ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – ஸ்ரீகாந்தா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது , “இராணுவத்தில் இருந்து ஓடிப் போனவர்…
-
- 3 replies
- 381 views
-
-
கிளிநொச்சியில் பஸ் விபத்து ; சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட காயமடைந்த ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு புகுந்ததில் சாரதி உட்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்க…
-
- 0 replies
- 156 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 15 பேரும் விசாரணைகளின் பின்னர், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு குடியேறச்சென்று திருப்பியனுப்பப்பட்ட 15 பேரும் ஆண்கள் என்பது குறிப்பி…
-
- 0 replies
- 148 views
-
-
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ம், 6ம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இதன்படி 5ம் திகதி 1வது மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறும். இம் மாநாட்டில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரத்னம் விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள…
-
- 6 replies
- 1k views
-
-
நம்ம பள்ளிகளும் படிப்பும் ; நம்ம பயல்களும் ; பரீட்சைகளும் பெண் பிள்ளைகளும் பெடியளும் பொதுப் பரீட்சை மண்டபங்களில் பெண்பிள்ளைகளும் பெடியளும் (ஆண்பிள்ளைகளும்) தமக் குரிய வினாத்தாள் களைப் பெற்றுக்கொண்டு விடைகளை எழுதத் தொடங்கும்போது பின்பற்றும் சில படிமுறைகளை ஒருவர் வரிசைப்படுத்துகிறார். பெண்பிள்ளைகள் (1) எழுதுவார்கள் (2) முடியை காதுக்குப் பின்னால் எடுத்து செருகுவார்கள் (3) மீண்டும் எழுதுவார்கள் (4)பேனாவில் மையிருக்கா என்று பார்ப்பார்கள் 5)மீண்டும் எழுதுவார்கள் (6)கூடுதலாக பேப்பர் கேட்டு வாங்குவார்கள் (7)மீண்டும் எழுதுவார்கள். பெண்பிள்ளைகளின் மேற்சொன்ன படிமுறையை பெடியளோடு ஒப்பிட்…
-
- 0 replies
- 331 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 03-08-2017
-
- 0 replies
- 167 views
-
-
சக்தி டிவி செய்திகள் 03 08 2017 , 8PM
-
- 0 replies
- 232 views
-
-
‘மகேஸ்வரனின் குடும்பத்தை மண்ணிலிருந்து அகற்ற முயற்சி’ - எஸ்.நிதர்ஷன் மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும் அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உண்மையற்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மகேஸ்வரனின்-குடும்பத்தை-மண்ணிலிருந்து-அகற்ற-முயற்சி/71-201820
-
- 1 reply
- 441 views
-
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பைத்தளம் பாரிய தீப்பிளம்புடன் எரிகிறது! யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கல்லுண்டாய் குப்பைத்தளம் சற்று முன்னர் பாரிய தீப்பிழம்புகளுடன் எரிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான இந்த தீப்பிளம்பானது பல கிலோமீட்டர்கள் தாண்டியும் தெரிவதால் எங்கேயோ பெரிய தீவிபத்து நேர்ந்துவிட்டதோ என்று பொதுமக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரசபைக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் முக்கிய குப்பைத் தளமாக இது விளங்குகின்றது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளின்மூலம் இயற்கைப் பசளை…
-
- 0 replies
- 590 views
-
-
தேவை எது? கூட்டமைப்பு என்ற அரசியல் பலம் சிதறடிக்கப்படக் கூடாது; மழுங்கடிக்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். சில வாரங்களுக்கு முன்னர் வரைக்கும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படுத்திவிடுவாரோ என அச்சப்பட வைத்துக் கொண்டிருந்தவர் அவரே! இப்போது ஒற்றுமை குலையக்கூடாது என்றும் மாற்றுத் தலைமைக்குத் தான் ஆள் இல்லை என்றும் அவர் கூறிவருவது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியது. அரசியல் தலைவர்களான தங்களுக்குள் பிரிவினையும், கருத்து மோதல்களும் உருவாகி வருகின்றன என்று மிகைப்படுத்தியும் திரித்தும் ஊடகங்கள்தான…
-
- 0 replies
- 488 views
-
-
ரோந்துக் கப்பலில் அரசதலைவர் – இலங்கை வரலாற்றில் புதிய சம்பவம் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது. அந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார். கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய அரசதலைவர் கப்பலின் பெயர்ப்பலகையையும் திறந்தார் கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதனை செயற்பாடுகளைப் அரசதலைவர் பார்வையிட்டார். கப்பலை உத்தியோகபூர்வமாக இயங்க வைத்தார். இலங்…
-
- 1 reply
- 326 views
-
-
சர்வதேச கடல் எல்லையில் வைத்து 77 இந்திய மீனவர்கள் விடுதலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 25 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தால் நல்லிணக்க அடிப்படையில் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட தமிழக மீனவர்கள் 77 பேரை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்திய கடலோர படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடலோரபடை அதிகாரிகள் இலங்கை கடற்படைய…
-
- 0 replies
- 223 views
-
-
பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும்.- அனந்தி சசிதரன் வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற துணியிலான பைகளைப் பயன்படுத்துவதற்கான தையல் பயிற்சி நெறி அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது- முன்னைய காலங்களில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பணிகளில் பெண்கள் பணியாற்றியுள்ளனர். ப…
-
- 1 reply
- 492 views
-
-
கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நன்மதிப்பு நிதியத்தின் நிதி பங்களிப்பில் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் ( புதன் கிழமை) கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்துகொண்டு மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார். …
-
- 3 replies
- 423 views
-
-
போராளிகள் மீதான குற்றச்சாட்டு: ‘நியாயாதிக்கங்களை மீறுகின்றது’ முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது, ஜனாதிபதியின் வரப்பிற்குற்பட்ட நியாயாதிக்கங்களை மீறுகின்ற ஒரு செயற்பாடாகவே தாம் கருதுவதாக, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு நேற்று முன்தினம் (03) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாயகப் பிரதேசங்களில் சம காலத்தில் நிகழும் வன்முறைகள் மற்றும் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகளை இணைத்து புனையப்படும் வியாக்கியானங்கள் குறித்த ஓர் சமூகப் புலனாய்வு பார்வையை…
-
- 0 replies
- 268 views
-
-
அரசியல் சாணாக்கியத்துடன் சர்வதேசத்தை அணைத்துச் செயற்பட வேண்டும் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்துடன் நம்ப நட நம்பி நடவாதே என்பது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆர்.ஜெயசேகரத்தின் பதவிப் பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 229 views
-
-
முதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசுக் கட்சியை தூக்கி எறிந்து பாருங்கள் அப்பொழுது தெரியும் அதன் அருமை: இப்படிக் கூறுகிறார் தமிழ் விருட்சம் செயலாளர் உங்களால் முடியும் என்றால்–உங்களுக்கு முதுகெழும்பு இருக்கும் என்றால் –உங்களால் சரியாக நிமிர்ந்து நிற்க முடியும் என்றால் தமிழ் அரசுக் கட்சியைத் தூக்கி எறியுங்கள். அப்பொழுது தெரியும் அதன் அருமை. அந்தத் துணிவு இல்லாவிட்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு இங்கு வந்து கூட்டம் நடத்துகிறீர்கள்? மாற்று அணியப்பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு காரசாரமாகத் தெரிவித்திருக்கிறார் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளரும் கலைஞனுமான …
-
- 4 replies
- 569 views
-
-
இம்மாத இறுதிக்குள் புதிய அரசமைப்பு தயாராகி விடும் புதிய அரசமைப்பு இம்மாத இறுதிக்குள் தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாக, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் இதன்பொருட்டு, அரசமைப்பு வழிநடத்தல் குழுக்கூட்டம் அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதுடன், நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து தொடர்ச்சியாகக் கூட்டம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இம்மாத-இறுதிக்குள்-புதிய-அரசமைப்பு-தயாராகி-விடும்/175-201776
-
- 0 replies
- 203 views
-
-
கூட்டு எதிரணியினரின் பின்வாங்கலுக்கு பின்னணியில் மிகப்பெரிய நாட்டின் தூதரகம் யாருடன் தொடர்புகொண்டு உரையாடினர் என்பதும் தெரியும் என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்டனி) அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதத்தை கூட்டு எதிரணியினர் குழப்பி நடத்தவிடாமல் செய்ததன் பின்ன ணியில் மிகப்பெரிய நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீன நிறுவனத்துடன் அம்பாந் தோட்டை துறைமுகம் தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது எந்தவொரு நேரத்திலும் திருத்தத்திற்குட் படலாம். மேலும் அமைச்…
-
- 0 replies
- 303 views
-
-
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலத்தி…
-
- 0 replies
- 244 views
-
-
கொக்குவில் வாள்வெட்டு – சிகிச்சைக்காக பொலிஸார் வேறிடம் மாற்றம் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு பெரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு பொலிஸ் மருத்துவமனைக்கும், மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்னார் அரச வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நோயாளர்காவு வண்டி மூலம் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/16098.html
-
- 0 replies
- 240 views
-
-
யாழ்.பொலிஸார் மீது வாள் வெட்டு ; மேலும் இருவர் கைது யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புட…
-
- 0 replies
- 262 views
-
-
"தந்தை செல்வா - தலைவர் பிரபாகரன்" பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் என்னை சந்தேகிக்காதீர்...எரிமலையாய் வெடித்த " உணர்ச்சிக்கவிஞர் " காசி ஆனந்தன் !
-
- 1 reply
- 597 views
-
-
திருமலை கன்சைட் இரகசிய நிலத்தடி முகாமில் என்ன நடந்தது என முன்னாள் கடற்படை தளபதிகளே அறிவர் : அங்கு என்ன நடக்கிறதென வேறு எவருக்கும் தெரியாது“ Published by Priyatharshan on 2017-08-03 11:13:09 திருமலை கடற்படை முகாமில் உள்ள கன்சைட் இரகசிய சித்திரவதை கூடங்கள் என நம்பப்படும் சிறைக் கூடங்களில் என்ன நடந்தன என்பது குறித்து அனைத்து தகவல்களும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட, முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, லெப்டினன் கொமாண்டர் சுனித் ரணசிங்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் பண்டார ஆகியோரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் ரி.ஜே…
-
- 0 replies
- 218 views
-
-
எதுவுமே தெரியாது என சகல குற்றச்சாட்டுகளையும் ரவி நிராகரித்தார் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த, முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று, சாட்சியமளித்தார். திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அமர்வில், நேற்று (02) ஆஜரான அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த அமர்வுக்கு இரண்டு தடவைகள் அழைக்கப்பட்டபோதிலும், தன்னால் சமுகமளிக்கமுடியாமைக்காக, தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஆணைக்குழுவில் பாரிய குற்ற…
-
- 2 replies
- 349 views
-