ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த சகலரும் நாடு திரும்ப வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) சபையில் பிரதமர் ரணில் அழைப்பு யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றோம். நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்…
-
- 22 replies
- 1.8k views
-
-
வடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்!!! வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுின் செயற்படுத்தப்படும் கூட்டுறவுக் கிராமிய வங்கியில் இடம்பெற்ற ஒரு கோடி ரூபா ஊழல் மோசடி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாகாணசபையின் நேற்றைய அமர்வில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கூட்டுறவு கிராமிய வங்கியின் சிமெந்து விற்பனையில் மோசடி இடம்பெற்றதாக பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுக்கள் மற்றும் கணக்கு குழு ஆகியன கண்டறிந்திருந்ததாகவும அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்…
-
- 0 replies
- 396 views
-
-
வவுனியாவில் விபத்தை தடுப்பதற்கான கவனயீர்ப்பு பேரணி 'விபத்தை தடுப்போம் இன்னுயிர்களை காப்போம்' எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று காலை 10.00 மணியளவில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது மணிக்கூட்டு சந்தி வழியாக பசார் வீதியூடாக பயணித்து அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள், உங்களது வேக போக்கினால் பறிபோவது எமது தலைமுறையினரே!”, வேகமாய் போவது வாகனங்கள் மட்டுமல்ல மனித உயிர்களும்தான…
-
- 0 replies
- 373 views
-
-
நாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துரைத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டகள்ஸ் தேவானந்தா 27- 2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதிலளித்த பின்னரே சுமந்திரன் இந்த விடயத்தை விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 1 reply
- 788 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். http://athavannews.com/எதிர்க்கட்சி-தலைவராக-சம்/
-
- 2 replies
- 379 views
-
-
திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர் உற்சவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது. இந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடப் பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுவந்தன. இதனிடையே நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஏ 9 வீதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து – தடுக்கக்கோரி பிரேரணை ஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதனைத் தடுக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. வடக்குமாகாணசபை அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போதே அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்த பிரேரணை முன் வைக்கப்பட்டது. ஏ9 சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புக்களும் அதிகமாகின்றன. ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டும். …
-
- 2 replies
- 481 views
-
-
கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ; புறக்கோட்டையில் பதற்றம் புறக்கோட்டையில் இருந்து வெளிச் செல்லும் அனைத்து பஸ் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. ரயில் சேவை ஊழியர்களின் தற்காலிக பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளிப் பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகளை ரயில் சேவை ஊழியர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பயணிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அத்தோடு ஒல்கொட் மாவத்தை மற்றும் முதாலம் குறுத்தெரு பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த போராட்டம் காரணமாக புறக்கோட்டை…
-
- 3 replies
- 1.7k views
-
-
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பதவி விலகத் தயார் – டெனீஸ்வரன் அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தமையாலேயே நான் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்றேன். இப்போதும் முதலமைச்சர் எனது 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் நான் பதவி விலகத் தயாராக உள்ளேன் என்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். வட. மாகாணசபையின் 129 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர்கள் விடயம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சபைக்கு கொண்டுவந்த விசேட கருத்துரை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அநீதி…
-
- 1 reply
- 521 views
-
-
அமைச்சர்கள் விடயத்தில் சட்ட நுணுக்கம் பேசும் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ? தவநாதன் கேள்வி வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? பயன்படுத்தியிருந்தால் இயன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள்? என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்திருந்தார். வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக…
-
- 0 replies
- 227 views
-
-
வடக்கில் சட்ட ரீதியான அமைச்சர்கள் இருவர். சட்டரீதியற்ற அமைச்சர்கள் நால்வர்…. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார். வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் வாய்மொழி மூல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன் போது குறுக்கிட்…
-
- 0 replies
- 228 views
-
-
ஆதாரங்கள் கொடுத்தும் பொலிஸார் மந்த போக்கு – வடக்கு ஆளுநரிடம் சுட்டிக்காட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் பொலிஸார் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவிடம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்புக் கூட்டம் ஒன்று நேற்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணத்தில் குறிப்பாகத்…
-
- 0 replies
- 209 views
-
-
"ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை". வடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர்சபை குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் …
-
- 0 replies
- 327 views
-
-
பெரும்பான்மை கிடைக்கவிடின் பழைய முறையில் தேர்தல் - ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி) மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதனால் புதிய முறைமை தொடர்பாக தற்போதைய எல்லை நிர்ணய அறிக்கையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நேற்று பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த அறிக்கையை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். குறித்த பெரும்பான்மை கிடைக்காவிடின் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிக்கை மீதான விவாதத்துக்கான திகதியை அறி…
-
- 0 replies
- 203 views
-
-
யாழில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த கட்டமைப்பொன்று உருவாக்க வேண்டும் ; றெஜினோல்ட் குரே யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைவஸ்துப் பாவனையினைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் குடாநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேச செயலாளர்கள் ,சமூக அக்கறையுடைய புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்த…
-
- 2 replies
- 358 views
-
-
வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் ; சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வட. மாகாணசபையின் 129 ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது என குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 331 views
-
-
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமூலம் தூக்கியெறியப்பட்ட மலையகத் தமிழரை அரவணைத்தவர் கலைஞர்.... இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்த மலையக மக்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக திருப்பி அனுப்பப்பட்ட போது, அவர்களை வரவேற்று இந்தியாவில் மறுவாழ்வளித்த விடயத்தில் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார். மறைந்த தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தின் போது, முன்னாள் தமிழக முதல்வர் கருணாந…
-
- 0 replies
- 219 views
-
-
இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் (09.09.1998) யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பில் 51 ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512 ஆம் படைப…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சனை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டைப் போன்றது.. “மீண்டும், மீண்டும் எமது மக்கள் மீதே சரிந்து விழுவதற்கென்றே, மீதொட்டமுல்ல குப்பை தேங்கிக் கிடக்கின்றது” சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. . இவ்வாறான நிலையில் எதற்காக இத்தகைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன எனவும், அதற்கென மக்கள் பணத்தினை ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி உள்ளார். பாராளுமன்றத்தில் இன்று, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவ…
-
- 0 replies
- 435 views
-
-
"பிக்குகளின் குரலை அடக்க வெள்ளைக்காரனுக்கே முடியவில்லை! அரசாங்கம் முயற்சிக்குமாயின் அழிவுக்கே" (இரோஷா வேலு) நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் அடையாளப்படுத்தப்பட்டு 19 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்" என்று பிக்குமார் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனுக்கே பிக்குமாரின் குரலை அடக்க முடியாது போனது என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. கொழும்பு நாரஹேண்பிட்டி அபேராம வ…
-
- 1 reply
- 543 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார். இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…
-
- 7 replies
- 1.4k views
-
-
தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய்ப்பிரிவின் அவலம் நீங்க – வேலை நிறுத்த போராட்டம்… தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள். அங்கு நீண்ட காலம் சேவையில் உள்ளவர்களுக்கும் உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இது மோசமான நிலையாகும். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. …
-
- 0 replies
- 319 views
-
-
விக்கினேஸ்வரனும் எங்களுக்கு முதுகில் குத்தாது தனது திட்டவட்ட முடிவை தாமதமின்றி பகிரங்கப்படுத்த வேண்டும்.
-
- 0 replies
- 306 views
-
-
மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://www.virakesari.lk/article/38141
-
- 1 reply
- 266 views
-
-
சயந்தன் vs சரவணபவன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி சிறி முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் இன்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனைக் கண்டவுடன், அவரது அருகில் சென்று ந…
-
- 1 reply
- 697 views
-