ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143329 topics in this forum
-
எச்சரிக்கை : அதிகாரம் பகிரப்பட்டால் நாட்டில் போர் வெடிக்கும்.! புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு மாகாணசபைகளுக்கு அதிகாரம் பகிரப்பட்டால் நாட்டில் 30 வருடகாலமாக இடம் பெற்ற யுத்த சூழல் மீண்டும் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தலைமைதாங்கும் எதிர்பார்ப்புக்களை ஒளியேற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய எதிர்பார்ப்புக் களை ஒளியேற்றும் அமைப்பின் செயற் பாட்டாளர் சிறியந்த மென்டிஸ் கூறுகை யில், தற்போது நாட்டில் புதிய அரசிய…
-
- 1 reply
- 719 views
-
-
ஹக்கீம், ரிஷாத் இணக்கப்பாட்டுக்கு வந்தாலே கல்முனை மாநகர சபை விவகாரத்திற்கு தீர்வு போராட்டங்களை கைவிடுமாறும் அமைச்சர் பைஸர் வேண்டுகோள் (எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்தால் கல்முனை மாநகரசபை விவகாரத்திற்கு தீர்வென்றை முன்னவைக்க முடியும். மேலும் கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்குமாறு பிரதமர் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசியல்வாதிகள் சிலர் குறிப்பிடும் கருத்து உண்மைக்குப் புறம்பானது. ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் அப்பிரதேச மக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்கவே…
-
- 0 replies
- 464 views
-
-
பிரச்சினைக்கு தீர்வுகண்டிருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி பிரச்சினையை தீர்க்க முடிந்திருந்தும் மஹிந்த ராஜபக் ஷ அதனை செய்யத் தவறியிருந்தார். எனவே தேசிய பிரச்சினைக்கு அவர் தீர்வு வழங்கியிருந்தால் இன்றும் அவர் ஜனாதிபதியாக இருந்திருப்பார். புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடுகள் செய்ய தயாராக இருக்கின்றனர். எனினும் ஊக்குவிப்பு கிடையாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று வியாழக்கிழமை இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில், அரசியலம…
-
- 0 replies
- 396 views
-
-
நாடு எப்போதோ பிளவுபட்டுவிட்டது- நாடாளுமன்றில் சரா எம்.பி. FacebookTwitterPinterestEmailGmailViber இன்று நாடு பிளவுபடப் போகின்றதெனக் கூச்சலிடும் இனவாத சக்திகளை நோக்கி ஒரு விடயத்தைப் பொறுப்புடன்கூறி வைக்க விரும்புகின்றேன். இந்த நாடு எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது. அதைப் பிரித்தவர்கள் தமிழ் மக்களல்ல, முஸ்லிம் மக்களல்ல, மலை யக மக்களுமல்ல, அதை மேற்கொண்டவர்கள் அரச அதிகாரத்துக்குள்ளிருந்த இனவாத சக்திகள்தான் என்பதை நான் இங்கு ஆணித்தரமாக முன்வைக் கிறேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்…
-
- 0 replies
- 496 views
-
-
கூட்டமைப்பு தொடருமா? FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். கழன்று சென்றுவிடுமென் பதை அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை ஈ.பி.ஆர். எல்.எப். விரும்ப வில்லை. எனவே இந்தத் தேர்தலில் தனித்தோ அல்லது ஒத்த தரப்பினருடன் இணைந்தோ பொதுச் சின்னமொன்றில் போட்டியிடவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. தமிழ் அரசுக்…
-
- 0 replies
- 383 views
-
-
கிளி., முல்லைத்தீவு பொலிஸாரை சந்தித்தது ஜரோப்பிய நாடாளுமன்றக் குழு FacebookTwitterPinterestEmailGmailViber கிளிநொச்சி,நவ.3ஜரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியக்குழுவினர் நேற்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாரை சந்தித்துக் கலந்துரையாடினர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.சந்திப்பின்போது மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் குற்றங்கள் மற்றும் பிரச்சி னைகள், பொலிஸாரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதில் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனநாயக்க மற்றும் வடக்கு மாகாண சிவில் மற்றும்…
-
- 0 replies
- 523 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல் நகர்வுகளை தடுப்பது குறித்து ஆஸி.பிரதமர் பேச்சு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதும், பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இந்த சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டு நேற்று காலை 7.10 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய பிரதமர…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கையில் பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் இலங்கையில் பெளத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும். இலங்கையின் வரலாற்றை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் சர்வதேச பெளத்த மாநாட்டில் வலியுறுத்தினர். பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைகளை வழங்க பின்னிற்கப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஏழாவது சர்வதேச பெளத்த மாநாடு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. அஸ்கிரிய மல்வத்து மாநாயக தேரர்களின் தலைமையில் 47 நாடுகளின் பெளத்த மதத் தலைவர்கள் மற்றும்…
-
- 0 replies
- 525 views
-
-
”இனவாதத்தை தூண்டி விடும் பௌத்த துறவிகள்” நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தினால் மாத்திரம் முடியாது. இதற்காக சகல இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அத்துடன் 2013ஆம் ஆண்டில் நாட்டில் மதவாதம் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பௌத்த துறவிகள் என்று சொல்லக்கூடியவர்களே நாட்டில் பல்வேறு இடங்களில் இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையமும்…
-
- 0 replies
- 301 views
-
-
வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் உடைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள் , மற்றும் பிள்ளையார் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு உள்ளன. குறித்த விக்கிரகங்களை இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து வீசியுள்ளனர். இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் செட்டிக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதேவேளை கடந்த மாதம் மன்னார் பகுதிகளில் இந்து ஆலயங்கள் மற்றும் ஆலயத்தினுள் இருந்த தெய்வ விக்கிரகங்கள்…
-
- 2 replies
- 799 views
-
-
‘கௌரவ பதவியே சின்னையாவுக்கு வழங்கினோம்’ சிவ நிரோஷினி “கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி பதவி வகித…
-
- 2 replies
- 460 views
-
-
பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது தேசத்துக்காக முன்வராமல் ஒளிந்தவர்கள் இல்லாதபோது தேசப்பற்றாளராகின்றனர் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பிரபாகரன் உயிருடன் இருக்கையில் தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் என அடையாளப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தேசத்துக்காக முன்வராமல் ஓடி ஒளிந்து மறைந்திருந்தனர். ஆனால் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு கூலி பணத்திற்கு போராட முன்வந்துள்ளதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தகாலத்தின் போது உயிருக்கு அஞ்சி எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து கொண்டு இருப்பவர் த…
-
- 3 replies
- 796 views
-
-
சிலாகிப்பதற்கு எதுவுமில்லை FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான விவாதம் மூன்றாவது நாளையும் தாண்டி நான்காவது நாளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை என்பதை அடுத்தே, விவாதம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த விடயத்தில் வாய்ப்பு வழங்கப்படுவது நல்லதே. முக்கியமான தருணம் ஒன்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்கு அது வசதியாக இருக்கும். இந்த விவாதத்தில் உரையாற்றிய…
-
- 0 replies
- 558 views
-
-
கீதாவின் எம்.பி. பதவி பறிபோனது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என கடந்த மே மாதம் 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆட்சேபித்து, கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கீதா குமாரசிங்க வெற்றிப்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சுவிட்சர…
-
- 0 replies
- 772 views
-
-
முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுபான்மை இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இரு சமூகங்களும் சிக்குப்படக்கூடாது என்ற வகையில், சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்பு, இந்தச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. “அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே”, “தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்”, “இனவாத செயற்பாடுகளுக்குப் பலியாகாதீர்கள்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட…
-
- 3 replies
- 695 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு இன்று கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார். மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. https://news.ibctamil.com/ta/physical-health/Brigadier-Thamizhalelvan-tenth-event பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கம்: த.தே.ம.முன்னணியின் முல்லை அலுவலகத்தில் …
-
- 0 replies
- 436 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் சிலர் கலந்து கொண்டமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசியல் கைதிகளின் விடுப்பை கோரியும் அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்க்கு மாற்றம் என்று கோரிக்கையை முன் வைத்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த விடயத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் அமைந்துள்ள சித்த மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டிருந்த கைதடி சித்த மருத்துவ பீட முஸ்லீம் …
-
- 0 replies
- 398 views
-
-
முன்னாள் புலிக்கு வாழும்வரை சிறை தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சுனில் தாபரை, சுட்டுக்கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவே, மேற்படி தீர்ப்பை வழங்கினார். முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வத்துரை கிருபாகரன் என்வருக்கே, இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தண்டனைக்கு மேலதிகமாக ஐந்து வருடகால சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்ததே, அவர்…
-
- 11 replies
- 1.3k views
-
-
அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்னிப் பெரு நிலப் பரப்பை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றுமுழுதாக விடுவிப்பதற்கான பெரும் தாக்குதல்களை மகிந்த அரசும் படைகளும் ஆரம்பித்த காலப்பகுதியான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று அதிகாலை வேளையில் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் திடீரென பயங்கரமாக குண்டு வீச்சுத்தாக்குதல்களை வான்படை மேற்கொள்கின்றது. அதிகாலை 5.40 மணியளவில் அந்தப் பகுதியிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது நடத்திய குண்டுவீச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்துடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதன்போது முஸ்லிம்களும் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழும் வகையிலான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவாறான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் க…
-
- 1 reply
- 583 views
-
-
கூட்டு எதிரணியினரின் நிலைப்பாட்டிலேயே நாம் பிரதமர் அறிவிப்பு; புதிய அரசியலமைப்்பு குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள் ளன. அதனை எட்டாகுறைக்கவோ அல்லது 15 ஆக கூட்டவோ எம்மால் முடியாது. வடக்கு,கிழக்கு இணைப்பினை பல வந்தமாக செய்ய முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண் டும். அத்துடன் தற்போது இடைக்கால அறிக்கை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இது தொடர்பான விவாதம் நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் பின்னரே …
-
- 2 replies
- 334 views
-
-
இந்தியத் துணை தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்தியவகை நுளம்பை டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் டெங்கு மற்றும் மலேரியாத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் டெங்குக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பரிசோதனையை மேற்கொள்ளும் குழு வினர் கடந்த வ…
-
- 1 reply
- 401 views
-
-
கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…
-
- 3 replies
- 675 views
-
-
‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’ “தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்க…
-
- 3 replies
- 856 views
-
-
மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் கைது மு.இராமச்சந்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் …
-
- 0 replies
- 276 views
-