Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏக்கிய இராச்சிய” என்பதற்கு பதிலாக “எக்சத் ரட்ட” என பாவியுங்கள். – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் அமைச்சரவை இன்று கூடவிருக்கும் சூழ்நிலையில்இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட “ஏக்கிய இராச்சிய” என்ற சொல் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒருவிதமான ஒற்றை ஆட்சி என்றே குறித்த சிங்கள சொல்லிற்கு மொழி பெயர்ப்புக்கள் தரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எந்தவிதமான சொல் ஜாலங்களின் ஊடாகவும் நாங்கள் உண்மையை மறைக்கக்கூடாது. ஒ…

  2. பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகளை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்த அரசு முனைவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகள் விவகாரத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில், உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளை தத்தமது அரசியல் தேவைகளுக்காக விடுதலைப் புலிகள் என ம…

  3. சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு மட்டக்களப்பு, சந்திவெளி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர். வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முஸ்லிம் வியாபாரிகள் வழமை போல் விற்பனைக்கான பொருட்களை வாகனங்களில் அங்கு எடுத்து வந்திருந்த வேளை வியாபாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை என அங்கு கூடிய சிலரால் தெரிவிக்கப்பட்டது . இதனைதையடுத்து அவர்கள் திரும்பி விட்டனர். இதனால் வழமைக்கு மாறாக வியாபார …

  4. ‘நிரந்தரப் பூட்டு திறக்கப்படாது’ -நடராசா கிருஸ்ணகுமார் “கிளிநொச்சி மாவட்டத்தில், நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குயின்ரஸ் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில், மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பொன்னாவெளி பாடசாலை, குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்பன நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பல்லவராயன்கட்டுப் பாட…

  5. பல கோடி ரூபா செலவில் கட்டப்பட்டு பாழடைந்து காணப்படும் காங்கேசன்துறை மாளிகை காங்கேசன்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாளிகையை வட மாகாண மக்களின் தேவைகளுக்காக வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகள் பலனளிக்கவில்லை. அந்த மாளிகை வளாகம் பாழடைந்து காணப்படுவதை இன்றும் அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் சுமார் 100 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாசஸ்தலம் 20 அறைகள், இரண்டு நீச்சல் தடாகங்கள், ஓய்வறைகள் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வாசஸ்தலத்தின் நிர்மாணப்பணிகள் 2012 ஆம் ஆண்டில் கடற்படையினரால் ஆரம்பிக்…

  6. யாழ். கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது! யாழ். கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்று இருவ யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கன்னியர் மட வீதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் வாள்கள் பொல்லுகளுடன் இளைஞர் குழுவினர் நின்றுள்ளனர். அவ்வீதியால் சென்ற பொலிஸார் இதனை அவதானித்ததுடன் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது அவர்கள் வாள்களுடன் இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் வைத்திருந்த வாள்களை கைப்பற்றியதுடன் குறித்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/4-young-people-arrested-o…

  7. தமிழ் அரசியல் கைதிகளை இனிமேலும் சோதிக்கலாமா? FacebookTwitterPinterestEmailGmailViber தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அர­சி­யல் கைதி­யொ­ரு­வர் 18 ஆண்­டு­க­ளின் பின்­னர் கொழும்பு மேல் நீதி மன்­றத்­தி­னால் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார். ஒரு மனி­த­னது வாழ்க்கை­யில் 18 ஆண்­டு­கள் என்­பது நீண்­ட­தொரு பகுதியா கும். அதி­லும் நிர­ப­ரா­தி­யான ஒரு­வர் இவ்வ ளவு காலத்­தைச் சிறை­யில் கழிப்­ப­தென்­பது மிகக் கொடு­மை­யா­னது. தீர்­வில்­லா­மல் தொடர்­கி­றது கைதி­க­ளின் விவ­கா­ரம் பொது­வா­கத் தமி­ழர்­கள் என்­றாலே தீண்­டத் த­கா­த­வர்­கள், வெறுக்­கப்­பட வேண்­டி­ய­வர்­கள் என்ற எண்­ணம் பெரும்­பான்மை இனத்­த­வ­ரின் மனங்­க­ளில் உரு­வா­கி­…

  8. நுவரெலியா மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேச சபைகள்; அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் மனோ நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகளை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா இத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார். நோர்வுட், மஸ்கெலியா, அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களுக்கே உள்ளூராட்சி தேர்தல் அதிகார சபையின் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மேற்படி புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படவுள்ளன. நுவரெலியாவில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவை ஆகிய இரண்டு பிரதேச சபைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள், சுமார் இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் பே…

  9. இழுத்தடித்தால் மீண்டும் பொறியில் சிக்க நேரிடும்! – இலங்கைக்கு மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை UN Logo புதிய அரசமைப்பை உருவாக்குவதிலும், தேர்தலை நடத்துவதிலும் இலங்கை அரசு தொடர்ந்தும் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து இழுத்தடிப்புச் செய்தால், சர்வதேசத்தின் பொறிக்குள் மீண்டும் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள், வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர மட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச களத்தில் நல்லாட்சி அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்த இராஜதந்திரிகளே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதானது, அரசின் கொள்கை வகுப்பாளர்களையும், ஆலோசகர்கள…

  10. நாடாளுமன்றில் சூடான விவாதம் அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று (30) ஆரம்பமானது. ‘காணி உரிமை இல்லை’ “நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு, தற்போதே தீர்வு காணபோகின்றீர்களா, அல்லது உங்களுடைய குழந்தைகளுக்கும் விட்டுச்செல்ல போகின்றீர்களா?”எனக் கேள்வியெழுப்பிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது என்றார். விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசமைப்புகள் கொண்டு…

  11. தொடர்கிறது யாழ் - பல்கலைக் கழக சமூகத்தின் நிர்வாக முடக்கல் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்களும், பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைச்சாலையில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்…

  12. பள்ளிவாசல் முன் பொலிசார் குவிப்பு ; வவுனியாவில் பதற்றம் வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த ஆர்ப்பாட்டம் போராட்டம் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  13. யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30) காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர். இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் . …

  14. கொழும்பு அரசுடன் இணைந்த பயணம் FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண சபை கொழும்பு அர­சு­டன் இணைந்து செயற்­ப­டா­விட்­டால் எமது பிர­தே­சங்­க­ளில் பெரும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளைச் செயற்­ப­டுத்த முடி­யாது. அத­னால் நான் அவர்­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­வது என்று தீர்­மா­னித்துள்­ளேன். இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­னே­சன். வடக்கு மாகாண விவ­சாய அமைச்சு அலு­வ­ல­கத்­தில் நேற்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு நடத்­தப்­பட்­டது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது- வடக்கு மாகாண சபைக்­குக் கடந்த காலங்­க­ளில் பெரும் திட்­டங்­கள் …

  15. '' மாவையை முதலமைச்சராக்கும் அரசின் நிகழ்சி நிரலில் த.தே.கூ.வின் முகமூடி அணிந்தோர் '' வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த் தேசிய முகமூடி அணிந்தவர்கள் இப்போதே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொள…

  16. அவுஸ்திரேலிய பிரதமர் வருகிறார் அவுஸ்திரேலிய பிரமர் மெல்கம் ட்ரன்புல், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று, கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலிய-பிரதமர்-வருகிறார்/175-206322

  17. இறைமையின் அடிப்படையில் தமிழர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவேண்டும் அரசியலமைப்பு சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் சுமந்திரன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சமஷ்டி அரசுக் கோரிக்­கை­யா­னது நாட்­டினை பிரிக்கும் விடயம் அல்ல. தமி­ழர்கள் சமஷ்­டியைக் கோரு­வதால் நாட்டை பிரிக்­கப்­போ­கின்­றார்கள் என்­பது தவ­றா­னது. சமஷ்டி அரசு தொடர்­பி­லான விட­யத்­தினை பெரும்­பான்­மை­யி­னரே அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்கள். ஒரு­மித்த நாடாக இருப்­ப­தற்கு சமஷ்டி அவ­சியம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமி­ழர்கள் இரண்­ட…

  18. புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை அர­சு உட­ன­டி­யாக நிறுத்­த­வேண்டும் வழி நடத்தல் குழு­வி­லி­ருந்து வில­க­வேண்­டி­யேற்­படும் என்­கிறார் தினேஷ் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் அறிக்­கை­யாகும். இது பக்­க­ச்சார்­பா­னது. எமது யோச­னை­களை தொடர்ந்து வழி­ந­டத்தல் குழு நிரா­க­ரிக்­கு­மாயின் நாம் அதி­லி­ருந்து விலக வேண்டி ஏற்­படும் என கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு தலை வர் தினேஷ் குண­வர்த்­தன சபையில் தெரி­வித்தார். அத்­துடன் வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையில் சுதந்­திரக் கட்­சி­யி­னதும் கூட்டு …

  19. தமி­ழர்கள் விடயத்தில் தவ­றி­ழைத்­துள்ளோம் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தீர்­வைக்­கா­ண­வேண்டும் என்­கிறார் கிரி­யெல்ல (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் அனைத்தும் நிரா­க­ரிக்­கப்­பட்டு அவர்­களின் அனைத்து விட­யங்­க­ளிலும் இரு பிர­தான கட்­சி­க­ளுமே தவ­றி­ழைத்­துள்­ளன. தனிச்­சிங்­க­ளத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்டம் தமி­ழீழம் வரை சென்­றது என்று சபை முதல்­வரும், நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல சுட்­டிக்­காட்­டினார். நீண்­ட­கால தேசிய பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்ள சிறந்த சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. காலம் தாழ்ந்­தி­ருந்­தாலும் இப்­போ­தா­வது தேசிய பிரச்­…

  20. அநா­ம­தேய சுவ­ரொட்­டி­க­ளினால் செங்­க­லடி நகரில் பதற்றம் விசம சக்­தி­களின் செயற்­பாடு குறித்து பொலிஸார் எச்­ச­ரிக்கை (செங்­க­லடி நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் பிர­தே­சங்­க­ளி­லுள்ள சந்­தை­களில் முஸ்லிம் வியா­பா­ரிகள் பொருட்­களை விற்­பனை செய்­யக்­கூ­டாது என சுவ­ரொட்­டி கள் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் ஒட்­டப்­பட்­டி­ருந்­த­மை­யினால் நேற்று திங்­கட்­கி­ழமை காலை செங்­க­லடி நக­ரிலும் பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது. செங்­க­லடி நகரில் வழ­மைக்கு மாறாக பெரு­ம­ளவு பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததால் பதற்­ற­மான சூழல் நில­வி­யது. சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­படும் முஸ்லிம் விய…

  21. ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கையில்.! ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகியோர் அடங்கிய குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர். ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஏற்ப இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அதன் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும், நாளைய தினம் வட மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் பிரதிநிதிகள் சபாநாயக…

  22. இந்தியாவுடன் பேச்சுவாரத்தை குறித்து மனம் திறந்தார் ரணில்.! (ஆர்.யசி) திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எண்ணெய்க் குதங்கள் குறித்து மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்காளவிரிகுடா நாடுகள் வளர்ச்சிகானாது திருகோணமலை வளர்ச்சியடையாது, எனினும் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் திருகோணமலை துறைமுகம் குறித்து ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திருகோணமலை துறைமுக திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் க…

  23. யாழ். பண்­ணைக் கட­லுக்­குள் கலக்கும் மலக் கழி­வு­ !! யாழ். பண்­ணைக் கட­லுக்­குள் யாழ்ப்­பா­ணம் சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் செலுத்­தப்­ப­டு­வது தொடர்­பில் எவ­ருமே கண்­டு­கொள்­ள­வில்­லை­யென அந்­தப் பகுதி மக்­கள் விசனம் தெரிவித்துள்ளனர். அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் அதன் அருகே உள்ள ஒரு வெற்று நிலப்­ப­ரப்­புக்­குள் தொட்டியினூடாக விடப்பட்டு நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் பண்­ணைக் கட­லுக்­குள் செலுத்­தப்­ப­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. மிக­வும் இர­க­சி­ய­மான முறை­யில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …

  24. 1990 ஒக்டோபர் 30…. இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள். 27 வருடங்கள் நிறைவடைந்தாயிற்று. புத்தளம் தொடக்கம் புல்மோட்டைவரை அனுராதபுரம் தொடக்கம் திஹாரி வரை அவர்களது அகதி வாசம் வீசிய காலங்கள் கனதியானவை. உடுத்த உடுப்போடு மாத்திரம் வந்திருந்தார்கள். கொஞ்சம் வசதி வாயப்புகளோடு வாழ்ந்தவர்கள் கொழும்பிலிருந்த தங்கள் உறவினர்களிடம் வந்து தஞ்சமடைந்தார்கள். தொழில்வான்மை கொண்ட ஒருவனை வெறுங்கையோடு ஒரு சந்தைக்குள் கொண்டு போய் விட்டாலும் அவன் பிழைத்துக்கொள்வான். அந்த நியதிக்கு அமைவாக தலைநகரப்பகுதிகளை வந்து சேர்ந்த வட பகுதி முஸ்லிம் ஏதிலிகள் சிலர் மெது மெதுவாக தங்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சிகளை தொடங்கினர். அவர்களில் பலர் மீண்டும் தமது தாயகம் மீண்டு குடிய…

    • 2 replies
    • 626 views
  25. கருணா அம்மான் விடுதலை.! வாகன முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றை மீளகையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த வருடம் கருணா அம்மான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…

    • 3 replies
    • 534 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.