ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவே 20 ஆவது திருத்தம் மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத் தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு மாகாணசபைகளின் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. மாகாண சபைகளின் கருத்துக்களை கேட்டபின்னரே இதுதொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மேலும் மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான எந்த முயற்சிகளை யும் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத் தில் நடத்துவதற்கே அரசாங்கம் ம…
-
- 0 replies
- 258 views
-
-
ஊடகவியலாளர்களின் கேள்விக்கணைகளை சரமாரியாக எதிர்கொண்ட பொலிஸ் பேச்சாளர் : மௌனம் காத்த அமைச்சர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகரவிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தனர். பொலிஸ் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் வசைபாடுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளமை தொடர்பிலேயே பொலிஸ் பேச்சாளரிடம் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இது தொடர்பில் பல வழிகளில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர பதிலளித்தபோதும் …
-
- 0 replies
- 152 views
-
-
மஹிந்தவின் பாரியார், மகன்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம் ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோஷித்த ராஜபக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நட…
-
- 10 replies
- 934 views
-
-
நிதி கிடைத்தவுடன் காணிகள் விடுவிக்கப்படும் – இராணுவப் பேச்சாளர் முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் உள்ள இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்குவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரியவர்களிடம் வழங்குவது தொடர்ப…
-
- 1 reply
- 265 views
-
-
“புறோக்கர் வேலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைவிடவேண்டும்” வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு , அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 1.4k views
-
-
சக்தி டிவி செய்திகள் 16 08 2017 , 8PM
-
- 0 replies
- 291 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 16-08-2017
-
- 0 replies
- 145 views
-
-
நீதிமன்ற உத்தரவின்படி கடைகள் அகற்றம்! யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்குப் பின்புறமாக உள்ள மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள 9 கடைகள் கொண்ட கடைத்தொகுதி அகற்ற இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19895.html
-
- 2 replies
- 487 views
-
-
இளஞ்செழியனது மெய்பாதுகாவலரின் மனைவி சேவையை பதிந்துள்ளார் யாழ்ப்பாணம் - நல்லூர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மனைவி, இன்று (16) பள்ளம பொலிஸ் நிலையத்தில் தனது சேவையைப் பதிவு செய்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்குப் பாதுகாப்பு வழங்கிய போது, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார். குறித்த பொலிஸ் சர்ஜன்டினது மனைவி, திருமணத்துக்கு முன்னர் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றியுள்ளார். இந்நிலையில், 2ஆவது குழந்தை பிறந்ததன் பின்னர், அவர் சேவையில் பதிவு செய்யாமையால், சேவையை கைவிட்டுச…
-
- 0 replies
- 224 views
-
-
ரயில் தடம்புரண்டதால் வடக்கு, மலையக ரயில் சேவை பாதிப்பு அம்பேபுஸ்வில் வவுனியா நோக்கிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டதால் வடக்கு மற்றும் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் அனைத்து ரயில்களும் வரிசையில் நிற்பதாகவும் பயணிகள் அனைவரும் அசௌகரியத்திற்கு முங்ககொடுத்துள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/23228
-
- 0 replies
- 210 views
-
-
இன்றைய அமைச்சரவை முடிவுகள் அமைச்சரவை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அமைச்சரவை முடிவுகள் வருமாறு, 01. சமூர்த்தி மானியங்களை வெட்டிவிடுவதாக வெளியாகியுள்ள பிழையான செய்தி அறிக்கைகள் சில சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் சமூர்த்தி மானியக் கொடுப்பனவு வெட்டிவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பிழையான ஊடக செய்தி அறிக்கை காரணமாக, அது தொடர்பில் பிழையான எண்ணப்பாடுகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. எவ்வித சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கோ அல்லது வெட்டி விடுவதற்கோ அரசாங்கத்தினால் எவ்வித தீர்மான…
-
- 0 replies
- 161 views
-
-
சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவ பொம்மை எரிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவப்பொம்மையை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை முறாவோடை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பில் தவறான கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அப் பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவப்பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23223
-
- 0 replies
- 251 views
-
-
கூட்டாட்சி இலங்கைக்கு பொருத்தமில்லை கூறுகிறார் அஸ்கிரிய துணைப் பீடாதிபதி இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு கூட்டாட்சி முறைமை பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடத்தின் துணைப் பீடாதிபதி ஆனமடுவே தம்மதிஸ்ஸ தேரர், மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை அரசு உதாசீனம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கண்டி அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதி களைச் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துக் கூறுகையிலேயே ஆனமடுவே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ந…
-
- 1 reply
- 205 views
-
-
முதலமைச்சர் உத்தரவிட்டும் மாற்றம் ஏதுமில்லை! கல்வியங்காடு பொதுச் சந்தையின் குறைபாடுகள் தீர்க்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்து ஒரு மாதம் கடந்துள்ளபோதும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர். கல்வியங்காடு பொதுச்சந்தையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வர்த்தகர்கள் முறைப்பாடு செய்தனர். கடந்தமாதம் 18ஆம் திகதி கல்வியங்காடு சந்தைப்பகுதிக்கு யாழ். மாநகரசபையின் அதிகாரிகள் சகிதம் முதலமைச்சர் வந்தார். வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்…
-
- 1 reply
- 492 views
-
-
வவுனியாவில் சனிக்கிழமை கூடுகிறது ரெலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலைக் கழகத்தின்(ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முன்னதாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அமைச்சர் டெனீஸ்வரன் கையொப்பமிட்டமையை அடுத்து ரெலோவின் கட்சி விதிகளுக்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என்ற அடிப்படையில் அவரிடத்தில் விளக்கம் கோரப…
-
- 2 replies
- 363 views
-
-
தமிழ் – சிங்கள உறவுக்கு வலுவூட்டும் அரசு தமிழ் – முஸ்லிம் இணக்கத்துக்கு என்ன செய்தது? போருக்குப் பின்னர் தமிழ் – சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு வேலைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டது. போரால் விரிசலடைந்த தமிழ் – முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு கவலை வெளியிட்டிருக்கிறார் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா. காத்தான்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் …
-
- 2 replies
- 430 views
-
-
உலக நாடுகள் உடன் தலையிடவேண்டும் கூட்டமைப்பு வலியுறுத்து; ஐ.நா செயலர், தூதர்களுக்குக் கடிதம் இலங்கை அரசின் அரசி யல் போக்கு திசைமாறி வரும் நிலையில் இனியும் பார்த்துக்கொண்டிராமல் உலக நாடுகள் தலையிடவேண்டும் என்று வலியுறுத்தியிருக் கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ”தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடி யிருப்பது நல்லிணக்கத்துக் குச் சாதகமான சமிக்ஞை இல்லை. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். உலக நாடுகள் இனியும் பார்த்துக் கொண்டிராமல் தலையிட வேண்டும்” என்று ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலா ளர்இ ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர் மற்றும் வெளிநா…
-
- 2 replies
- 222 views
-
-
ஜேர்மனியிலும் ஆவா - எஸ்.நிதர்ஷன் ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார். http://…
-
- 2 replies
- 801 views
-
-
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..! நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியினால் மூன்று இலட்சத்து 36 ஆயிரத்து 487 குடும்பங்களில் வாழும் 12 இலட்சத்து 42 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் தற்போது தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைத்தாலும் தொடர்ந்தும் வரட்சியான சூழல் நீடிக்கின்றது. வரட்சி காரணமாக சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீரின்றி அவதியுறுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 0 replies
- 131 views
-
-
எங்களுக்குக் கப்பல்கள் விடுகினம் தீர்வுத் திட்டம் வரும்நேரம் வரட்டும்; பன்னாட்டு விசாரணையோ, உள்நாட்டு விசாரணையோ அமைக்கப்படும் நேரம் அமைக்கப்படட்டும்; கூட்டாட்சி குலையப்போகிறதா, குலையட்டும்; இவை அனைத்தும் கொழும்பு அரசுடன் தொடர்பு பட்டவை. தமிழர்களாகிய நாம், 30ஆண்டுகள்கால நீண்டதும், நெடியதும், கொடியதுமான போரில் அதிகம் வதைபட்டவர்கள் என்ற அடிப்படையில், எமது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப எம்மிடம் அல்லது எம்மைச் சார்ந்திருக்கும் அல்லது நாம் சார்ந்திருக்கும் வடக்கு மாகாண சபையிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன. அடுத்ததாக நாம் எதையெதைச் செயற்படுத்…
-
- 0 replies
- 307 views
-
-
வடக்கு,கிழக்கு இணைவு பற்றி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள்
-
- 0 replies
- 230 views
-
-
ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!! கடந்த அரசின் காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர்கள் குற்றம் சுமத்தினர் என்று தெரியவருகின்றத…
-
- 0 replies
- 196 views
-
-
இலங்கை பணியாளர்களுக்கு கட்டாரில் தொழில் உரிமை மீறல் கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச உதைபந்தாட்ட உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதற்காக கட்டாரில் முன்னெடுக்கப்படுகின்ற கட்டுமான அபிவிருத்தி பணிகளுக்கு சுமார் 2 மில்லியன் பணியாளர்கள் இருத்தப்பட்டுள்ளனர். இதற்கான மனித வளத்தை ஆசிய நாடுகளில் இருந்தும் ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் இருந்தும் கட்டார் பெற்றுக் கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்தார். கொழும்பு 7 இல் அமைந்துள்ள தொழில்சார் நிபுணர்களின் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்…
-
- 0 replies
- 285 views
-
-
பொலிஸ் அத்தியட்சகர் – துன்னாலை மக்களுக்கிடையே சந்திப்பு காங்கேசன்துறை மூத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றொசாந்த் பெனாண்டோ மற்றும் துன்னாலை மக்களுக்கிடையேயான சந்திப்பொன்று இடம்பெறுகிறது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இச் சந்திப்பில் நெல்லியடி, பருத்தித்துறைப் பொலிஸார் மற்றும் படையினரும் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/19816.html
-
- 0 replies
- 543 views
-
-
விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கொழும்பு தகவலொன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதனுடன் தொடர்பு பேணும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடை…
-
- 0 replies
- 245 views
-