Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் கடற்பகுதிகளில் கொந்தளிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் கடற் பகுதிகளில் கடும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டை சுற்றியுள்ள கடற் பகுதியில் இவ்வாறு கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, கடலுக்கு செல்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கோரியுள்ளது. மேலும் மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாவட்டங்களின் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் பிரத…

  2. வடக்கு முதல்வர்- ஆஸ்திரேலிய தூதுவர் இடையே சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் பைரஸ் ஹட்ச்சன் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது. http://newuthayan.com/story/51303.html

  3. பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். …

  4. கோப்புப் படம் வீதியில் இளைஞரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற குழு!! யாழ்ப்பாணம், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தள்ளிவிழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த சிவில் உடையணிந்த மூவரே இளைஞருக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர் என்றும் இந்தச் சம்பவம் இன்று மு.ப. 11 மணியளவில் நட…

  5. அரசியல் கைதிகள் விவகாரம்: சாட்சிகளின் முடிவை கேட்க கால அவகாசம்! அநுராதபுரம் சிறையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகள் மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இனி இடம்பெறமாட்டாது என மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அவர்களின் வழக்குக்கு எதிரான சாட்சிகள் இருவர் வெளிநாட்டிலுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அவர்களிடம் முடிவைக் கேட்க அவகாசம் வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று(29) சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் மூவரின் சார்பாக அவர்களுக்கு எதிரான வழக்…

  6. கோட்டாவை கைது செய்தால் புலம்பெயர்ந்தவர்களுக்கே மகிழ்ச்சி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்தால் சந்தோசப்பபடும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று(27) கொழும்பில் இ டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்த அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கோட்டாபயவை கைதுசெய்ய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பில் முடிவெடுக்கக் கூடிய முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் திருப்பதியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 1 989-1990 ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட ஆர்.பாஸ்கரலிங்கம் இன…

    • 3 replies
    • 334 views
  7. https://www.vikatan.com/news/album/general/8994-272875-quotes-by-prabhakaran-on-his-birthday.album

    • 1 reply
    • 1.4k views
  8. கொந்தளித்தது மன்னார் கடல் – வீதியெங்கும் கடற் தாவரம் கொந்தளித்தது மன்னார் கடல் – வீதியெங்கும் கடற் தாவரம் மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் – வவுனியா முதன்மை வீதியில் மன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன. மக்கள் கூடி நின்று அதைப் பார்வையிட்டனர். கடற்கொந்தளிப்பால் வீதிகளில் கடற்தாவரங்கள் காணப்பட்டன. http://newuthayan.com/story/51367.html

  9. கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் ; அனந்தி சசிதரன் விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையில் இருக்கின்றது. அதனால் தான் பெண்கள் கொள்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவேண்டும் என கூறிவருகின்றோமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தி சசிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கு “டெப்” வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்…

  10. 11 இளைஞர்கள் கடத்தல் – குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரும் தகவல்களை வழங்க கடற்படைத் தளபதிக்கு உத்தரவு.. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரும் தகவல்களை வழங்குமாறு கடற் படைத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடற்படை லெப்டினன் கேணல் பிரசாத் ஹெட்டியாரச்சியின் கீழ் கடயைமாற்றிய கடற்படை உத்தியோகத்தர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் …

  11. நுவரேலியாவைப் போன்று கொழும்பிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம் ; மனோ நுவரேலியாவில் எப்படி புதிய தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகளை உருவாக்கினோமோ அப்படியே தலைநகர் கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கினோமென முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதேவேளை, அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையைதான் இப்போது பின்னோக்கி இழுத்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாநகரசபையில் பிடுங்கப் பார்க்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையி…

  12. அம்­பாந்­தோட்டை துறை­முக இறுதி ஒப்­பந்­தத்தை அவ­ச­ர­மாக கைச்­சாத்­திட முனையும் அரசு : சபையில் நாமல் எம்.பி.தெரி­விப்பு (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) அர­சாங்கம் தற்­போது அவ­சர அவ­ச­ர­மாக அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான இறுதி ஒப்­பந்­தத்தை எதிர்­வரும் 7 ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் முன்­வைத்து 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்தி நிறை­வேற்­றி­யதன் பின்னர் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தில் துறை­முக மற்றும் கப்பல் துறை, அனர்த்த முகா­மைத்­த…

  13. முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்மப்படகுகளின் நடமாட்டம் முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்மப்படகுகளின் நடமாட்டம் காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்ததாக தொிவிக்கப்பட்டது. தற்பொழுது மழை காலத்தில் கடலில் இருள் சூழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில் மூன்று திசைகளில் இருந்து திடீரென வெளிச்சம் தோன்றியமையால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சட்டவிரோதப்படகுகள் வந்திருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் கடற்படையினர் அங்கு விரைந்தனர். குறித்த கடல…

  14. தமிழரசுக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு ஆரம்பம் எதிர்வரும் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று முதல் இரண்டு மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள, அக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறும். இதேவேளை, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் கட்சி விடுத்த அறிவிப்புக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட, வடக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள், விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, சுமார் இ…

  15. சமஷ்டி அதி­கா­ரத்தை வழங்­கத் தயா­ரில்லை சமஷ்டி அதி­கா­ரத்தை வழங்­கத் தயா­ரில்லை கூட்­டாட்சி (சமஷ்டி) அதி­கா­ரத்­தையோ அல்­லது நாடு பிள­வு­ப­டக்­கூ­டிய அதி­கா­ரத்­தையோ வழங்க நான் தயா­ராக இல்லை, நான் அரச தலை­வ­ரா­கத் தேர்ந் தெ­டுக்­கப்­பட்­டது தேசத்­துக்­குத் துரோ­கம் இழைப்­ப­தற்­காக அல்ல என நேற்­றுத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. தென்­கொ­ரியா சென்­றுள்ள அரச தலை­வர் அங்­குள்ள இலங்­கை­யர்­க­ளைச் சந்­தித்­தார். நாட்­டின் தலை­ந­கர் சியோ­லில் உள்ள கிரான்ட் ஹைட் ஹோட்­ட­லின் நம் சன் மண்­ட­பத்­தில் உள்ளூர் நேரப்­படி பிற்­ப­க­லில் …

  16. ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் : காலக்கெடு விதித்தது ஜே.வி.பி. (ஆர்.யசி) மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஒட்­டிக்­கொண்டு தமது இருப்பை தக்­க­வைக்கும் முயற்­சி­க­ளையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுத்து வரு­கின்றார். தேர்­தலை பிற்­போ­டு­வதன் முழுப்­பொ­றுப்­பையும் ஜனா­தி­ப­தியே ஏற்­று­க்கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். இந்த வாரத்­தினுள் தேர்தல் குறித்து அர­சாங் கம் மௌனம் கலைக்­கா­விட்டால் நாடு பூரா­கவும் மக்­களை ஒன்­று­தி­ரட்டி கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­த…

  17. சமிக்ஞையை காட்டுங்கள் : சுதந்திரக்கட்சி குழுவிடம் பொது எதிரணி அறிவிப்பு ஜனாதிபதி நாடு திரும்பியதும் மீண்டும் சந்திப்பு "பட்ஜட்டை தோற்கடித்து அரசிலிருந்து விலகுங்கள்' (ஆர்.ராம், ஆர்.யசி) உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஒன்­றி­ணைந்து கள­மி­றங்­கு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் விரும்­பு­வார்­க­ளாயின் அதற்­கான முதற்­கட்ட சமிக்­ஞை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தை தோற்­க­டித்து அவர்­களின் நேர்­மைத்­தன்­மையை நிரூ­பித்­துக்­காட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­க…

  18. பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா - மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை இராணுவப் படைக்குச் சொந்தமான ரீ 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றையும், 15 துப்பாக்கி ரவைகளையும், 4 துப்பாக்கி குண்டு கவசங்களையும் களவாடி பின்னர் அவற்றைப் பயன்படுத்தி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களை செய்தமை தொடர்பில் வவுனியா பொலிஸ்…

  19. இரா­ணுவ வெற்றி தினத்தை நிரா­க­ரித்த அர­சாங்கம் ஏன் புலி­களின் மாவீரர் தினத்தை அனு­ம­திக்­கின்­றது? புலி­களை நியா­யப்­ப­டுத்தி வடக்கில் பிரி­வி­னை­வா­தத்தை பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உருவாக்க முடி­யுமா? தமிழர்கள் வேதனை கொள்வார்கள் என்­ப­தற்­காக இரா­ணுவ வெற்றி தினத்தை நிரா­க­ரித்த அர­சாங்கம் ஏன் புலி­களின் மாவீரர் தினத்தை அனு­ம­திக்­கின்றது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி கேள்வி எழுப்­பினார். நாம் தேசியம் பேச­வேண்டும் என கூறும் நபர்கள் வடக்கில் புலிக்­க­கொ­டியை பறக்­க­விட்டு வடக்கை புலிகள் தேசம் என்­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சியல் அமைப்பு நாட்டின் பிளவின் அட…

  20. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் வடக்கில் முடக்கம்! வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் அனைத்தும் இன்று காலை தொடக்கம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர். இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப…

    • 3 replies
    • 852 views
  21. சம்பந்தனை துரத்தும் துயரம்! திருமலையிலும் மக்கள் கடும் எதிர்ப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியாகிவருகின்ற நிலையில் திருமலைக்கு அரசியல் தேவைக்காக படையெடுத்த சம்பந்தன் குழுவிற்கு அங்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது. இது குறித்த காணொலி http://tamilleader.org/?p=5386

  22. உடைந்தது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு? உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக…

  23. கோப்பாயில் சுடர் ஏற்றிய சிவாஜிலிங்கம், அனந்தி! அச்சுறுத்திய படையினர்! யாழ். கோப்பாய் துயிலும் இல்ல பிரதான வீதியில் சுடரேற்றி மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வு வடக்கமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. வீதியில் ஈகைச் சுடரேற்றி இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. நினைவேந்தலின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர். இதன்போது இரணுவத்தினர் பேருந்தை வீதிக்கக் குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 40 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் …

  24. புலிகளுக்காக கட்சியை உடைத்தார் சுரேஸ் – வரதராஜப் பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசியக்…

  25. இராணுவத்தினா் 556 பேர் கைது இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை பெறாமல் சேவையில் இருந்து இடை விலகியிருந்த அவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைவதற்காக பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 22ஆம் திகதி வரையில் பொதுமன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு நீடித்திருந்தது. இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதியில் இருந்து நேற்று வரையிலான காலப்பகுதியினுள் 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பெண் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.