ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக …
-
- 0 replies
- 382 views
-
-
ஆயுத குழுக்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் ஆரம்ப காலமும் இவ்வாறுதான் இருந்தது. எனவே பிரதமர் பாரதூர தன்மையை விளங்கிக்கொள்ளாவிடின் விலகி செல்ல வேண்டும் என தூய்மையான ஹெல உறுமய அமைப்பு தெரிவிக்கின்றது. அதேநேரம் வடக்கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்குதல் நடத்துகின்ற போது எதிர்தாக்குதல் நடத்த பொலிஸார் அச்சப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 434 views
-
-
மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை வ…
-
- 4 replies
- 412 views
-
-
வாக்கு தவறிவிட்டார்அரச தலைவர் மைத்திரி அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை கைச்சாத்திடப்படமாட்டாது என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளார் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கச் சம்மேளனம் குற்றஞ்சுமத்தியிருக்கின்றது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன் தங்களது சம்மேளனத்துடன் கலந்துரையாடப்போவதாக வாக்குறுதி வழங்கிய அரச தலைவர், அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி யிருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகம் எனவும், நாட்டின் தலைவரொருவர் ஒரே வாரத்தில் தான் கொடுத்த வாக்கு…
-
- 2 replies
- 441 views
-
-
30 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றி…
-
- 0 replies
- 251 views
-
-
கிளிநொச்சியில்யில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பபட நான்குபேர் படுகாயம் கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதில், மகேந்திரா ரக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் பலத்த காயங்களும் காணப்படுகின்றன. மற்றைய மூவரிற்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த நால்வரையும் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக…
-
- 0 replies
- 209 views
-
-
‘ஆட்சி பீடமேற கனவு காண வேண்டாம்’ பாராளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மாத்திரமே நிலைத்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குடும்ப ஆதிக்கத்தை விதைத்து , ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். இவர்கள் தற்போது 113 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் அதிகார்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதியின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதை அவர்கள் வேண்டும் எனலுவும் குறிப்பிட்டார். ஹிங்க…
-
- 0 replies
- 340 views
-
-
இந்து மகளிர் கல்லூரியின்புதிய கட்டடத் திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறக்கப்பட்டது. அமெரிக்த் தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் பிரதி நிதி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்தனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன், அமெரிக்க தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் நிதி உதவியுடன் இந்தக் கட்டம் அமைக்கப்பட்டது. கட்டடத் தொகுதியின் தளபாடங்கள் 15 மில்லியன் ரூபா செலவிலும், கட்டிட தொகுதி 75 மில்லியன் ரூபா செலவும் அமைக்கப்பட்டன. .நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர…
-
- 0 replies
- 170 views
-
-
சபையில் எம்.பிக்களுக்கு சீனாவின் மடிக்கணினிகள் இந்த வாரம் பொருத்தப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற அவையில், இந்த வாரத்தில் இருந்து இணைய வசதிகளுடன் இந்த மடிக் கணினிகளைப் பயன்படுத்த முடியும் என்று, நாடாளுமன்ற நிதிப் பணிப்பாளர் ஜெயசாந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்களின் ஆசனங்களில் இந்த மடிக்கணினிகள் பொருத்தப்படும். இதற்காகச் சீனா அன்பளிப்புச் செய்த 265 கணினிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந…
-
- 3 replies
- 372 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 31-07-2017
-
- 0 replies
- 132 views
-
-
சக்தி டிவி செய்திகள் 31th July 2017, 8PM
-
- 0 replies
- 245 views
-
-
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில், இன்று (31) ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாசார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்…
-
- 1 reply
- 523 views
-
-
சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர் யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனா…
-
- 1 reply
- 333 views
-
-
தவறான பாதையில் பயணிக்கும் அரசு நாடு ஒரு புறத்திலும், அரச அதிகாரத்தையும் அரச வளங் களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அரசு மற்றொரு புறத்திலும் செயற்பட நேர்ந்துள்ளது. நாட்டை முன்னேற்ற உழைப்போமெனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ள தரப்பினர், முற்றுமுழுதாக அதற்கு மாறான வித்திலேயே செயற்பட்டு வருகின்றனர். நாடு அத்தகைய போக்குக்கு எதிராக கிளர்ந்தெழுகிறது. அப்போது அரச வளங்களூடாக அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசு, நாட்டு மக்களுடன் மோதிக்கொள்ள நேர்கிறது. எம்மை ஏசுவதால் பயனில்லை. நாம் அதிகாரத்தைக் கைப்பற்றியது, எமது வசதி வாய்ப்புக்களை அனுபவிக்கவே என்ற மனோநிலை…
-
- 0 replies
- 311 views
-
-
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று (31) கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 1 reply
- 451 views
-
-
202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள…
-
- 0 replies
- 324 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார். அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தல…
-
- 14 replies
- 917 views
-
-
பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்! – பொலிஸ் மா அதிபர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட து…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இந்த இறப்புக்கள் இடம்பெற்று தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், உறவினர்களிடம் இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை; இதன் காரணமாக உறவினர்கள…
-
- 0 replies
- 362 views
-
-
தொண்டமனாற்றிலிருந்து இராணுவத்துக்கு மணல்- பிரதேச மக்கள் விசனம் ‘தொண்டமனாற்றிலிருந்து இராணுவத்தினர் மணல் ஏற்றிச் செல்கின்றனர். அவர்கள் டிப்பர் வாகனங்களில் பல தடவைகள் மணல் ஏற்றிச் சென்றனர்’ என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ‘தொண்டமனாறு ஆற்றின் கரையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் அணை அமைக்கப்படுகின்றது. தொண்டமனாறு ஆற்றின் கரையில் இருந்து வல்லை நோக்கி அந்த அணை அமைக்கப்படுகின்றது. நன்னீரைச் சேமிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படு கின்றது. ஆற்றின் மணல் அகழப்பட்டு அது அணைக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த ஆற்றிலிருந்து அகழப்பட்ட மணல் க…
-
- 3 replies
- 451 views
-
-
எமது அரசாங்கத்தில் அம்பாந்தோட்டை உடன்படிக்கை இரத்துச் செய்யப்படும் கூட்டு எதிரணி அறிவிப்பு (ரொபட் அன்டனி) எமது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தற்போது சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை இரத்துச் செய்யப்படும். இதனை மிகவும் வலுவாக கூறிக்கொள்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீனாவுடனான உடன்படிக்கை சட்டவிரோதமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அம்பாந்த…
-
- 0 replies
- 266 views
-
-
‘அரசமைப்பின் வரைவு ஆவணியில் வரும்’ -கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா. கிருஸ்ணா புதிய அரசமைப்பின் வரைவு, எதிர்வரும் ஆவணி (ஓகஸ்ட்) மாதத்தில் வெளிவருமென எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரின் நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பு வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட …
-
- 1 reply
- 274 views
-
-
ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு உதவிகளை வழங்க நீதிபதி மா. இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் இணைந்து சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில், அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளை …
-
- 0 replies
- 518 views
-
-
’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’ வடபகுதியிலுள்ள அனைத்துத் தர மக்களிடமும் கடன் தொல்லை காணப்படுவதாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், நிதி நிறுவனங்கள் மீதும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழா இன்று (30) காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம், இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஓர் …
-
- 3 replies
- 504 views
-
-
பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் வருகை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இருவர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். http://uthayandaily.com/story/15161.html
-
- 1 reply
- 318 views
-