ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சிங்களவர் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவாகிவிட்டது பொதுபல சேனா சூளுரை Share இது சிங்கள நாடு. சிங்களவர்களே நாட்டை ஆள வேண்டும். வேறு எவரும் எமது நாட்டில் தலையிடுவதற்கு அனுமதிக்க முடியாது. இப்போதுள்ள நிலையில் சிங்களவர்கள் ஆயுதம் ஏந்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நாட்டில் சிங்களப் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சூளுரைத்துள்ளது பொதுபலசேனா அமைப்பு. புதிய அரசமைப்புத் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பு நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்த…
-
- 5 replies
- 771 views
-
-
அத்துமீறுகிறார் ஐ.நா. ஆணையர்பொதுச் செயலாளரிடம் முறையீடு Share ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அத்துமீறி நடந்து கொள்வதாக ஐ.நா. பொதுச் செயலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் பூகோள இலங்கையர் அமைப்பின் மூலமாக இந்த முறைப்பாடு ஐ.நா. பொதுச் செயலருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அமைப்பின் செயலர் வசந்த கீர்த்திரன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பின் பின்னர் பூகோள இலங்கையர் சார்பில் கருத்…
-
- 0 replies
- 239 views
-
-
நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட தேரர் மீது பிடியாணை Share அரச தலைவர் செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டிருந்த ஜாதிக பலசேனா அமைப்பின் செயலர் வட்டரக்க விஜித தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்புக் கோட்டை நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரத்ன பிறப்பித்திருக்கிறார். வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன் அதன் பிரதியை சட்டமா அதிபருக்கும் அனுப்…
-
- 0 replies
- 324 views
-
-
மக்களின் சொத்து தியாகி திலீபன் Share கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத் தில் தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் பெருமெடுப்பில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்துள்ளது. தனது இனத்துக்காகத் தன்னையே ஆகுதியாக்கிக்கொண்ட ஒரு இளைஞனின் நினைவுகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் இனம் மீட்டெடுத்திருப்பது கவனத்துக்குரியது. இன்றைய தமிழ்த் தலைமுறைக்கு திலீபனின் நினைவுகள் மிக முக்கியமானவை. தமிழர்களது மிகக் குறைந்தளவு கோரிக்கை கள்கூட ஆட்சியாளர்களாலும், பிராந்திய வல்லரசாலும் எவ்வாறு துச்சமாக மதிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும், அவர்களுக்க…
-
- 0 replies
- 267 views
-
-
சக்தி டிவி செய்திகள் 27 09 2017 , 8PM
-
- 0 replies
- 353 views
-
-
தமிழரசு கட்சியை ஓரம் கட்டும் திட்டத்தில் விக்னேஸ்வரன் ? வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளும் இணைந்து இலங்கை தமிழரசு கட்சியை ஓரம் கட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளை மேலும் நகர்த்துவதாற்காகவே திட்டமிட்டு இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு – பழுகாமத்தில் நேற்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். https://news.ibctamil.com/ta/interna…
-
- 0 replies
- 285 views
-
-
சிவகரனுக்கு அழைப்பு? -எஸ்.றொசேரியன் லெம்போட் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் - மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை…
-
- 0 replies
- 405 views
-
-
20 நோயாளிகளின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேற்றம் தம்புள்ளை வைத்தியசாலையில், சுமார் 20 நோயாளிகளின் உடலிலிருந்து, ஒருவகை புழுக்களை, சத்திர சிகிச்சையின் ஊடாக வெளியேற்றியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ள மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளர்களின் உடலிலிருந்தே, இவ்வாறு புழுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயமுள்ளதெனவும் அவர் கூறினார். தம்புள்ள, சீகிரியாவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்தே அதிகமான நோயாளர்கள், வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாகவும் இவர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது, அவர்களது உடலில் ஒருவகை புழ…
-
- 0 replies
- 234 views
-
-
கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரை பொழுது போக்கு பிரதேசம் கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரைப் பகுதியை பொழுது போக்கும் கடற்கரைப் பகுதியாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைப்பெற்ற போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் மேலதிக புகையிரத வீதியினை நிர்மானிப்பதற்கான இடவசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் இத் திட்டத்தின் மூலம் கடலரிப்பினை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 250 views
-
-
தேநீர் 20 ரூபா, அப்பம் 15 ரூபா ; நல்லாட்சியில் விலை உயர்கிறது சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் உணவு மற்றும் தேநீருக்கான விலையை அதிகரித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் நேற்றுமுன்தினம் அதிகரித்துள்ள நிலையில் தாம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி பால் தேநீர் ஒன்று 40 ரூபாவுக்கும் தேநீரொன்று 20 ரூபாவுக்கும் மதிய உணவு பொதி ஒன்றின் விலை 130 ரூபாவுக்கும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் …
-
- 0 replies
- 273 views
-
-
தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவுள்ள அரசியலமைப்பு சபை புதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக இன்று அலரி மாளிகையில் கொழும்பு மாநாகர சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற 39 இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.vi…
-
- 0 replies
- 287 views
-
-
வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமாரைத் தப்பவைப்பதற்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார். வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இளஞ்செழியன் தனது 245 பக்க அறிக்கையை வாசிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்பவைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக விமர்சனம்செய்துள்ளார். அவரது அறிக்கையில், வித்தியா படுகொலை வழக்கின் எதிரியான சுவிஸ்குமாரை தப்பவைப்பதற்கு விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருக்கும்போது, அங்குசென்ற விஜயகலா மகேஸ்வரன் கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களைக் கோரியமை நல்ல விடயம். ஆனால், சந்தேகநபரை…
-
- 2 replies
- 685 views
-
-
கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னய்யா நேற்றைய தினம் 26ம் திகதி தனது 55ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 55 வயதுடன் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியது வழமையான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினால் பதவிக் காலத்தை நீடிக்க முடியும், எனினும் ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே டிரவிஸ் சின்னய்யாவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதியாக டிரவிஸ் சின்னய்யா நியமிக்கப்பட்டி…
-
- 3 replies
- 346 views
-
-
சாரியை ஏந்திய விவகாரம்: செயலாளருக்கு இடமாற்றம் திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார். இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பத…
-
- 2 replies
- 532 views
-
-
இறுதி அறிக்கை வரும்வரை பொறுமை காத்தல் அவசியம் “தற்போது வெளிவந்திருப்பது இடைக்கால அறிக்கை. இதுவரை பொறுமைகாத்த நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுமை காத்தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்னரே – இடைக்கால அறிக்கையை நாம் தூக்கி எறிவது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. புதிய அரசமைப்பு முயற்சியை நாமே குழப்பிக் கொண்டதாக இருக்கக் கூடாது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். புதிய அரசமைப்பு முயற்சியில் அமைக்கப்பட்ட உபகுழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்கியிருந்தார். இந்த …
-
- 3 replies
- 542 views
-
-
சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…
-
- 1 reply
- 292 views
-
-
வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள¸; ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று…
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ் இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/arti…
-
- 1 reply
- 312 views
-
-
தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம் Share கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் சற்றுமுன் நடந்த தொடருந்து விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பற்ற இடத்தில் தொடருந்துத் தடத்தைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இதுவரை இனங்காணப்படாத நிலையில், கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/32343.html
-
- 2 replies
- 404 views
-
-
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் (ஆ.பிரபுராவ் ) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியி…
-
- 0 replies
- 232 views
-
-
ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்பாடும் விக்கினேஸ்வரனின் பிரிவினை செயற்பாடுகளுமே அதிகார பகிர்வு தொடர்பில் அச்சத்துடன் சிந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிய அதிகார பகிர்வானது நாட்டில் பிளவினையே உருவாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. அதிகாரப்பகிர்விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் தீர்மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தி…
-
- 1 reply
- 791 views
-
-
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு ஒக்டோபர் 5இல் (எம்.சி.நஜிமுதீன்) 2017 ஆம் கல்வியாண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளன. இதேவேளை க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன. அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் பரீட்சை பெறுபேறுகள் தாமதப் படுவதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக்கொண்…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…
-
- 0 replies
- 365 views
-
-
வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் துணைபோகார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ துணைபோக மாட்டார்கள். கிழக்கு முஸ்லிம்க ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் ப।ின் செயற்பாடு அதிருப்தி அளிக்கின்றது. நாம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முஸ்லிம் இளைஞர்கள் விரக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஹரிஸ் நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டு வர…
-
- 1 reply
- 268 views
-
-
அமைச்சரவையில் வாக்குவாதம் (நமது நிருபர்) பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரு அமைச்சர்களும் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டனர். பௌத்த சாசன அமைச்சுக்குள் வரும் பௌத்த துறைசார்ந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான காணியில் நகர அபிவிருத்திக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் காமினி …
-
- 0 replies
- 365 views
-