ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி முதலாவது சம்பவம் கோப்பாய் பகுதியின் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதி வழியாக இன்று மாலை கோப்பாய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிறிகாந்தன் எனும் நபர் உந்துருளியில் வந்துகொண்டிருந்தபோது பிறிதொரு உந்துருளியில் இரு நபர்கள் அவரைப் பின்தொடர்ந்தவண்ணம் வந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் சிறிகாந்தனை அண்மித்ததும், கோப்பாய் சந்திக்கு எந்த வழியால் செல்லவேண்டும் என வி…
-
- 0 replies
- 675 views
-
-
வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி. வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 246 views
-
-
கோப்புப் படம் இந்திய மீனவர் மீது கடலில் துப்பாக்கிச் சூடு!! இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பிலும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலதிக விவரங்கள் விரைவில்.. http://newuthayan.com/story/46413.html
-
- 1 reply
- 890 views
-
-
பலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பலாலியில் உள்ள இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் ஆனா போத…
-
- 0 replies
- 395 views
-
-
வடக்கில் பொலிஸ் வேட்டை வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராகவும் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து நேற்று அதிகாலை வரை பொலிஸார் பல சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கு மாகான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு மாகாணத்தில் சமூ…
-
- 3 replies
- 599 views
-
-
தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும் தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் – யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் (2வது மாடி) – இணைத்தலைவர் உரை தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2வது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் உள்ளராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தறுவாயில் தேர்தல்கள் …
-
- 1 reply
- 239 views
-
-
கஞ்சாவுடன் சிப்பாய் புளியங்குளத்தில் இன்று கைது!! பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் இன்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிப்பாய் விடுமுறையில் சென்றபோது கஞ்சாவைக் கொண்டு சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்றும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/46424.html
-
- 0 replies
- 310 views
-
-
யாழில் இருவர்மீது வாள்வெட்டு: முகம் கைவிரல் என்பன பாதிப்பு! யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன. படுகாயமடைந்த இருவர…
-
- 4 replies
- 1.2k views
-
-
வீடொன்றில் அட்டகாசத்திலீடுபட்ட பெண் உட்பட 8 பேர் கைது மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி,பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்.மாநகர சபை ஆணையாளர் கவனம் செலுத்துவாரா ? யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதுடன் குப்பைகளினாலும் விலங்குகளின் கழிவுகளினாலும் நிரம்பி வழிகின்றது. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ் வீதியை பயன்படுத்தும் மக்கள் அசௌரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்பில் அப் பகுதி மக்களால் யாழ்.மாநகர சபை நிர்வாகத்துக்கு பல தடவைகள் முறையிடப்பட்டுள்ளது. எனினும் கு…
-
- 0 replies
- 405 views
-
-
முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றாதவர்கள் த.தே. கூட்டமைப்பை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவிப்பு முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத வர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்…
-
- 0 replies
- 192 views
-
-
ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) பிரபாகரன் யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாமல்போன ஈழத்தை அரசாங்கம் பேனாவினால் வழங்க முயற்சிக்கின்றது. ஒருமுறை ஏமாந்துவிட்ட நாங்கள் இரண்டாம் முறையும் ஏமாந்துவிடமாட்டோம். உள்ளூராட்சி மன்றதேர்தலில் அரசாங்கத்துக்கு பாடம்புகட்ட மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் கட்சியின் சின்னத்தைவிட கொள்கையே முக்கியமாகும். கட்சியின் கொள்கையை நாங்களே பின்பற்றி வருகின்றோம் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அன…
-
- 1 reply
- 230 views
-
-
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதவரளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA:- வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விரிவாக கட்சி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். http:…
-
- 0 replies
- 231 views
-
-
புதிய முன்னணிக்கு த.ம.பேரவை மறைமுக ஆதரவு தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய தேர்தல் கூட் டுக்கு தமிழ் மக்கள் பேரவை தனது ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. ‘‘நின்று நிலைபெறக்கூடிய நிர்வாகங்களை ஊரக அளவில் உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை மிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையிலான பிரதி நிதித்தவத் தின் மூலம் பெறமுடியுமானால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், ஒத்த சித்தனைக ளுடன் பயணிப்பவர்களுடன் அதற்காகக் கைகோர்த்…
-
- 1 reply
- 424 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ; வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் க…
-
- 0 replies
- 291 views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்! கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் ஐந்தாயிரம் பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(12.11.2017) நடைபெற்றது. ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங…
-
- 0 replies
- 419 views
-
-
புதிய தேர்தல் முன்னணிக்கு பேரவை இணங்கி வராது முதலமைச்சர் அடித்துச் சொல்கிறார் கஜேந்திரகுமார் – சுரேஷ் பிரேமச்சந்தி ரன் இணைந்து உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பேரவை இதற்குப் இணங்காது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்தார். ‘‘தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் அரசியல் முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூறியிருக்கின்றார் களே. என்று வ…
-
- 0 replies
- 377 views
-
-
‘இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பக்கூடாது’ அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாது என,தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார். இவ்விசேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்றைய (ஞாயிறு) கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட…
-
- 0 replies
- 270 views
-
-
"இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்…
-
- 0 replies
- 293 views
-
-
மேல் மாகாணத்திலும் வன்னியிலும் ஜ.ம.கா.–-இ.தொ.கா.கூட்டாக போட்டி சேவல் சின்னத்தில் களமிறங்க ஒப்பந்தமும் கைச்சாத்து (ஆர்.ராம்) மேல் மாகாணத்திலும் வன்னியிலும் ஜனநாயக மக்கள் காங்கி ரஸும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் கூட்டாக இணைந்து போட்டியிடவுள்ளன. இரு கட்சிகளும் சேவல் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளராட்சி தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்த முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் …
-
- 0 replies
- 196 views
-
-
இலங்கைக்கு ஜெனிவாவில் கடும் அழுத்தம் அதிருப்தியுடன் கேள்விகளை எழுப்பியுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுவரும் 28ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழு கூட்டத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளதுடன் இதன்போது அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பெல் ஜியம், எஸ்டோனியா, நோர்வே, போர்த்துக்கல் மற் றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் கேள் விகளை எழுப்பவுள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட கேள…
-
- 0 replies
- 251 views
-
-
கை சின்னத்தினை பயன்படுத்தும் சு.க.வின் தீர்மானத்தால் சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி தனிவழியில் செல்ல முடிவு (ஆர்.ராம்) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளமையால் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இத்தனை காலமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக கூட்டு சேர்ந்து போட்டியிட்டு வந்த சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் தனித்தும், வேறு சில கூட்டுக்களிலும் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணில் அ…
-
- 0 replies
- 299 views
-
-
வடக்கில் புதிய கூட்டணி : தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானம் (ரி.விரூஷன்) விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இணைந்து புதிய கூட்டணியொன்றின் ஊடாக புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன. இப்புதிய கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவினை வழங்கியிருப்பதாகவும் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையானது நேற்றை…
-
- 0 replies
- 581 views
-
-
வவுனியாவில் தெலுங்கு முறைப்படி நடந்த திருமணம்! - மகுடியும், பாம்பும் சீதனம் [Sunday 2017-11-12 09:00] வவுனியா கிராமம் ஒன்றில் மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர். வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. …
-
- 1 reply
- 500 views
-
-
பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு காரணம் என்ன? சீனா போன்று இலங்கையும் வல்லரசாகிவிட்டதா - கூட்டமைப்பு கேள்வி ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த ஆண்டை விடவும் 6.667பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென கேள்வியெழுப்பி அதிருப்தியை வெளியிட்ட பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாபோன்று இலங்கையும் வல்லரசாகிவிட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு- -- செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
-
- 1 reply
- 171 views
-