Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெல்தெனிய சம்பவம்: மொட்டு உறுப்பினர் கைது தெல்தெனிய மற்றும் திகன பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனங்களுக்கிடையில் வெறுப்பு மற்றும் வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் குறித்து தீவிரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் குண்டசாலை பிரதேசசபைக்காக போட்டியிட்டு தெரிவான உறுப்பினரான, சமந்த பெரேரா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட…

  2. இலங்கை: 'நல்லிணக்க முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இலங்கையில் இன மோதல்களை தவிர்க்க நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர்கள் குழு ஒன்று கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துங் லாய் மார்கூ, ருமேனியா தூதுவர் டாக்டர். விக்டர் சியூஜ்டியா மற்றும் …

    • 1 reply
    • 162 views
  3. மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்.! (படங்கள் இணைப்பு) மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகைதராமையின் காரணத்தால் கறுப்பு பட்டி அணிந்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இந்நிலையில், அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதனைமையப்படுத்தி ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இலங்கை …

  4. உதயங்கவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பம் : அரசாங்கம் டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் , இதேபோன்று விரைவில் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார் என குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் , உதயங்க வீரதுங்கவை கைது…

  5. ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நீடித்தது அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ. எஸ். பி. வரிச் சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜீ.எஸ்.பி. வரி சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/32027

  6. சிறிலங்காவில் பொறுத்த வரையில் 2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறுகிறது. வட தமிழீழத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு, ஒட்டுக்குழு ஈபிடிபியால் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உயிர் பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் நீதியை நாடமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 200…

  7. ’வெறுப்புணர்வூட்டும் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்’ ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங்-லாய் மார்க், ரொமேனியா தூதுவர் கலாநிதி. விக்டர் சியுத்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் ஆகியோர் கண்டி மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்த பிரிவெனாவின் பிரதம குருவான சங்கைக்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்து தூதுவர்கள் கலந்துரையாடினார். இதன்போது, பரிமாறல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் போது ஏனைய மதத்தலைவர்களுடன் திட…

  8. இலங்கை பிரதமரின் முக்கிய பொறுப்புகள் நிதி அமைச்சகத்துக்கு மாற்றம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பில் இருந்த இரு முக்கிய அமைப்புக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இன்று நிதி அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். குறிப்பாக, இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்கு வர்த்தக மற்றும் பரிமாற்ற ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி நிதியமைச்சின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாணயக் கொள்கையை உருவாக்குதல், மத்திய வங்கியின் ஒருங்கிணைப்புடனான பேரியல் பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வருமான சேகரித்தல் மற்றும் செலவினங்களை கண்காண…

  9. மாலை 6 மணியின் பின்னர் அநாவசியமாக நடமாடுவோர் தொடர்பில் கூடிய அவதானம் : “சீட்டா” குறூப் களத்தில் (எம்.எப்.எம்.பஸீர்) சுட்டுக் கொலைசெய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விபசாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட அனைத்து திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்க விஷேட செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படும் நிலையில், பாதாள உலகக் குழுவினரைக் கைது செய்ய சீட்டா குறூப் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்பு படையான சீட்டா குறூப் சிறு சிறு குழுக்களாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும் பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய நபர்களைக் கை…

  10. காரைநகர் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் - எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா காரைநகர் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே காரைநகர் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. காரைநகர் பிரதேச சபைக்கான தவிசளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (28) இடம்பெற்றது. 11 ஆசனங்களைக்கொண்ட யாழ்.காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 2 ஆசனங்களையும் சுயேட்சைக் குழு 3 ஆசன…

  11. ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன் யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈ.பி.டி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் நாம் ஆதரவு கேட்கவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். ஈ.பி.டி.பி கட்சியுடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், இதனடிப்படையிலேயே யாழ். மாநகரசபையில் ஈ.பி.பியினர் தமிழ்…

  12. Mar 28, 2018 சுதாரகரனை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் திரண்ட மக்கள்!! ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுவிக்கக் கோரி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது. நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுதாகரனின் இரு சிறுவா்களுக்கு கருனை காட்டி அரச தலைவரின் தத்துவத்தின் பிரகாரம் பொது மண்னிப்பு வழங்கி…

  13. முஸ்லிம் வர்த்தகரின் கடைக்குத் தீ வைப்பு!! முஸ்லிம் வர்த்தகரின் கடைக்குத் தீ வைப்பு!! தெல்தெனிய பிரதேசத்தில் வர்த்தக நி்லையம் ஒன்றுக்கு இனந்தெரியாத சிலர் நேற்று இரவு எரிபொருளை ஊற்றி தீவைக்க முயற்சித்துள்ளனர். தீப்பிடிக்க ஆரம்பித்த போது இதனை கண்ட வர்த்தகர்கள் சிலர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்து இடரில் இருந்து பாதுகாத்துள்ளனர். இது தொடர்பில் பொலிசாருக்குத் தெரியப்படுத்தப்பட…

  14. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 30 நாட்களுக்குள் தீர்வு தர வேண்டும் (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஜனாதிபதி, பிரதமருக்கு 21 முஸ்லிம் எம்.பி.க்களும் கையெழுத்திட்டு கடிதம்முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சு, அச்சுறுத்தல்கள் மற் றும் வன்முறைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றினை எதிர்வரும் 30 தினங்களுக்குள் பெற்றுத் தாருங்கள் எனக் கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வன்செயல்களும் ஊரடங்குச் சட்டம் மற்றும…

  15. பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.! (ஆர்.யசி) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நடத்த பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கான விவாத நேர ஒதுக்கீடும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் அலுவலகத்தில் கட்சித்தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற்றது. சபாநாயகர் தலைமையில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஐக்…

  16. வலிகாமம் மேற்கு பிரதேச சபையும் கூட்டமைப்பு வசம்!! வலிகாமம் மேற்கு பிரதேச சபையும் கூட்டமைப்பு வசம்!! வலிகாமம் மேற்கு பிரதேச சபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது. கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் நடனேந்திரன் 6 வாக்குகளைப் பெற்று புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். http://newuthayan.com/story/79330.html

  17. விக்கியின் பதிலால் சபையில் சலசலப்பு!! விக்கியின் பதிலால் சபையில் சலசலப்பு!! வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சுக்­க­ளில் மாற்­றங்­களை செய்து விட்­டேன் அதோடு அமைச்­சுக்­கள் மீதான எனது நட­வ­டிக்­கை­கள் முடிந்து விட்­டன என்ற பாணி­யில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நேற்று வடக்கு மாகாண சபை­யின் அமர்­வில் பதில் அளித்­த­தால் சபை­யில் சிறிது நேரம் களேப­ரம் ஏற்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் 119 ஆவது அமர்வு நேற்று அவைத்­த­லை­…

  18. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மைத்திரிக்கு ஆட்சேபனை இல்லையாம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மைத்திரிக்கு ஆட்சேபனை இல்லையாம் சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை பொது­மன்­னிப்­பில் விடு­விப்­ப­தில் ஆட்­சே­பனை எது­வும் இல்லை என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி…

    • 2 replies
    • 236 views
  19. வடக்கின் மீள்­கு­டி­யேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது? : மாவட்ட செய­லா­ளர்­க­ளிடம் பிர­தமர் கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கில் யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்­த­வர்­களை மீள்­கு­டி­யேற்றும் வேலைத்­திட்­டங்­களில் முன்­னேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வடக்கை மையப்­ப­டுத்­திய மாவட்­டங்­களில் மாவட்ட செய­லா­ள­ர­க­ளிடம் வின­வினார். இதன்­போது தற்­போது இடம்­பெ­யர்ந்தோர் பெரும்­பா­லனோர் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன என்றும் அதன்­பின்னர் மீள்­கு­டி­யேற்றம் துரி­த­மாக நிறைவு செய்­யப்­படும் எனவும் மாவட்ட செய­லா­ளர்கள் பதி­ல­ளித்­த…

  20. சட்ட வல்­லு­நர்­களை சந்­திக்­கின்றார் ஜனா­தி­பதி : கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி.யுடனும் கலந்­து­ரை­யா­டப்­படும் (ஆர்.யசி) பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வரப்படும் நம்­பிக்கை­யில்லா பிரே­ரணை குறி த்து ஆராய ஜனா­தி­பதி தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­குழு இந்த வாரம் கூட­வுள்ள நிலையில் சட்ட வல்­லு­னர்­களை சந்­தித்து சட்ட ஆலோ­ச­னை­களை பெற்­று­கொள்­ளவும் தயா­ரா­கின்­றனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி உள்­ளிட்ட கட்­சி­க­ளையும் சந்­தித்து நிலைப்­பா­டு­களை ஆரா­யவும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். கடந்­த­கால நெருக்­க­டிகள், அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்தி கார­ண­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எ…

  21. கோத்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதா இல்லையா? : தீர்மானம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதை தடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்ற போதே இது அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கோத்தாயவுக்கு எதிராக பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்…

  22. க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்.! கடந்த 2017 கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று உத்­தி­யோகபூர்­வ­மாக வெளி­யி­டப்­படவுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மா­கிய க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் சுமார் 6 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 573 பரீட்­சார்த்­திகள் தோற்­றி­யி­ருந்­தனர். மேலும் இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள பரீட்சை பெறு­பே­று­களில் 969 பரீட்­சார்த்­தி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியி­டப்­பட மாட்­டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virakesari.lk/a…

  23. இராணுவத்தினரின் துப்பாக்கியை பறித்து சென்ற இருவரால் முல்லையில் பதட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போது அப்பகுதியால் வந்த இருவரை இராணுவத்தினர் மறித்து சோதனை செய்ய முற்பட்டு உள்ளனர். அதற்கு குறித்த இருவரும் எதிர்ப்பு தெரிவித்து இராணுவத்தினருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் திடீரென அங்கிருந்த இராணுவ சிப்பாய் ஒ…

  24. அமைச்சர்கள், எம்.பிக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து * வெளிநாடு சென்றோருக்கும் அவசர அழைப்பு * நம்பிக்ைகயில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள ஜ.தே.க. தயார் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை …

  25. இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து YouTube ரணில் விக்ரமசிங்க - AFP இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச காலத்தின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. கொழும்பு துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்தது. ஏற்கெனவே பாகிஸ்தானின் கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.