ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
தொண்டமான் பெயர் விவகாரம்; இந்தியா கவனம் செலுத்தும் - சுஷ்மா ஸ்வராஜ் தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்து தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மாவுக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நன்மதிப்புக்காகவும் உழைத்த முதுபெரும் தலைவர் தொண்டமானின் பெயரை அரச நிறுவன…
-
- 0 replies
- 269 views
-
-
இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலானவால் கைது செய்து சென்றநபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்காளனது சட்டத்தரணி குருபரன் மற்…
-
- 1 reply
- 337 views
-
-
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த கோரி : இலங்கைக்கு கடும் அழுத்தம் மனித உரிமை பேரவையில் இலங்கையிடம் சரமாரி கேள்விகள் (ரொபட் அன்டனி) இலங்கை காணாமல்போனோர் விவகாரத்துக்கு தீர்வுகாணவேண்டும் என்பதுடன் காணிகளை விடுவிப்பது அவசியமாகும். அத் துடன் விரைந்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும் என்று கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் வலியுறுத்தின. அத்துடன் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் கருத்து வெ ளியிட்ட சர்வதேச நாடுகள் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் எனவும் முன்னேற்றங்கள் ஏ…
-
- 0 replies
- 148 views
-
-
'மஹிந்த தரப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்' சின்னசாமி ஷிவானி “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றார…
-
- 0 replies
- 109 views
-
-
சர்ச்சைகளுடன் இன்று கூடுகிறது த.தே.கூ. 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்காக பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அதன் தலைவரும் எதிர்க் கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று காலை கூடவுள்ளது. முன்னதாக கடந்த ஒன்பதம் திகதி கூடியிருந்த பாராளுமன்றக் குழுவில் வரவு செலவுத் திட்ட விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டபோதும் அது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதே நேரம் வரவு –…
-
- 0 replies
- 170 views
-
-
தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் மீனவர்கள் மீது கடற்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.vir…
-
- 0 replies
- 206 views
-
-
உடைகிறது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள…
-
- 1 reply
- 523 views
-
-
ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார் கே.எல்.ரி.யுதாஜித் “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ…
-
- 5 replies
- 1.4k views
-
-
குடாநாட்டை அதிரவைக்கும் வாள் வெட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக மீண்டும் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டை அடுத்து பொலிஸார் வாள் வெட்டுக் குழுக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தனர். இதனை அடுத்து அடங்கியிருந்த வாள்வெட்டுக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. கடந்த 4 நாள்களில் மட்டும் 7 இடங்களில் நடந்த 8 வாள்வெட்டுச் சம்பவங்களில் 12 பேர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மட்டும் மூன்று இடங்களில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் புரிந்தனர். வெவ்வேறு சம்பவங்களில…
-
- 3 replies
- 603 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கை 5 சதவீதம் கூட நிறைவேறவில்லை கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் தலைமை அமைச்சர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு -– செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்னேற்றமான விடயங்கள் உள்ளன. வடக்கு – – கிழக்கைப்…
-
- 0 replies
- 335 views
-
-
“ஒரே நாளில் முடிந்துவிடாது”: ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேக வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் சற்று முன் பேசிய இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்று காலாந்தர மதிப்பாய்வை முன்வைத்துப் பேசியபோதே இலங்கைக் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர். தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு மேற்படி அமர்வில் கலந்துகொண்டுள்ளது. இதில் பேசி…
-
- 0 replies
- 442 views
-
-
சவால்கள் நிறைந்த பாதையில் பயணிக்கப்போகும் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடு வது அநேகமாக நிச்சயமாகிவிட்டது. முன்னர் எதிர்பார்த்தபடி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகித் தனிவழியில் செல்வதற்குத் தீர்மானித்து விட்டது. இனிமேல் வேறு எவருடனாவது கூட்டணி அமைப்பதற்கான பேச்சில் அந்தக் கட்சி ஈடுபடப் போகின்றது. ஆனால் சில்லறை விடயங்களுக்காக கூட்டமைப்பு பிளவுபட முடியாதென வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தாம் பேசவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் தெரித்துள்ளார். எந்த நம்பிக்கை…
-
- 0 replies
- 418 views
-
-
முகமாலை, இந்திராபுரம் கிராமங்களில் மீள்குடியேற அனுமதி பச்சிலைப்பள்ளி முகமாலை மற்றும் இந்திராபுரத்தின் 200 மீற்றர் பிரதேசம் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிதிவெடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக முகமாலைப் பிரதேசம் காணப்படுகின்றது. இருப்பினும் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தொடர்ச்சியாக துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அதனை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் முகமாலை மற்றும் இந்திராபுரத்தி…
-
- 0 replies
- 178 views
-
-
ஒரு மில்லியன் டொலர் போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது ஒரு மில்லியன் டொலர் முகப் பெறுமதி கொண்ட போலி டொலர் நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். வவுனியா மற்றும் திருகோணமலை முகாம்களைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று (14) கிண்ணியா, மாஞ்சோலைச்சீமை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்த டொலர் நாணயத் தாளுக்கான செப்பு அச்சுப் படிவத்தையும் நாணயத் தாள் அச்சிடப் பயன்படும் சில உபகரணங்களையும் விசேட அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் தற்போது கிண்ணியா பொலிஸில் கையளிக்கப்பட…
-
- 0 replies
- 274 views
-
-
சுனாமி வதந்தியால் இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் (படங்கள்) நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படப்போவதாக பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவிலும் மக்கள் தமது இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்படப் போவதாக இன்று காலை திடீரென வதந்தியொன்று நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர். தற்போது கிடைத்த செய்திகளின்படி, மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வதந்தியால் இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறத…
-
- 0 replies
- 235 views
-
-
வட்டுவாகல் பாலத்தில் திடீர் வெடிப்பு; பயணிகள் அசௌகரியம் முல்லைத்தீவு - பரந்தன் A34 பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நடைபயணிகளும் அவதானமாகச் செல்லாதவிடத்து கடும் காயங்களுக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இப்பாலம் ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதையடுத்து, கனரக வாகனங்கள் எவையும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைதீவிலிருந்து செல்லும் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள…
-
- 0 replies
- 168 views
-
-
மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்த…
-
- 1 reply
- 695 views
-
-
புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்முனைத் தாயகத்தின் வரலாற்றினைத் திரிபுபடுத்தி இனவாதத்தீயை மூட்டுவதற்கு முயல்வதாக குற்றம் சாட்டிய பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போது அம்பாறை மாவட்டத்தின் இதயமான கல்முனைத் தாயக பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள…
-
- 3 replies
- 435 views
-
-
யாழ்.கோட்டையை இராணுவ தளமாக்க வடக்கு ஆளூநர் முயற்சி:- யாழில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்.கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்தாக வடமாகாண ஆளூநர் தெரிவித்தார் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதே என ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், கோட்டைக்குள் டச்சு போர்துக்கேய ஆங்கிலேய இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமில்லையா ? இப்ப மாத்திரம் எப்படி சொந்தமானது. …
-
- 1 reply
- 728 views
-
-
அ’ புரம் அரசியல் கைதிகள் வழக்கு – சாட்சிகளில் ஒருவர் வவு. வரச் சம்மதம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது வழக்கின் சாட்சிகளில் ஒருவர் வவுனியா நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சம்மத்தித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு கட்டளையிட வேண்டும் என்று அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு முன்வைக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே ச…
-
- 1 reply
- 316 views
-
-
அரசியலமைப்பு சபையின் பங்காளி இன்று அதனை விமர்சிப்பது வேடிக்கை விஜயதாஸவுக்கும் விக்கிக்கும் சுமந்திரன் பதில் (ஆர்.ராம்) அரசியலமைப்பு சபைக்கான யோச னையை முன்வைத்தவர்களிலொருவராக வும்,வழிநடத்தல்குழுவின் அங்கத்தவராக வும், இடைக்கால அறிக்கை வரைவில் பங்கேற்றவராகவும்,சட்டவாக்கத்தில் சிறந்த அனுபவத்தினையும் கொண்டிருக் கும் விஜயதாஸ ராஜபக் ஷவின் கூற்று வேடிக்கையாகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர் அமைச்சுபதவியிலிருந்து நீக்கப்பட்டமையின் பிரதிபலிப்பே இந்த எதிர்நிலையாகும் என்றும் ச…
-
- 1 reply
- 156 views
-
-
பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டிருந்த மூவர் கலேவெலவில் அதிரடிப் படையினரால் கைது; தனக்கு தொடர்பில்லை என மஹ்ரூப் எம்.பி.தெரிவிப்பு (ரெ.கிறிஷ்ணகாந்) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் எரிபொருள் பவுஸர்களில் காணப்படும் பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்து வந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை தம்புள்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கலேவெல மகுலுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த கருங்கல் ஆலை ஒன்றில் குறித்த பசரை மறைத்து வைத்து சந்தேக நபர்கள் இந்த வர்த்தகத்தினை மேற்கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்ச…
-
- 2 replies
- 288 views
-
-
சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பவே முடியாது சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. அதன் பிடிக்குள் இருந்து எவரும் தப்பிக்கக்கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும். தவறை மூடிமறைப்ப தற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தமாட்டேன். பிணைமுறி ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரம் தராதரம் பாராது, குற்றவாளி களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான மலிக் ச…
-
- 3 replies
- 448 views
-
-
சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ். வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது. ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை. …
-
- 0 replies
- 396 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு இணைத்தால் குருதி ஆறு ஓடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற…
-
- 0 replies
- 505 views
-