ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்த கலந்துரைய…
-
- 1 reply
- 803 views
-
-
காணாமல்போனோர் தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் உலகளாவிய ரீதியில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோர் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “முன்னைய ஆணைக்குழுவின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆசியாவில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலான காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலை நோக்கும்போது இலங்கை முதலிடத்த…
-
- 1 reply
- 440 views
-
-
குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை பெற்றுக்கொடுத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கையின் அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கயவர்களுக்கே, தமது அலுவலக ஊழியர், உதவியாளர்கள், செயலாளர்களை நியமிப்பது அரசியல் பாரம்பரியமாக தொடர்கின்ற விடயமாக இருந்து வருகிறது. எனினும் இந்த நடைமுறையை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே (JVP) துணிவுடன் தகர்த்திருந்தது. அந்தக் கட்சியின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசியல் உறுப்பினர்களின் சலுகைகள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவும், கட்சியின் மத்திய குழு தீர்மானிக்…
-
- 0 replies
- 590 views
-
-
ஜப்பானிய விமானி அழித்த எண்ணெத் தாங்கியுடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த் தாங்கியை, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்று முன்தினம் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர், சீனக் குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளையும் பார்வையிட்டார். சிறிலங்கா பிரித்தானியர் ஆட்சியில் இருந்த போது, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த ஜப்பானியப் போர் விமானங்கள், திருகோணமலை துறைமுகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருந்தன. …
-
- 0 replies
- 427 views
-
-
கடனைப் பெறுமாறு சிறிலங்காவை சீனா நிர்ப்பந்திக்கவில்லை சீனாவிடம் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மேற்குலக ஊடகங்கள், மற்றும் அதிகாரிகள், சீனா கடன் பொறியைப் பயன்படுத்தி, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை வசப்படுத்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகப் பாதைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கரு…
-
- 0 replies
- 260 views
-
-
வடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பிராந்திய எரிபொருள் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றும் இலக்குடன் இந்தியா செயற்படுகிறது. முன்னர் போர் நடந்த பகுதிகளில் ஏற்கனவே முக்கியமான வீடமைப்புத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்திருந்தது. இந்த நிலையிலேயே, முன்னர் போர் நடந்த பகுதிகளில் புதிதாக உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், சீனா முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள உட்கட்டமைப்புத் திட்டங்கள் என்ன என்ற தகவல் எதையும் …
-
- 0 replies
- 371 views
-
-
அலுவலக முற்றத்தை கூட்டினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் - கிராம அலுவலர் அலுவலகத்தின் முற்றத்தை கூட்டினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி திருநகர் தெற்கு கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராம அலுவலரிடம் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துக்கொணடு குழந்தையுடன் சென்றுள்ளார். கடமையில் இருந்த கிராம அலுவலா் குறித்த பெண்னிடம் தனது அலுவலக முற்றத்தை கூட்டுமாறும் அ…
-
- 2 replies
- 835 views
-
-
பெண்களுக்கு சேட்டை விட்டதால் இரு இளைஞர்களுக்கு நையப்புடைப்பு கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுந்தினம் புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது. கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்க…
-
- 0 replies
- 561 views
-
-
கூட்டமைப்பு ஒரு கூழ்முட்டை அடைகாப்பது முட்டாள்த்தனமானது ஐங்கரநேசன் சாடல் பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்ச்சி கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றே தமிழ்மக்கள் நம்பியிருந்தார்கள். இதனாலேயே பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியில் மைத்திரி…
-
- 0 replies
- 405 views
-
-
படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்ற வாள் வெட்டு கும்பல் ; யாழில் பயங்கரம் தாவடிப் பகுதியில் நேற்றைய தினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார். தாவடி , சுதுமலை , இணுவில் பகுதிகளில் நேற்று மாலை 5 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 12 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் 3 வீடுகளில் புகுந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போதே மேற்படி சம்பவமும் இடம்பெற்றது. சுதுமலைப் பகுதியில் ஓர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் தாவடியில் உள்ள ஓர் வீட்டின் கேற்றை வாளால் வெட்டி சேதப்படுத்தியவாறு உள்நுழைந்த…
-
- 2 replies
- 631 views
-
-
வெடுக்குநாறி மலை விவகாரம் : இந்து அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் விசனம் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் அந்தணர் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட இந்து சமய அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தை தமிழ் மக்கள் குறிப்பாக இந்து மக்கள் கடந்த நான்கு தலைமை முறையாக வழிபட்டு வந்தனர். குறித்த நிலையில் தொல்பொருட் திணைக்களம் மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய நிர்மாண பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம்…
-
- 3 replies
- 951 views
-
-
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மீண்டும் விடுதலை புலிகள் தோன்றுவர்; விஜித ஹேரத் (இராஜதுரை ஹஷான்) யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல . பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவில் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…
-
- 1 reply
- 347 views
-
-
விடுதலைப்போராளிகள் சாதியக் குறியீடு அல்ல இனத்தின் விடுதலைக் குறியீடு- ”ஜனநாயக போராளிகள் கட்சி” விக்கி மேல் ஆவேச பாய்ச்சல்! அரசுக்குப் புலனாய்வு பணி செய்வதற்கு முதலமைச்சர் போன்ற அரசியல்வாதிகளே போதுமானவர்களாக இருக்கும் போது விடுதலைக்காக போராடிய போராளிகள் தேவையில்லை என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து அக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாயகவிடுதலைக்காக தமது உள்ளம் உயிர் உடல் உடமை அனைத்தையும் ஈய்ந்து போராடியவர்…
-
- 1 reply
- 435 views
-
-
முதலமைச்சர் விக்கி வெளியேறி விட்டார் ; கூட்டமைப்பு சபையில் பதவியிலிருப்பதற்கு தகுதியற்றவர் - ப.சத்தியலிங்கம் கூட்டமைப்பில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்னேரே முதலமைச்சர் வெளியேறிவிட்டார் அவர் கூட்டமைப்பு சபை பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையிலிருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே முதலமைச்சர் வெளியேறிவிட்டார். கூட்டமைப்பினுடைய மாகாண சபை அறுதிப்பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்…
-
- 3 replies
- 685 views
-
-
தையிட்டியில் விகாரைக்கு அனுமதியின்றி அடிக்கல் வடக்கு ஆளுநர் நட்டு வைத்தார் தையிட்டியில் 20 பரப்பில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் நேற்று நடப்பட்டது. விகாரை அமைப்பதற்காக ஆவணங்கள் வலி.வடக்கு பிரதேச சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை அனுமதி வழங்காத நிலையிலும் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. தையிட்டியில் போருக்கு முன்னர், பிக்குகளுக்குச் சொந்தமான காணி இருந்தது. போர் நடவடிக்கைகளால் அந்தக் காணியிலிருந்து அவர்கள் வெளியேறியிருந்தார்கள். தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதும் அந்தக் காணிக்க…
-
- 8 replies
- 1k views
-
-
55ஆவது நாளாக தொடரும் மன்னார் அகழ்வுப் பணிகள்: 90 மனித எச்சங்கள் மீட்பு மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 90 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகளின்போது அப்பகுதியில் மனித எச்சங்கள் சில கண்டுப்பிடிக்கப்பட்டன. அதற்கமைய நீதிமன்ற உத்தரவிற்கமைய மே மாதம் 28ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்று 55ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் கூறினார். அகழ்வு பணிகள் இ…
-
- 1 reply
- 400 views
-
-
கிளிநொச்சியில் புதிய சந்தைக் கட்டடம் அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி மட்டுமே கிடைத்துள்ளது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தை தொகுதி அமைப்பதற்கு முதற்கட்டமாக இருநூறு மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். ஆனால் சந்தை தொகுதி அமைப்பதற்கு இதுவரை எவ்வித நிதியும் விடுவிக்கப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது 767 மில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தை மாடிக் கட்டட தொகுதி அமைப்பதற்கு, நகர அபிவிருத்தி அதிகார ச…
-
- 0 replies
- 304 views
-
-
காங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்திய மீனவர்கள், எம்மை அவதானித்தவுடன் கடலில் குதித்து றெஜிபோர்மின் உதவியுடன் நீரில் மூழ்கி தப்பிக்க முயன்றனர் என கடற்படையினர் தெரிவித்தனர். காங்கேசன்துறை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு 10.20 மணியளவில் இவ்வாறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மே…
-
- 0 replies
- 211 views
-
-
யாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது! வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார். சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் பதிவுசெய்த முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும், குறித்த வட்டுக்கோட்ட…
-
- 0 replies
- 486 views
-
-
சிங்கள மக்கள் குடியேற்றம் தொடர்பில் சத்தியமாக எதுவும் தெரியாது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நானும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தனும் ஜனாதிபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரை …
-
- 1 reply
- 632 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவனின் உன்னத பணி மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர் கள ஆய்வின் நிமித்தம் கீரி கடற்கரைக்கு நேற்று (புதன்கிழமை) சென்றுள்ளார். அப்போது, கரையொதுங்கியிருந்த பெருமளவான கழிவுப்பொருட்களை சேரித்து ஒரு இடத்தில் குவித்து வைத்ததோடு, மன்னா…
-
- 3 replies
- 581 views
-
-
விஜயகலாவுக்கு ஆதரவாக பேசிய மாவை எம்.பி. (எம்.நியூட்டன்) மக்களின் கைதட்டல்களினால் அதிர்ந்தது நிகழ்வு மயிலிட்டி துறைமுக புனரமைப்பின் அடிக் கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது நிகழ்வில் மாவை சேனாதிராஜா எம்.பி. விஜயகலாவுக்கு ஆதரவாகப் பேசியதனால் மக்களின் கைதட்டல்களால் நிகழ்வு அதிர்ந்தது. இந்நிகழ்வில் மாவைசேனாதிராசா உரையாற்றும் போது "ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பானது என்று ஒரு பழமொழியுள்ளது. மேலும் கண்ணீர் போரைவிட பலம் வாய்ந்தது இதனை தப்பாக மொழிபெயர்த்து தென்னிலங்கைக்கு சொல்லவேண்டாம் நாங்கள் துப்ப…
-
- 2 replies
- 543 views
-
-
தொடர்ந்தும் ஏமாற்றாமல்- தமிழ் மக்களின் காணிகளை விடுவியுங்கள்- மைத்திரி முன் மாவை!! தற்போதுள்ள கூட்டரசு எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டும். தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதன்மை விருந்தினராக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார். நிகழ்வில் உரையாற்றிய மாவை எம்.பி., மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதியில் உள்ள காணிகள் இந்த வருடத்துக்குள்…
-
- 1 reply
- 390 views
-
-
ஆவாக்குழுவுக்கு பகிரங்க எச்சரிக்கை- வாள்களைக் காட்டி துண்டு அறிக்கைகள் விநியோகித்த இளைஞர்கள்!! யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவாக் குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகள் சற்றுமுன்னர் விநியோகிக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளிலில் வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் இந்த துண்டு அறிக்கைகளை விநியோகித்தனர். வீதியில் பயணித்தவர்களுக்கு வாள்களைக் காட்டி பயமுறுத்தியும் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. வாள்வெட்டு வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் எனக் குறிப்பிட்டு இந்தத் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/16/ஆவாக்குழுவுக்கு-பகிரங்க-எச்…
-
- 1 reply
- 483 views
-
-
வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில் சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. புகையிலை இல்லா நாட்டை உருவாக்கும் இலக்கை அடையும் நோக்கில், 100இற்கும் அதிகமான நகரங்களில் உள்ள விற்பனையாளர்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளனர். சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட தீவிர பரப்புரையை அடுத்து, வணிக நிலையங்கள் மற்றும் வணிகர்கள் வெண்சுருட்டு விற்பனையை நிறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 22 நகரங்களிலும், மாத்தறையில் 17 நகரங்களிலும், குருநாகலவில் 16 நகரங்க…
-
- 0 replies
- 305 views
-