ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143325 topics in this forum
-
மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 198 views
-
-
சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார். …
-
- 8 replies
- 1.6k views
-
-
முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது! வடக்கு மாகாண சபையின் துர்ப்பாக்கிய முதலமைச்சர் இருக்கும் வரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு விடிவு என்பது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும். அதேவேளை முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்காத வரை தமிழர்களுக்கும் விமோசனம் இல்லை என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிச்சிராபுரத்தில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் குடும்பங்க ளுக்கான வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார…
-
- 2 replies
- 554 views
-
-
120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்! முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து …
-
- 17 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அ…
-
- 1 reply
- 357 views
-
-
கடற்படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் : நடந்தது என்ன ? மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று திங்கட்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் நேற்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நில…
-
- 2 replies
- 461 views
-
-
தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது…. அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. …
-
- 4 replies
- 863 views
-
-
மகிந்தவின் கொக்கரிப்பும் நலிவடைந்த அரசும் ! உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தயாராகிவிட்டார். நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது, நாட்டைப் பாதுகாக்கவேண்டும் என்கிற முழக்கத்துட னேயே அவர் தனது பரப்புரையை பதுளையில் ஆரம்பித்திருக்கிறார். தேர்தலை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபுறத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் மகிந்த மார் தட்டிப் பேசுகிறார். மக்கள் பலம் அதாவது சிங்கள மக்…
-
- 0 replies
- 367 views
-
-
வடபுலத்தின் வேலையில்லா திண்டாட்டமும் ; சில பரிகாரங்களும்! உத்தியோகம்–புருச லட்சணம்’ எனும் முதுமொழிக்கமைய, உத்தியோகம் தேடுவதே ஓர் வேலை எனும் நிலையிலேயே இன்று அதிகமான படித்த இளம் சமூகத்தினர் காணப்படுகின்றனர். பல்கலைக்கழக அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகை மையுடன் அரச வேலையொன்றை இலக்கு வைத்து, பல வழிகளிலும் முயற்சித்து, கணிசமான அளவுஅடைவையும் அவர்கள் பெற்றுக்கொள் கின்றனர். ஆயினும் வேலை கிடைக்காத நிலை எதிர்காலத்தில் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமே உள்ளமை கண்…
-
- 0 replies
- 325 views
-
-
கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது-சீ.வி.கே.சிவஞானம் கேள்வி வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்…
-
- 1 reply
- 195 views
-
-
‘சைக்களில் தனித்து போட்டி’ உள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சைக்களில்-தனித்து-போட்டி/71-208489
-
- 1 reply
- 496 views
-
-
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர். அந்த வகையில்,…
-
- 2 replies
- 203 views
-
-
புளொட்டின் உயமட்டக் குழு நாளை கூடுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மாற்று அணியில் இணைந்து போட்டியிடுவதா? என்ற முடிவு பற்றி ஆராய புளொட்டின் உயமட்டக் குழு வவுனியாவில் நாளை மாலை கூடி ஆராயவுள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறியதால் தற்போது புளொட் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுமே சேர்ந்துள்ளன. ஆசனப் பங்கீடு தொடர்பில் எமது கட்சிக்கும் அதிருப்தி உள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் உயர்மட்டம் நாளை மாலை கூடுகிறது எனவும் அவர் கூறினார். h…
-
- 0 replies
- 286 views
-
-
தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு இலங்கையின் தலைமை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைமை அமைச்சருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது இந்தியத் தரப்பிலிருந்து இலங்கைக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக சாதக மான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் சொந்தக் காலில் நிற்கக்க…
-
- 3 replies
- 684 views
-
-
மனைவி மீது தீவைத்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்…
-
- 0 replies
- 282 views
-
-
முகாம் வாழ்க்கைக்கு முடிவு எப்போது? ச மீப காலமாக, இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்பான செய்திகளில்தான் ஊடகங்களின் கவனம் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இங்கு இருந்துவரும் இலங்கை அகதிகளின் நிலை பொதுமக்களின் கவனத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது. இலங்கையில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களின் மோசமான நிலை, முகாம்களை விட்டு வெளியில் சென்றுவருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான வாழ்வாதாரத்துக்கான வாய்…
-
- 0 replies
- 268 views
-
-
கட்டுப் பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தல்களுக்கு வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தியது. சாவகச்சேரி தமிழசசுக்கட்சி உறுப்பினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ஓய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன், இளைஞர் அணி செயலாளர் சுகிர்தன் ஆகியோர் இணைந்து கட்டுப் பணத்தை செலுத்தினர். http://newuthayan.com/story/53340.html
-
- 0 replies
- 287 views
-
-
நவீன இணையத்தள சதித்திட்டங்கள் ஊடாக மக்களை திசைதிருப்ப முயற்சி மங்கள தெரிவிப்பு; நாமலே அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) நவீன இணையத்தளங்களின் சதித்திட்டங்கள் ஊடாக மக்களை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் மக்களை திசைதிருப்பும் அதி நவீன இணையத்தளமான பொக்ஸ் தொழில்நுட்பத்தை எமது நாட்டில் அதிகம் பாவிப்பது நாமல் ராஜபக் ஷவாவார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணைத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இலங்கை இதழியல் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் ப…
-
- 1 reply
- 446 views
-
-
எட்டாம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.! வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று மற்றும் நாளைய தினத்தில் வீசும் நிலையுள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல் வோர், சுழியோடிகள், கடல்பயணங்களை மேற்கொள்வோர் எவரும் கடலுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் பிரேம லால் தெரிவித்தார். இலங்கையை சுற்றி வீசும் கடுங்காற்றினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படப் போகும் அசாதாரண நிலைமையை எதிர்கொள்ள அவ…
-
- 0 replies
- 469 views
-
-
''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வீரகேசரி இணையத்தளம் வினவியபோதே, இது தொடர்பில் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விட…
-
- 1 reply
- 499 views
-
-
சுனாமி வதந்தியால் பதற்றமடைந்த பொது மக்கள் (இரோஷா வேலு) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் சுனாமி குறித்து பரப்பப்பட்ட வதந்திகளை நம்பி தமது வீடுகளில் இருந்து அச்சத்துடன் வெளியேறியதை அவதானிக்க கூடியதாகவிருந்தது. நேற்று பிற்பகல் வேளையில் கடல்கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் தொடர்ந்து அம்பியூலன்ஸ் வாகனம் விரைந்து சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை வாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை சேர்ந்த மக்களும் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பா…
-
- 0 replies
- 334 views
-
-
மஹிந்த இன்றி நாம் வெல்வோம் : தேவையேற்படின் ராஜபக் ஷ எம்முடன் இணையலாம் (ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தற்போது தஞ்சம் புகுந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எந்த உறவும் இல்லை. கட்சியை விட்டு வெளியேறி கட்சியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்முடன் இணைய வேண்டுமே தவிர நாம் அவர்களுடன் கைகோர்க்க எந்த தேவையும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ இல்லாமலும் தேர்தல்களை வெற்றிகொள்வோம் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர …
-
- 0 replies
- 290 views
-
-
கூட்டு எதிரணியை இணைப்பதற்கு கடும் முயற்சியில் இறங்கியுள்ளோம் இணைய முடியுமென்ற நம்பிக்கை உள்ளது என்கிறது சுதந்திரக் கட்சி (ரொபட் அன்டனி) கூட்டு எதிரணியுடன் இணைந்துகொள்வதற்கான முயற்சி இன்னும் ஓயவில்லை. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பல்வேறு வழிகளில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எந்தவகையிலாவது இரண்டு தரப்புக்களும் இணைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இன்னும் இருக்கின்றது என்று சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இரண்டு தரப்புக்களும் இணைந்து தேர்தலில் போ…
-
- 0 replies
- 311 views
-
-
வெற்றிலையில் சு.க.கூட்டணி : தொண்டமானும் அதாவுல்லாவும் இணக்கம் (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 0 replies
- 171 views
-
-
சொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் ? (வீரகேசரி இணையதளம்) கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு …
-
- 0 replies
- 531 views
-