ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
கடும்போக்காளர்கள் கைகள் ஓங்காதிருப்பதை உறுதி செய்யவும் அம்பாறை தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் அம்பாறையில் நேற்று முன்தினம் (26) இரவு இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டி…
-
- 0 replies
- 237 views
-
-
உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி : ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். தேர்தல் முடிந்த கையோடு மக்களை மறந்து அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதும் அரசியல்காழ்ப்புணர்ச்சிகளை உமிழ்வதும் வாக்களித்த மக்களுக்கு எவ்விதமான பயனையும் பெற்றுத்தர போவதில்லை என ஈ.பி.டி.பி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையை நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் அர்த்தமற்றதாக்கியதைப் போன்று உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் முடக்கும் விதமாக எவரும் செயற்படக் கூடாது. தமக்கு சேவைகளாகப் பலன் கொடுக்க வேண்டுமென ம…
-
- 0 replies
- 201 views
-
-
புகையிலைக்கு 2020இல் தடை புகையிலை உற்பத்தியை 2020ஆம் ஆண்டு தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான சுற்றுநிரூபத்தை தற்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, குறித்தத் தடை தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதம் இல்லாவிட்டாலும், அடிமட்ட அரச அதிகாரிகள் புகையிலை உற்பத்தியை தடைசெய்வதற்கான நடவடிக்கையில் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகையிலை உற்பத்தித்துறை கல்விப் பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் மஹேஸ் ராஜசூரிய தெரிவித்தார். கொழும்பில் நேற்று (26) …
-
- 1 reply
- 279 views
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு அனுப்பிய நீதிமன்ற அறிவித்தல் திரும்பிய வந்தது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் முன்னிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆஜராகுமாறு மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனின் சிங்கப்பூரில் அவர் வசித்து வந்த முகவரிக்கு கோட்டை நீதிவான் அதிவேக அஞ்சல் சேவை ஊடாகவும் டி.எச்.எல். கூரியர் சேவை ஊடாகவும் அனுப்பிய உத்தரவு மீள திரும்பி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரன் வசிப்பதாக உறுதி செய்யப்பட்ட அவரது 20, கஸ்காடன் வீதி, 18/1, டெம்சன்…
-
- 1 reply
- 324 views
-
-
பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு.. கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். நேற்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தனிடம்; குறித்த மகஜரை கையளித்துள்ளனர். பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித தி…
-
- 0 replies
- 220 views
-
-
சரத் பொன்சேகாவை விரும்பாதவர்கள் யார்?: அவரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பாம் சட்டம் ஒழுங்கு அமைச்சராக உங்களை நியமிப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளும் தேரர்களும் விரும்புகின்றார்கள் இல்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அமைச்சரவை மாற்றத்தின் போது சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது ஆனால் இதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பௌத்த தேரர்களின் எதிர்ப்பின் காரணமாகவே இந்த அமைச்சை வழங்க முடியாதுள்ளதாக ஜனாதிபதி சரத் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா …
-
- 1 reply
- 319 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை: லலித் மீதான வழக்கின் விசாரணைகள் நிறைவு!! புங்குடுதீவு மாணவி கொலை: லலித் மீதான வழக்கின் விசாரணைகள் நிறைவு!! புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு, கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அறிக்கையிட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்ப…
-
- 0 replies
- 162 views
-
-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது சற்று முன்னர் நீதிமன்றில் முன்னிலை வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 443 views
-
-
சம்பந்தரை நீக்கும்வரை ஓயமாட்டோம்.. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்து போராடப் போவதாக . கூட்டு எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் வழங்காமல் சபாநாயகர் ஜனநாயக விரோதமாக செயற்பட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்த அவர், அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்துள்ளமையால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பில் மேலும் விபரிக்கையில், “ந…
-
- 0 replies
- 525 views
-
-
யாழ்ப்பாணம் கச்சேரியில் கச்சேரி வைக்கும் குரங்குகள் -மக்கள் திண்டாட்டம்! யாழ். மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் காணப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நகர்ப்புறத்திற்குள் ஊடுருவிய நிலையில் அவை மாவட்டச் செயலகத்தின் கட்டிட உட்பகுதிகளிற்குள் மறைந்து வாழ்ந்து தற்போது பெருகி வருகின்றன. இவ்வாறு ஆரம்பத்தில் 5 வரையில் காணப்பட்ட குரங்குகள் தற்போது பத்து வரையில் கானப்படுகின்றது. இவ்வாறு கானப்படும் குரங்குகள் காலை மாலை வேளைகளில் மாவட்டச் செயலக வளாகத்தில் ஊளாவி வருவதோடு…
-
- 0 replies
- 430 views
-
-
வடக்கின் திட்டமிடல் சபை கூடியது இரு தடவைகளே- தவராசா விமர்சனம்!! வடக்கின் திட்டமிடல் சபை கூடியது இரு தடவைகளே- தவராசா விமர்சனம்!! வடக்கு மாகாணத்தில் திட்டமிடல்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட மாகாண திட்டமிடல் சபை ஐந்து ஆண்டுகளில் இருதடவைகளே கூடியுள்ளது. இப்படியான நிலையில்தான் மாகாணத்தில் திட்டமிடல் இருக்கின்றது. இவ்வாறு கடுமையாக விமர்சித்தார் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் திட்டமிடல் சபை தொடர்பான பி…
-
- 0 replies
- 201 views
-
-
டெனிஸ் எதிர் விக்கி வழக்கு- மார்ச் 9 இல்!! டெனிஸ் எதிர் விக்கி வழக்கு- மார்ச் 9 இல்!! வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விவாதம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டு, திகதியிடப்பட்டதுடன், வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதிகள் ஆயமும் அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர…
-
- 0 replies
- 295 views
-
-
32 மில். ரூபா நிதிக்கு அனந்தியே பொறுப்பு – கைவிரித்தது மாகாண சபை!! 32 மில். ரூபா நிதிக்கு அனந்தியே பொறுப்பு – கைவிரித்தது மாகாண சபை!! ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆனந்தி சசிதரனும் அவரது அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளுமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்வ…
-
- 0 replies
- 297 views
-
-
சிறீதர் தியேட்டர் கட்டடம் அலுவலகமா? தியேட்டரா? சிறீதர் தியேட்டர் கட்டடம் அலுவலகமா? தியேட்டரா? வட மாகாண சபையில் சூடான விவாதம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள சிறீதர் தியெட்டர் கட்சி அலுவலகமா? அல்லது தியெட்டர் கட்டடமா? என்ற சூடான விவாதம் நேற்று வடக்கு மாகாண சபை அமர்வில் நடந்தது. சபை உறுப்பினர் அஸ்மினும், எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் விடாது சொற்போர் நடத்தியதால் அவ…
-
- 0 replies
- 338 views
-
-
ஜெனிவாவில் முகாமிடவுள்ள மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர் : பல்தரப்பு பிரசாரங்கள், பலமுனைப் போட்டி (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்க ளின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக் களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் , மக்கள் பிரதிதிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பல்வேறு தரப்பினர் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொ…
-
- 0 replies
- 157 views
-
-
ஜப்பான் துறவிகள் யாழ். வருகை!! ஜப்பான் துறவிகள் யாழ். வருகை!! தமிழர் வாழ்விடங்களில் நடந்த போரால் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனையும் அமைதி யாத்திரையும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. ஜப்பான் நாட்டு புத்த துறவிகளால் நடத்தப்பட இந்த யாத்திரை நல்லூர் கந்தன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு நகரில் உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு முன்பாக நிறைவடைந்தது. http://newuthayan.co…
-
- 2 replies
- 339 views
-
-
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜே.வி.பி. ஆதரிக்கும் கோத்தபாய ராஜபக் ஷவை பிரதமராக்கி தொடர்ந்தும் ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைக்கவே மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எம்.பி தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்து பயணமாகியுள்ள மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக அங்கு பி.பி.சி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் செய்துள்…
-
- 0 replies
- 169 views
-
-
தியத்தலாவ குண்டுவெடிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக எந்தச் சூழ்நிலையிலும், தீ பரவாது. எனவே, இந்த வெடிப்புக்குக் காரணமான சூழல் தொடர்பாக அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். படை அதிகாரி ஒருவர் கைக்குண்டை வீட்டுக்குக் கொண்டு சென்ற போது தற்செயலாக நி…
-
- 0 replies
- 224 views
-
-
போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது. கடந்த டிசெம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரில் இறந்த- இராணுவத்தினர் மற்றும் போராளிகள் என, அனைவரையும் உள்ளடக்கியதாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அண்மைய உள்ளூராட்சித் தேர்தல்களால் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த இரண்டு மாதங்…
-
- 0 replies
- 138 views
-
-
மகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த 24ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா- சீன உறவுகள் குறித்தும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொண்ட உடன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனாவின் திட்டங்களுக்கு நிலங்களைப் பெற்றுக் கொள்ளும் போது, சிறிலங்கா மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையில், அதனை முன்னெடுக்குமாறு சீனத் தூதுவரிடம் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையி…
-
- 0 replies
- 155 views
-
-
போர்க்குற்ற சாட்சியமாகும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் உரை வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், ச.குகதாஸ் புதிய உறுப்பினராக பதவியேற்றார். அவர் நேற்று தனது உரையில், இறுதிப்போர் நடந்த பகுதிகளில் தான் நேரடியாக அனுபவித்த இன்னல்கள், போர்க்குற்றங்கள், அகதிமுகாம்களில் நடத்தப்பட்ட விதம், இராணுவத்தினரின் அதிகார மீறல்கள் தொடர்பாக விபரித்திருந்தார். அவர் உரை நிகழ்த்தி முடிந்ததும், போர்க்குற்ற சாட்சியமாக உள்ள இந்த உரையை, ஐ.நா மனித உரிமை…
-
- 0 replies
- 152 views
-
-
அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார். மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081
-
- 7 replies
- 575 views
-
-
பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்கர பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 5 மாதத்துக்கான குறித்த பயிற்சி பாடநெறியைத் தொடர்வதற்காக, பிரியங்கர அடுத்த மாதம் 2ஆம் திகதி சீனாவுக்க செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/பயிற்சிக்காக-சீனா-செல்லவுள்ள-பிரிகேடியர்-பிரியங்கர/175-212089
-
- 4 replies
- 457 views
-
-
சாதக பாதகம் அறிந்து செயற்படுவோம் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தேர்தலில் உணர்த்தியுள்ளனர். ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என்று ம் சொல்லியிருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் பெரும்பாலான சபைகளில் த.தே.கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனினும் பலஇடங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை. அந்த மக்கள் சொன்ன செய்தி ஒற்றுமையாக வாருங்கள் என்பதுதான். ஒரே கொள்கையோடு பயணிக்கின்ற கட்சிகள் கட்டாயமிணையவேண்டிய காலகட்டமிது. தமிழ்த்த…
-
- 0 replies
- 293 views
-
-
மாபெரும் கவனவீர்ப்பு பேரணி மன்னாரில்!! மாபெரும் கவனவீர்ப்பு பேரணி மன்னாரில்!! வழிபாட்டுத் தலங்களின் சேதப்படுத்தலைக் கண்டித்து இ ந்து சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து மன்னார் மாவட்ட இந்து மகா சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் பேரணி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. மன்னார் லிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு …
-
- 1 reply
- 283 views
-