ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
கோப் குழுவின் ஐந்து உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்பு விசாரணை நடைபெறும் போது நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் கண்டுபிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பிணைமுறி விநியோக நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்றின் கோப் குழு வின் 28 உறுப்பினர்களில் ஐந்து பேர் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அப்போதைய முன்னாள் பணிப்பாளர் அர் ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி தொடர்புகளைக் கொண் டிருந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையுடன், இந்த விடயமானது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளினால் ஆணைக் க…
-
- 0 replies
- 151 views
-
-
’உணர்ச்சிவசப்படுகிறார் சம்பந்தர்’ -நிர்ஷன் இராமானுஜம் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்று (16) ஆற்றிய உரை, "உணர்வுபூர்வமாக இருந்தது" என, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதம் நேற்று (16) நடைபெற்றபோது, இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எதிர்க்கட்சித் தலைவர், உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அவரது உரையை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது" என்று கூறினார். …
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ் இளைஞர்கள் சித்தரவதை மறுப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்! இலங்கைப் படையினர் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டமைக்கு உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச அமைப்பின் ( International Truth and Justice Project) தலைவர் யஸ்மின் சூக்கா கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அசோசியேட் பிறஸ் (Associated Press) என்ற செய்தி நிறுவனத்திற்கு கனடா வன்கூர் மாநிலத்தில் வைத்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டுள்ளார். …
-
- 2 replies
- 367 views
-
-
விக்னேஸ்வரன் கற்றுக்கொண்ட பாடம் தற்போது ஆட்சியில் உள்ள அரசைப் பதவிக்குக் கொண்டு வந்ததில் தமிழர்களின் பங்களிப்பு மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, போர்க்குற்றங்களுக்கான நீதி, பரிகாரம் என்பவற்றின் அடிப்படையில், அரசிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளுடன் தமிழர்கள் தற்போதைய கூட்டு அரசுடன் கைகோர்த்தார்கள். இந்த மக்கள் ஆணையின் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றது. எதிர்க் கட்சியாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் த…
-
- 2 replies
- 522 views
-
-
குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டூழியங்களையடுத்து அனைத்துப் பொலிஸாரினதும் விடுப்புக்கள் நேற்று இடைநிறுத்தப்பட்டன. இதற்கான அறிவுறுத்தலை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் நேற்றுக் காலை வழங்கினார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக வாள்வெட்டுச் சம்பவங்களும், அடாவடித்தனங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த நிலையிலேயே பொலிஸாரின் விட…
-
- 3 replies
- 552 views
-
-
யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப். Weiterempfehlen (எம்.எப்.எம்.பஸீர்) யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் த…
-
- 1 reply
- 460 views
-
-
மக்கள் ஆணை! விலகலும் எதிர்பார்ப்பும் தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறவில்லை என்று அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார் அந்தக் கட்சியின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “தமிழ் மக்களின் கருத்தை அறியும் தேர்தலாக உள்ளூராட்சித் தேர்தல் அமையலாம். பௌத்தத்திற்கு முதலிடம், கூட்டாட்சி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கையை உடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்பார்களானால், சிங்கள மக்களுக்கு அதை எடுத்துக் காட்டிப் புதிய அரசமைப்பைத் …
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ் உறுப்பினர்களை தமது கட்சியில் சேர்க்க பிரதான சிங்களக் கட்சிகள் முயற்சி! நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியும் போட்டியிடுவதற்கான கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், பலவீனங்கள் ஆகியவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி, தமது கட்சிகளில் தமிழ் உறுப்பினர்கள் பலரை வேட்பாளர்களாக நியமித்து வடக்கு கிழக்கில் கூடுதல் உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்…
-
- 0 replies
- 188 views
-
-
புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை அளுஸ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு சிங்கள பத்திரிகையான லங்காதீப கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஈழ தேசமொன்றின் கனவினை தோளில் சுமந்து கொண்டு இருந்த புலித் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளும் புலிகள் அமைப்பின் முதலாவது உறுப்பினர் சாவடைந்த நாளையும் நினைவுகூறப்படும் புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை யுத்த சமயத்தில் புலிகளின் தலைவரின் தலைமையில் அந்த அமைப்பு கடந்தபல வருடங்கள் நினைவுகூரியது. யுத்தத்திற்கு பின்பு புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிர…
-
- 0 replies
- 341 views
-
-
பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இன நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட 20 விடயங்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று (நேற்று முன்தினம்) நிதி அமைச்சரை சந்தித்து மேலதிக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்தோம். அவற்றை நிறைவேற்றுவதாகவும் நிதி அமைச்சர் எமக்கு உறுதியளித்தார். ஆகவே நல்லிணக்கத்திற்கான வரவு – செலவுத்திட்டமொன்றை கொண்டு வந்தமையினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடப்பாட்டில் நாம் உள் ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலை வர…
-
- 4 replies
- 387 views
-
-
வரவு - செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Weiterempfehle (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 191 வாக்குகள் ஆதரவாகவும் 58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஆதரவாகவும், மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன. கடந்த 9 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக நிதி…
-
- 0 replies
- 279 views
-
-
வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.! ரி.விஷரூஷன் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. யாழ்.மேல் நீதிமன்ற…
-
- 0 replies
- 473 views
-
-
நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை நாட்டை பிரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கூட்டுஎதிரணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான ஒன்றென எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாட்டை-பிரிக்கும்-முயற்சியில்-ஈடுபடவில்லை/175-207310
-
- 0 replies
- 297 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம் : வவுனியாவில் இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு 100 வீட்டுத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கள்ளிக்குளம், சிதமப்பரம் கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது உரையில், "கிராம சக்தி வேலைத்திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் சிந்தனையில் இந்த நாட்டிலிருந்து வறுமையை முற்று முழுதாக ஒழிக்கவேண்டும் எனத் தெரிவித…
-
- 0 replies
- 207 views
-
-
சிங்களவரின் சம்பந்தி விக்கி இனவாதத்தைத் தூண்டக்கூடாது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிங்கள இனத்துடன் குடும்ப உறவுகளை வைத்துக்கொண்டு வடக்கில் இனவாதத்தை தூண்டுவது ஏற்படையதல்ல என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. இந்த அமைதியைச் சீர்குலைக்க சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். முஸ்லிம், தமிழ் மாணவர்கள் இன்று மும்மொழிகளிலும் தேர்ச்சியடைந்துள்ளனர். சரளமாக சிங்கள மொழி…
-
- 0 replies
- 461 views
-
-
அரியாலை துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் அடையாள அணிவகுப்பு அரியாலையில் இளைஞன் ஒருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை. கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் சிசிரிவி கமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் கொலையாளி பயணித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில் இரு சிறப…
-
- 1 reply
- 350 views
-
-
திருவையாறு சிறுவா் இல்லத்தை விட்டு ஓடிய சிறுவா்களால் பரப்பரப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள சிறுவா் இல்லம் ஒன்றில் இருந்து நேற்றிரவு ஜந்து சிறுவா்கள் இல்லதை விட்டு வெளியேறியமையினால் பிரதேசத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு(15) குறித்த சிறுவா் இல்லத்திலிருந்து வெளியேறி அயலில் உள்ள காணிகளில் ஒழிந்திருந்த நிலையில் கிராமத்து இளைஞர்கள் குறித்த சிறுவா்களை மீட்டு விசாரித்துள்ளனர். இதன் போது இல்லத்தில் உள்ள தங்களுக்கு பொறுப்பானவா்கள் தாக்கியதனால் தாங்கள் சிறுவா் இல்லத்திலிருந்து ஒடி வந்து விட்டதாகவும், இரவு ஒன்று கூடலுக்கு தாமதமாகியும் செல்லாத காரணத்தினால் தங்களுக்கு கடுமையாக அடி விழுந்ததாகவும் ச…
-
- 0 replies
- 536 views
-
-
புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்! தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார். எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்த…
-
- 32 replies
- 2.1k views
-
-
40000 பொது மக்கள் கொல்லப்பட்டார்களா? : அமைச்சரும் ஊடகவியலாளரும் கடும் வாதப்பிரதிவாதம் (ரொபட் அன்டனி) இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் பிரிட்டனின் பிரபுக்கள் சபை உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்த கரு த்து தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளருக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்குமிடை யில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என பிரிட்டனின் பிர புக்கள் சபை உறுப்பினர் லோட் நெஸ்பி தெரிவித்துள்ள நிலைமை தொடர்பி…
-
- 1 reply
- 448 views
-
-
பேரவையின் கொள்கைகளை முன்னெடுத்தால் யாருக்கும் ஆதரவு சுரேஷ், கஜேந்திரகுமாருடனான சந்திப்பில் சி.வி. கருத்து மக்கள் இயக்கமாகவே பேரவை செயற்படும் என்றும் தெரிவிப்பு (நமது நிருபர்) பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலில் பங்கேற்பது அவர்களது உரிமையாகும்.பேரவையின் கொள்கைகள், செயற்றிட்டங்களை இந்தக் கட்சிகள் அல்லது தனி நபர்கள் முன்னெடுப்பார்களாயின் அதற்கு ஆதரவு வழங்கவேண்டிய கடமை உள்ளது என்று வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர…
-
- 2 replies
- 237 views
-
-
TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே அவர்கள் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று காலை இடம்பெற்றுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 207 views
-
-
முஸ்லிம் தலைவர்கள் பொதுபலவுடன் “டீல்” “பொதுபல சேனா, சமூகத்துக்கு எதிராக மேற்கொண்ட அனைத்துவிதமான எதிர் நடவடிக்கைகளையும் நாம் மன்னிக்கின்றோம், அதற்கு பிரதியுபகாரமாக, எங்களுக்கு எதிராக, போட்டிருக்கின்ற வழக்குகளை நீங்கள் வாபஸ்பெற வேண்டுமென்று, பொதுபல சேனாவுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம் (டீல்) பேசுவதாக செய்திகள் வந்திருக்கின்றன” என்று, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். ஆண்டியாப் புளியங்குளம் மக்கள் சந்திப்பொன்று வாழவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கை முஸ்லிம் அரசியலை, வியாபாரமாகவே எமது முஸ்லிம் அரசியல் தலைவர்…
-
- 1 reply
- 328 views
-
-
டீ.கே.பி. தஸநாயக்கவை உடன் சிறைச்சாலைக்கு மாற்றவும் தெஹிவளை பகுதியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ், கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்கவை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார். சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பிறப்பித்த குறித்த உத்தரவில், டீ.கே.பி. தஸநாயக்கவை உடன…
-
- 0 replies
- 299 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டை ஆவா குழுதான் செய்கிறது –பொலிஸ் தனு ரொக்ஸ் குழுவைச் சேர்ந்தோரையும் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளவர்களையும் இலக்கு வைத்தே அண்மைக்காலமாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடும் பொலிஸார், அவற்றை ஆவா குவே மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகத் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், வீடுகளுக்குள் புகுந்து இடம்பெறும் அடாவடிகளை ஆவா என்று தம்மை அடையாளப்படுத்தும் குழுவினரே முன்னெடுக்கின்றனர். அந்தக் குழுவிலிருந்து பிரிந்து சென்று செயற்படும் தனு என்ற இளைஞனும் அவரது சகாக்களும் இணைந்து தம்மை தனு ரொக்ஸ் என அடையாளப்படுத்திச் செயற்படுகின்றனர். மானிப்பாயை மையமாக வைத்து இயங…
-
- 0 replies
- 333 views
-
-
வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வாள்வெட்டுச் சந்தேகிகள் மூவர் யாழில் கைது! வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மூவரும் 22 தொடக்கம் 24 வயதுகளை உடையவர்கள் என்றும், அவர்கள் கொக்குவில், கோப்பாய் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் உள்ளதாகவும், இவர்கள் ஏற்கனவே யாழில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார்…
-
- 2 replies
- 354 views
-