ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 22 08 2017 , 8PM
-
- 0 replies
- 415 views
-
-
தனியறையில் அடைத்து வைப்பதால் மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம் தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன உயிரிழந்தார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை …
-
- 0 replies
- 174 views
-
-
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்! ஈழத் தமிழர்க்கான செயல்பாட்டாளர்களின் இதயத்தில் முள்ளைப் போல பதிந்த இன்னொரு சம்பவம், தமிழீழத்தின் பிரபல மிருதங்க வித்வானாக விளங்கும் கணேசசுந்தரம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகும். விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் இயக்குநராக தணிகைமாறன் எனும் கண்ணதாசன் பணியாற்றினார…
-
- 2 replies
- 460 views
-
-
பத்திரிகைகளின் கண்ணோட்டம் 22-08-2017
-
- 0 replies
- 297 views
-
-
உங்களால் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? டெனீஸ்வரன் கேள்வி ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள் என வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் ரெலோ கட்சியின் உயர்மட்டக்குழு கூடியிருந்த நிலையில் கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தாவினால் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்க…
-
- 2 replies
- 536 views
-
-
சைக்கிள் திருடர் கைது -செல்வநாயகம் கபிலன் ஹேரோய்ன் வாங்குவதற்கு சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை, இன்று (22) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, திருடி விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 31 சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். குறித்த நபர், யாழ் நகரப்பகுதிகளில் தரித்துவிடப்படும் சைக்கிள்களை லாவகமான முறையில் திருடி வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில், அதிகளவான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப…
-
- 0 replies
- 218 views
-
-
வடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியப்பட்டார் டெனீஸ் வடக்கு மாகாண அமைச் சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவ ரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதல மைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ் வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமை யால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங் குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குர…
-
- 1 reply
- 449 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 24ஆம் நாள் தேர்த்திருவிழாவும், 25ஆம் நாளான நேற்று தீர்த்தோற்சவமும், கொடி இறக்கமும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நல்லூர் திருவிழா குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார அலுவலர் Jim Russo (ஜிம் ருஸ்ஸோ) ஒரு கருத்தை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவங்கள் மற்றும் வரலாறு என்பவை மிகச் சிறப்பான ஒன்று. இதை பார்ப்பதற்கு எனக்கு அதிஷ்டம் கிடைத்துள்ளது. எனது யாழ்ப்பாண நண்பர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கம்…
-
- 0 replies
- 298 views
-
-
அரசியல் கைதிகளை என்னால் விடுதலை செய்ய முடியாது; சுவாமிநாதன் அதிரடி அரசியல் கைதிகள் விடயத்தில் ஸ்ரீலங்காவின் நீதியமைச்சே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், தன்னுடைய அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையெனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தன்னுடைய அமைச்சின் கீழ் இந்த விடயத்தைக் கையாள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமாயின் கைதிகள் விவகாரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க முடியுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பல்கலைக…
-
- 2 replies
- 418 views
-
-
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும், ஜப்பானும் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, யார் மிகச் சிறந்த பங்காளரோ அவருடன் இணைந்து கூட்டு முயற்சியாக அரசாங்கம் செயற்படும். ஆனால் திருகோணமலைத் துறைமுகம் யாருக்கும் விற்கப்படாது. நீண்டகால குறுகிய கால நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்கள் மீளச் செலுத்தப்பட்டு, வருமானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.…
-
- 0 replies
- 288 views
-
-
ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல முன்னர், சிறிலங்கா கடற்படையின் ‘சமுத்ர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன் இணைந்து, ஜப்பானிய போர்க்கப்பலான அமகிரி பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. பாதுகாப்பு அணி II இன் தளபதி கப்டன் கோகே சாய்டோ தலைமையிலான ஜப்பானிய கடற்படை அணி,சிறிலங்கா கடற்படையுடன் நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில…
-
- 0 replies
- 353 views
-
-
- Anojan Thirukkethesewaranathan- இக் கேள்வி முழுவதும் இனவாதம் கொப்பளிக்கிறது. நீ தமிழனா என்ற உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னர் சில விடயங்கள் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாக வருகிறேன். தவறான காரியங்கள் யார்செய்தாலும் தவறு. தனக்கு உரிமையில்லாத காணியை முஸ்லிம் அபகரித்தாலும் தவறு தமிழன் அபகரித்தாலும் தவறு சிங்களவன் ஆக்கிரமித்தாலும் தவறு. தமிழன் பெண்களை ஏமாற்றினாலும் தவறு முஸ்லிம் ஏமாற்றினாலும் தவறு சிங்களவன் ஏமாற்றினாலும் தவறு. தவறான ஒரு செயலை எவன் செய்தாலும் தவறு. அச்செயல் நில அபகரிப்பாகட்டும் பெண்களை ஏய்ப்பதாகட்டும் பாரபட்சம் பார்த்து வேலை வழங்குவதாகட்டும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாகட்டும் எல்லாம் தவறு. அண்மையில் …
-
- 1 reply
- 409 views
-
-
மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம்காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். மன்னார் கடல்படுக்கையில் 13 துண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் எட்டுத் துண்டங்களுக்குசர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இது வெற்றியளித்தால் சிறிலங்காவுக்கு நன்மையாக இருக்கும். ஏற்கனவே இந்தியாவின் கெய்ன் என்ற நிறுவனம் குறித்த கடல் படுக்கையின் 2ஆவது கடல் படுக்கையில் அகழ்வை மேற்கொண்டது. எனினும், உலகளாவிய எரிபொருள் விலைச் சரிவை அடுத்து, இந்த துண்டத்தில் எரிவாயு அகழ்வு முயற்சியில் இருந்து விலகுவதாக, 2015ஆம் ஆண்டு கெய்ன் இந…
-
- 1 reply
- 345 views
-
-
கட்டுநாயக்கவில் பிரான்ஸ் நாட்டு பொலிஸ் அதிகாரி கைது தனது மகனுக்கு பரிசு வழங்குவதற்காக எருமை மாட்டின் மண்டை ஓடு மற்றும் கொம்புகளையும் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த பிரானஸ் நாட்டவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரின் பயண பை ஸ்கேன் இயந்திரம் ஊடாக பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நபர் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரான்ஸ் நாட்டில் பிரதான உயர் பொலிஸ் அதிகாரியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மகனின் கோரிக்கைக்கமைய இவற்றைக் கொண்டு …
-
- 1 reply
- 213 views
-
-
விஜேதாஸ தொடர்பில் விரைவில் முடிவெடுப்பேன் பிரதமர் அறிவிப்பு; பதவி நீக்கம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுத்ததாகவும் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ்) விஜேதாஸ ராஜபக் ஷ பிரச்சினைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு அளித்த கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆகவே இனிமேல் தீர்மானம் எடுக்கும் தருணம் வந்துள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தி விரைவில் விஜேதாஸ ராஜபக்ஷ குறித்து தீர்மானத்தை அறிவிப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 2 replies
- 383 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள் மதியரசன் சுலக் ஷன், கணேஷன் தர்சனவின் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவது அநீதி (ந.ஜெகதீஸ்) தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ பாரபட்சமாக செயற்படுகின்றார். சிறையில் வாடும் அனை த்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மதியரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன ஆகியோரின் வழக்கு விசாரணை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமாயின் மேலும் …
-
- 2 replies
- 354 views
-
-
“தமிழ் மக்களுக்கு மாத்திரம் கண்ணாடி வழங்க முடியாது” நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதுவார்களேயானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “சிங்கள…
-
- 0 replies
- 268 views
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களிடம் சரணடைந்துள்ள கேப்பாபுலவு மக்கள் ஈழத்தமிழ் மக்களது விடுதலையில் அக்கறை உடைய அனைவரும் திரண்டு வந்தால், கேப்பாபுலவு மக்களது காணிகளை மீட்பதற்கு ஏதேனும் வழி பிறக்கும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். தாயகத்தில் உள்ளோர் மாத்த…
-
- 0 replies
- 274 views
-
-
ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள், இலங்கையர்களின் மூளையை சலவை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேஸ்புக்கின் தனிப்பட்ட மெசென்ஜர் சேவை ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. சிரியாவின் வட மேற்கு ராக்கா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய தற்கொலை குண்டுதாரி ஒருவர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அமாவா பிரச்சார நிறுவனம், அரபு மொழியில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், Abu Yusuf al என்ற இந்திய ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக SITE அமெரிக்க அடிப்படையிலான கண்காணிப்பு நிறுவனத்தின் உளவுத்துறை குழுக்கள் தெரிவித்துள்ளன. எப்படியிருப்பினும் இந்திய முகவர்களால் ஐ.எஸ் கருத்துக்கள் இன்னமும் உ…
-
- 1 reply
- 642 views
-
-
யாழ்.தொடருந்து நிலைய தண்டவாளத்தில் ஆடையற்று இருந்த பிக்குவால் பரபரப்பு! மொனராகலையில் உள்ள பிக்கு ஒருவர் மனநிலை குழம்பிய நிலையில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் அரை நிர்வாண நிலையில் இருந்து மீண்டு பின்னர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த 17 வயதுடைய பிக்கு மொனராகலையில் உள்ள ஒரு பௌத்த பீடத்தில் கற்று வருவதாகவும் நேற்று முன்தினம் தான் திடீரென நினைவிழந்து காணப்பட்டதாகவும். பின்னர் நேற்றைய தினம் காலை யாழ் ரயில் நிலையத்துக்கு இருகில் இருந்த தண்டவாளத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இருந்தததை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தான் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று ஆடை ஒன்றை ப…
-
- 2 replies
- 508 views
-
-
யானையின் அட்டகாசம் ; பயிர்கள் சேதம் : மக்கள் தப்பியோட்டம் : மட்டுவில் சம்பவம் !! மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கிராமமான சர்வோதய நகர் கிராமத்தில் யானை வளவுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் விரட்டியுள்ளது. நேற்று இரவு சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சனை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யானை வேலி அடைப்பதற்கான கட்டைகள் பல இடங்களில் போடப்பட்டு அவைகளும் கவனிப்பார் அற்று இறந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இந்த வயல் கிராமங்களில் அண்மைக்கா…
-
- 0 replies
- 208 views
-
-
இலங்கையின் மிகவும் நீளமான சுரங்க ரயில் பாதை அடுத்த வருடம் நிறைவு மாத்தறை முதல் பெலியத்த வரையான 26 கிலோமீட்டர் ரயில் பாதையை அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவு செய்வதாக மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை - கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் மாத்தறை - பெலியத்த வரையான முதல் கட்ட பாதை நிர்மாண பணிகளை கண்காணிக்க சென்றிருந்த அமைச்சர் இதனை தெரிவித்தார். நகுட்டிய பிரதேசத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நிர்மானிக்கப்பட்டுவரும் இப்பாதை இலங்கையின் மிகவும் நீளமான சுரங்க ரயில் பாதையாகும். ரயில் பாதை கட்டுமானத்திற்காக 229 ஏக்கர் காணி நிலங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 311 views
-
-
தேசிய அரசில் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளார் மகிந்த தேசிய அரசில் இருக்கும் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறை இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவதூறு பரப்பும் வகையில் தேசிய அரசின் அமைச்சர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ள அவர், இதற்கான பணிகள் தற்போது நிற…
-
- 0 replies
- 276 views
-
-
கூட்டமைப்பை அரச தலைவர் இன்றும் சந்திப்பார் காணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர் பில் படைத் தளபதிகள், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான சந்திப்பு இன்று பி.ப.4.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரைப் பங்கேற்குமாறு அரச தலைவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தலைவருக்கும் இடையே நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பிலேயே இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. http://newuthayan.com/story/21782.…
-
- 0 replies
- 209 views
-
-
தற்போதைய தரவுகளை கொண்டு இன விகிதாசாரம் பேசுவது தவறு தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு இனவிகிதாசாரம் பற்றிப் பேசக் கூடாது. – இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது- நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு – முன் அமைதிச் சூழல் ஏற்பட்ட காலத்தில் இருந்த விகிதாசாரங்களை வைத்தே பேச வேண்டியது உசிதம் என நான் விரும்புகின்றேன். 1983ம் …
-
- 3 replies
- 483 views
-