Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம். இனிவருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டிவரினும்கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம். அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்…

  2. ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்… தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நிரந்த…

  3. வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடல்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்துவருகின்றனர். அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன் , நிபந்தனையற்று , உடனடியாக வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் யாழ். பண்ணைப்பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்…

    • 12 replies
    • 1.4k views
  4. மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் தரையிறக்கப்படுவதில்லை என ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஓய்வு பெற்ற பிரதம நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார் , அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற விமான நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டு…

  5. வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளை தாய்மாருடன் இணைக்கும் திட்டம் குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு குழந்தைகளை தத்துக்கொடுத்த இலங்கை தாய்மார்களை மீண்டும் அவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றிணைப்பதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ருவான்வெல்ல பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வந்த செனாபன் ரொசானினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா நாடுகளில் தத்தெடுக்கப்பட்டு வாழும் பருவ வயதினரை இலங்கையில் உள்ள அவர்களது பெற்றோருடன் இணைப்பதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். தாய்மார்களை கண்டுபிடிப்பதற்காக அவர் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளார். தாய்மார்களை கண்டுபிடிப்பதை தொடர்ந்து தாய்மார்கள…

  6. கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை ‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மிக விரைவில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், சில விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, விசாரணையாளர்கள் முடிவு செய்திருப்பதாக, மூத்த காவல்துறை அதி…

  7. உயிர் அச்சமே, கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலக காரணம்? கியூபாவில் மாபியா குழுத் தலைவரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, நீதிபதி விசாரணைகளில் இருந்து விலகினார் – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான வழக்கு அடுத்த நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு நீதிபதிகள் வழக்கு விசாரணையில் …

  8. வடக்கு, கிழக்கில் வங்கிகள், குத்தகை கம்பனிகள் அதிகரித்தமை அரசின் திட்டமிட்ட செயற்பாடா - ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டுள்ளது.இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். …

  9. மகிந்தவின் ஆசியின்றி மைத்திரியால் மீண்டும் போட்டியிட முடியாது – டிலான் மகிந்த ராஜபக்சவின் ஆசியின்றி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, சிறிலங்கா சுத்தந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர். 2010 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமானவர் என்று, ராஜபக்ச சகோதரர்களான, கோத்தாபய , பசில், சமல் மற்றும் எஸ்.பி.திசநாயக்க என்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். அமைச்சர…

  10. அலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற இராஜாங்க அமைச்சர் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களா…

  11. “எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையும் சீரழிக்க கங்கணம் கட்டுகிறார்கள்” வடமாகாண அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களே,சுற்றுலாப் பணியகத்தின் இயக்குநர் சபையில் அங்கத்துவம் பெறுகின்ற துறைசார் விற்பன்னர்களே, உயரதிகாரிகளே மற்றும் இங்கே கூடியிருக்கின்ற அமைச்சுக்களின் செயலாளர்களே, திணைக்களத் தலைவர்களே, உத்தியோகத்தர்களே! வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வட மாகாணசபையின் கனவு நனவாகின்ற ஒரு நல்ல நாள் இன்று. 2013ல் வடமாகாணசபை தனது நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து வட பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவாவில் உரிய முயற்ச…

  12. மஹிந்த தப்பியோடாமல் விவாதத்திற்கு வரவும் : சவால் விடுத்த மங்கள ( எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இன்று சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சின் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முனையக் கூடாது. பொய் கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும். வரி விவகாரம் உட்பட பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் முன்…

    • 1 reply
    • 600 views
  13. கிளிநொச்சியில் வெடிப்பொருட்கள் மீட்பு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனையில் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கைவிடப்பட்ட மலசலகூடத்திலிருந்து ஒரு தொகை பயன்படுத்த முடியாத வெடிபொருட்கள் இன்று (07.06.2018) பகல் மீட்கப்பட்டுள்ளன. கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைவிடப்பட்ட மலசலகூடத்தில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் தருமபுரம் பொலிஸாரிடம் தகவலை தெரியப்படுத்தினர் அதற்கமைவாக பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதன் போது 12000 தோட்டாக்கள், 04 ஆர்ப…

  14. திருடர் யார் என்பது புதிராகவே உள்ளது - மஹிந்த (இராஜதுரை ஹஷான்) தேசிய அரசாங்கத்தில் திருடர் யார் என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது. என்னை பார்த்து திருடர் என்று குறிப்பிட்டவர்கள் இன்று தங்களை தாங்களே திருடர்கள் என்று குறிப்பிட்டு கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாகவும் கிடைக்கப்பெற்றது. ஏனைய த…

  15. வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் - மட்டு. மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநகர சபையினால் செயற்படுத்தப்படும் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இச் செயற்பாடுகள் இலகுவில் மக்களுக்கு சென்றடையவும், நன்மைபயக்கவும் வழியேற்படும் என மாநகர முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.…

  16. போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்! முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!! வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார். பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மு…

    • 9 replies
    • 1.5k views
  17. வட கிழக்கில் காணி­களை விடு­விப்­பது குறித்து இரா­ணு­வத்­துடன் பேசினேன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) விரைவில் முல்­லைத்­தீ­வுக்கும் விஜயம் செய்வேன் என்­கிறார் பிர­தமர் வடக்கு கிழக்கில் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களில் பாவ­னைக்கு உட்­ப­டுத்­தாத நிலங்­களை தற்­போது விடு­வித்­துள்ளோம். ஏனைய காணி­களை விடு­விப்­ப­தற்கு இரா­ணு­வத்­துடன் நான் பேசினேன். என்­றாலும் இது தொடர்பில் விரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேசி காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதே­போன்று காணி விடு­விப்பு தொடர்பில் ஆராய யாழ்ப் ­பாணம் சென்­றது போன்று விரை வில் முல்­லைத்­தீ­வுக்கும் விஜயம் செய் வேன் என பிர­தமர…

  18. அர­சியல் வங்­கு­ரோத்து கார­ண­மா­கவே சி.வி.இன­வா­தத்தை தூண்­டு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) விரைவில் சட்­ட­மூலம் வரும் என்­கிறார் அமைச்­ச­ரவை பேச்­சாளர் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­து­வ­ரு­கின்றார். அதில் இருந்து மீள்­வ­தற்கே இன­வா­தத்தை தூண்­டும்­வ­கை­யி­லான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கிறார் என அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்றுக்கு பதி­ல­ளிக்­கை…

  19. பட்டியல் எதுவும் இல்லை – சாலிய பீரிஸ் குத்துக்கரணம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் கடந்த 2ஆம் நாள் நடந்த, காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நடத்திய கலந்துரையாடலில், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று சாலிய பீரிஸ் கூறியிருந்தார் என …

    • 1 reply
    • 725 views
  20. வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில், தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி போராட்டம்…. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.. வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உட னடியாக வெளியேற்றக்கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது “மீன்பிடி திணைக்களமே மீட்டுதா எம் வளத்தை”, “பிரதேச செயலகமே மீட்டுத்தா எம் கடல்வளத்தை”, “அதிகாரிகளே அத்துமீறிய கடற்றொழிலாளர்களிடம் அசமந்தம் காட்டாதே” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் த…

    • 3 replies
    • 571 views
  21. அவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் படைப்பிரிவு கொமாண்டோக்கள், அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் மூலம், ஹவாய் தீவுகள் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். RIMPAC கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படை பங்கேற்கிறது. இதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் கொமாண்டோக்கள், லெப்.கொமாண்டர் சனத் மகிந்த தலைமையில், கடந்த மே 21ஆம் நாள் அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் கடந்த மே 22ஆம் நாள், அவுஸ்ரேலியாவின் ரவுன்வில் தளத்தில், றோயல் அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான, HMAS Adelaide இல் ஏற்றப்பட்…

    • 1 reply
    • 347 views
  22. இலங்கை ஜேர்மன் பயிற்சிக்கல்லுரிக்கு இயந்திரம் கையளிப்பு கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சிக்கல்லுரிக்கு சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாலரால் இயந்திரம் ஒன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்துமணிக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சிக்கல்லுரி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்விலையே குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓட்டோ மொபைல் பயிற்சி நெறியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் இலங்கை ஜேர்மன் பயிற்சிக்கல்லுரி அதிபர் , விரிவுரையாளர்கள் மாணவர்கள் , சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாளர் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் …

  23. யாழ்.வந்த பிரதமருடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு-புதிய சுதந்திரனுக்கு மாவை சேனாதிராசா பிரத்தியேக செவ்வி யாழ்.குடாநாட்டுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிராசா “புதிய சுததந்திரன்” இக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். குறிப்பாக வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களிடம் மீளவும் கையளிப்பது,பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு,தொண்டர் ஆசிரியர்,சுகாதார தொண்டர் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.இவை தொடர்பில் அவர் அளித்த செவ்வி வர…

  24. 23 ஆண்டுகளில் முதியவர்களால் நிரம்பப் போகும் சிறிலங்கா சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சிறிலங்கா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 1981ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில், 6.6 வீதமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு, இது 12.4 வீதமாக அதிகரித்தது. 2016ஆம் ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 15.5 வீதமாக உயர்ந்தது. இந்தநிலை தொடர்ந்தால், 2041ஆம் ஆண்டில், சனத்தொகையில் 24.8 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர். இதன் மூலம், நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங…

  25. தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம் தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்ட்டம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக இருக்கும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.