ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
கூட்டும் உடைவும் பயனும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் காலக் குழப்பங்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. வழக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற குழப்பம் தேர்தலுக்கு முன்னர் உருவாகும். இந்தமுறை அப்படியல்லாமல் சற்றே வித்தியாசமாக தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, …
-
- 0 replies
- 446 views
-
-
பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற பிள்ளையான் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற பாதைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றது. இன்று கா…
-
- 0 replies
- 271 views
-
-
ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராது! - விக்னேஸ்வரன் [Friday 2017-11-03 19:00] சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். “ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள …
-
- 5 replies
- 628 views
-
-
கொலைக் குற்றச்சாட்டுக்கு அதிரடிப்படையினர் மறுப்பு அண்மையில் அரியாலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர் தாம் அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என்று வாக்கு மூலம் வழங்கியுள்ளனர் என்று தெரியவந்தது. எனினும் கைது செய்யப்பட்ட இருவரும், சம்பவம் நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரம் அவர்களது அலைபேசித் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரியாலை கிழக்கு, மணியந்தோட்டத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை டொன்போஸ்கொ …
-
- 10 replies
- 934 views
-
-
சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அனுமதி மறுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரியவிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், மாவை.சோனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளட்ட எதிர்க்கட்சியான கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியருந்து அமைதியாக முற…
-
- 6 replies
- 607 views
-
-
புத்தளம் பஸ் விபத்தில் 5 பேர் பலி; 45 பேர் காயம் - ரஸீன் ரஸ்மின் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர். அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புத்தளம்-பஸ்-விபத்தில்-5-பேர்-பலி-45-பேர்-காயம்/150-206695
-
- 1 reply
- 491 views
-
-
தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருக்கிறது இலங்கை தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருப்பதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒருசில செயற்பாடுகள் காரணமாக கொள்கை ரீதியான பிரச்சனைகள் தோன்றியுள்ளன. எனினும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். http://www.samakalam.com
-
- 2 replies
- 393 views
-
-
‘சுரேஷின் முடிவால் தமிழர்களுக்கே பாதிப்பு’ “இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ள முடிவால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே தவிர, தமிழரசுக் கட்சிக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இதனால் தமிழரசுக் கட்சிக்கு இலாபமே கிட்டும்” என, வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (05) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்தமைக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், அது அவருக்காகத் தான். சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுப்பதற்…
-
- 5 replies
- 731 views
-
-
கிளிநொச்சியில் மாணவர்கள் இடைவிலகும் தொகை அதிகரிப்பு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலைகளை விட்டு மாணவர்கள் இடைவிலகும் தொகை அதிகரித்து வருவதாக பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களில் அண்மைய நாட்களாக பாடசாலைகளை விட்டு மாணவர்கள் இடைவிலகும் தொகை மற்றும் ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட தொகை என்பன சடுதியாக அதிகரித்து வருகின்றன என்றும் இது தொடர்பில் பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் பொறுப்பான அதிகாரிகள் கூடிய கவனமெடுக்கவேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. …
-
- 0 replies
- 383 views
-
-
கிளிநொச்சியில் சமூர்த்தி வங்கி முகாமையாளரின் நடவடிக்கையால் பயனாளிகள் பாதிப்பு:- கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் தனது விருப்பபடி மக்களின் நலன்களுக்கப்பால் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், பல சந்தர்ப்பங்களில் நடைமுறைகளுக்கு மாறாக சமூர்த்தி செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும் தெரிவிக்கும் பயனாளிகளான பொதுமக்கள் இது குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவ்வித பயனும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனா். …
-
- 0 replies
- 279 views
-
-
மூன்று வருடங்களுக்குள் மன்னார் மேலும் அபிவிருத்தி அடையும் (தலைமன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குள் மேலும் அபிவிருத்திப் பணிகள் இவ் மாவட்டத்தில் எனது அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். -மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் மடு பிரதேச செயலாளர் எவ்.சத்தியஜோதி தலைமையில் கடந்த சனிக்கிழமை நூறு பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறைச்சாலை மறுசீரமைப…
-
- 0 replies
- 435 views
-
-
பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம் பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் வசமுள்ள வசாவிளான், பலாலி தெற்குப் பகுதிகளில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இந்தப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். கடும் மழைக்கும் மத்தியில், பெரும் எண்ணிக்கையான மக்கள், நேற்றுக்காலை 9.30 மணியளவில் அமைதியான முறையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலாலி படைத்தளப் பிரதேசத்துக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகளை அமைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பில…
-
- 1 reply
- 329 views
-
-
சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!! FacebookTwitterPinterestEmailGmailViber புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமாரை (சுவிஸ்குமார்) தப்பிக்க வைக்க முயன்றார் என்று மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோனாதிராசாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றது என்று தெரியவருகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவிட்டபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்…
-
- 1 reply
- 469 views
-
-
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் (எம்.ஆர்.எம்.வஸீம்) எந்தக் கட்சியை சேர்ந்தவர்களானாலும் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து செயற்படுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ”மலரும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் 168 லட்சம் ரூபா செலவில் பொலன்னறுவை பகமூண – மஹசென் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…
-
- 0 replies
- 432 views
-
-
12 ஆம் திகதி நடைபெறும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலேயே அடுத்த தீர்மானம் (ஆர்.ராம்) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னரே அடுத்த கட்ட தீர்மானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்விடயம் குறித்து தெரியவருதாவது, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்ப…
-
- 0 replies
- 268 views
-
-
இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முகநூல் மற்றும் சில இணையத்தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தளம் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும், பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தல், இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடாக சிறிலங்கா விளங்கும் என்றும், பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனை இண…
-
- 0 replies
- 316 views
-
-
சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 44 நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ளன. அதேவேளை, 89 நாடுகள், புதுடெல்லியில் உள்ள தமது நாட்டின் தூதரகம் வழியாகவே சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. புதுடெல்லியில் உள்ள தூதரகம் மூலம், சிறிலங்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வரும் நியூசிலாந்து, கொழும்பில் தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவில் தமது நாடு புதிய தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளதாக, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி கடந…
-
- 0 replies
- 250 views
-
-
முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம் என்பன தொடர்பாக, இம்மாத நடுப்பகுதியில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”அதிகாரப்பகிர்வு தொடர்பான அபிலாசைகள் மற்றும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கை என்பன குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்…
-
- 1 reply
- 339 views
-
-
சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொது எதிரணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்கள பெ…
-
- 13 replies
- 826 views
-
-
அடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:- மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/48504
-
- 0 replies
- 383 views
-
-
நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார். http://www.thinakaran.lk/2017/10/31/உள்நாடு/20861/நீதிபதி-எம்இளஞ்செழியனுக்கு-சர்வதேச-இளம்-பெளத்த-துறவிகள்-உயர்-விருது தமிழ் நீதிபதிகள் இரு…
-
- 17 replies
- 1.4k views
-
-
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது’ -க. அகரன், எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று (04) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையர்கள், தமது இன வேறுபாடுகளைக் கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த ந…
-
- 1 reply
- 714 views
-
-
கட்டலோனிய சுதந்திர பிரகடனம் இலங்கையிலும் எதிரொலிக்குமா? http://epaper.virakesari.lk
-
- 2 replies
- 555 views
-
-
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ் இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசியலம…
-
- 1 reply
- 450 views
-
-
‘கைதிகளுக்காக போராட்ட வடிவம் மாறும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த …
-
- 0 replies
- 413 views
-