ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
தம்பதியைத் தாக்கிவிட்டு 17 பவுண் நகை கொள்ளை Share வட்டுக்கோட்டை பிளவத்தையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு வீடு ஒன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு 17 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கொள்ளையர்கள் வாள்கள், பொல்லுகளுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். …
-
- 1 reply
- 438 views
-
-
யாழில் 37 பேருக்கு பிணை, 10 பேருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களான 37 பேரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது அவர்களை பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் பெருமாள் சிவகுமார் அனுமதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி துன்னாலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய தினேஷ்குமார் என்ற இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார். இதனை…
-
- 0 replies
- 392 views
-
-
ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த இரு தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருலப்பனை, பூர்வாராம விகாரையின் அரம்பேபொல ரத்னசார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான மஹவாதுவ, வாதுவை பகுதியைச் சேர்ந்த பிரக…
-
- 0 replies
- 226 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு: தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது. தமிழர் தாயகம், இலங்கைத் தீவு …
-
- 3 replies
- 433 views
-
-
புதுக்குடியிருப்பு வீடொன்றில் துப்பாக்கிகள் இன்று மீட்பு IMAGE Share புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இன்று மாலை நடந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சுற்றுவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துகள், துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்கப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/34185.html
-
- 3 replies
- 371 views
-
-
மோசமான நிலை தொடரின் பெரும் சோகமே ஏற்படும் தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவந்துள்ளனர். அவ்வாறான ஆயுதப்போராட்டத்திற்கான காரணிகள் இன்ன மும் நீடித்து வருகின்றன. எனவே, அவற்றுக்கு விரைவாக தீர்வுகாணப் படவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில் அதாவது போலி நாட்டுப்பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைம…
-
- 0 replies
- 383 views
-
-
ஜி.எல்.பீரிஸுக்கு விளக்கம் கொடுத்த சம்பந்தன் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தென்னிலங்கை மக்களை தவறாக வழிநடத்திச் செல்லாதீர்கள் என முன் னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நேரடியாக வலியுறுத்தியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் விசேட விழாவில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷின் சபாநாயகர் கலாநிதி. ஷெரின் ஷர்மின் சௌத்தி வருகை தந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை …
-
- 0 replies
- 423 views
-
-
யாழில் கூட்டமைப்புக்கு எதிர்ப்பாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், யாழ்ப்பாணத்துக்கான அங்கத்தவர்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாணத்தில் இந்நாட்களில் எதிர்ப்புக் காணப்படுகின்றதெனத் தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகள், வடக்கில் முழுமூச்சாக இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த பசில், அதுபற்றி, மக்கள் கரிசனை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு, தனது விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், உட்கட்சி மோதல் காணப்படுவதை உணர்ந்தாரெனவும் குறிப்பிட்டார். "எங்களது காலத்தில், அபிவிருத்திப் பணிகளை, மிகப்பெரிய அளவில் மேற…
-
- 0 replies
- 218 views
-
-
இந்தியப் பிரஜைகள் இருவர் கைது ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆண்ணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்தியப்-பிரஜைகள்-இருவர்-கைது/175-204948
-
- 0 replies
- 197 views
-
-
''புதிய அரசியலமைப்பு என்பது வெறும் மாயை'' அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் பல்வேறு குழப்பமான விடயங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது. அத்துடன் 13ஆம் திருத்தம் முற்றாக நிறைவேற்றப்பட்டால் நாடு சமஷ்டி ராஜியமாக மாறுவதை யாராலும் தவிர்க்க முடியாது என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளின் மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 362 views
-
-
மூன்று நாள் விவாதம் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசியல் யாப்பு சபை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக கூடவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் நவம்பர் மாதம் 01ஆம் திகதியும் இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை முழுநாள் விவாதம் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ளதாக அரசியல் யாப்புசபையின் மேலதிக செயலாளர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம்…
-
- 0 replies
- 194 views
-
-
"62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் "62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசை உருவாக்கப்பாடுபட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து “ 62 இலட்சம்பேர் தயார் ” என்ற கோஷத்தின் கீழ் கண்டியில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமானது கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25290
-
- 0 replies
- 224 views
-
-
கருணாவை வளைத்துகிழக்கில் குதிக்கிறதுராஜபக்ச அன் கோ Share வடக்கில் மூன்று நாள்கள் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ச அடுத்த மாதம் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கவுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு தயாராகிவரும் சூழலில் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் வாக்குகளை வேட்டையாட முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாட்டின் நாலாபுறத்திலும் தீவிர பரப…
-
- 0 replies
- 206 views
-
-
மாகாண தேர்தலுக்கான சாத்தியம்2018ஆம் ஆண்டிலும் மிகக் குறைவு Share பதவிக் காலம் முடிவடைந் துள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகளில் பதவிக் காலங்கள் முடிவடைந்துள்ளன. பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருந்தது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் ஊடாக அதனை ஒத்திப்போடுவதற்கு முயற்சிக…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கையில் 1,333 பேர் தஞ்சம்- அமைச்சர் மகிந்த சமரசிங்க தகவல் Share இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதகரத்தின் பொறுப்பில் ஆயிரத்து 333 வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துறைமுகங்கள் மற்றம் கப்பல் துறை அமைச்சர் தெரித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ”ஆயிரத்து 333 பேரில் 605 பேர் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஏனையவர்கள் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகின்றது. அரசியல் தஞ்சம் உறுதிப…
-
- 0 replies
- 202 views
-
-
வீடுகள் மீது தாக்குதல் Share அம்பாறை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வீடுகள் மீது, இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, எட்டுப் பேர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 83 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் கிராமவாசிகள் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பொலிஸார் அந்தப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 0 replies
- 323 views
-
-
அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவி…
-
- 2 replies
- 759 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ் (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை அவர் விரைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரனுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25263
-
- 6 replies
- 411 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது. விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங…
-
- 14 replies
- 594 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண சபையின் அரசியல் அறம் தாழ்ந்துவிட்டது Share வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணைபோனதன் மூலமாக வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். தாவடி வேதவிநாயகர் விளை யாட்டுக்கழகத்தின் வாணிவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழா வில் முதன்மை விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றிய…
-
- 1 reply
- 475 views
-
-
’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’ இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று 03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்க…
-
- 6 replies
- 524 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (03-10-2017)
-
- 0 replies
- 304 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்போ கூட்டாட்சியோ கிடையாது அனைவரும் அதற்கு இணக்கம் Share வடக்கு -– கிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சித் தீர்வை வழங்குதல் என்ற யோசனை புதிய அரசமைப்பில் ஒருபோதும் உள்வாங்கப்படாது என்றும் அவ்வாறு உள்வாங்குவதில்லை என்று அனைவரும் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் வடக்கு – கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்துதான் நாட்டைக் கட்டி…
-
- 1 reply
- 328 views
-
-
கூட்டாட்சிக்கு இடமில்லை என்றால் எமது வேணவாக்கள் எப்படி நிறைவேற்றப்படும்? Share அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூட்டாட்சிக்கு இடமில்லை என்கிறார். இந்த நிலையில் எமது மக்கள் ஏற்றுக் கொள்ளும் – எமது மக்களின் வேணவாக்களை முழுமையாக்கும் புதிய அரசமைப்பு எப்படி உருவாகும் என்பதே சந்தேகமாக உள்ளது. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போரின் பின்னர் வடக்கு – கிழக்கில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம், தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 268 views
-
-
இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895
-
- 3 replies
- 339 views
-