லியோ நிரோஷ தர்ஷன் - மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார் நான் சர்­வா­தி­கா­ரி தான் - வடக்கில் தேர்­தலை நடத்­தினேன் பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம் தீட்­டு­வதில் தற்­போ­தைய அர­சாங்கம் சிறந்த அனு­ப­வ­சா­லி­யாக விளங்­கு­கின்­றது. வேறு எந்­த­வொரு உலக நாடோ எம்மை வழி­ந­டத்த முடி­யாது. எனவே எனது அர­சியல் நட­வ­டிக்­கை­களை இந்­தி­யா­விற்கோ அல்­லது வேறு எந்­த­வொரு நாட்­டிற்கோ தீர்மா­னிக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­…

  23. 10 ஆவது நாளாக தீர்வின்றித் தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்! அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் போராட்டம் இன்று (ஞாயிறுக்கிழமை) 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட பின்னர் மீண்டும் அனுராதபுர சிறைக்கு …

  24. அரசியலுக்கு பொருத்தமற்றவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக…

  25. ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 21ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு வரைவுக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில், அரசியலமைப்பு வரைவின் சிங்கள மொழிப் பிரதி சமர்ப்பிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவுக்கு அதன் தமிழ் மொழிப் பிரதியும் கிடைத்துள்ளது. இது வரும் ஒக்ரோபர் 11ஆம் நாள் வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படும். வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில், அதன் உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.