ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ஜனாதிபதி கூறுவதுபோன்று விவாதம் நடத்த முடியாது தேர்தலின் பின்னரே நடத்துவோம் என்கிறது ஐ.தே.க. (ஆர்.யசி) தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக் கையினை விவாதிக்கக்கூறி ஜனாதிபதி தெரிவித்தபோதிலும் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை முன்னெடுக்க முடியாது. இதனை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற சபை முதல் வர் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னர் அறிக்கை குறித்த விவாதத்தை முன்னெடுத்துக்காட்டுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரா…
-
- 0 replies
- 370 views
-
-
நான்குமுனை சமரை எதிர்கொள்ளும் ஜெனிவா (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடை பெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு முனை பிரசாரப் பணிகள் முன் னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசாங்கத் தரப்பு பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு மற்றும் சர்வதேச தரப்பு தென்னிலங்கை தரப்பு ஆகியன கடும் பிரசாரப் பணிகளில் ஈடுபடவுள்ளன. மார்ச் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனிவாப் பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்…
-
- 0 replies
- 166 views
-
-
2 ஆவது தடவை களமிறங்குவது குறித்து இன்னும் தீர்மானமில்லை ஆனாலும் அரசியல் பயணம் தொடரும் என்கிறார் ஜனாதிபதி மனித உரிமை விவகாரத்தில் அவசரம் காண்பிக்க முடியாது என் மீதான ரவியின் விமர்சனம் நியாயமற்றது இரு விசாரணை அறிக்கைகளும் ஒன்றாகவருமென நினைக்கவில்லை 10 வருடங்களில் 10 டிரில்லியன் ரூபா நாட்டுக்கு கடன் ஏற்பட்டுள்ளது கோத்தபாய ராஜபக் ஷ கைது விவகாரத்தில் நடந்தது இதுதான் பொதுப்பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை (நமது நிருபர்) இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு வருவேனா விடு…
-
- 0 replies
- 270 views
-
-
யாழில். ஹொரோயின் போதை பொருளுடன் இருவர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் ,யாழ் பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எழுபத்தெட்டாயிரம் ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது . யாழ் பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயது…
-
- 0 replies
- 223 views
-
-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!! நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!! உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தென்பகுதி, அரசியல், கொதி நிலையின் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. வடக்கு அத்தகைய கொதிநிலையில் இல்லாவிடினும் கொதிநிலை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியிருக்கின்றது. தேர்தல் என்று வந்தாலே ஒருவர் மீது ஒருவர் சேறை வாரியிறைப்பது எம்மி…
-
- 0 replies
- 759 views
-
-
‘மாற்று அணியை உருவாக்க, கைகோர்க்க வேண்டும்’ - டி.விஜிதா “தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு,” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் விடயம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரால் அந்த நிதி வழங்கப்பட்டது. அரசாங்கத்…
-
- 0 replies
- 391 views
-
-
மீண்டும் ஈபிடியியுடன் இணையவே மாட்டேன் – சந்திரகுமார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தங்களின் கொள்கைகளையும், கருத்துக்களையும், சொல்லி மக்களிடம் வாக்குகளை பெற முடியாதவர்கள்தான் எங்கள் சுயேட்சைக்குழு தொடர்பிலும், என் தொடர்பிலும் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று(26) கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018 கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைத்தப் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்ப…
-
- 0 replies
- 207 views
-
-
மஹிந்த அணியும், ரணில் -மைத்திரி அணியும் தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்க முயற்சி!!! " தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்கவே மஹிந்த -ரணில்- மைத்திரி மூவரும் முயற்சித்து வருகின்றனர்" என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மகரகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார திசாநாயக, " நாட்டினை கையாள்வதைப் போலவே ஊரையும் கையாள அனுமதி தாருங்கள் என பிரதான இரண்டு கட்சிகளும் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது, சர்வதேச ஆதிக்…
-
- 0 replies
- 135 views
-
-
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. யாழ்.இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில், இந்தியாவின் 69 வது குடியரசு தின நிகழ்வுகள் யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா அவர்கள் இந்திய தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியையும் அவர் வாசித்தார். அத்துடன் இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்…
-
- 2 replies
- 369 views
-
-
’அரசியலிலிருந்து விலகப்போவதில்லை’ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில், இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசியலிலிருந்து-விலகப்போவதில்லை/150-210814
-
- 3 replies
- 387 views
-
-
வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்… இரண்டு கோடி ரூபா வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடதன் உறுதிப்படுத்த முடியுமா? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை வாங்கியதாக நேற்று(20) வவுனியாவில் தெரிவித்திருக்கிறார். எனவே நான் அவர்களிடம் சவால் விடுகின்றேன் முடிந்தால் அதனை ஆதாரத்துதடன் நிரூபிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் இன்று(21) கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப்…
-
- 1 reply
- 608 views
-
-
குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர் வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போதே, இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். நினைவிடத்தை அமைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினரைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 2 replies
- 587 views
-
-
பிரகீத் இன்னமும் வீடு திரும்பவில்லை…. இன்றுடன் 8 வருடங்கள் கடந்து போயின… இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் 8 வருடங்கள் ஆகிவிட்டன. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். இவர் இலங்கை அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனார். இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு வி…
-
- 2 replies
- 611 views
-
-
முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்திக்காட்டுங்கள் பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சவால் (எம்.எம்.மின்ஹாஜ்) மோசடிக்காரர்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். எனவே நான் பெரிய வீரர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் இரண்டு ஜனாதிபதி அறிக்கை கள் தொடர்பாகவும் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்தார். அத்துடன் தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டுக்கு…
-
- 0 replies
- 394 views
-
-
ஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலையில் ஊவா மாகாண சபையில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சிதாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர். ஊவா மாகாண சபைக்குள் கட்சிதாவிய கணேசமூர…
-
- 1 reply
- 336 views
-
-
போலி வாக்குச் சீட்டுடன் பெண் வேட்பாளர் கைது போலி வாக்குச் சீட்டுகளுடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவரே சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் நேற்று தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும…
-
- 0 replies
- 199 views
-
-
3வது தடவையாக மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்போம்.! இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆரம்பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் சுமத்தி வருகின்றனர். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடாக மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு …
-
- 0 replies
- 242 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் : தொலைபேசி அழைப்புகள் பகுப்பாய்வு ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தொலைபேசி அழைப்புக்களை பகுப்பாய்வு செய்யும் நடவடிகைகள் தற்போது இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தது. கடத்தல், கப்பம் கோரல் தொடர்பில் இதன்போது பல தகவல்களை அம்பலப்படுத்தி வருவதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார். அதன்…
-
- 0 replies
- 213 views
-
-
பாறுக் ஷிஹான்- யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாமை ஆதரித்து இன்று(24) மாலை பொதுக்கூட்டம் ஒன்று புதிய சோனகத்தெருவில் ஆரம்பமானது. ஐக்கிய தேசிய கட்சியின்யாழ் மாவட்ட அமைப்பாளரும் மகளிர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் எமது கட்சி பலம்பொருந்தியதாகும்.ஆகவே யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் மீள்குயேற்றம் என்பது எதிர்காலத்தில் விரைவாக முன்னெடுக்கப்படும்.அமைச்சர் றிசாட் பதியூதீன் ஏற்கனவே 400 வீடுகள் மீள்குடியேற்றம் செய்த முஸ்லீ…
-
- 3 replies
- 516 views
-
-
யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே – கோதபாய ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சியனே வித்வத் சன்சதய என்னும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றிற்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அமெரிக்காவிலிருந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எந்தவொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் அதிகளவில் இடம்பெறுவது வழமையான நிலைமையே என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த போதிலும் அந்த அரசாங்க ஆட்சியிலும் ச…
-
- 2 replies
- 313 views
-
-
கதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம் கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது. சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது: குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார…
-
- 16 replies
- 1k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 131 குடும்பங்களுக்கான 3 ஆவது கட்ட இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5000 இந்திய வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் முன்னாள் அரசாங்க அதிபர் சறோஜ…
-
- 1 reply
- 344 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு, யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை! இனத்தின் அடையாளங்களுக்காக பலர் உயிர் நீத்துள்ள இந்த மண்ணில் தற்போது அடையாளங்களை அடகு வைக்கின்ற பண்பாடு எமது சமுதாயத்தில் உருவாகியுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை அதை அறிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் எழுதிய 'இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு' மற்றும் 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று தொல்லியல் ஆய்வு வட்டத்தலைவர் கந்தசாமி கிரிகரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்க…
-
- 1 reply
- 619 views
-
-
இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வில், வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே அவர்களின் பாடல்….. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ? ஏனோ ராதா இந்த பொறாமை? யார்தான் அழகால் மயங்காதவரோ...
-
- 17 replies
- 999 views
-
-
‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை’யை வைத்து இந்த ரகசிய நடமாட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டிருந்தார்கள்...’ - முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளைப் படிக்க…
-
- 28 replies
- 10.2k views
-