Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (07-10-2017)

  2. மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டிப்பதன் மூலம் சமசமாஜ கட்சியை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்தினவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்…

    • 0 replies
    • 437 views
  3. நாட்டில் பொலிஸ் ஆட்சியை முன்னெடுப்பதற்கே எதிர்பார்க்கின்றனர் – நாமல் மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தாம் நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் சில ரினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது அராஜக நடவடிக்கையினை கட்டவிழ்த்ததாகவும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி நேற்று மாலை அம் பாந்தோட்டையில் நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை…

  4. வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம்-சி.வி.கே.சிவஞானம் வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 107 ஆவது அமர்வு பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உரையாற்ற முற்பட்ட போது அதற்கு அனுமதியளிக…

  5. முல்லைத்தீவை மீட்டெடுப்போம் வாரீர்! Share வடக்கு மாகா­ணம் எந்­த­ளவு தூரத்துக்கு இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­கிற அதிர்ச்­சி­க­ர­மான தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டம் இந்த இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­த­லால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அங்கு இரு பொது­மக்­க­ளுக்கு ஓர் சிப்­பாய் என்­கிற நிலை­யில் படை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது உல­கில் எங்­குமே நடை­பெற்­றி­ருக்­காத அதிர்ச்­சி­யூட்­டும் படைக்­கு­விப்பு. நல்­லாட்சி, நல்­லி­ணக்­கம் என்று கூறிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்த மைத்­திரி – ரணில் அர­சும்­கூட வட…

  6. கோத்தபாய ராஜபக்ஷ கைது? Report us Vethu 3 hours ago முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்படாத பிரபல ராஜபக்சர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் நீண்ட காலமாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவர் கைது செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் அரசாங்க சொத்துக்களை தவறாக கையாண்டமை தொடர்பில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்…

    • 4 replies
    • 444 views
  7. புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை கஞ்சா பொதிகள் மீட்பு கற்பிட்டி, உச்சிமுனை போட்டு வாடிய பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை கேரளக் கஞ்சாப் பொதிகளை, நேற்று (06) மீட்கப்பட்டுள்ளதாக, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் கேரளக் கஞ்சா புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி கடற்படையினர், கற்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியை சுற்றிவளைத்த கற்பிட்டி பொலிஸார், போட் வாடிப் பகுதியில் மூன்று உரைப் பைகளில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட கேரளக் கஞ்சாவை மீட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின் போது, மூன்று உரை…

  8. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி- தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடு, வாக்குவாதம் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஸ்டி முறை இருப்பதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கூறியமை தொடர்பாக கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி இருப்பதாகவும் அது பற்றி வடமாகாண முதலமைச்சருக்கு எடுத்துக் கூற வேண்டும் எனவும் துரைராஜசிங்கம் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். இது தொடர்பாக கட்சியின் ஏனைய மூத்த உறுப்பினர்கள் துரைராஜசிங்கத்துடன் முரண்பட்டுள்ளனர். எந்த அடிப்படையில் சமஸ்டி இருக்கின்றது எனவும் ஏன் பொய்யான தகவல்களை மக்களுக்கு கூறுகின்றீர்க…

  9. வவுனியா பாலாமைக்கல் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற மாணவர்கள் மீது இன்று நண்பகல் 12.30 மணியளவில் இளைஞர் குழுவொன்று தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு மாணவனும் 5 மாணவிகளும் இணைந்து பாலமைக்கல் கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் எங்கே செல்கின்றீர்கள்? என வினாவியுள்ளனர். இதன்போது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையே சில கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளது. பின்னர், அந்த மாணவர்கள் மீது குறித்த இளைஞர் குழு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பி…

  10. சம்பந்தன் ஐயா அவர்கள் வடக்கோடு கிழக்கை எப்படியாவது இணைத்து விட வேண்டும் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் மனதை வெற்றிகொள்வதற்காக பல ஆசை வார்த்தைகளை பேசிவருகின்றார். அதன் உச்சகட்டமாக இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தேனொழுக பேசுவதைப் பார்த்து சிலபேருக்கு புல்லரிப்பு ஏற்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சம்பந்தன் ஐயா அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்களின் மீது கருணைகொண்டவராக இருந்திருந்தால், முஸ்லிம்கள் சமீப காலங்களாக இனவாதிகளினால் பாதிக்கப்பட்ட போது, முஸ்லிம்களின் மீது பாசம்கொண்டவர் என்பதற்கு அப்பால்,நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலாவது பாராளுமன்றத்திலோ,அல்லது வேறு இடங்களிலோ பேசி தீர்வை பெற்றுத்தந்தாரா? என்ற கேள்விக்கு பதில் இல்…

    • 0 replies
    • 727 views
  11. சூசையின் மனைவியை நடுக்கடலில் வெட்டி வீசியிருக்க முடியும் சரணடைந்தவர்கள் உயிர்தப்பியமைக்கு இவரே சான்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுடனான விசேட செவ்வி விடு­தலைப்புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை உயி­ருடன் பாது­காக்கும் அமெ­ரிக்­காவின் முயற்­சி தோல்­வி­ய­டைய செய்­யப்­பட்­டது. அதி­லி­ருந்து முன்­னேற்றம் கண்டு புலி­களின் அனைத்து மட்­டத்­தி­லான உறுப்­பி­னர்­களும் உயி­ரி­ழக்கும் வரை போர் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. சர­ண­டைந்­த­வர்கள் அனை­வரும் உயிர் தப்­பி­னார்கள். வெள்ளைக்­கொ­டி­யுடன் புலிகள் இயக்­கத்தில் எந்­த­வொரு தலை­வரும் வர­வில்லை என வன்னி பாது­காப்பு தலை­மை­ய­கத்தின் முன்னாள் கட்­ட­ளை­ய­தி­கா­ரியும் 53 ஆவது படை­ய­ணியின் தள­ப­தி­யு…

    • 3 replies
    • 494 views
  12. அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/police-crowd-in-hambantota மத்தள விமான நிலைய விவகாரத்துக்கு எதிராக அம்பாந்தோட்…

    • 8 replies
    • 530 views
  13. வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் Share வடக்­கில் போரின் பின்­ன­ரும் இரா­ணு­வத்­தின் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும். துரி­த­மாக இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க அழுத்­தம் கொடுக்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் பிரிட்­ட­னின் ஆசிய பசு­பிக் பிராந்­தி­யத்­துக்­கான அமைச்­சர் மார்க் பீல்ட்.இலங்கை வந்­துள்ள மார்க் பீல்ட் நேற்று வடக்கு மாகாண ஆளு­ந­ர் ரெஜி­னோல்ட் குரே­யைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். அதன்­போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார். வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய நில­மை­கள், …

    • 4 replies
    • 832 views
  14. கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி கலாநிதி. ஜயம்பதி எம்.பி. கேசரிக்கு செவ்வி நேர்­காணல் : ஆர்.ராம் படப்­பி­டிப்பு : ஜோய் ஜெயக்­குமார் நாடு பிளவடையாது அதிகாரங்கள் பகிரப் படவேண்டும். என்பது எனது நிலைப் பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற் கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போதும் கடும்போக்காளர்களின் சிறைப்பிடிக்குள் உள்ளார் என ஐக்­கிய இட­து­சாரி முன்­னணியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­ வாக்க செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ள முக்­கி­யஸ்­த­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன கே…

    • 1 reply
    • 481 views
  15. சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.உணவு விடுதி ஒன்றின் உரிமையாளரான குறித்த முன்னாள் போராளியின் உணவு விடுதிக்குள் சாவகச்சேரி பொலிஸார் அத்துமீறி உள் நுளைந்து அட்டூளியம் புரிந்தமையை எதிர்த்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார், கடந்த செவ்வாய்க்கிழமை சிவில் உடையில் சென்று குறித்த உணவு விடுதியில் மதுபானம் கேட்டுள்ளனர். ஆனாலும், அங்கிருந்த 70 வயத…

  16. கிழக்கு மாகாணத்திலும் தமிழ் முதலமைச்சர் ஜம்பதுக்கு ஜம்பது என்ற விகிதாசார முறையின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு தமிழர் முதலமைச்சராக வருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் தாண்டியடி கிராமத்தில் 25 வறிய மக்களுக்கான மானியடிப்படையிலான வீடமைப்புத் தொகுதிக்கான அடிக்கல்லினை நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பொருத்தமட்டில் 60 க்கு 40 அல்லது 70 க்கு 30 என்ற வீகிதாசார முறையானது வெற்றியை கொடுத்திருக்காது. ஆனால் 50 க்கு 50 எ…

  17. வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை!! – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்(கட்டுரை) புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன் வடகிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டியில்லாத, அதிகார பரவலாக்கமில்லாத, ஓர் அரசியலமைப்புக்கான முன்மொழிவாக அமைந்துள்ளது. ஆனால் இத்தகைய வரைபு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமையும் என்ற எதிர்பார்க்கையை தமிழ் தரப்பும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வந்த சந்தர்ப்பத்தில் அதிக ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியாய…

  18. ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் இலங்கை செல்லவுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் ( Pablo De Greiff ) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் பத்தாம் திகதி இலங்கைக்கு செல்லும் அவர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டு முன்னேற்றங்களை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் உட்பட்ட விடயங்களிற்கு தீர்வு காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்…

  19. இளைஞனை கன்னத்தில் அறைந்த பொலிஸ் : வைரலாகும் காணொளி..! நேற்று கூட்டு எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகின்றது. அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நேற்று காலை ஹம்பாந்தோட்டையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ் ஆர்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கையளித்திருந்தனர். இதன்போது பொலிசாரின் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஆர்ப்ப…

  20. 11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம் Share 11 கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை முன்­பாக நாளை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் போராட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசிய பண்­பாட்டு பேரவை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. இது தொடர்­பில் பேரவை அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் தொற்று நோய்­கள் மூல­மான இறப்­பு­க­ளைத் தடுப்­ப­தற்கு அதி­யுச்ச தொற்று நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும். பொதுக் கட்­ட­டத்­தில் உள்ள …

  21. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார இரத்து, பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்தல் என்பன யாருடைய யோசனை? அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மக்களின் வாக்குகள் மூலமே தற்போது இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுகிறார். எனினும், ஜனாதிபதி குறித்த பதவிக்காலத்திற்கு பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் எட்டாம் பிரிவில் மூன்றாவது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்றம் மூலம் கிடைத்த அனுபவங்களை நோக்கும் போது, இது எந்தளவு நியாயமான பிரேரணை என்ற கேள்…

  22. நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு மத்­தள விமான நிலையத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் இன்று (நேற்று) நீதி­மன்றின் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து அமை­தி­யான முறை­யி­லேயே ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். எனினும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வாளர் சில­ரினால் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தமது அரா­ஜக நட­வ­டிக்­கை­யினை கட்­ட­விழ்த்­த­தாக அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி நேற்று மாலை அம்­பாந்­தோட்­டையில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொ…

  23. இந்திரஜித் குமாரசுவாமி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நுன் கடன் திட்டம் தொடர்பில் ஆராய்ந்தார் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடினார். நுன் கடன் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நுன் கடனைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட…

  24. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வௌியீடு தகவலறியும் சட்டத்திற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு மெகசின், வெலிக்கடை, அனுராதபுரம், போகம்பர , நீர்கொழும்பு, மஹர, பொலன்னறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.. மெகசின் – 79 வெலிக்கடை – 3 கொழும்பு ரிமாண்ட் – 3 அனுராதபுரம் – 20 …

  25. நீதி அமைச்­சர், சட்­டமா அதி­ப­ரு­டன் கூட்­ட­மைப்பு இன்று அவ­சர பேச்சு Share அநு­ரா­த­பு­ரத்­தில் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்கை தொடர்­பில், நீதி அமைச்­ச­ரு­ட­னும், சட்­டமா அதி­ப­ரு­ட­னும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று அவ­சர சந்­திப்பை மேற்­கொள்­ள­வுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இந்­தப் பேச்­சுக்­களை இன்று முன்­னெ­டுக்­க­வுள்­ளார். அமெ­ரிக்­கா­வால் நாடு திரும்­பி­யுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.