ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில் முட்டி மோதும் மத்திய – மாகாண அரசுகள் குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில், சிறிலங்காவின் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குடும்ப நல அதிகாரிகளுக்காக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அண்மையில் புதிய சீருடையை அறிமுகம் செய்திருந்தது. இந்தப் புதிய சீருடை தொடர்பாக அனைத்து குடும்ப நல அதிகாரிகளுக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகள் புதிய சீருடையை அணியக் கூடாது என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்…
-
- 0 replies
- 257 views
-
-
கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட…
-
- 1 reply
- 271 views
-
-
இராணுவம் அச்சுறுத்தல்!- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம் இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், அச்சத்தில் வேலையை கைவிட்டு திரும்பியவுடன், தாம் அங்கு பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்…
-
- 4 replies
- 1.1k views
-
-
செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு இன்று முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான இலங்கை வான்படையின் குண்டுத்தக்குத லில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத் தாத் தாக்குதலை நடத்தியது. 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம் – புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைக…
-
- 11 replies
- 2.2k views
-
-
சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளியுள்ளது சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார் புதிய அரசமைப்பு தமிழரின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்காது என்று சுமந்திரன் கூறியிருப்பது, தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளிவிட்டுள்ளதற்கு ஒப்பானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரே மச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மையக் குழுக்கூட்டம் வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்து மண்டபத்துக்கு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 307 views
-
-
யாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம் யாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழக்கத்திற்கு மாறாக திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததில் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மாலை 6 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மழைப் பொழிவும் கனமாக காணப்பட்டுள்ளது. காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப் பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளது. அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியில் கடும் காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்…
-
- 0 replies
- 543 views
-
-
மீனவர்களிடையிலான முரண்பாடு நல்லிணக்கத்திற்கு பெரும் பாதகம் (நமது நிருபர்) அமைச்சரவையில் மனோ எடுத்துரைப்பு; தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி முல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும்போது சகல தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
-
- 0 replies
- 335 views
-
-
முதலமைச்சர் கோரினால் இராஜினாமா செய்ய தயார் வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜானாமா செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார். தற்கால நிலமைகள் தொடர்பில் இன்று (14) மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊ…
-
- 0 replies
- 420 views
-
-
சந்திரகாந்தனை குறை கூற எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை; காந்தராஜா கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மேற்கொண்ட அபிவிருத்தியை குறை கூற மட்டக்களப்பில் எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் 7 வது சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். தனது உரையில் மேலும் தெரிவி்கையில் அண்மைக்காலமாக எமது கட்சியைப் பற்றியும் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைப் பற்றியும் சில தரப்பினர் விமர்சித்து…
-
- 0 replies
- 333 views
-
-
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 1 மில்லியன் பவுண்ட்களை வழங்குகிறது பிரித்தானியா வடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான, வீதிகள் புனரமைப்பு, கிணறுகளை அமைப்பது, சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கு இந்த கொடை பயன்படுத்தப்படும். அத்துடன், மீளக்குடியேறிய குடும்பங்களின் வாழ்வாதார உதவிக்கான, சிறிய வணிக முகாமைத்துவ பயிற்சி மற்றும் விவசாய, மீன்பிடி கருவிகளை வழங்குவதற்கும் இந்தக் கொடை பயன்படும். சிறிலங்…
-
- 0 replies
- 211 views
-
-
சீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள் சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களில் செல்வாக்கைக் கட்டியெழுப்பும் வகையில், பாரியளவில் வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனா அச்சிடுகிறது. சீனாவில் உள்ள நாணயத் தாள் அச்சிடும் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலம் வரை சீனா வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடவில்லை என்று சீனாவின் வங்கி நாணயத் தாள்கள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவரான லியூ கியூஷேங், தெரிவித்துள்ளார். அணை மற்றும் பாதை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நேபாள நாணயத் தாள்களை அ…
-
- 1 reply
- 191 views
-
-
ரணில் கிளிநொச்சி தும்பினி விகாரையில் வழிபட்டார் நாளை மடு பயணம்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு சென்றுள்ளார் இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டார். இன்று இரவு கிளிநொச்சியில் தங்கியிருக்கும் பிரதமர் நாளை மன்னார் மடுவுக்கு பயனிக்க உள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/91465/
-
- 1 reply
- 398 views
-
-
யாழ்ப்பாண மாநகரில் ஐ.பி.சி தமிழின் அறப்பணி! தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழால் மாதந்தோறும் முன்னெடுக்கப்படும் சமூக சேவைச் செயற்றிட்டமான உயிர்ச்சுவடு அறப்பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்ச்சுவடின் இம்மாதத்திற்கான அறப்பணியாக யாழ் மாநகரத்தைச் சுத்தமாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரான கந்தையா பாஸ்கரன் குடும்பத்தினர் உட்பட தாயக கலையகப் பணியாளர்கள், யாழ் மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பணியாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள், யாழ்ப்பாணம் ரொட்றிக் தாய்க் கழகத்தின் ஐந்து ரொட்ரக் க…
-
- 4 replies
- 859 views
-
-
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23 வயதான கிரிகேசன் காலில் வெட்டுப் பட்டும் படுகாயமடைந்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டு…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்பும்அகந்தையும் அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்.. இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூத்த கணித ஆசிரியர் திரு.சு.டு. தேவராஜா அவர்களே, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கின்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆ.மு. சிவாஜிலிங்கம் அவர்களே,வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சி. நந்தகுமார் அவர்களே, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கோப்பாய் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.சி.குணசீலன் அவர்களே,கௌரவ விருந்தினர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே! இன்றைய தினம் ஊhiவாயஅடியசய றுநடட றுiளாநசள நேவறழசம ஐஐ pடரள இங்கிலாந்து ஏற்பா…
-
- 0 replies
- 445 views
-
-
சம்பந்தன் – விக்கிக்கு இடையில் முக்கிய சந்திப்பு: கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு? தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இரு தினங்களில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காகவே இந்த சந்திப்பு எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்படாவிட்டால், தனித்து செல்வது குறித்து விக்னேஸ்வரன் ஆலோசித்து வருவதாக பல தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரு தினங்களில் நடைபெறும் இக் கூட்டத்தில், விக்னே…
-
- 0 replies
- 335 views
-
-
“இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்திற்கு என்றும் பாகிஸ்தான் ஆதரவு” பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கின்றதுடன் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றங்களினை அடைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றதென இலங்கைக்கான பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் தெரிவித்தார். இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானின் 72 ஆவது சுதந்திர தினத்தினை மிகவும் அர்ப்பணிப்புடன் கொண்டாடியது. பாகிஸ்தானிய…
-
- 1 reply
- 337 views
-
-
முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! – மீனவர்கள் ஆக்ரோசம்!! – பெரும் பதற்ற நிலைமை!! முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் பல வாடிகள், படகுகள், வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்று மிகுந்த ஆக்ரோசம் அடைந்துள்ளனர் பிரதேச மீனவர்கள். திட்டமிட்டு இந்தச் செயல் செய்யபட்டுள்ளது என்று பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர். பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதால் அருகில் உள்ள பெரும்பான்மை இன மீனவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை – சுருக்க வலைப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்று பிரதே…
-
- 7 replies
- 1.8k views
-
-
பாதுகாக்கப்படுமா வெடுக்கு நாறி மலை.? வவுனியா வடக்கு ஒலுமடு பாலமோட்டை பகுதியில் தான் இந்த மலை அமைந்துள்ளது. பரந்து விரிந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த மலையை வெடுக்கு நாறி மலை என அப்பகுதி மக்கள் அழைக்கின்றார்கள். வெடுக்கு நாறி என்ற மரம் அந்த காட்டில் அதிகமாக இருப்பதால் தான் அந்த மலை அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த மலையிலும் அதனை அண்டிய காட்டு பகுதியிலும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதாக யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறை தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறுகின்றார். இங்குள்ள மலைகளில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த பிராகிருத மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு பல பொக்கிசங்களை தாங்கியு…
-
- 4 replies
- 1.6k views
-
-
மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தமிழ்மிரரிடம் தெரிவித்தார். இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் அரச மற்றும் பொதுமக்களின், 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும ்தெரிவித்தார். …
-
- 0 replies
- 213 views
-
-
இடை நிறுத்தப்பட்டது மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணி!!! மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு 56 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தது. திங்கள் முதல் வெள்ளிக்கிழைம வரை தொடர்நது ஐந்து நாட்களும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் எதிர் வரும் 20ஆம் திகதி வரை அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டமைக்கான கா…
-
- 0 replies
- 258 views
-
-
நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2006 இல் வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
யாழ்.கடற்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்படும்: ஆனோல்ட் யாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிச்சயமாக அகற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்.பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போதே மாநகர முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “குருநகர் மட்டுமல்லாமல் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள சகல கிராமங்களிலும் சட்டத்திற்கு மாறாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பாக அந்தந்த கிராமங்களில் வாழும் நகரசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுவதில்லை. காரணம…
-
- 0 replies
- 302 views
-
-
மத்தள விமான நிலையத்தில் இந்தியா இராணுவ செயற்பாட்டில் ஈடுபட கூடாது: சீனா வலியுறுத்து மத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு இராணுவ செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது என சீனா வலியுறுத்தியுள்ளது. மத்தள விமான நிலையத்தை குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழொன்றுக்கு சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ ஜொங் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ”மத்தள விமான நிலையத்தை யாருக்கு குத்தகைக்கு வழங்குவது என்பத…
-
- 0 replies
- 247 views
-
-
வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட தனியார் பஸ் அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்…
-
- 1 reply
- 409 views
-