ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் – சிங்கள நாளிதழ் ஆசிரியருக்கு அழைப்பாணை ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக, வருமாறு நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றின் ஆசிரியரையே இன்று வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றார். கடந்த ஆண்டு நாடு திரும்பிய போத்தல ஜெயந்த, தாம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், கோரியிருந்தார். …
-
- 0 replies
- 363 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில், யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ,அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 341 views
-
-
அச்சுவேலி பகுதியில் காணி விடுவிப்பு - செந்தூரன் பிரதீபன் அச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று (31) பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 3ஏக்கர் காணிகள் 1995 ஆம் ஆண்டு முதல் 521 ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்தது. இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilm…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் புதிய வரைபடம் – நாளை வெளியாகிறது!! அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளது என்று நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 676 views
-
-
அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி.. கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கபடுகிறது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாற்பது கடைகள் காணப்படுகின்றன. இதில் தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. இந்த இரண்டு கடைகளையும் த…
-
- 0 replies
- 407 views
-
-
எட்டு வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 65 வயது முதியவர் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி.. 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இன்று (31.05.18) முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு குறித்த சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயது நிரம்பிய முதியவரே காவற்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையை அவதானித்த வர்த்தகர்கள் நேற்றயதினம் (30.0…
-
- 0 replies
- 485 views
-
-
அர்ஜூன் அலோசியமிடமிருந்து பணம் பெற்றேன்- சரத்பொன்சேகா தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தேவைப்பட்டால் அதனை வட்டியுடன் திருப்பிகொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வர்த்தகர்கள் பணம் வழங்குவது வழமையான விடயம் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இலங்கையில் மாத்திரம் அல்ல உலகின் வேறு பகுதிகளிலும் இந்த நடைமுறை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் திறைசேரி பிணைமுறி மோசடி மூலம் பணம் பெற்றுக்கொண்டேன் என எவரும் தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா வர்த்தகர்களிடம் இருந்து பெ…
-
- 0 replies
- 357 views
-
-
மூன்று வருடங்களில் அரசியலில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன் (எம்.எம்.மின்ஹாஜ்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தி 100 நாள் வேலைத்திட்டம் குறித்தும் விமர்சனம் மஹிந்தவுக்கு ஹெலி கொடுத்தது யார்? அன்றே பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும் யாரும் இல்லாததால்தான் என்னை வேட்பாளராக்கினர் சு.க.இல்லாமல் 19 ஐ நிறைவேற்றியிருக்க முடியுமா? சிங்கம் போலவே நான் வெளியேறி வந்தேன் மலேஷியா சர்வாதிகார நாடல்ல 100 நாள் வேலைத்திட் டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செய லாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன். மூளையிருந்திருந்தால் நான் பதவி…
-
- 1 reply
- 474 views
-
-
தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படத்தின் காப்புரிமைROUTE55 / ISTOCK இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு …
-
- 1 reply
- 916 views
-
-
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் – உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பு!! வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் செய்வதற்கு திணைக்களங்கள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. உள்ளூர்வாசிகள் சிலரே, தமது பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இவ்வாறு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 410 views
-
-
வடமாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கியமையை கண்டித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, வவுனியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்…
-
- 2 replies
- 640 views
-
-
சம்பந்தனின் கருத்துக்களுக்கு சிங்களவர் செவிசாய்க்க வேண்டும் சு.கவின் 16பேர் அணி- கோரிக்கை!! இலங்கையராக நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயற்படு வோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்துத் தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந் தன் கூறும் காரணிகளை இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சுதந்திரக் கட்சியின் 16பேர் அணி, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மையின மக்களும் ஏற்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டத்துக்க…
-
- 1 reply
- 573 views
-
-
புதிய அரசியல் யாப்பின் தேவையை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே முக்கிய பிரச்சினை - சம்பந்தன் பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை இன்று கொழும்பி…
-
- 1 reply
- 442 views
-
-
ஊடகங்களுக்கு எதிராக துப்பாக்கிகளுக்குப் பதிலாக இப்போது வாள்கள் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரும், ஊடகப் பணியாளருமான ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து நேற்று யாழ். நகரில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. காலைக்கதிர் நாளிதழின் ஊடகவியலாளரும், அந்த நாளிதழின் விநியோகிப்பாளருமான, இராஜேந்திரன், கடந்த திங்கட்கிழமை அதிகாலை நாளிதழ்களை விநியோகப் பணிக்காக சென்று கொண்டிருந்த போது, கொழும்புத்துறை, துண்டி பகுதியில் அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டார். வாளால் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல…
-
- 0 replies
- 462 views
-
-
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில் காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். முதல் கலந்துரையாடல் மன்னாரிலும், இரண்டாவது கலந்துரையாடல் மாத்தறையிலும் இடம்பெற்றன. மூன்றாவது கலந்துரையாடல் நாளை மறுநாள் சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, திருகோணமலை, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில், காணாமல் போனோல் பணியகத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. முல்லைத்தீவில் நடை…
-
- 0 replies
- 260 views
-
-
20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் நேற்று, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்தனர். இதன் போதே, இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவும், 20 ஆவது திருத்தத்தை எ…
-
- 0 replies
- 214 views
-
-
கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற அமெரிக்காவின் எண்ணெய் வயல் சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC நிறுவனத்துடன் இது தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள…
-
- 0 replies
- 443 views
-
-
மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்!! கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில லில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதில் கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது. கடந்த ஏப்ரல் 13 ம் தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (29) இரண்டாவது நாளாக மனித எலும்புகள் மீட்கும் பணிகள் சற்று முன் நிறைவடைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில் இரவு 7 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளது. ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும்,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் …
-
- 3 replies
- 752 views
-
-
ஒப்பரேசன் லிபரேசனில் – இறந்தோருக்கு அஞ்சலி!! 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31 ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 3 1 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் கடைப்பிடிக்கப்ட்டது. 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31,ஆம் திகதிகளில் இராணுவம் வடமராட்சியை மீட்க ஒபேரேஷன் லிபிபேரசன் என்ற பெயரில் படை நடவடிக்கையை மேற்கொண்டது. நெல்லியடி மகாவித்தியாலயத்தில் பெரு…
-
- 1 reply
- 578 views
-
-
பிரதமருக்கு வழங்கிய கடிதங்கள் வீசியெறிப்பட்டதன் பின்னணி என்ன? I கிளிநொச்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்களின் கோரிக்கை கடிதங்கள் வீசியெறியப்பட்ட சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், அதனை திட்டமிட்ட சதிச் செயல் என ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜா தெரிவிக்கின்றார். சமகால விடயங்கள் தொடர்பாக ஆராயும் எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சியானது, இக்கடித விவகாரம் குறித்து ஆராய்ந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். குறித்த கடிதங்கள் மூலப்பிரதிகளே என உறுத…
-
- 1 reply
- 370 views
-
-
ரணிலின் குற்றச்சாட்டு எழுப்பும் – கேள்வியும் உண்மையும்!! எல்லா மாகாணங்களும் அபிவிருத்திக்கு மேலும் மேலும் நிதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கும்போது,வடக்கு மாகாணம் மட்டும்தான் வழங்கும் நிதியையும் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது, அதனால் அபிவிருத்தி வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று குற்றச்சாட்டைத் தூக்கித் தமிழர்கள் மீதே போட்டிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. திடீரென வடக்குக்கு வந்த தலைமை அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் இதனைத் தெரிவித…
-
- 0 replies
- 302 views
-
-
அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மெக்கிலெல்லன் தோர்பெர்ரி, என்ரிக் குல்லர், விக்கி ஹார்ட்லெர், கரோல் ஷியா - போர்ட்டர் உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தமை குறிபிடத்தக்கது.. இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினைவிசேடமாக நினைவுகூர்ந்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்க…
-
- 0 replies
- 278 views
-
-
திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன். சற்றுமுன் திருகோணமலை நீதிமன்றத்தை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டார். http://newuthayan.com/story/10/திருகோணமலை-நீதிமன்றை-சென்றடைந்தார்-நீதிபதி-மா-இளஞ்செழியன்.html
-
- 1 reply
- 524 views
-
-
கொழும்பில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடு ஒன்று நடைபெற்றுள்ளது.மருதானை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது.மருதானையில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தன்சல் தான நிகழ்வு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்காக இந்த தன்சல் நடத்தப்பட்டுள்ளது.நோன்பினை கடைப்பிடித்த முஸ்லிம்கள் இங்கு தம் நோன்பை துறந்தனர்.பெருமளவு முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இந்த நல்லிணக்க சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும், இவ்வாறான செ…
-
- 0 replies
- 885 views
-