ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
வவுனியாவில் பதற்றம் வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்ற போது இ.போ.சபையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (26) நடைபெற்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை போக்குவரத்து சபை தரப்பால் சில பிரச்சினைகள் மு…
-
- 0 replies
- 378 views
-
-
“தூய கரங்கள் தூய நகரம்” எனும் கோசத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தான் மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன் என்றும் மாநகரசபையினூடாக தனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு…
-
- 0 replies
- 243 views
-
-
மாறவேண்டியோர் தமிழர்கள் அல்லர்! தமிழ் அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பு அரசியல் போக்கிலிருந்து மாறவேண்டும் என்று கேட்டிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே. 60 ஆண்டுகளாகத் தமிழ்த் தலைமைகள் எதிர்க்கட்சியாகவே இருந்து வருவதால்தான் அவர்களால் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுக்க முடிய வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீவுகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ள பயணிகள் படகான எழுதாரகையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார். அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் பின்தங்கியிருப்பதற்கு தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பு அரசியல…
-
- 0 replies
- 316 views
-
-
வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் 'கன்சைட்' முகாமில் வதைக்கப்பட்டனரா.? கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க மற்றும் தற்போது மரண தண்டனை கைதியாக உள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளமையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் வெளிப்படுத்தி கொண்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர், கேகாலையைச் சேர்ந்த சா…
-
- 0 replies
- 297 views
-
-
அரசாங்கத்தை வீழ்த்த தலைமை தாங்கத் தயார்.! ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட் டத்தில் தலைமை தாங்க நாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாம் …
-
- 0 replies
- 503 views
-
-
பாறுக் ஷிஹான்- கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மீலாத் நபி நிகழ்வினை யாழ் மாவட்டத்திற்கு தாருங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டவர் யாழ் முஸ்லீம் இணையத்தை நடாத்தும் சகோதரர் அன்சீர் அவர்கள். உடனே நான் இன்சா அல்லாஹ் செய்வோம் என கூறினேன். இது தவிர யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் உள்ளார்களா என்ற ஐயப்பாடு அண்மைக்காலமாக எழுந்த நிலையிலும் இந்த நிகழ்வை இந்த மண்ணில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீமின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றியுள்ளோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று 23.12.2017 நடைபெற்ற போது நிகழ்வில் விரு…
-
- 3 replies
- 675 views
-
-
உலகளவில் இலங்கைதான் சிறந்த சுற்றுலாத்தலம்; சர்வதேச சஞ்சிகை! இலங்கை உலகிலேயே மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குவதாக சர்வதேச சஞ்சிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரபலம்பெற்றுள்ள யுரேசியா ரிவீவ் (Eurasia Review) சஞ்சிகையே இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Virtuse Luxe 2018 அறிக்கையை அடிப்படையாக கொண்டு மேற்படி சஞ்சிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற Travel Bulletin Star Awards விழாவில் இலங்கைக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலங்கை பாதுகாப்பான பொழுதுபோக்கினைக் கழிப்பதற்குரிய முக்கியமான நாடாக விளங்குவ…
-
- 1 reply
- 483 views
-
-
அகங்காரவாதமும், அபிலாசைகளும் அரசியல் அபிவிருத்தி என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ? அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. உலகின் பல்வேறு சமுதாயங்கள் அரசியல் நாகரீகம் அடைந்த நிலையை அடையும் பொருட்டு மனித இயல்பிற்கு ஏற்ப, பகுத்தறிவின்பால் உந்தப்பட்டு பொதுநோக்கான அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இணைந்து செயற்பட எண்ணுவதும், பங்குபற்றல் அரசியலில் ஒன்று சேர்ந்த நிலையை பேணுவதுவும், சமூக அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்து நிற்க அத்தியாவசியமானது. அரசியல் அபிவிருத்தி நோக்கிய சிந்தனை அற்ற ப…
-
- 0 replies
- 389 views
-
-
அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. ரஸ்ய குடிமகனான மனோன் …
-
- 1 reply
- 424 views
-
-
நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது. இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து…
-
- 2 replies
- 702 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் க…
-
- 5 replies
- 811 views
-
-
செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் 7 நண்பர்களுடன் குறித்த பகுதியில் நீர்நிலையொன்றின் மத்தியில் நின்று செல்பி படம் எடுக்க முயற்சித்த போது அந்த இடத்தில் மணல் எடுத்ததால் ஏற்பட்டிருந்த குழிக்குள் சிக்கியுள்ளதாகவும் இதன்போது புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிவராஜா பகிதரன் மற்றும் தவம் கனிஷ்டன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் செல்பி படம் எடுக்கும் வேலையில் ப…
-
- 0 replies
- 239 views
-
-
மட்டக்களப்பு முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது! தமிழ் மக்களுக்கு பாரிய அபிவித்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், …
-
- 0 replies
- 367 views
-
-
தமிழ் மக்களின் துரோகிகள் யார்? நேச சக்தி எது? ! இராமலிங்கம் சந்திரசேகர் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. இத்தேர்தலில் தென்னிலங்கையில் வழமையாக வாக்கு வேட்டையில் முன்னணி வகிக்கும் ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் வடக்குக் கிழக்கில் அவ் வேட்டையில் முன்னணி வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அதன் பங்காளிக் குழுக்களும் பலத்த குத்துவெட்டுக்களுடன் தமிழ் மக்களையும் குழப்பத்துக்குள்ளாக்கித் தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும், மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில…
-
- 1 reply
- 600 views
-
-
சீனாவின் இலங்கை பிரசன்னம் குறித்து இந்தியா பீதியடைந்துள்ளது – சீனா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனாவின் இலங்கை பிரசன்னம் தொடர்பில் இந்தியா பீதியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா இலங்கையில் பல்வேறு வர்த்தக மற்றும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மைக் காலமாக இந்தியா, சீனாவின் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருவதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா இலங்கையை ஓர் சுயாதீனமானதும் இறைமையுடையதுமான நாடாக கருதவில்லை எனவும், தனது வீட்டு கொள்ளைப் புறமாகவே நினைத்து செயற்பட்டு வருதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சீன ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் த…
-
- 1 reply
- 177 views
-
-
தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில், தமிழ் மக்களது வரலாறு மறைக்கப்பட்டு, திரிபுபடுத்தப்பட்டு, தவிர்க்கப்பட்ட நிலைமைகளே காணப்படுகின்றன கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்! கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற அனைத்து சுற்றறிக்கைகளையும் தமிழ் மொழியிலும் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் எனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, தமிழ் பாடநூல்கள் தொடர்பில் நான் ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ள விடயங்கள் குறித்தும் கல்வி அமைச்சர் அவர்கள் அவதானமெடுத்து, உரிய நடவடிக்கைகளை …
-
- 0 replies
- 162 views
-
-
யாழ் நத்தார் நள்ளிரவு திருப்பலி, புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. http://globaltamilnews.net/2017/57312/ யாழ்.மரியன்னை ஆலய பாலன் குடிலில் மதுபானத்திற்கும் வாள் வெட்டுக்கும் எதிர்ப்பு…. யாழ்.மரியன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாலன் குடிலில் மதுபானத்திற்கு எதிரானதும் வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு எதிரனாதுமா…
-
- 1 reply
- 799 views
-
-
மத்தள விமானநிலையம் : இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுக்கும் பேச்சு ஸ்தம்பிதம் (இ.சதீஸ்) மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கான முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன. அந்த வகையில் குறித்த விமான நிலையத்தின் பெறுமதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையின் பெறுமதி மதிப்பீட்டுக்கும் இந்திய பெறுமதி மதிப்பீ…
-
- 3 replies
- 503 views
-
-
பரப்புரைகளில் ஒதுங்கியிருக்க புளொட் முடிவு! ஆசனப் பங்கீட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட இடங்களில் தேர்தல் பரப்புரையிலிருந்து ஒதுங்கியிருக்க புளொட் அமைப்பு தீர்மா னித்துள்ளது என்று அறியமுடிகின்றது. தமது கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் வட்டாரங்களில் மட்டும் பரப்புரைகளைத் தீவிரமாக மேற்கொள்ள அந்தக் கட்சி திட்டமிட்டு வருகின்றது என்றும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி…
-
- 0 replies
- 240 views
-
-
பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன்.....! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலின் பின் னர் பாரிய மாற்றங்களை மக்கள் உணர முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். ஊழல் குற்றவாளிகள் இல்லாத நபர்களை தயங்காது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறும் அவர் குறிப்பிட்டார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், …
-
- 0 replies
- 287 views
-
-
பொதுஜன பெரமுனவின் தலைவராகிறார் மஹிந்த ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளவுள்ளார். ஜனவரி 2 ஆம் திகதி சுகததாச அரங்கில் 20 கட்சிகளை இணைத்த புதிய கட்சியாக ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக இணையும் மாநாட்டில் இதனை தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன முன்னணி வட்டாரங்களின் மூலமாக தெரிய வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக செயற்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் அவர் பங்குகொள்ளவில்லை. அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும் எந்தவொரு ப…
-
- 0 replies
- 145 views
-
-
ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/28574
-
- 6 replies
- 584 views
-
-
நாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்!! அரசமைப்பு என்பது ஒரு நாட்டின் முதுகெலும் பாக வர்ணிக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அது ஒரு புனித ஏடு என்று கூடக் கூறலாம். அதன் உள்ளடக்கங்கள், சட்டங்கள், நியதிகள் என்பவை ஒரு நாட்டின் இறையாண்மையை ,ஐக்கியத்தை,அரசியலை அன்னியோன்னியத்தை இனங்களின் ஒன்றுமையை எடுத்தியம்பும் ஏடாகும். அது அந் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் முதுகெலும் பாகவும் திகழ்கிறது. ஒரு நாட்டின் அரசமைப்புக்கும் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச…
-
- 0 replies
- 416 views
-
-
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்! இறுதிப் போரின் போது தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தவை எனச் சொல்லப்படும் இனப்படுகொலைகள் தொடர்பாக பன்னாட்டு விசாரணையையோ அல்லது ஐ.நா. சபையின் தலையீட்டையோ கொழும்பு காலாகாலமாக மறுத்து வருகிறது. ‘நல்லாட்சி’ என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணை என்பதில் உறுதியாகவுள்ளது. இம்மியளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து அது இறங்கிவரத் தயாரில்லை என்பதை பலமுற…
-
- 0 replies
- 544 views
-
-
போதைப்பொருள் மையமாக மாறிவிட்டது இலங்கை! போதைப்பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றஞ் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அன்று தேயிலை கைத்தொழில் துறையில் உலகப் பிரசித்தி பெற்றிருந்த இலங்கை இன்று போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உலகப் பிரசித்தி பெற்றுக்கொண்டுள்ளது. தற்பொழுது இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விநியோகம் செய்யும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறிகளிலும் போதை…
-
- 0 replies
- 378 views
-