ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை - அனுரகுமார (ஆர்.யசி) திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார். இந்த அரசாங்கத்தில் தரகர்களின் அமைச்சரவையாக உள்ளமையாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் எனவும் அவர் சாடினார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளைகள் 27/2 கீழ் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திச்சாநாயக்க, பெற்றோலியவள அமைச்சர் அர்ஜுன ரணத்துங்கவிடம் எழுப்ப…
-
- 1 reply
- 390 views
-
-
காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது. வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது. இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும். இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற…
-
- 1 reply
- 532 views
-
-
காஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தமது பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், நாங்கள் 1965 இல் இருந்து பூர்வீகமாக இக் காணில் வாழ்ந்து வந்த நிலையில், யுத்தம் காரணமாக இப் பகுதியிலிருந்து வெளியேறினோம். இக் காணிகளில் மீண்டும் குடியேற நாங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அச்சம் காரணமாக குடியேற முடியாது போனது. இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கட…
-
- 3 replies
- 503 views
-
-
புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறாது - சம்பந்தன் ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமாவிடம் தெரிவித்தார். தனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவ…
-
- 0 replies
- 3k views
-
-
சர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்தார். அவரை கொன்றுவிட்டனர் என்று கடந்தவாரம் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தார். இராணுவத்தினரை யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு ஐக்கி…
-
- 0 replies
- 764 views
-
-
யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம் யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது. தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. …
-
- 19 replies
- 2.7k views
-
-
“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்” “தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள் எனக்கு தந்தால் அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்டுவேன்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (20-09-2018) கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்த…
-
- 3 replies
- 1k views
-
-
இன்னமும் உங்களை நம்புகிறேன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் (நமது நிருபர்) ஜனாதிபதிக்கு விக்கினேஸ்வரன் கடிதம் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் உண்டுபண்ண நல்லாட்சி அரசாங்கம் மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று கூறப்படும் கூற்று, மேற்படி அரசியல் சிறைக்கைதிகள் சம்பந்தமாக நீங்கள் காட்டும் தாமதத்தின் நிமித்தம் வெறும் கண்துடைப்போ…
-
- 1 reply
- 390 views
-
-
மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர். அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்…
-
- 3 replies
- 718 views
-
-
யாழ். மாவட்ட நா.உறுப்பினருக்கு எதிராக மீண்டும் சுவரொட்டிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக வவுனியா நகர் பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளில் “உச்ச துரோகத்தின் குறியீடு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” எனும் தலைப்பில் சும…
-
- 2 replies
- 1.9k views
-
-
பளைக் காற்றாலை நிறுவனத்தின் – சி.எஸ்.ஆர். நிதி விடுவிப்பு தாமதம்!! பளையில் அமைந்துள்ள காற்றாலை ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங் களான ஜூல்பவர் மற்றும் பீற்றா பவர், வணிக நிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கான நிதியை (சி.எஸ்.ஆர்) உரிய காலத்தில் வழங்கவில்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மாற்றப்பட்ட பின்னர் மேற்படி நிறுவனம் என்னுடன் எந்தச் சந்திப்பையும் மேற்…
-
- 0 replies
- 393 views
-
-
உயிரிழப்புகள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூற வேண்டும் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து (நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்) "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப் புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற் றும் என நம்புகிறோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும்" என ஐ.நா. செயலாளர் நாயகத்தினன் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல் பர்ரா …
-
- 1 reply
- 464 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி நாளை நியூயோர்க் செல்கிறார். எதிர்வரும் 25ஆம் திகதி மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இதன் போது, படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது, பக்க நிகழ்வாக, சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். மேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் …
-
- 0 replies
- 496 views
-
-
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக- யாழ்ப்பாணத்தில் போராட்டம்!! குறுகியகால மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்று காலை 10 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நகர பேருந்து நிலையத்துக்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் போராட…
-
- 1 reply
- 619 views
-
-
தனிநாட்டு கோரிக்கையால் இராணுவ மயவாக்கம் – கோட்டை வேண்டும் – அரசியல் நோக்கம் இல்லை 2880.08 ஏக்கரே எம்மிடம் உள்ளது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது.. யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவ…
-
- 2 replies
- 466 views
-
-
அரசியல் கைதிகள் விடுவிப்பு: மைத்திரிபால – சம்பந்தன் பேச்சு!! உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பின் அவசியம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அரச தலைவர் மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பாக அரச தலைவருக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் கோமரங்கடவல பிரதேசத்…
-
- 0 replies
- 265 views
-
-
மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்கள…
-
- 2 replies
- 1.7k views
-
-
“பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்தியடைந்தமையால் பரீட்சை” இரத்து (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் குறித்த பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிமல் ரத்நாயக்க எம்.பியும் சுமந்திரன் எம்.பியும் பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில்…
-
- 1 reply
- 813 views
-
-
ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை! ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார். மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருக்கலாம் – சம்பந்தன் 30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “இந்த பகுதி மக்கள் மிகவும் வறிய மக்கள். அவர்களின் நிலைமை மாற்றியமைக்க வேண்டும். நாம் 30 வருடம் யுத்தம் செய்தோம். அதற்காக அநேகமான பணத்தையும் செலவு செய்தோம். அந்த பணத்தை யுத்ததத்திற்கு செலவழிக்காமல் மக்களிற்காக …
-
- 1 reply
- 344 views
-
-
ஆரையம்பதியில் ஆலயத்தை அகற்றும் முயற்சி?- விக்கிரகங்கள் உடைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வழிபாட்டிற்காக சென்றவர்களே இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். எனவே, நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு இந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய…
-
- 2 replies
- 1.6k views
-
-
இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல்ட் கேர்ணல் கைது! இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல்ட் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடாகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இராணுவ-புலனாய்வு-அதிகாரி/
-
- 0 replies
- 414 views
-
-
-
டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் எனக் கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈ.பி.டி.பி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு விச ஜந்து என்றும் அவரது செயற்பாடுகள் தமிழினத்தை அழிவிற்கு இட்டுச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி Published by Daya on 2018-09-20 14:37:05 ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் , நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல…
-
- 0 replies
- 574 views
-